Featured Posts
Home » இஸ்லாம் » தடுக்கப்பட்டவை » பித்அத் » நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் (மௌலித்) கொண்டாட்டம்

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் (மௌலித்) கொண்டாட்டம்

நபி (ஸல்) அவர்களை நேசிப்பது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும். அன்னாரவர்களை விரோதிப்பது ஈமானை முறிக்கும் செயலாகும்.. இதை பின்வரும் குர்ஆன் ஹதீத் வலியுறுத்துகின்றன.

النبي أولى بالمؤمنين من أنفسهم (الأحزاب :6 (
”நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்)தான் முன்னுரிமை பெற்றவர்.” (அஹ்ஸாப் : 6)

وعن أنس رضي الله عنه: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين (البخاري :15, فى رواية مسلم : 69 من أهله وماله بدل من والده وولده .
”நான் ஓர் அடியானிடத்தில் அவனது தந்தை, பிள்ளை, மக்கள் அனைவரை விடவும் விருப்பத்துக்குரியவனாக ஆகும் வரை அவ்வடியான் (பூரண) முஃமினாக முடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (புஹாரி:15, முஸ்லிம்: 69)

நபியவர்களி மீது கொள்ள வேண்டிய சம்பூரண அன்பு, மதிப்பு என்பன அன்னாரவர்களை பின்பற்றுவதும் அன்னாரவர்களின் வாழ்க்கை முறையை உயிர்ப்பிப்பதும்தான்.
{قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ } (31) سورة آل عمران

”நபியே!) நீர் கூறும்; ”நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.”

நபியவர்களின் அன்பின் பெயரால் வழிகேடுகள்:

ஸூபித்துவ வாதிகளும், தரீக்கா பக்தர்களும், கப்று வணங்கிகளும் நபி (ஸல்) அவர்களை நேசிக்கின்றோம் எனக் வாதிட்டுக் கொண்டு பின்வரும் ஷிர்க்குகளையும், பித்அத்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்:

(1) நபியவர்களின் ஒளியே முதல் சிருஷ்டி
(2) நபியவர்களின் ஆத்மா பூமியில் உலாவுகிறது.
(3) விழிப்பில் நபியவர்களைக் காணமுடியும்.
(4) நபியவர்களிடம் பிரார்த்தித்து தேவைகளைக் கோர முடியும்.
(5) நபியவர்களின் கப்ரை நோக்கி புனித யாத்திரை மேற்கொள்ளலாம்,
(6) நபியவர்களது கப்ரை அல்லது அதைச சுற்றியுள்ள பகுதிகளை பறகத் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் முத்தமிட்டு தொட்டுக் கொஞ்சுதல்.
(7) மௌலித் (நபியவர்களின் பிறந்த தினத்தை) கொண்டாடுதல்.

மௌலித் என்றால் என்ன?
மௌலித் (مولد) என்ற அறபுப் பதத்திற்கு, பிறப்பு, பிறந்த காலம், இடம் என்ற பொருள்கள் உள்ளன. இது பேச்சு வழக்கில் மௌலூது என்று கூறப்படுகிறது. அல்-மவ்லித் அந்நபவி என்றால், நபி (ஸல்) அவர்;களின் பிறந்த நாள் என்று பொருள்படும்.

நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை பிறந்ததாக முஸ்லிமில் பதிவாகியுள்ள ஹதீஸில் காணப்படுகிறது. (முஸ்லிம் 1162). ஊர்ஜிதமான அறிவிப்பொன்றில் யானை வருடம் நபி (ஸல்) அவர்கள் பிறந்ததாக வந்துள்ளது. பெரும்பாலான அறிஞர்கள் நபி (ஸல்) அவர்கள் ரபீஉனில் அவ்வல் மாதம் பிறந்ததாக கருதுகின்றனர். இப்னு இஸ்ஹாக் என்ற நபி வரலாற்றாசிரியர், இம்மாதம் 12ம் தினத்தன்று பிறந்ததாக கூறுகின்றார். இரண்டு, பத்து தினங்கில் பிறந்தார்கள் என்றும் வேறு சில அபிப்பிராயங்களும் கூறப்படுகின்றன.

சிலர் வருடாந்தம் குறிப்பாக றபீஉல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்கள். இன்னும் இது வணக்கம் என்றும், அதனால் நன்மை கிடைப்பதாகவும் நம்புகிறார்கள்.

