Featured Posts
Home » பொதுவானவை (page 3)

பொதுவானவை

ஒரு திருப்பு முனையின் புள்ளி – மர்ஹூம் முஹம்மத் காலித் முஹம்மத் ஸவாஹிர்

அஷ்ஷைய்க் M.அப்துல் ஹபீழ் (M.A) மர்ஹூம் முஹம்மத் காலித் முஹம்மத் ஸவாஹிர் அவர்கள் இலங்கை ஹெம்மாதகம – பள்ளிப்போர்வைப் பிரதேசத்தில் ஆசாரமான குடும்பத்தில் 05/06/1942ம் ஆண்டு பிறந்துள்ளார். அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர் சேவையில் 33 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பறகஹதெனிய ஸலபிய்யாக் கலாபீடத்தில் பொதுக் கல்விக்கான அத்திபாரத்தையிட்டவர்களில் மிக முக்கியமானவர். முஹம்மத் ஸவாஹிர் அவர்கள், ஸலபிய்யாக் கலாபீடத்திலிருந்து முதலாவதாகப் பேராதனைப் பல்கலைகழகம் சென்று, கலைமாணிப் பட்டம் பெற்று, கல்விப் பயணத்தில் உயர் …

Read More »

பெண்களின் ஆடை – கவனம் தேவை (நல்லோரும் செய்யும் தவறுகள் – புதிய தொடர் 2)

– M. அப்துர் ரஹ்மான் மன்பஈ – இந்தத் தொடரில் நாம் பார்க்கப்போவது பெண்களிடம் உள்ள தவறு. ஆனாலும் அந்த தவறை சரி செய்ய வேண்டிய ஆண்கள் அதை கண்டும் காணாமல் இருப்பதால் அவர்கள் மீதும் குற்றம் உள்ளது. இதை சரிசெய்ய முயற்சிக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் திருத்தம் செய்ய முடிவதில்லை. காரணம் இந்த தவறு தவறாகவே கருதப்படுவதில்லை. வாருங்கள் எல்லோரும் சேர்ந்து இந்தத் தவறை திருத்துவதற்கு முயல்வோம். வயிற்றை திறந்து …

Read More »

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் கேலிச்சித்திரம்

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே..! முஸ்லிம் என்று தன்னை அடையாளப்படுத்தி வாழ்கின்றவர்கள் தான் நினைத்த போக்கில் அவனுடைய வாழ்கையை இந்த உலகில் அமைத்துக் கொள்ள முடியாது. அழங்காரங்கள் நிறைந்த இந்த உலகில் அல்லாஹ்வுக்கும் றஸுலுக்கும் கட்டுப்பட்டு தன் ஆசைகளையும், மனோ இச்சைகளையும் கட்டுப்படுத்தி அடக்கமான முறையில் வாழ்பவனே உண்மையான முஸ்லிமாவான். அல்லாஹ் சொல்கிறான். وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا الْبَلَاغُ …

Read More »

ஆண் பெண் நட்பு – ஒரு சமூகவியல் பார்வை

அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A) மனித வாழ்வில் நிழல் போல் தொடரும் நட்புக்கு இஸ்லாம் வரைவிலக்கணம் வகுத்துள்ளது. அது, நட்பின் மகிமைப் பற்றி அதிகம் பேசியுள்ளது. போலி நட்புத் தொடர்பாகவும் எச்சரித்துள்ளது. ஆண் – பெண் இருபாலாரும் நட்புப் பாராட்டமுடியுமா? இனக் கவர்ச்சியில் ஏற்படும் நட்பினால் ஏற்படும் பாதகங்கள் என்ன? காதலர் தினத்தால் ஏற்படும் விளைவுகள் எத்தகையது? என்பன போன்ற விடயங்களை சமூக நடைமுறையின் பகைப் புலனில் நட்புப் …

Read More »

வீட்டோடு மாப்பிள்ளை (நல்லோரும் செய்யும் தவறுகள் – புதிய தொடர் 1)

– மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ, துணை ஆசிரியர், அல்ஜன்னத் மாத இதழ். எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள நியதிப்படியும், அவன் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படியும் திருமணம் நடந்த பின் மனைவியானவள் கணவனின் வீட்டிற்குச் சென்று குடியேறுவதுதான் முறை. இதனால் தான் வீட்டோடு மாப்பிள்ளை என்பது வித்தியாசமாக பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது. அரிதாக மிகச் சில ஆண்களுக்கு ஏற்படும் நிர்ப்பந்தச் சூழ்நிலை காரணமாக தங்களின் மனைவியர் வீட்டில் குடியேறுவதை அங்கீகரிக்கலாம். ஆனால், எந்த …

