Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » பைபிளில் முஹம்மத் (ஸல்) – 04

பைபிளில் முஹம்மத் (ஸல்) – 04

தொடர் – 04

பைபிளில் முஹம்மத்(ஸல்)

பைபிளின் பல வசனங்கள் முஹம்மத் நபியின் வருகை பற்றி முன்னறிவிப்புச் செய்கின்றன. அத்தகைய அறிவிப்புக்கள் இயேசு பற்றியே பேசுவதாக கிறிஸ்தவ உலகம் நம்புகின்றது. முன்னைய இறைத்தூதர்கள் இயேசு பற்றியும் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இயேசு உண்மையான ஒரு இறைத்தூதர் என்பதிலும் எந்த முஸ்லிமுக்கும் முரண்பாடு இல்லை.

ஆனால், கிறிஸ்தவ உலகம் முஹம்மத் நபியின் நபித்துவத்தைப் பொய்ப்பித்துள்ளது. முஹம்மது நபியைப் பொய்ப்பித்தால் பைபிள் கூறும் பல முன்னறிவிப்புக்கள் பொய்யாகிவிடும். எனவேதான், குர்ஆன் பல இடங்களில், ‘முஹம்மத் நபி வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்த வந்தவர்’ எனக் கூறுகின்றது.

பைபிள் கூறும் முன்னறிவிப்புக்களை முறையாக அணுகுவதாயின் வரலாற்றின் ஆரம்ப கட்டத்துக்கு நாம் செல்ல வேண்டியுள்ளது.

இப்றாஹீம் நபியின் பரம்பரையில்தான் இறைத்தூதர்கள் வந்தார்கள். நபி இப்றாஹீம் (ஆபிரகாம்) அவர்களுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தனர். மூத்தவர் இஸ்மவேல் எனப்படும் இஸ்மாயீல். மற்றவர் ஈஸாக் எனப்படும் இஸ்ஹாக் இவ்விருவர் மூலமும் அரபு சமூகம், இஸ்ரவேல் சமூகம் உருவானது. இந்தப் பின்னணியுடன் மீதி உள்ள செய்திகளை அணுகுவோம்.

இப்றாஹீம் நபி நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்தார். அவர் குழந்தைப் பாக்கியத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்த போது அவருக்குப் பின்வரும் அருள்வாக்கியம் சொல்லப்பட்டது.

‘அவர் அவனை வெளியே அழைத்து, நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி, பின்பு அவனை நோக்கி, உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.’ (ஆதியாகமம்: 15:5)

வானத்து நட்சத்திரம் போல் உன் சந்ததியினைப் பெருக்குவேன் என்ற கர்த்தரின் அருள்வாக்கின்படி ஆபிரகாமுக்கு முதலில் கிடைத்த புத்திர பாக்கியம் இஸ்மவேல் எனும் இஸ்மாயீல் நபியாவார். இந்த வகையில் இஸ்மவேல் நபியின் பரம்பரையினரான அறபிகள் ஆசிர்வதிக்கப்படுகின்றனர். இவ்வாறே இஸ்ஹாக் நபியின் பரம்பரையில் வந்த இஸ்ரவேலரும் ஆசிர்வதிக்கப்பட்டனர்.

இஸ்மவேல் நபியின் பரம்பரையில் முஹம்மத் நபியும் இஸ்ஹாக் நபியின் பரம்பரையில் இயேசுவும் தோன்றினர்.

இஸ்மவேல் கர்ப்பத்தில் இருக்கும் போதும் அவரின் சந்ததி பெருகும் என்ற நற்செய்தி கூறப்பட்டது.

‘பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, ‘உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணி முடியாததா யிருக்கும்’ என்றார்.
(ஆதியாகமம் 16:10)

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட சந்ததிகளுக்கு சொந்தக்காரர்கள் இஸ்மாயில் நபி என்பதை இதிலிருந்து உணரலாம். கிறிஸ்தவ உலகம் இஸ்மவேல் பரம்பரையை கடவுளின் ஆசிர்வாதத்திற்கு அப்பாற்பட்ட சமூகமாகக் காட்ட முனைகின்றது. அது தவறாகும்.

(ஆதியாகமம் 16:18-21) வரையுள்ள வசனங்களில் ஆபிரகாமின் சந்ததிக்கு கடவுள் செய்யப் போகும் அருள் பற்றிப் பேசப்படுகின்றன. அதில்,

‘சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினி ஜுவாலையும் தோன்றின.’