இது காலவோட்டத்தில், அவ்லியாக்கள், இமாம்கள் பெயர்களால் மௌலித்கள் உருவாக்கப்பட்டன. (உ-மாக: முஹ்யுத்தீன், ஷாஹுல் ஹமீத், பத்ரிய்யீன்கள்) அவைகள் ஷிர்க் தொனித்த பாடல்கள், களியாட்டங்கள் என விஷ்வரூபம் எடுத்தன.

மௌலித் கொண்டாட்டம் எப்போது தோன்றியது?
பாதிமியீன்களின் நான்காவது கலீபாவாகிய ஹிஜ்ரி 365ல் மரணித்த அல்முயிஸ் லிதீனில்லா ( المعز لدين الله ) என்பவர்தான் மௌலித்களை ஏற்படுத்தினார். இவர், நபி (ஸல்), அலி (ரழி), ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி), பாதிமா (ரழி), தற்போது ஆட்சியிலிருக்கும் கலீபா ஆகியோர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதை அறிமுகப்படுத்தினார். பாதிமிய்யூன் என்போர் ஷீயாக்களில் அதி தீவிர கொள்கை உடையோர் ஆவார்கள்.

كتاب المواعظ والاعتبار للمقريزي 1ஃ490 وأحسن الكلام للمطيعي صــ : 44ஃ45

பின்பு ஹி. 495ல் மரணித்த அல்-முஸ்தஃலீ பில்லாஹ் ( المستعلي بالله ) என்பவரின் அவையின் பிரதம மந்திரியாகயிருந்த அல்-அப்லல் பின் அமீருல் ஜூயூஷ் ( الأفضل بن أمير الجيوش ) என்பவர் ஆறு மௌலித் கொண்டாட்டங்களையும ரத்துச் செய்தார். இவர் ஹி.595ல் மரணித்தார்.
كتاب المواعظ والاعتبار 1432)
மக்கள் மறந்துவிடும் அளவுக்கு சில காலம் மௌலித் கொண்டாட்டங்கள் ஓய்ந்து போயிருந்தன. பின்பு ஹி.525ல் மரணித்த அல்-ஆமிர் பி அஹ்காமில்லாஹ் (الآمر بأحكام الله ) என்ற கலீபா தனது பிரதம மந்திரி அல்-அப்லல் என்பவரை எதிர்க்கும் விதத்தில், மௌலித் கொண்டாட்டங்களை நடத்துமாறு உத்தரவிட்டார்.

உமர் அல் மல்லாஃவின் மௌலித் கொண்டாட்டம்.
ஹி.570ல் மரணித்த உமர் அல்-மல்லாஃ( عمر الملاء) என்பவர் ஒரு ஸூபித்துவவாதி, அவர் ஈராக்கின் வட பகுதியில் அமைந்துள்ள அல் மவ்ஸில் (الموصل ) என்ற நகரத்தில் வருடாந்தம் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இதில் மவ்ஸில் நகரத்துக் கவிஞர்கள் உட்பட பல புலவர்களும் கலந்து கொள்வார்கள். புலவர்கள் அரங்கேறி, நபி (ஸல்) அவர்களைப் புகழ் பாடுவார்கள்.

كتاب الروضتين : 2ஃ172
அரசர் முழப்பருத்தீன் அவர்களின் மௌலித் கொண்டாட்டம்
ஹி. 630ல் மரணித்த அரசர் முழப்பருத்தீன் அவர்கள் தர்மம் கொடுப்பதில் பிரபல்யமானவர். சமூக செவைகளில் ஈடுபாடுடையவர். ஆனால், ஸூபித்துவ வாதிகளுக்கு அடிமைப்பட்டவர். அவர்களின் நடன திக்ரில் கலந்து கொள்பவர். இதனால், அவர்களின் தாக்கத்தால் வருடா வருடம் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாடுவார்.

இவ்வைபவத்திற்குப் பலபகுதிகளிலிருந்தும் மக்கள் ஒன்று கூடுவர். ஹி.633ல் மரணித்த இப்னு திஹ்யா ( ابن دحية) என்பவர், அத்தன்வீர் பீ மவ்லிதில் பஷீரின் நதீர்( التنوير فى مولد البشير النذير ) என்ற மௌலித் நூலை எழுதி இவ்வரசருக்கு அன்பளிப்பாக சமர்ப்பித்து 1000 தீனார்களைப் பரிசாகப் பெற்றார்.

