Featured Posts
Home » பொதுவானவை » கல்வி » இவர்கள் யாரை பின்பற்றுகிறார்கள்?

இவர்கள் யாரை பின்பற்றுகிறார்கள்?

மார்க்க கல்வியை கட்டாயம் படிக்க வேண்டும். குறிப்பாக தஃவா களத்தில் ஈடுபடக் கூடியவர்கள் குர்ஆனைப் பற்றிய அறிவும், ஹதீஸ்கள் பற்றிய தெளிவும் சரியாக இருக்க வேண்டும். இந்த தஃவா களம் வஹி செய்திகள் மூலம் நபிமார்கள் காட்டித் தந்த வழிமுறையாகும்.

இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா என்று அல்லாஹ் குர்ஆன் மூலம் பல இடங்களில் நம்மை விழித்து பேசுகிறான். ஆனால் படித்த ஆலிம்களோ, இந்த குர்ஆன் நமக்கு புரியாது அதை படிக்க கூடாது, குர்ஆனிய சட்டங்கள் நடைமுறைக்கு சரிவராது என்று பொது மக்களுக்கு கூறி பொதுமக்களையும் குர்ஆனை படிக்க விடாமல், தாங்களும் படிக்காமல் குர்ஆனை புறக்கணிக்க கூடிய அவல நிலையை காணலாம்?

மறுபக்கம் ஹதீஸும் உங்களுக்கு புரியாது விளங்க கஷ்டம் என்ற அடிப்படையில் ஹதீஸை விட்டு்ம் பொதுமக்களை துாரமாக்கி இருப்பதோடு, மௌலவிமார்களும் ஹதீஸை படிக்க ஆர்வம் காட்டுவது கிடையாது? ஹதீஸை எடுத்துக் காட்டினாலும், இதற்கெல்லாம் ஒரே பதில் நாங்கள் ஷாஃபி மத்ஹபினர்.

ஒரு காலத்தில் குர்ஆன், மற்றும் ஹதீஸ்களுடை மொழி பெயர்ப்புகள் இல்லாததினால் சரியான சட்டங்களை பெறமுடியாத ஒரு சூழ்நிலை, ஆனால் இப்போது இருந்த இடத்திலிருந்து எந்த மொழிகளில் வேண்டுமோ அந்த மொழிகளில் விளங்கக் கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கி இருக்கிறான். அதை அனுபவித்துக் கொண்டு பழைய பல்லவியையே சொல்கிறார்கள் என்றால் இந்த மௌலவிமார்களின் மறுமை நிலை எவ்வாறு இருக்கும்.

அன்று நேரடியாக நபியவர்களை எதிரிகள் எதிர்த்து மறுத்தார்கள். ஆனால் இன்று நபியவர்களை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று சொல்லக் கூடியவர்களிடம் ஒவ்வொரு அமலுக்குமான ஹதீஸ்களை எடுத்துக் காட்டினால், அந்த ஹதீஸ்கள் இவர்கள் வழமையாக செய்து வரும் அமல்களுக்கு முரணாக இருந்தால் நாங்கள் ஷாஃபி மத்ஹபினர் என்று தந்திரமாக நழுவி விடுகிறார்கள்? ஆனால் ஷாஃபிஈ இமாமோ ஹதீ்ஸ் சரியாக இருந்தால் அது தான் எனது வழி முறையாகும் என்று தெளிவாக கூறி இருக்க, ஏன் இவர்கள் மார்க்கத்தை படிக்க ஆர்வம் காட்டுவது கிடையாது. ஹதீஸ்களை நடைமுறைப்படுத்த முன்வருவது கிடையாது.

மாறாக குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் நேரடியாக ஆதாரம் காட்டுவோரை பொதுமக்களிடம் இவர்கள் அப்படி பட்டவர்கள், இப்படி பட்டவர்கள் என்று தனது அறியாமையை வெளிப்படுத்துகிறார்கள்.

இவர்களது தவறான அணுகு முறையினால் தான் இன்று இலங்கை முழுவதும் குர்ஆன், மற்றும் சுன்னாவுடைய தெளிவுகள் மக்களுக்கு மத்தியில் மறுமலர்ச்சி அடைந்து, எழுச்சிப் பெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ் !

பொது மக்களுக்கு குர்ஆன் விளங்காது, ஹதீஸ் விளங்காது என்று சொல்லக் கூடிய மௌலவிமார்கள் ஏழு வருடங்கள், எட்டு வருடங்கள் மத்ரஸாக்களில் படித்து வெளியேறியவர்கள். இவர்களுக்கும் விளங்க வில்லை என்றால் இவர்களின் கருத்துப்படி பொது மக்கள் விளங்க முடியாது என்றால் அவைகளை மௌலவிமார்களுக்கு விளங்கப் படுத்த முடியும் தானே ! ஏன் பொதுமக்களையும் விளங்க விடாமல் இவர்களும் விளங்கப் படுத்தாமல் இருக்கிறார்கள் இவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.

தான் கற்ற அமானிதமான மார்க்கத்திற்கு ஏன் மோசடி செய்கிறார்கள். அடிக்கடி நாங்கள் அல்லாஹ் மற்றும் ரஸூலை நேசிக்கிறோம் என்று சொல்கிறார்கள் ஆனால் நடைமுறையில் மறுக்குகிறார்கள்.

அதே நேரம் பொதுமக்கள் இன்று மார்க்கத்தை வேகமாக படித்து நடைமுறைப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். பொதுமக்களின் கேள்விகளுக்கு படித்த மௌலவிமார்களால் சரியான முறையில் பதில் சொல்ல முடியாததினால் அதற்கு ஒரே வழி நாங்கள் ஷாஃபி மத்ஹபினா்.

மேலும் மார்க்கத்தை சரியாக விளங்கி நடைமுறை படுத்துவோரை இப்படியான மௌலவிமார்கள் இவர்கள் குழப்பவாதிகள், ஒற்றுமையை விரும்பாதவர்கள் என்று பொதுமக்களிடம் எடுத்துக் காட்டி தனது தலையிலேயே மண்ணை வாரி அள்ளி போட்டுக் கொள்கிறார்கள்.

பொதுமக்களே ! சுன்னாக்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த தயங்கும் இவர்கள் உங்களுக்கு எப்படி சரியான வழியை காட்டப் போகிறார்கள்.

நாங்கள் நபிமார்கள் செய்த பணியை செய்கிறோம் என்கிறார்கள். நபிமார்கள் இப்படி தான் செய்தார்கள் என்று எடுத்துக் காட்டினால் நாங்கள் ஷாஃபி மத்ஹபினர் என்கிறார்கள். பிறகு ஏன் நபிமார்களின் பெயர்களை பயன்படுத்த வேண்டும்.

சரி இதோ ஷாஃபி இமாம் இன்ன, இன்ன அமல்களை இப்படி தான் செய்துள்ளார்கள், இப்படி தான் தீர்பளித்துள்ளார்கள் என்று இமாம் ஷாஃபிஈ இமாமுடை கிதாபுகளிலிருந்து எடுத்துக் காட்டினால் அப்போது மௌனிகளாக இருக்கிறார்கள்.

அப்படியானால் இவர்கள் யாரை பின்பற்றுகிறார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *