Featured Posts
Home » ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ் (page 5)

ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ்

காலங்கள் மாறும்… (சிறுகதை)

படித்ததில் சிந்தனைக்குரியவை… இது நிஜம் அல்ல கதை! வீட்டில் கணவனும், மனைவியும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென கதவு தட்டும் சப்தம் கேட்டது! “யார் கதவை தட்டுவது” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவர் கேட்டார். “நான் ஒரு ஏழை (மிஸ்கீன்) வந்துள்ளேன்” என்ற சப்தம் வந்தது. உடனே “இந்த கோழியிலிருந்து ஒரு துண்டை அந்த மிஸ்கீனுக்கு கொடுங்கள்” என்று மனைவி கணவரிடம் கூறினாள். …

Read More »

பெற்றோர்களே! எச்சரிக்கையாக இருங்கள்…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் உலகத்தில் மிகச் சிறந்த செல்வம் பிள்ளைச் செல்வம் என்பார்கள். திருமணம் முடித்தவுடன் அடுத்ததாக தங்களுக்கு பிள்ளைகள் வேண்டும் என்று அனைத்து தம்பதியினரும் எதிர்பார்ப்பார்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல, ஒரு தாய் தன் குழந்தையை பெற்றெடுப்பது எப்படி கஷ்டமோ, அதை விட அவர்களை நல்ல முறையில் வளர்த்தெடுப்பது கஷ்டமாகும். பெற்றோர்கள் நல்லவர்களாகவும், சரியான வழிக்காட்டிகளாகவும் இருந்தால் பிள்ளைகளும் சரியான முறையில் வளர்ந்து …

Read More »

நரகத்தில் சில காட்சிகள்… (2)

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் நரகத்தில் சில காட்சிகள்… (1) சென்ற இதழில் நரகத்தைப் பற்றிய சில செய்திகளை உங்கள் சிந்தனைக்கு முன் வைத்தேன். நரகத்தில் பாவிகளை தண்டிக்கும் காட்சிகளை அல்லாஹ் நபியவர்களுக்கு எடுத்துக் காட்டினான். அந்த காட்சிகளை தொடர்ந்து படியுங்கள். சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். …

Read More »

கவ்ஸர் (நீர் தடாகம்)

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் மறுமை நாளில் நல்லடியார்களின் தாகம் தீர்ப்பதற்காக அல்லாஹ்வால் விசேசமாக ஏற்பாடு செய்யப்பட்டநீர் தடாகம் தான் இந்த கவ்ஸராகும். இந்த கவ்ஸரைப் பற்றிய சில தகவல்களை நாம் அறிந்து கொள்வோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் (சொற்பொழிவு மேடை) இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர் என்னுடைய  (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது” என அபூ …

Read More »

பொறுமையை இழந்த மூஸா நபி…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் மூஸா நபியுடன் கிள்ர் (அலை) அவர்கள்… அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸா(அலை) அவர்கள் தம் (பனூஇஸ்ராயீல் சமுதாய) மக்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளையும் சோதனைகளையும் நினைவூட்டி (அறிவுரை கூறி)க் கொண்டிருந்தார்கள். அப்போது “இந்தப் பூமியில் என்னைவிடச் “சிறந்த” அல்லது “நன்கறிந்த” மனிதர் வேறெவரும் இல்லை” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், “உம்மைவிடச் சிறந்தவரை, அல்லது உம்மை விட …

Read More »

மறுமையில் கிடைக்கும் ஷபாஅத்!

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் இந்த உலகம் அழிக்கப்பட்டு மறுமை நாள் ஏற்ப்படுத்தப்பட்டவுடன் மக்களெல்லாம் கப்ருக்குள்லிருந்து வேக, வேகமாக வெளியேறுவார்கள். யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாத அந்த நாள், எனக்கு என்ன நடக்குமோ என்று அச்சம் நிறைந்த பயங்கரமான அந்த மறுமை நாள். அந்த நாளில் சிலரால் பாவிகளுக்கு பரிந்துரை(ஷபாஅத்) மூலம் ஈடேற்றம் கிடைக்கும். பாவிகளுக்கு எந்த, எந்த அடிப்படையில் (ஷபாஅத்) பரிந்துரை கிடைக்கும் என்பதை தொடர்ந்து விளங்கிக் …

Read More »

நரகத்தில் சில காட்சிகள்… (1)

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் நரகம் என்பது மிகவும் கொடியது, யாரினாலும் அதனுடைய வேதனையை தாங்க முடியாது, நரகத்தில் பலவிதமான பயங்கரமான தண்டனைகளையும் அல்லாஹ் பாவிகளுக்கு தயார் பண்ணி வைத்துள்ளான். இந்த பயங்கரமான நரகத்தைப் பற்றி அல்லாஹ்வும், நபியவர்களும் கடுமையாக எச்சரித்த பல செய்திகளை தொடராக உங்கள் சிந்தனைகளுக்கு முன் வைக்க உள்ளேன். அல்லாஹ் நரகத்தைப் பற்றி பேசும் போது பின்வருமாறு கூறுகிறான் “முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் …

Read More »

தஜ்ஜால் எங்கு இருக்கிறான்..

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் மறுமையின் முக்கியமான அடையாளமான இந்த தஜ்ஜால் எங்கு இருக்கிறான் என்பதை நபியவர்கள் கூறுவதை கவனியுங்கள். “ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ளஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்களின் சகோதரியும், முந்திய முஹாஜிர்களில் ஒருவருமான ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு அறிவியுங்கள். அது (நேரடியாக) நீங்கள் …

Read More »

ரமளானுக்குப் பின் நமது நிலைப்பாடு…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் ரமலான் வந்தது வந்த வேகத்திலே வேகமாக சென்று விட்டது என்று நாம் பேசி வருகிறோம். அப்படியானால் இந்த ரமலான் என்னை எவ்வாறு பக்குவப்படுத்தியது. இந்த ரமலான் மூலமாக என்னை எவ்வாறு இறையச்சம் உடையோராக அமைத்துக் கொண்டேன்.என்பதை ஒரு தரம் திரும்பி பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் நம் மீது இந்த நோன்பை கடமையாக்கிய நோக்கம் இந்த நோன்பின் மூலமாக உள்ளத்தில் இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதேயாகும். …

Read More »

பாவங்களை சுட்டிக் காட்டுங்கள்!

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் அ இ உலமா சபை கவனத்திற்கு ! சமீப காலமாக இலங்கையில் பல இடங்களில் மாற்று மதத்தவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக நாம் செய்யக் கூடிய அமல்களோடு அவர்களின் மதகுருமார்களையும், முக்கியஸ்தர்களையும் அழைத்து அந்நிகழ்சியில் பங்கு பெற வைத்து அழகு பார்க்கிறார்கள். பொதுவாக சகல மனிதர்களோடும் சகஜமாக இரண்டரக்கலந்து வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் நமக்கு பல வழிகளில் எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக அந்நியர்களோடு …

Read More »