Featured Posts
Home » 2016 » February » 13

Daily Archives: February 13, 2016

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 02

முஃதஸிலாக்களின் தோற்றமும் வளர்ச்சியும் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மிகப்பெரிய வழிகெட்ட அமைப்புக்களில் முஃதஸிலாக்கள் பிரதானமானவர்கள். கப்ரு வழிபாடு, மூடநம்பிக்கைகள், செயல் சார்ந்த பித்அத்துக்கள் போன்றன இவர்களிடம் இல்லாவிட்டாலும் குர்ஆனைத் திரிபுபடுத்துவது, சுன்னாவை மறுப்பது, குர்ஆனுக்கு குதர்க்கமாக விளக்கமளிப்பது, நபித்தோழர்களைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற பிரதான வழிகேடுகள் இவர்களிடம் காணப்பட்டன. இவர்களிடம் காணப்பட்ட வழிகேடுகளை மையமாக வைத்து இவர்களை அஹ்லுஸ் ஸுன்னாவுடைய அறிஞர்கள் பல பெயர்களைக் குறிப்பிட்டு சமூகத்திற்கு அடையாளப்படுத்தினர். சென்ற …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 15 – ஸலாத்துல் வித்ர் – VII

வித்ர் தொழுகையும் கியாமுல்லைல் தொழுகைக்குள் அடங்கக் கூடியதுதான். இருப்பினும் கியாமுல்லைல் இரவுத் தொழுகைக்கும் வித்ர் தொழுகைக்குமிடையில் சில வித்தியாசங்கள் உள்ளன. எனவே, ஹதீஸ்கலை, பிக்ஹ் கலை அறிஞர்கள் இரண்டையும் தனித்தனித் தலைப்பாக பேசியுள்ளனர். இந்த அடிப்படை யில்தான் இங்கு வித்ர் தொழுகை குறித்துத் தனித் தலைப்பாக நோக்கப்படுகின்றது. வித்ர் என்றால் ஒற்றைப்படை அதாவது 1, 3, 5, 7 என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். இந்த அடிப்படையில்தான் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது. …

Read More »

குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – இறைத்தூதர்களுக்கு மத்தியில் பாரபட்சம்

‘இத்தூதர்களில் சிலரைவிட சிலரை நாம் சிறப்பாக்கி வைத்திருக்கின்றோம். அவர்களில் (நேரடியாக) அல்லாஹ் பேசியவர்களுமுள்ளனர். மேலும் அவர்களில் சிலரின் பதவிகளை அவன் உயர்த்தினான். மர்யமின் மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான சான்றுகளை வழங்கி, ‘ரூஹூல் குத்ஸ்’ (எனும் ஜிப்ரீல்) மூலம் அவரை வலுவூட்டினோம். (தூதர்களான) இவர்களுக்குப் பின் வந்த (சமூகத்த)வர்களுக்கு தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் (அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என) அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் தமக்குள் சண்டை செய்திருக்க …

Read More »

வீட்டில் நாய் வளர்க்கலாமா?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆரிரியர்- இந்த உலகத்தில் படைக்கப் பட்ட எல்லா படைப்புகளும் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்புகளாகும். என்றாலும் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு சில சட்டங்களையும், வரம்புகளையும்,அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அதற்கு கட்டுப்பட்டு வாழ்பவனே உண்மையான முஸ்லிமாவான்.அந்த அடிப்படையில் நமது வீடுகளில் நாய் வளர்க்கலாமா? நாய்கள் விடயத்தில் நமது மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை கவனிப்போம். நாய்கள் வளர்க்க தடை நாய்கள், மற்றும் உருவப்படங்கள் உள்ள வீடுகளில் …

Read More »

சுவர்க்கம் திறக்கப்படும் நாட்கள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- அல்லாஹ் அடியார்களை கண்ணிப் படுத்தும் விதமாக இந்த உலத்தில் வாழும் போதே சுவர்க்கத்தை அடையும் பாக்கியத்தை வழிக் காட்டியுள்ளான். நாம் அல்லாஹ்விற்கு கட்டுப் பட்டு, நபியவர்களின் வழி முறைகளை நாளாந்தம் நடை முறைப் படுத்தினால் வாழும் போதே சுவர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கலாம். நமது முன்னோர்களான ஸஹாபாக்கள் அப்படி தான் இந்த உலகத்தில் வாழ்ந்து மரணித்தார்கள். நபியவர்கள் காட்டிய பிரகாரம், ஸஹாபாக்கள் சென்ற …

Read More »