Featured Posts
Home » பொதுவானவை » பிற கட்டுரைகள்

பிற கட்டுரைகள்

ஸகாதுல் பித்ரை பணமாக ஏன் வழங்க முடியாது? (eBook)

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் உவைஸ் மீஸானீ Phd researcher KSA பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் click here to Download eBook உள்ளடக்கம் ஸகாதுல் பித்ரை உணவாகவே வழங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் பணமாக வழங்கலாம் எனக் கூறுவதால் ஏற்படும் விபரீதங்கள் பணமாக வழங்கலாம் எனக் கூறுவோரின் வாதங்களும் பதில்களும் ஸகாதுல் பித்ரை ஏழைகளுக்கு பணமாகக் கொடுப்பதே மிகவும் பயனுள்ளதாகும். ஏனெனில் அவர்களின் தேவையை விட அதிகமாக உணவுகள் அவர்களிடம் …

Read More »

குர்ஆன் ஏன் கொஞ்சம் கொஞ்சமாக அருளப்பட்டது

அகிலங்களைப் படைத்த அல்லாஹ் நுட்பமான ஞானமிக்கவன் இன்னும் அவன் நூண்ணறிவாளன். அவனது செயல்கள் அனைத்திலும் அதிநுட்பமான அவனது ஞானம் நிறைந்துள்ளது. அதில் சிலவற்றை மனிதர்களுக்கு அல்லாஹ் வெளிப்படுத்தியுள்ளான் அதில் ஒன்று தான் குர்ஆன் சிறிது சிறிதாக இறங்கியதில் உள்ள ஹிக்மத். குர்ஆனுக்கு முந்திய வேதங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் மொத்தமாக இறங்கியது என்பது தான் பெரும்பான்மை அறிஞர்களின் கருத்து. குர்ஆன் சிறிது சிறிதாக இறங்கியது தொடர்பாக இணைவைப்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தபோது …

Read More »

அல்லாஹ்வின் உதவி யாருக்கு?

கஷ்ட நேரங்களிலும் சோதனை கட்டங்களிலும் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் விரைவாக கிடைக்கவேண்டுமென்பது முஃமின்கள் அனைவரின் எதிர்பார்ப்பும், பிரார்த்தனையுமாகும். எப்போதெல்லாம் முஸ்லிம் சமுதாயம் நெருக்கடிகளுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்படுவார்களோ அப்போதெல்லாம் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்பது தான் அவர்களின் முழக்கமாக இருக்கும் இந்த முழக்கத்தை நபிமார்களுக்கு அடுத்தபடியாக இந்த சமுதாயத்தின் சிறந்தவர்களாக இருந்த நபித்தோழர்கள் சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டும் மிக கடுமையான முறையில் உலுக்கப்பட்டும் எதிரிகளால் நான்கு புறங்களிலும் சூழப்பட்டு அவார்களின் உயிர் …

Read More »

இளைஞர்களும் சமூகவலைத்தளங்களும்

மௌலவியா R. பாத்திமா சிபானா (ஸஹ்ரவிய்யா) – ஓட்டமாவடி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் – ஒலுவில் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடம் கட்டிடத்திற்கு அஸ்திவாரம் அவசியம் என்பது போல, மனிதன் வாழ்வதற்கு உயிர் முக்கியம் என்பது போல ஒரு சமூகத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் இளைஞர், யுவதிகளின் பங்களிப்பு அளப்பெரியதாகும். இளைஞர் சமூகத்தின் பலத்தை புரிந்து கொண்ட இஸ்லாத்துக்கு விரோதமான தீய சக்திகள் நவீன கலாச்சாரங்களை அழகு படுத்திக்காட்டி …

Read More »

நான்கு மத்ஹபுடைய இமாம்கள்…!!!

