Featured Posts
Home » பொதுவானவை » கவிதைகள்

கவிதைகள்

போன நோன்புக்குள்ள…

தலைப்பிறை கண்டுட்டாங்களாம். பள்ளியில சொன்னாங்க, காதுல கேட்டிச்சி, நோன்பு மணத்திச்சி, சைத்தான்கள் விலங்கிடப்படுமாமே இனியென்ன பயமென்று சிலர் சாமத்திலும் விளையாடினோம், ஜும்ஆவுல சொன்னாங்க நேற்று றமளானின் பொழுதுகள் மகத்துவமானதென்று. எம் இறைவா! இந்த றமளானிலாவது சாமத்திலும் அமல் செய்யும் பாக்கியம் தருவாய்! நித்திரை தோய்ந்த கண்ணுடன் ஸஹர் செய்து தூங்கினால், சிலர் ளுஹறுக்குத்தான் விழித்த ஞாபகம் ஜும்ஆவுல சொன்னாங்க நேற்று றமளானில் செய்யும் அமல்களுக்கு கூலி அதிகமாம் எம் இறைவா! …

Read More »

மனமே மனமே பாவம் செய்வதேன்!

இப்பாடல் முகநூலில் (at Facebook) https://www.facebook.com/muftitech/videos/2178440622219852/ மனமே மனமே பாவம் செய்வதேன்! by கவிஞர் மலிக்கா ஃபாரூக் மனமே மனமே பாவம் செய்வதேன் மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன் மரணசிந்தனை நினைவில் வரலையா! ஆ ஆ ஆ ஆ இல்லை “மனிதா மரணமென்பதே உனக்கு இல்லையா! ஆ ஆ பூமியில் இறைவன் படைத்த அனைத்துமே புனிதமனிதனே உனக்காகவே! அட உனக்காகவே இங்கு சிறிதுகாலம் நீ இளைப்பாறவே!-இதில் பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குது புண்ணியங்களும் …

Read More »

மகளெனும் தேவதைக்கு

இதயத்தில் குறித்திருக்கிறேன் அந்த அபூர்வ கணத்தை. சிறகுகள் உணராத செல்ல தேவதையே.. என் வாழ்வின் பொருளே.. சந்தோஷமே… அப்போது தான் நீ கண்மலர்ந்தாய் வெறும் சிப்பியென்றிருந்த எனக்குள் முத்தாக நீ வந்தாய். ரோஜாக் குவியலாய் உனைக் கையிலேந்திய அந்தத் தருணத்தில் வானத்தில் மிதக்கத் தொடங்கியிருந்தேன். இன்று வரை இறங்கவில்லை. ஏனையில் நீ உறங்குகையில் உன்னுடைய அந்தப் புன்சிரிப்பை அள்ளிக் கொண்டு தான் என் நாளை நிரப்பிக் கொள்வேன் அப்போதெல்லாம். ஆதியில் …

Read More »

கணவருக்கு ஒரு தூது

தன் மடிபூத்த பூவுக்கும் வேண்டாம் இவ்வேதனை என்றென் தாய் பிரார்த்தித்தாளோ? பச்சை வீட்டில் துளிர்த்தும் நாமின்னும் பூக்கவேயில்லை அன்பே! தொட்டில் வாசனையற்ற மணவாழ்வு நம்மைச் சூழ்ந்து சுவாசிக்கின்றது புறக்கணிக்கும் திங்கள்களால் திராணியற்றுக் கிடக்கிறது என் தாய்மை மூவாறு வருடங்கள் நம்மைக் கடந்துபோன பொழுதுகள் சாட்சி நம் வாசலில் கொட்டித் துளாவப்பட்டிருக்கும் இந்த வெறுமை சாட்சி வைத்தியசாலையில் என் வயிற்றைக் கீறிய கத்திமுனையும் சாட்சி தினம் புன்னகைகள் வாங்கி வருகிறாய் என்னைச் …

Read More »

நான் வேலைக்கு போக வேண்டும்

பொம்மைகளும் பேசும் என்பதை புரிய வைத்தவன் என் பிள்ளை மேலும் பல பொம்மைக் கனவுகளுடன்தான் பிள்ளை என்னை வேலைக்கு அனுப்புகிறான் முத்தமிட்டு அவன் சிரித்தாலும், என் “மணிபேஸ்” மடிவெடித்துப் போகிறது அவனது ஏக்கங்களால் என் காரியாலயக் கோவையின் கோர்க்கப்பட்ட நாடாவுக்குள் அவனையும் சேர்த்து முடிந்தாற்போல ஒரு வலி அவனுக்கேயுரித்தான எனது பொழுதுகளை காலாவதியாக்கி விடுகிறது காரியாலயம் கடமையில் நான் காணும் மகிழ்ச்சியெல்லாம் அவனது மௌனங்களுக்குள் காணத்தே போகிறது நான் திரும்பும்வரை …

