Featured Posts
Home » அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A.)

அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A.)

ரமளான் மாத இரவு வணக்கங்கள்

அல்குர்ஆன் மனித குலத்திற்கு அருளப்பட்ட இறுதி வேதம். அது, மனித குலத்திற்கான அருட்கொடையாகவும் வழிகாட்டியாகவும் அருளப்பட்ட மாதம் என்பதால், ரமளான் மாதத்திற்கு என்று பல தனிச்சிறப்புகள் உள்ளன. நமது பாவக் கறைகளை அகற்றி, இறையச்சத்தை வலுப்படுத்தி, நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் சந்தர்ப்பமாகவும் ரமளான் மாதம் உள்ளது. எனவே, புனிதமிக்க ரமளான் மாதத்தில் நின்று வணங்குவதை நபி (ஸல்) அவர்கள் அதிகம் ஆர்வமூட்டியுள்ளார்கள். மேலும் …

Read More »

இலங்கை முசலிப் பிரதேச மக்களின் பன்மைத்துவ சமூக அமைப்பும் சக வாழ்வும்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் (M.A.) தொன்மையான இலங்கை வரலாற்றின், தவிர்க்க முடியாத பிரதான வணிகச் செயற்பாட்டு மையங்களில் முசலிப் பிரதேசமும் ஒன்றாகும். தொன்மைக் குடியேற்றம் பற்றிய பழமையான குறிப்புகளிலும், பதிவுகளிலும் முசலியின் பெயரும் அதன் அமைவிடமும் இப்பிரதேச மக்களின் சிறப்புப் பண்புக் கூறுகளும் ஆய்வாளர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. அது ஒரு நிருவாகப் பிரதேசம் என்ற வகையில் அதன் வரலாற்றுத் தொன்மை ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டுச் செல்கிறது. வரலாற்று ஆவணப் பதிவுகளையும் தனித்துவமான …

Read More »

அல்லாஹ்வுக்காக அன்பு பாராட்டுவோம்…!

எம்.ஏ.ஹபீழ் ஸலபி நமது அன்றாட வாழ்வில் பல வித நட்புகள் ஏற்படுவதுண்டு. ஆனால், அந்த நட்புகள் எல்லாம் இறை நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்து காணப்படுவதில்லை. நட்பு, நேசம், அன்பு அல்லாஹ்வுக்காக மாத்திரம் செலுத்தப்படும் உறவாக அமைதல் வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் அல்லாஹ்வின் அருளும் ஆசியும் எமக்குக் கிடைக்கும். அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் நாம் ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டால், இன்பத்திலும் துன்பத்திலும் ஏழ்மையிலும் …

Read More »

நட்புக்கு இலக்கணம் (நூல் அறிமுகம்)

எம்.ஏ. ஹபீழ் ஸலபி அவர்கள் 2000ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவனாக கற்றுக் கொண்டிருக்கும் போது, நட்புக்கு இலக்கணம் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார். அது மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் வாசிப்பையும் பெற்றது. இந்த நூல் வெளிவந்த போது, பிரபல எழுத்தர் அறபாத் ஸஹ்வி அவர்கள் தினகரன் நாளிதழில் அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த அறிமுகத்தை இங்கு தருகின்றோம். நூலின் பெயர் : …

Read More »

அமர்வு சஞ்சிகைக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்

அன்புள்ள  நேயர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… சமய, சமூக, அரசியல் விடயங்களை அலசவும் சமூகத்தை நன்நெறிப் பாதையில் நெறிப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அமர்வு என்ற ஓர் இலத்திரனியல் மலர்  ‘சீர் திருத்தங்களை வேண்டி நிற்கும் முஸ்லிம் தனியார் சட்டம்’ என்ற முகப்புக் கட்டுரையுடன் தனது இரண்டாவது இதழை விரித்துள்ளது. அத்தோடு, பின்வரும் முக்கிய தலைப்புகளைத் தாங்கி, இணையப் பதிப்பாக வெளிவந்துள்ளது. முதுமை அடைந்த வயோதிபர்களைமதித்து நடப்போம்யூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்வாசிப்புத் …

Read More »