நான்கு மத்ஹபுடைய இமாம்கள் என்று சொல்லப்படக்கூடிய அந்த நான்கு இமாம்களும் மார்க்க நிலைப்பாட்டில் சரியானவர்களாக இருந்தார்களா? நான்கு மத்ஹபுகள் என்பதன் மூலம் நாடப்படுவது:- ▪ஹனபிய்யா:- இவர்கள் இமாம் அபூ ஹனிபா நுஃமான் இப்னு தாபித் றஹிமஹுல்லாஹு அவர்களைப் பின்பற்றக்கூடியவர்கள். இந்த மத்ஹப் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டு காலப் பகுதியில் மக்களிடத்தில் அறியப்பட்டதாகவும் பிரபலமானதாகவும் மாறியது. ▪மாலிகிய்யா:- இவர்கள் இமாம் மாலிக் இப்னு அனஸ் றஹிமஹுல்லாஹு அவர்களைப் பின்பற்றுபவர்களாகும். இந்த மத்ஹபும் …

Read More »

தரமற்ற சாலைகள் [02-சாலை விபத்துகளுக்கான காரணங்களும்… இஸ்லாம் கூறும் தீர்வுகளும்…]

சாலை விபத்துகளுக்கான காரணங்களும்… இஸ்லாம் கூறும் தீர்வுகளும்… | தொடர்-2 தரமற்ற சாலைகள் குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக வாகன ஓட்டிகளுக்கு மரணக்குழிகளாக காட்சியளிக்கின்றன. மக்களின் ஓட்டுக்களிலும் வரிப்பணங்களிலும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளுமே இதற்கு முழு முதற்காரணங்களாகும். அரசாங்கம் சாலைகளுக்கென்று ஒதுக்குகின்ற அற்ப பணங்களை இடையில் இருக்கின்ற அதிகாரிகள் ஊழல் செய்து தரமற்ற சாலைகளை போட்டு குடிமக்களின் உயிர்களை பறித்து விடுகின்றனர். ஆட்சியாளர்களின் மெத்தெனப்போக்கும் பொடுபோக்குத்தனமும் …

Read More »

01-சாலை விபத்துகளுக்கான காரணங்களும்… இஸ்லாத்தின் தீர்வுகளும்…

இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம் “வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது” என்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நாளுக்கு நாள் வாகனங்களும் பெருகிக்கொண்டே செல்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் வாகனமும் ஒன்றாகிவிட்டது. அரசும் அதிகாரிகளும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்களை மேற்கொண்டாலும் அது சம்பந்தமான பிரசுரங்களை விநியோகித்தாலும் சாலை …

Read More »

அவசரக்காரன் [இயல்பிற்கு மாற்றமானவன்!]

அனைத்துப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனே மனிதனை படைத்தான். அவன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்தான். மேலும் அவனுக்கு சில இயல்புகளிலும் ஏற்படுத்தினான். இவையே ‘மனித இயல்புகள்’ என்று சொல்லப்படுகிறது. குர்ஆன் மனித இயல்புகளை பற்றி பல இடங்களில் விரிவாகச் சொல்கிறது.ஓர் இறைநம்பிக்கையாளன் இவ்வியல்புகளுக்கு முற்றிலும் மாறுபட்டு திகழ்கிறான் எனவே! மனித இயல்புகள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் அதற்கு முற்றிலும் மாற்றமான மூஃமினின் நிலையை பற்றியும் இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் …

Read More »

மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

மன நிம்மதி,மகிழ்ச்சிகரமான வாழ்க்கை பற்றி ஆயிரமல்ல பல இலட்சம் நூல்கள் எழுதினாலும் அவை அனைத்தினது சுருக்கமும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்ற இந்த ஒரே ஒரு வரியிலே சுருங்கி விடுகின்றது. “அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டே உள்ளங்கள் அமைதி பெறுகின்றன” – சூரா அர்ரஃது 13:28. அல்குர்ஆன் என்பது உலக மக்களுக்கான பொது வழிகாட்டி என்பதனையும் தாண்டி இறைவாசிகளுக்கு அருளாகவும் தமது இதயங்களின் சுமைகளை இறக்கி வைக்கக்கூடியதாகவும் மகிழ்ச்சியையும் மன …

Read More »

பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்

அல்லாஹுத்தஆலா எமக்குத் தேர்ந்தெடுத்துத்தந்த இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு முஸ்லிமுடைய ஒழுக்க விடயங்கள், பண்பாடுகள், நடத்தைகள் குறித்து அதிகூடிய கவனம் செலுத்தக்கூடிய ஒரு மார்க்கமாக இருக்கின்றது. ஒரு முஸ்லிம் ஓர் இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறான நடத்தைகளில் ஈடுபடக்கூடாது என்பதற்க இஸ்லாம் பல வழிகாட்டல்களைக் கூறியிருக்கின்றது. அதன் பிரகாரம் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு இவ்வுலகிலேயே மிக விருப்பமான இடமாகிய பள்ளிவாசலுக்குள் …

Read More »