Featured Posts
Home » மீடியா » நெருங்கி வரும் மறுமை – Abdul Basith Bukhari

நெருங்கி வரும் மறுமை – Abdul Basith Bukhari

சொர்க்கவாசிகளின் அழகிய பண்புகள்

உங்கள் இறைவனிடமிருந்துள்ள மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின்பாலும் நீங்கள் விரைந்து செல்லுங்கள். அதன் விசலாம் வானங்கள் மற்றும் பூமி அளவாகும். அது பயபக்தியுடையவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3:133) “நெருங்கி வரும் மறுமை” தொடரின் இறுதி நிகழ்ச்சி. நாம் அனைவருமே சொர்க்கம் செல்ல ஆசைப் படுகிறோம். சொர்க்கம் செல்பவர்களிடம் என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும்? சொர்க்கத்தின் தன்மைகள் என்னென்ன? என்பதைப் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் விளக்குகிறார் மவ்லவி …

Read More »

மறுமையின் பேரதிர்ச்சிகள்

“மக்களே! உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமையின் அதிர்ச்சி மகத்தானதாகும்” (அல்குர்ஆன் 22:1) மறுமையைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்திகள். குர்ஆன் ஹதீஸ் கூறும் உண்மைகள். மறுமை நாளை கண்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்திய அனுபவம் இந்த உரையில் ஏற்படுகிறது. உள்ளங்கள் நடு நடுங்கும். கண்கள் பனிக்கும். அனைவரும் அவசியம் பார்த்துப் பகிர்ந்து கொள்ள வேண்டிய எழுச்சியுரை. இடம்: அல்ஃபாரூக் மஸ்ஜித், மனாமா அன்புடன் தமிழ் அழைப்புக்குழு, Bahrain …

Read More »

மறுமையின் பெரிய பத்து அடையாளங்கள்

மறுமை நாள் ஏற்படுவதற்கு முன் ஒன்றன் பின் ஒன்றாக பத்து அடையாளங்கள் ஏற்படும். அவை ஏற்பட்டு விட்டால் அடுத்து உடனெ மறுமை வந்து விடும். அந்த பத்து அடையாளங்களைப் பற்றிய விரிவான அலசல். மிகவும் பயன் உள்ள கல்வி சார்ந்த வகுப்பு. பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள். மறுமை நாளின் வெற்றிக்காக இப்போதே உழைப்போம். அன்புடன் – தமிழ் அழைப்புக்குழு, Bahrain Download mp4 Video Size: about 179 MB Download …

Read More »

பயம் தரும் மண்ணறை வாழ்க்கை

உள்ளங்களைப் பண்படுத்தும் எழுச்சியுரை: மவ்லவி. அப்துல் பாஸித் அல்புகாரீ மண்ணறை வாழ்க்கை மறுமையின் முதல் படி. அதில் ஈடேற்றறம் பெற்று விட்டால் மறுமையின் காரியங்கள் சீராகி விடும். மண்ணறை வாழ்க்கையில் ஒருவர் வெற்றியடையவில்லையெனில் அது மிகப்பெரும் பேரிழப்பு. நபி (ஸல்) அவர்களின் இந்த முன்னெச்சரிக்கையை நினைத்தே உஸ்மான் (ரழி) அவர்கள் கப்றுகளைத் தரிசிக்கும்பொதெல்லாம் அழுவார்கள். ஸஅத் இப்னு முஆத் – இவரது மரணத்தின் காரணமாக ரஹ்மானுடைய அர்ஷ் அதிர்ந்து விட்டது. …

Read More »

மறுமையின் வேளை நெருங்கிவிட்டது

எழுச்சியுரை: மவ்லவி அப்துல் பாஸித் அல்புகாரீ இடம்: பூஷகிர் மஸஸ்ஜித், ஹுரா, பஹ்ரைன் நேரம் நெருங்கிவிட்டது, சந்திரனும் பிளந்து விட்டது (அல்குர்ஆன் 54:1) மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கிவிட்டது. அவர்களோ மறதியில் புறக்ககணித்ததவர்களாகஉள்ளனர். (அல்குர்ஆன் 21:1) மறுமையின் நெருக்கத்தை இன்னும் பல வசனங்களில் அல்லாஹ் எச்சரித்து சுட்டிக் காட்டுகிறான். இறுதி நபியின் வருகையோடு மறுமையின் வருகையும் அடுத்து விட்டது. மறுமையின் சிந்தனை குறைந்து விட்ட இன்றைய காலல …

Read More »

மரணமும் மனிதனும்

நெருங்கி வரும் மறுமை – விழிப்புணர்வுப் பிரச்சாரத் தொடரின் முதல் உரை. மவ்லவி. அப்துல் பாஸித் அல்புகாரீ இடம்: அல்பாரூக் மஸ்ஜித், மனாமா மரணம் எங்கிருந்தாலும் நம்மைத் தொடர்ந்த வரும். மரணம் என்ற எதார்த்தத்தை மறந்து மமதையில் வாழும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை. மறுமையை நாடி வாழ்வைத் தொடரும் அடியார்களுக்கு ஓர் எழுச்சியுரை. அவசியம் பாருங்கள். அத்துடன் பகிருங்கள் – தமிழ் அழைப்புக்குழு, பஹ்ரைன்

Read More »