Read More »

திருமணம்

நீ இன்னார் மகனாயிருக்க நான் இன்னார் மகளாயிருக்க வாழ்த்த வந்த உறவுமிருக்க உனக்கு சொந்தமானேன் திகதியொன்றிலே என் சகோதரன் கொடுத்த பரீட்சைக் கட்டணமோ தந்தை கொடுத்த சுற்றுலாப் பணமோ நீ கொடுத்த மஹர்போல மணத்திருக்கவில்லை உன் பொறுப்பில் கைமாற்றப்பட்ட அக்கணமே நீ என் காவலனாகிவிட்ட உண்மையை உணர்ந்தேன் உனது ஆடைகொண்டு என்னைப் போர்த்திய முதற் பொழுதில்தான் என்னைக் காதலித்தேன் அன்போடு நீ ஊட்டிய ஒவ்வொரு கவளமும் தினமும் உன் வாசகியாக …

Read More »

அன்புள்ள வேட்பாளருக்கு!

உரோமர் தகர்த்தெறிந்த உஸ்மானிய பேரரசு வேண்டாம் மங்கோலியர் படையெடுத்த அப்பாசியர் ஆட்சியும் வேண்டாம் மார்க்கத்தின் பெயரால் மரணமும் இனத்தின் பெயரால் இயலாமையும் இக்கணமே முடிய வேண்டும் அது உங்கள்ட வரவால் வேண்டும் இன்னும், தலைமைக்குத் தகுதி வேண்டும் தர்க்கங்கள் தவிர்க்க வேண்டும் தார்மீகம் கொள்கையாகி அதில் ஆன்மீகம் ஜொலிக்க வேண்டும் எதிரி பலம் உணர வேண்டும் எதிரி வாழ்வியலும் நீங்களறிய வேண்டும் சுயவிசாரணை செய்தேனும் உங்கள் பலவீனம் போக்க வேண்டும் …

Read More »

மரணத்தை எழுதுகிறேன்

மரணத்தைக் குசலம் விசாரித்து, அதனுடனேயே கண்ணயர்தல் எனக்கு பழகியதொன்று இருப்பினும், புதுப்பொழுதை புலரவிட்டு இன்றைக்கும் வாழ்ந்துபார்! என்கிறது வாழ்க்கை வாழ்க்கையுடன் தைரியமாகவே நடக்கிறேன் என் கைப்பட எழுதிய “வசிய்யத்து” கைப்பையில் இருப்பதனால் நாளை நாளை என்று நான் கொடுத்துவிட்ட வாக்குறுதிகள் நாளை என் கப்றை நெருக்க வேண்டாமென, “நாளை” களுக்கு முன்னால் “இன்சாஅல்லாஹ்” களையும் சேர்த்தே மொழிந்துள்ளேன் நான் கடனாக கொடுத்தவைகளை எங்கேனும் பொறிக்கவில்லை அழகிய கடனாக அவை என்னை …

Read More »

இதய நன்றி இறைவா! (கவிதை)

– கூ.செ.செய்யது முஹமது இதய நன்றி இறைவா! (பல்லவி) அருள்வளம் யாவிலும் நிறைவைச் செய்தவன் நன்றியையே சொல்வோம் இறைவா! முகங்கள் யாவையும் உன் புறம் கவிழ்ந்திட நன்றி சொல்லிடுவோம் இறைவா! (அநுபல்லவி) அழகிய மார்க்கத்தில் அற்புத வேதத்தில் பிறந்திடச் செய்தவனே! அழகிய மார்க்கத்தில் அற்புத வேதத்தில் பிறந்திடச் செய்தவனே! நன்றி சொல்வோம் இறைவா! நன்றி சொல்வோம் இறைவா! (பல்லவி) அருள்வளம் யாவிலும் நிறைவைச் செய்தவன் நன்றியையே சொல்வோம் இறைவா! முகங்கள் …

Read More »

இறைவா! என்னை மன்னிப்பாய்! (கவிதை)

ஆளோ அவளோ ஒருசிறுமி அன்று பார்த்தேன் பயணத்தில் நீளும் விழிகள் சிரித்திருக்கும் நீண்ட கூந்தல் தங்கநிறம் மாலைப் பரிதி போன்றிருக்கும் மனதைத் தீண்டும் வண்ணமவள் கோல மயில்போல் மகளெனக்கு கொடுப்பாய் இறைவா என்றிறைஞ்ச

Read More »