கெய்ரோவை ஆக்கிரமித்த பிரான்ஸ் படைகள் மௌலிதை ஊக்குவித்தமை

ஹிஜ்ரி 1213ம் ஆண்டு பிரான்ஸ் படைகள் கெய்ரோவை ஆக்கிரமித்தன. படைத்தளபதி நெப்போலியன் பொனாபார்ட் (Napoleon Bonaparte), ஸூபி பக்ரி என்பவரை அழைத்து, ஏன் நீங்கள் வழமை போல் மௌலித் கொண்டாட்டங்களை நடாத்தவில்லை என வினவினார். அதற்கு பக்ரி அவர்கள், உணவுப்பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, இறக்குமதித் தடை, மக்களிடம் பணம் இன்மை போன்ற காரணங்களினால் இவ்வருடம் மௌலித் கொண்டாட்டங்களை நடாத்த முடியவில்லை எனக் கூறினார். அதற்கு நெப்போலியன், கட்டாயம் மௌலித் நடாத்தப்பட வேண்டும் எனக் கூறி 300 பிரான்ஸ் நாணயங்களை நன்கொடையாகக் கொடுத்தார். அதற்கு ஸூபி பக்ரி உடன்பட்டார். பிரான்ஸ் படைகளின் பாரிய மேளம் தட்டலுக்கும், டாங்கிகளின் வேட்டுக்களுக்கும் மத்தியில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

பிரான்ஸ் படைகள் மௌலித் கொண்டாட்டங்களை ஊக்குவித்ததன் நோக்கம் என்னவெனில், இக்கொண்டாட்டங்களில் மார்க்கவிரோதச் செயல்கள், ஆண் பெண் கலப்புகள், பஞ்சமாபாதகங்கள் ஆகியவைகளில் முஸ்லிம்களை மூழ்கியடித்து ஆக்கிரமிப்பாளர்களை விட்டும் திசை திருப்புவதாகும். ( تاريخ عجائب للجبرتي 2ஃ201, 249, 306)
தற்காலம் வரைக்கும் எகிப்தில் நடாத்தப்படும் மௌலித் கொண்டாட்டங்களில் ஆபாசங்கள், அநாச்சாரங்கள் மலிந்து காணப்படுவது சர்வ சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இஸ்லாமிய ஆட்சியை எதிர்க்கும் அரசாங்கங்கள் மௌலிதை காலாகாலம் ஊக்குவித்துவருகின்றன.

மௌலித் கொண்டாட்டம் பற்றிய மார்க்கத் தீர்ப்பு
மக்களால் கொண்டாடப்படும் எந்த மௌலிதாக இருந்தாலும் குர்ஆன், ஹதீஸ் நோக்கில் வழிகெட்ட பித்அத்தாகும். இதற்குரிய ஆதாரங்கள் பின்வருமாறு:

1- அல்லாஹ் அல்லது அவனது திருத்தூதர் கற்றுத்தந்த வழிபாடுகள் மூலம் தான் அல்லாஹ்வை வணங்க வேண்டும். இஸ்லாத்தின் அனுமதியின்றி எவரும் புதியதோர் வணக்கத்தை உருவாக்கிவிட முடியாது. . {أَمْ لَهُمْ شُرَكَاء شَرَعُوا لَهُم مِّنَ الدِّينِ مَا لَمْ يَأْذَن بِهِ اللَّهُ..
”அள்ளாஹ் அனுமதிக்காத விடயங்களை சட்டவாக்கம் செய்யும் இணையாளர்கள் அவர்களுக்கு உண்டா?” என மறுத்து இறைவன் கூறுகிறான்: (அஷ்ஷூரா: 21)

2- மார்க்கத்தின் அனுமதி பெறாத புதிய வணக்கம் பித்அத் ஆகும்.. பித்அத்கள் எல்லாம் வழிகேடுகளாகும்.. இது பற்றி ஹதீத் பின்வருமாறு கூறுகிறது:
عن جابر بن عبد الله رضي الله عنهما قال , قال رسول الله صلى الله عليه وسلم : أما بعد : فإن خير الحديث كتاب الله , وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم , وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة ( رواه مسلم :2002 ) وفى رواية للنسائي :1577 : وكل ضلالة فى النار .
‘சிறந்த வார்த்தை அல்லாஹ்வின் வேதமகும், அழகிய வழிகாட்டல் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களாகும், (மார்க்கத்தில்) புதிதாக ஏற்படுத்தப்பட்டவைகள், தீயவிடயஙகளாகும,;, பித்அத் எல்லாம் வழிகேடுகளாகும், ‘வழிகேடுகளெல்லாம் நரகத்தில்தான். என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள.; (முஸ்லிம் ஹதீஸ் இல: 2002, நஸாயீ :1577).