சீர்திருத்தங்களை வேண்டி நிற்கும் முஸ்லிம் தனியார் சட்டம்

எம்.ஏ.ஹபீழ் அண்மைக்காலமாக இலங்கையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, எல்லா மட்டத்திலுள்ளவர்களின் பேசுபொருளாக மாறியுள்ள முஸ்லிம் தனியார் சட்டச் சீராக்கத்தின் முக்கிய விடயப் பொருளாகக் காணப்படும் பெண்னின் திருமண வயது, பலதார மணம், திருமண ஒப்பந்தத்தில் பெண் கையொப்பமிடுதல், பெண் காழி நியமனம், வாதாட்டத்தில் சட்டத்தரணிகள் கலந்து கொள்ளல் என்பவை குறித்து மேற்கிளம்பியுள்ள பாரிய சர்ச்சை தொடர்பாக இவ்வாக்கம் தர்க்க ரீதியாக ஆராய்கிறது.இலங்கையில் பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்ட, தவிர்க்க முடியாத ஒரு …

Read More »

தீய நட்பும் அதன் விளைவுகளும்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் இஸ்லாம் மனித உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரு மார்க்கம் என்ற வகையில், மனித உறவுகளுக்கு ஒரு பெறுமானத்தை வழங்கி, அதை நெறிப்படுத்துகிறது. இஸ்லாம் வழிகாட்டும் நல்ல நட்பு இந்த உலகத்தில் பல பயன்களைத் தருவதோடு, மறுமையிலும் பெரும் நன்மையையும் பெற்றுத் தரும். ‘நாம் யாரை நேசிக்கிறோமோ, அவருடன் மறுமையில் நாம் இருப்போம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து, …

Read More »

நம்பத் தகுந்த நல்ல நண்பன்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் மனிதனுடைய இயற்கையான இயல்பு, ஒருவரோடு ஒருவர் நட்பு, வாஞ்சைகொண்டு பழகுவதாகவே அமைந்துள்ளது. எந்த மனிதனும் தனித்து வாழ்வதை விரும்புவதில்லை. மனிதன் பல்வேறு தேவைகள் உடையவன். அவனால் தனது தேவைகளைத் தனித்து நின்று நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ்வதன் மூலம் மனிதனுடைய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அந்தவகையில் நட்பு என்பது ஒரு மகத்தான உறவு. வாழ்வில் நாம் நலிவடையும் காலங்களில் எமக்குக் கை கொடுக்கும் உறவு …

Read More »

ஷிர்க்கின் சில வகைகள்

-அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ். இணைவைத்தல் மிகப்பெரிய அநியாயம். ஷிர்க் செய்வோர் தவ்பா செய்கின்றவரை அல்லாஹ், அவர்களை மன்னிக்கமாட்டான். அத்தோடு, இணை வைக்கக்கூடியவனுக்கு சுவனத்தை ஹராமாக்கி இருப்பதாகவும் அவன் நரகில் நிரந்தரமாகத் தங்குவான் என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். அத்தோடு, ஷிர்க் எல்லா நல்லரங்களையும் பாழ்படுத்தி விடும். யாராவது அல்லாஹ்வுக்கு இணைவைத்தால், இந்த உலகில் அவர்கள் செய்யும் நன்மைகள் யாவும் அவர்களை விட்டு அழிந்துவிடும். எனவே, மிகப்பெரிய அநியாயமான இணைவைத்தலை தவிர்ந்து நடக்க …

Read More »

ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் – பாகம் 2

– எம்.ஏ.ஹபீழ் அன்புள்ள நேயர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் இந்த நூல் பீ.ஜைனுல் ஆபிதீன் பற்றிய இரண்டாம் பாகம். அவர் தொடர்பான பல்வேறு விடயங்களை இந்நூல் சுருக்கமாக பகுப்பாய்வுக்குட்படுத்துகிறது. அவரது ஆளுமையும் சிந்தனைகளும் செல்வாக்குச் செலுத்திய பல விடயங்களை முதல் பாகத்தில் நாம் குறிப்பிட்டிருந்தோம். அவர் மீதுள்ள விமர்சனங்களோடு அவரது முரண்பாடுகள், சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவரது சில கோட்பாடுகள், இரட்டை நிலைப்பாடுகள், கடும் போக்கு இயக்கவாத சிந்தனைகள் பற்றியும் இரண்டாம் பாகம் …

Read More »