‘அந்நாளிலே கர்த்தர் ஆபிரகாமோடே உடன்படிக்கை பண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதி மட்டுமுள்ளதும்’

‘கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,’

‘ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,’

‘எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.’
(ஆதியாகமம் 16: 18-21,)

இவ்வாறு பல தேசங்களை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்று கூறப்படுகின்றது. இந்தத் தேசங்களை இஸ்ரேல் சமூகம் ஆளவில்லை. எகிப்தில் இஸ்ரவேல் சமூகம் அடிமையாகவே இருந்தது. இஸ்மவேல் சமூகத்தில் வந்த அரேபியர்கள் உமர்(வ) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எகிப்தைக் கைப்பற்றினர். எகிப்து, ஈரான், ஈராக், சிரியா போன்ற தேசங்கள் தனது சமூகத்தால் கைப்பற்றப்படும் என்றும் முஹம்மது நபி முன்னறிவிப்புச் செய்தார். அது வரலாற்றில் நடந்தேறியது.

說¹ஜ உ¦ஜýÂçï:

ஆபிரகாம் நபியைப் பார்த்து உன்னைத் திரளான ஜனங்களுக்குத் தகப்பனாக்குவேன் என்ற முன்னறிவிப்பின் போது கடவுள் ஆபிரகாமுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தம் இதுதான்.

‘பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.’

‘எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்ன வென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண் பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்.’ (ஆதியாகமம் 17: 9-10)

இந்த உடன்படிக்கையை இஸ்மவேல் பரம்பரையினரான அறபு சமூகம் தொடர்ந்து செய்து வந்தது. ஒவ்வொரு முஸ்லிமும் செய்து வருகின்றான். கடவுளின் இந்த உடன் படிக்கையை இஸ்ரவேல் சமூகம் கைவிட்டு விட்டது. கிறிஸ்தவ உலகும் கைவிட்டுவிட்டது. இருப்பினும் இஸ்லாமிய உலகு தவறாமல் கடைப் பிடித்து வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கதாகும். இந்த வகையில் இப்றாஹீம் நபிக்கு உரிமை கொண்டாட உரித்துடைய சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது.

‘நிச்சயமாக மனிதர்களில் இப்றாஹீமுக்கு மிக்க உரித்துடையவர்கள் அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், நம்பிக்கை கொண்டோருமேயாவர். மேலும் அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலனாவான். ‘
(3:68)

மேற்படி வசனமும் இப்றாஹீம் நபிக்கு முஸ்லிம் சமூகமே அதிக உரித்துடையது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இப்றாஹீம் நபியின் மூத்த புதல்வர் இஸ்மாயீலும் இளைய புதல்வர் இஸ்ஹாக்கும் ஆவார்கள். இவ்விருவருமே ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். ஆனால், கிறிஸ்தவ உலகு ஒரு வாதத்தை முன்வைக்கலாம். இஸ்மாயீல் நபி அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவர், இஸ்ஹாக் நபி சுதந்திரமான பெண்ணுக்குப் பிறந்தவர் என்பார்கள். ஆனால், பைபிளின் போதனைப் பிரகாரம் சிரேஷ்ட புத்திர சுதந்திரம் என்பது மூத்த பிள்ளைக்கே கொடுக்கப்படும். இது பற்றி பைபிள் கூறுவதைப் பாருங்கள்.

‘இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள் மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார் களேயாகில் முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்ட வளின் புத்திரனானாலும்,’

‘தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும்நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தைக் கொடுக்க வேண்டுமே யல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்த வனுக்குக் கொடுக்கலாகாது.’

‘வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கீரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்ளூ அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது.’
(உபாகமம் 21:15-17)

இந்த அடிப்படையில் இஸ்மவேல் நபிக்கு சிரேஸ்ட புத்திர பாக்கியம் உள்ளது. இஸ்ஹாக் நபியும் பாக்கியம் பெற்றவர். அவரின் சந்ததியில் யஃகூப் நபியும் மோஸே, இயேசு போன்ற தீர்க்க தரிசிகளும் வந்தனர். இஸ்மாயீல் நபிக்கு இப்றாஹீம் நபியின் சிரேஷ்ட புத்திர பாக்கியமாக கிடைத்தது எது? அவரின் சந்ததி பெருகியதால் மட்டும் அது அடையப்பட்டதாக அமையுமா? இஸ்மாயீல் நபிக்கு இப்றாஹீம் நபியின் சிரேஷ்ட புத்திர பாக்கியமாகக் கிடைத்த அருள்தான் அவரது சந்ததியில் வந்த முஹம்மத் நபியாவார். முஹம்மத் நபியை மறுத்தால் இப்றாஹீம் நபியின் மூத்த பிள்ளையின் சிரேஷ்ட புத்திர பாக்கியத்தை மறுத்ததாக அமையும். கடவுள் அடிமைப் பெண்ணின் பிள்ளை என்பதால் இப்றாஹீம் நபியின் மூத்த பிள்ளைக்கு துரோகம் செய்ததாகிவிடும்.

ப¸«ïஏனு லìÂï,öநுடஜ ¸«ஏìÝ,çª:

‘இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்ளூ நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்ளூ அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்ளூ அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.’
(ஆதியாகமம் 17:20)

இந்த வசனத்தில் ஆபிரகாம் இறைத்தூதர் இஸ்மவேலுக்காகப் பிரார்த்தனை பண்ணியதாகக் கூறப்படுகின்றது. அந்தப் பிரார்த்தனை எது எனக் கேட்டால் கிறிஸ்தவ உலகம் இதுதான் எனக் கூறலாம்.