பித்அத் எல்லாம் வழிகேடாகும் எனும் நபி மொழியிலிருந்து அழகிய பித்அத் என்பது கிடையவே கிடையாது என்பது தெளிவாகிறது. இதை அப்துல்லாஹிப்னு உமர் (றழி) அவர்களின் பின்வரும் கூற்றும் உறுதிப்படுத்துகிறது.
قال عبد الله بن عمر رضي الله عنهما : كل بدعة ضلالة وإن رآها الناس حسنة ( رواه محمد بن نصر المروزي فى كتابه السنة صـ : 83 بسند صحيح )
‘பித்அத்களை மக்கள் அழகானது எனக் கருதினாலும் எல்லா பித்அத்களும் வழிகேடுதான்’ ஆதாரம்: அஸ்ஸுன்னா, ஆசிரியர் முஹம்மத்பின் நஸ்ர் அல்-மர்வஸி. ஹதீஸ் இல: 82
3- பித்அத்களை நல்ல நோக்கில் செய்வதனால் அவை வழிகேடு என்ற நிலையிலிருந்து நேர்வழி என்ற நிலைக்கு மாறிவிட முடியாது.

قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا, الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا (103-104) سورة الكهف
”செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அவர்கள் தான் இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகிவிட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். (அல்கஹ்ப் : 104)

4- நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது, கிறிஸ்தவர்கள் இயேசுநாதரின் ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்குச் சமமாகும். யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர்களை வணக்கவழிபாடுகள், திருநாட்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
لتتبعن سنن الذين من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا في جحر ضب لاتبعتموهم قلنا: يا رسول الله آليهود والنصارى؟ قال: فمن؟ (البخاري:3456, مسلم:6723)
‘நீங்கள் உங்களுக்கு முன் வந்தவர்களின் வழியை சானுக்குச் சான் முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள், அவர்கள் உடும்பின் பொந்துக்குள்தான் புகுந்தாலும் நீங்களும் புகுந்துவிடுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள், கிறிஸ்தவர்களா? என வினவ, அவர்களல்லாது வேறு யார்? என பதிலளித்தார்கள்.’ (புஹாரி:3456, முஸ்லிம்:6723)

5) நபி (ஸல்) அவர்கள் பற்றியோ அல்லது நல்லடியார்கள் பற்றியோ புகழ்மாலை இயற்றி இறைவனை வழிபடுவது, பாடல்கள், கீதங்கள் மூலமாக அல்லாஹ்வை அணுகுவது வழிகெட்ட பித்அத்களாகும்.. இஸ்லாம் கற்றுத் தந்த வணக்க முறைகளில் கீதங்கள் மூலமாக இறைவனை அணுகும் முறை கிடையாது. அவ்வாறு செய்வது கிறிஸ்தவ, இந்து கலாசாரமாகும்..

6) நடைமுறையிலுள்ள மௌலித் பாடல்களில் நபி (ஸல்) அவர்களை அளவு கடந்து புகழ்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சில பாடல்களில் ஷிர்க்கை, குப்ரை (இறை நிராகரிப்பை) ஏற்படுத்தக் கூடிய வசனங்களும், நபி (ஸல்) அவர்களை இறைவனின் அந்தஸ்த்துக்கு உயர்த்திப் பாடப்பட்ட வசனங்களும் காணப்படுகின்றன. இதை நபி (ஸல்) அவர்கள் தவிர்ந்து கொள்ளுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.
لا تطروني كما أطرت النصارى بن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله’ (البخاري:3445)
‘கிறிஸ்தவர்கள் மரியமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை அளவு கடந்து புகழ்ந்தது போன்று என்னைப் புகழாதீர்கள். நான் அவனின் அடிமைதான், எனவே அல்லாஹ்வின் அடிமை என்றும் திருத்தூதர் என்றும் செhல்லுங்கள்’ (புஹாரி : 3445)

7) மேற்குறிப்பிடப்பட்ட தீர்ப்புகளுக்கினங்க மௌலூது சபைக்கு சமூகமளிப்பதோ, அல்லது அதற்காக சமர்ப்பிக்கும் உணவை சாப்பிடுவதோ மௌலித் ஓதி பணம் சம்பாதிப்பதோ ஹராமான, அல்லாஹ்வின் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

தொகுப்பு: கலாநிதி, யு.எல். அஹ்மத் அஷ்ரப்
தலைவர், தாருல் ஹதீத் , கொழும்பு,
உதவிப் பேராசிரியர், மன்னர் ஹாலித் பல்கலைக்கழகம்
சவுதி அறேபியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *