Featured Posts
Home » ஜாஃபர் அலி (page 4)

ஜாஃபர் அலி

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-33-34)

33,34. பிளேக் நோயும் தியாகியின் கூலியும் ஹதீஸ் 33. ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்களிடம் தாவூன் எனும் உயிர்க்கொல்லி நோய் பற்றி கேட்டேன். அதற்கு என்னிடம் நபியவர்கள் சொன்னார்கள்: தாவூன் (எனும் நோய்) ஒரு தண்டனையாகும். அல்லாஹ், அதனை எந்த மக்கள் மீது அனுப்ப விரும்புகிறானோ அந்த மக்கள் மீது அனுப்புகிறான். ஆனால் முஃமின் (இறைவிசுவாசி)களுக்கு, அதனை ஓர் அருட்கொடையாக ஆக்கியுள்ளான். (இறைவிசுவாசியான) ஓர் அடியார், தாவூன் நோயில் …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-32)

32. இந்தப் பொறுமையாளருக்குச் சுவனமே கூலியாகும்! ஹதீஸ் 32. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘உயர்வு மிக்கவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: விசுவாசியான என்னுடைய அடியானுக்கு என்னிடத்தில் கூலி – உலக வாழ்மக்களில் அவனுக்கு மிகப் பிரியமானவரின் உயிரை நான் கைப்பற்றினால் பிறகு அவன் (விதியைப் பொருந்திக் கொண்டு பொறுமை காத்து அதற்கான) கூலியை எதிர்பார்த்திருந்தால், (என்னிடத்தில் அவனுக்குரிய கூலி) சுவனத்தைத் தவிர வேறில்லை’ (புகாரி) தெளிவுரை …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-31)

31. பொறுமையின் இலக்கணம் ஹதீஸ் 31. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள், ஓர் அடக்கத்தலத்தின் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்றபொழுது (அவளிடம்) கூறினார்கள்: அல்லாஹ்வைப் பயந்து கொள்., பொறுமையைக் கடைப்பிடி, – அதற்குப் பெண் சொன்னாள்: என்னை விட்டும் தூரவிலகிச்செல்லும். எனக்கு ஏற்பட்ட துன்பம் உமக்கு ஏற்படவில்லை, -நபியவர்களை அந்தப் பெண் அறிந்திருக்கவில்லை. பிறகு -இவர்கள்தாம் நபிகளார் என்று அவளிடம் சொல்லப்பட்டது. உடனே அவள் …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-30)

30. இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சோதனை! ஹதீஸ் 30. ஸுஹைப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒரு மன்னன் இருந்தான். அவனுக்கு ஒரு சூனியக்காரர் (ஆலோசகராக) இருந்தார். அவர் முதுமை அடைந்தபோது மன்னனிடம் சொன்னார்: ‘நான் முதுமை அடைந்து விட்டேன். எனவே ஒரு சிறுவனை என்னிடம் அனுப்பி வை. நான் அவனுக்குச் சூனியம் கற்றுக் கொடுக்கிறேன். அதன்படி சிறுவனொருவனை அவரிடம் அனுப்பி வைத்தான் …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்3-29)

29. ஆறுதல் சொல்வது, யாருக்கு? எப்படி? ஹதீஸ் எண்: 29. உஸாமா(ரலி) அவர்கள், (நபியவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஜைத் பின் ஹாரிஸா(ரலி) அவர்களின் மகன். இவரும் இவருடைய தந்தை ஜைத் அவர்களும் நபியவர்களின் பிரத்தியேக அன்புக்குரியவர் ஆவர்.) கூறுகிறார்கள்: நபியவர்களின் மகளார்- என் மகன் உயிர் பிரியும் நெருக்கடியான நிலையில் இருக்கிறான். எனவே நீங்கள் எங்களிடம் அவசியம் வரவேண்டும் என்று நபியவர்களுக்குத் தூது அனுப்பினார்கள். அதற்கு நபியவர்கள் ஓர் ஆள் …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-28)

28. இப்படிச் செய்வதற்கு எப்படி மனம் வந்தது? ஹதீஸ் 28: அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்)அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டபொழுது கடும் துன்பத்திற்கு உள்ளானார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) அவர்கள் சொன்னார்கள்: ஆஹ்! என் அன்புத் தந்தைக்கு ஏற்பட்ட துன்பமே! – இதனைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இந்நாளுக்குப் பிறகு உன் தந்தைக்கு துன்பம் என்பதே இல்லை, என்று! – நபியவர்கள் மரணம் அடைந்தபோது ஃபாத்திமா(ரலி) அவர்கள் சொன்னார்கள்: என் அன்புத் தந்தையே! …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-27)

27. இன்பமும் துன்பமும் நன்மையாய் அமைந்திட..! ஹதீஸ் 27: ஸுஹைப் பின் ஸினான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘ ஓர் இறை நம்பிக்கையாளனின் விவகாரம் குறித்து நான் ஆச்சரியம் அடைகிறேன். அவனுடைய ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது. இது ஒரு நம்பிக்கையாளனுக்கே அன்றி வேறெவருக்கும் வாய்க்கப் பெறவில்லை! அவனுக்கு மகிழ்வு நிலை வந்தால் நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைகிறது. அவனுக்கு கஷ்ட நிலை …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-26)

26. பொறுமையே சிறந்த செல்வம் ஹதீஸ் 26: அபூ ஸயீத் – அல்குத்ரி(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: அன்ஸாரிகளில் சிலபேர் நபி(ஸல்) அவர்களிடம் பொருளுதவி கேட்டார்கள். நபியவர்களும் வழங்கினார்கள். மீண்டும் கேட்டார்கள். நபியவர்கள் மீண்டும் வழங்கினார்கள். இறுதியில் நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்து விட்டன. இவ்வாறாக தங்கள் கைவசம் இருந்த அனைத்தையும் (இறைவழியில்) நபியவர்கள் செலவு செய்து விட்டபொழுது அந்த அன்ஸாரிகளிடம் சொன்னார்கள்: ஏதேனும் செல்வம் என்னிடம் வந்தால் நான் அதை உங்களுக்குத் …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-25)

25. பொறுமையின் தனிச்சிறப்பு ஹதீஸ் 25: அபூ மாலிக் அல் அஷ்அரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: தூய்மை (ஈமான் எனும்) நம்பிக்கையின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் தராசை நிரப்புகிறது. ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்லாஹ் வானங்களுக்கும் பூமிக்கும் மத்தியிலுள்ள இடைவெளியை நிரப்புகிறது. தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உனக்குச் சாதகமான அல்லது பாதகமான ஆதாரமாகத் திகழ்கிறது!. ஒவ்வொரு மனிதரும் காலையில் (தத்தம் பணிக்காகச்) செல்கின்றனர். தமது …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3)

பொறுமை அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (3:200) மேலும் கூறுகிறான்: ‘சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும் உடைமைகள், உயிர்கள், விளைபொருள்களில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்தச் சூழ்நிலைகளில்) பொறுமையை மேற்கொள்வோருக்கு (நபியே!) நீர் நற்செய்தி சொல்வீராக! ‘ (2:155) மேலும் கூறுகிறான்: ‘பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்கின்றி …

Read More »