Read More »

நயவஞ்சகம் (1)

நிஃபாக் (நயவஞ்சகம்) என்ற அரபு சொல்லுக்கு ஏமாற்றுதல், சதி செய்தல், நன்மைகளை வெளிப்படுத்தி நன்மைக்கு எதிரானவைகளை உள்ளத்திற்குள் மறைத்து வைத்தல் என்று இமாமகள் விளக்கமளித்துள்ளனர். ஈமானை (இறை நம்பிக்கையை) நாவினால் வெளிப்படுத்திவிட்டு குஃப்ரை (இறை மறுப்பை) உள்ளத்தில் மறைத்துக் கொள்ளுதல் என்பதாகும். இறை நிராகரிப்பாளர்களைப் போன்றே நயவஞ்சகர்களும் சமூகத்தில் எல்லா காலகட்டங்களிலும் இருந்துள்ளனர். செல்வத்தில் செழிப்பாகவும் நாவன்மை மிக்கவர்களாகவும் அவர்கள் இருந்துள்ளதை அல்குர்ஆன் பல இடங்களில் விவரிக்கிறது. இருந்தபோதிலும் அவர்களின் இறுதி முடிவு …

Read More »

அல்லாஹ்வின் 99 அழகிய திருநாமங்களை பொருளுணர்ந்து மனனமிடுவோம்

தொகுப்பாளர்:அஷ்ஷைய்க். அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானிஅழைப்பாளர் – அல் கோபர் இஸ்லாமிய அழைப்பகம் Click to Download eBook – அல்லாஹ்வின் 99 அழகிய திருநாமங்களை பொருளுணர்ந்து மனனமிடுவோம்

Read More »

தத்தெடுப்பு

இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணம் செய்வதன் பிரதான நோக்கமாகச் சந்ததிகளைப் பெருக்கிக்கொள்வதும் பாதுகாப்பான குடும்ப அமைப்பை உருவாக்குவதும் தான் உள்ளது பிள்ளைப்பேறு என்பது அல்லாஹ்வின் மிகப் பெரிய அருட்கொடையாகும். திருமணம் செய்த அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கின்றான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கின்றான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன். (அல்குரஆன் 42:49,50). திருமணம் முடித்து பல வருடங்கள் …

Read More »

கொஞ்சுவதும் – முத்தமிடுவதும்

குழந்தைகள் என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம். அதுவும் பச்சை பிஞ்சுக் குழந்தை என்றால், கேட்கவே வேண்டாம். உடனே எடுத்துக் கொஞ்சத் தொடங்கிவிடுவோம். மிகப்பெரிய கோபக்காரரும் கண்ணசைவில் குழந்தையை சில நொடிகள் கொஞ்சிவிடுவார். யாரென்றே அறிமுகமில்லாதவர் குடும்பத்தோடு பேருந்தில் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது அவர்களின் பச்சிளம் குழந்தைகளை பின் இருக்கையில் இருப்பவர்கள் கொஞ்சுவதும், அமர்வதற்கு இருக்கை இல்லாமல் நின்றுகொண்டே பயணிக்கும் தாயின் கையிலுள்ள குழந்தையை இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் வாங்கி தன் மடியில் வைத்துக்கொள்வதும் மனிதனின் இரக்க குணங்களில் உள்ளதாகும். இரக்கம் …

Read More »

கார்டூனும் கருத்துச் சுதந்திரமும் – முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குக் கேலிச்சித்திரம் பின்னணியும் நோக்கமும்

முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரிசுத்த ஆளுமையை மாசு படுத்தும் வகையில்,தொடர்தேர்ச்சியான மேற்குலகின் அநாகரிகச் செயற்பாடுகள், முஸ்லிம் உலகில் அதற்கு எதிரான குரலை மிகப் பலமாக ஒலிக்கச் செய்துள்ளது. Charlie Hebdo என்ற மதவெறி கொண்ட பிரான்ஸ் பத்தரிக்கை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்று கற்பனையாக சித்திரித்து, நிர்வாண கார்ட்டூனை தனது பத்திரிக்கையில் வெளியிட்டது. நபிகள் நாயகத்தை wheel chairல் …

Read More »