Featured Posts
Home » பொதுவானவை » நாட்டு நடப்பு (page 2)

நாட்டு நடப்பு

நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்திற்காக…!

இந்த மனித சமுதாயம் படைக்கப்பட்டு நேர்வழி எது? – வழிகேடு எது? என்று இறைவன் புறத்திலிருந்து பிரித்தறிவிக்கப்பட்ட நாள் முதல், நேர்வழியை பின்பற்றக்கூடிய (ஈமான் கொண்ட) மக்களையும், பல வீனமானவர்களையும் விழுங்குவதற்கு எதிரிகள் இந்த பூமி முழுவதும் செயலாற்றுவதை ஒழிவு மறைவு இன்றி அனைவரும் கண்டுவருகின்றோம். ஒன்று ஈமான் கொண்டவர்களை (அல்லாஹுவையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களை) முழுவதுமாக விழுங்குவதற்கான முயற்சி! மற்றொன்று பொருளாதாரத்திலும், செயலாற்றுவதிலும் அவர்களை பலவீனப்படுத்தி அவர்களின் …

Read More »

அலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம். மனிதன், அவன் பெற்றுள்ள நவீன அறிவைப் பயன்படுத்தி, பல வியத்தகு சாதங்களைப் படைத்து, பெரும் புரட்சிகளைப் புரிந்துவருகின்றான். கற்பனையில் கற்பிதம் செய்யமுடியாத பல புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி, ஆச்சரியம் ஏற்படுத்தி வருகின்றான். அவை மனிதர்களுக்கு நன்மை தரும் அதேவேளை, பெருமளவு தீமையும் ஏற்படுத்துகிறது. மனிதனின் இயல்பு தீமைகளின் பால் அதிகம் …

Read More »

சூடான்: என்ன நடக்கிறது அங்கே?

எம்.ஐ அன்வர் (ஸலபி) முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்து வந்த உமர் பஷீரின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வந்த அவல் இப்ன் அவ்ப் கடந்த 11 ஆம் திகதி இராணுவத்தின் உதவியுடன் உமர் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார். உமர் பஷீர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் பதவியிலிருந்து அவர் …

Read More »

உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம்

இஸ்லாம் கொள்கையில் உறுதியை வலியுறுத்துகின்றது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய கொள்கையில் மலை போன்ற உறுதியுடன் இருக்க வேண்டும். அதில் தளர்வோ தள்ளாட்டமோ இருக்கக் கூடாது. இதே வேளை, இஸ்லாம் பிற சமய, சமூக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றை மதித்து நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது. இஸ்லாம் சிலை வணக்கத்தையும், பல தெய்வ வழிபாட்டையும் கடுமையாக எதிர்க்கின்றது. அதனை முட்டாள்தனமாகவும் பார்க்கின்றது. இன்னும் அதை நரகத்திற்கு இட்டுச் செல்லும் …

Read More »

குர்ஆன் சுன்னாப் பிரச்சாரம் வழிகெட்ட இயக்கப் பிரச்சாரமாகுமா?

இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற சமூக அமைப்பைக் கொண்ட நாடாகும். அங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் சில தசாப்தங்களாகவே தெளிவான அகீதா அறிவை சுவாசித்தனர். கப்றுகளுக்கு  தெய்வீக சக்தியை வழங்கி அவற்றை வணங்கி வழிபாடுதல், அவ்லியாக்கள் என்போரை அல்லாஹ்வைச் சென்றடையும் ஊடகமாக்கி, அவர்கள் பேரில் நேர்ச்சை மற்றும் அவர்கள் பேரில் ஷிர்க்கான பல வழிபாடுகள் மூட நம்பிக்கை சார்ந்த  பழக்க வழக்கங்கள் வரதட்சனைக் கொடுமை அமல்களில் பித்அத் ஸஹீஹான துஆக்கள் மற்றும் …

Read More »

பிப்ரவரி 14 – காதலர் தினம்

சர்வதேச தினங்களில் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச தினங்கள் தீர்மானிக்கப்பட்டன. “பெற்றோர் தினம்”, பெற்றோரின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், சில பெற்றோர்கள் அந்தத் தினத்தில் மட்டும் பெருமைப்படுத்தப்படுகின்றனர். ஆசிரியர் தினம் ஆசிரியர்களை கௌரவிக்க உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரிய ஆசிரியைகள் தமது ஆளுமையையும் அந்தஸ்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் தினமாக அத்தினம் மாற்றப்பட்டு வருகின்றது. எப்படியிருந்தாலும் …

Read More »

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!

ஐம்பது நாள் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் குழப்பங்களால் இலங்கையின் நன்மதிப்புக்கு சரிவு ஏற்பட்டது. நாணயத்தின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டது. இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சி…. என பல சரிவுகள் ஏற்பட்டன. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் நாடு உள்ளது. நாட்டில் ஏற்பட்ட இந்த குழப்பநிலை முற்று முழுதாக முடிவுக்கு வந்துவிடவில்லை. விவாகரத்தை வேண்டி நிற்கும் தம்பதிகள் போல ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட்டால் நாட்டைக் …

Read More »

சிறுவர் துஷ்பிரயோகங்களும், அவற்றுக்கான விழிப்புணர்களும்

– Assheikh JM. Hizbullah Anvari (B.com Reading) – இலங்கையில் தற்போது நாளுக்கு நாள் சிறுவர் கடத்தல் சம்பவங்கள், சிறுவர் கொலைகள், குழு மோதல்கள் போன்ற இன்னோரன்ன துஷ்பிரயோகங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன. இலங்கையின் தற்போதைய அரசியல் பிரச்சினையில் அனைவரும் மூழ்கியிருப்பதாலோ என்னவோ இத் துஷ்பிரயோக செயற்பாடுகளை பெரிபடுத்துவதிலோ, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதிலோ பலர் ஆர்வம் இன்றி காணப்படுகின்றனர். ஊடகங்கள் கூட இதுவிடயத்தில் அலட்சியப்போக்கைக் கையாள்வது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கின்றன. …

Read More »

அழகிய கடன் கொடுங்கள்

அந்தச் சில மாதங்கள் பொருளாதார ரீதியாக எங்களுக்குச் சோதனை தருவதாகவே இருந்தன. ஆனால், ஒரு தெளிந்த நீரோடையைப் போன்றதொரு நிம்மதியினை உள்ளூர உணர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்னர், என்னால் பெறப்பட்டிருந்த இடருதவிக்கடனின் மாதாந்த அறவீட்டுத்தொகையைக் குறுகிய சில மாதங்களுக்குள் செலுத்தி, அதிலிருந்து விரைவில் விடுபடுவதற்கான ஒரு முயற்சியே அது. சம்பள அதிகரிப்பிற்கான தேவையும் எதிர்பார்ப்பும் ஒருபுறமிருக்க, பல அசௌகரியங்களுக்கு மத்தியிலும் அந்தக் கடனை அடைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னைப் …

Read More »

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கான சில முன்மொழிவுகளும்

இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர். பொதுவாக முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் என்ற எண்ணம்தான் முஸ்லிம் சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. இருப்பினும் கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் போட்டி போடும் அளவுக்கு சகல துறைகளிலும் முன்னேற்றங் கண்டு வருகின்றனர் என்பதுதான் உண்மையாகும். நாம் கல்வியில் பின்தங்கியுள்ளோம். ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது மிகப் பின்தங்கி யுள்ளோம் என்ற எண்ணம் தோல்வி மனப்பாங்கை ஏற்படுத்தி வருகின்றது. எனவே, இந்த …

Read More »