‘இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்.’
(ஆதியாகமம் 17:18)

இஸ்மவேல் பிழைக்க வேண்டும் என்பது மட்டும் ஆபிரகாம் தூதரின் பிரார்த்தனையாக இருக்க முடியாது. ஏனெனில், இஸ்மவேல் பிறக்கும் முன்னரே அவரின் சந்ததியை வானத்து நட்சத்திரம் போல் பெருகப் பண்ணுவேன் என்று கர்த்தர் வாக்களித்து விட்டார். இதன் பின்னர் அவர் பிழைக்க வேண்டும் என்பதற்காக ஆபிரகாம் தூதர் பிரார்த்திக்க வேண்டியதில்லை. அப்படி யென்றால் ஆபிரகாம் தூதர் இஸ்மவேலுக்காகச் செய்த பிரார்த்தனை என்ன?

‘எங்கள் இரட்சகனே! உனது வசனங் களை அவர்களுக்கு ஓதிக் காட்டி, வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களைப் பரிசுத்தப் படுத்தும் ஒரு தூதரை அவர்களில் இருந்தே அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீயே யாவற்றையும் மிகைத்தவன்ளூ ஞானமிக்கவன் (என்றும் பிரார்த்தித்தனர்.)’ (2:129)

மக்காவில் உள்ள ஆலயத்தை இப்றாஹீம், இஸ்மாயீல் ஆகிய இறைத்தூதர்கள் கட்டி முடித்த பின்னர் இந்தப் பிரார்த்தனையைச் செய்தார்கள். இஸ்மவேல் நபியின் சந்ததியில் ஓர் இறைத்தூதர் அனுப்பப்பட வேண்டும் என்பது இப்றாஹீம் நபியின் பிரார்த்தனையாகும். அந்தப் பிரார்த்தனையின் பிரதிபலிப்புதான் முஹம்மது நபியாவார்கள்.
ஆபிரகாம் இறைத்தூதர் இஸ்மவேல் சமுதாயத்தைப் பாதுகாக்குமாறு மட்டும் கேட்கவில்லை என்பதைக் கடவுளின் பதிவில் இருந்து நாம் அறியலாம்.

1. ‘நான் அவனை ஆசிர்வதித்து’ என்று முதலில் கூறப்படுகின்றது.

இஸ்மவேலுக்காக கடவுள் செய்த ஆசிர்வாதம்தான் அவரது பரம்பரையில் வந்த முஹம்மத் எனும் இறைத்தூதராவார். முஹம்மத் நபி, தூதுத்துவத்தை மறுத்தால் இஸ்மவேல் ஆசிர்வதிக்கப்பட்டார் என்ற கடவுளின் வார்த்தையை மறுக்க நேரிடும்.

இப்றாஹீம் நபி இறைத்தூதராவார். அவரது மூத்த மகன் இஸ்மவேலாவார். இந்த அடிப்படையில் வாரிசுரிமையில் அவர் முதன்மை பெறுகின்றார். இஸ்மவேல் நபியின் பரம்பரையில் ஒரேயொரு இறைத்தூதர்தான் வந்தார். அவரை இறைவன் இறைத்தூதர்களின் தலைவராக்கினான். இறைத்தூதரின் தலைவர் இஸ்மாயீல் நபியின் பரம்பரையில் வந்தார் என்பதை மறுத்தால் இப்றாஹீம் நபியின் மூத்த புதல்வருக்கு சிரேஷ்ட புத்திர பாக்கியம் வழங்கப்படவில்லை என மறுக்க நேரிடும்.

2. அவனை மிக அதிகமாகப் பலுகவும், பெருகவும் பண்ணுவேன்:

இந்த முன்னறிவிப்பில் இஸ்மாயில் நபியின் சந்ததி பல்கிப் பெருகும் என்று கூறப்படுகின்றது. கிறிஸ்தவ உலகு இதை மட்டும் ஏற்றுக் கொள்கின்றது. கடவுளின் ஆசிர்வாதமாக அருளப்பட்ட இறைத்தூதர் முஹம்மதை ஏற்க மறுக்கின்றது.

3. அவன் 12 பிரபுக்களைப் பெறுவான்:

இஸ்மாயில் நபி 12 பிரபுக்களைப் பெறுவார்கள் என்று கூறப்படுகின்றது.

இந்த அறிவிப்பின் பிரகாரம் இஸ்மவேல் தூதருக்கு 12 ஆண் மக்கள் கிடைத்ததாக (ஆதியாகமம் 25:12-16) பைபிள் கூறுகின்றது.

கடவுள் இஸ்மவேலை ஆசிர்வதித்தார் என்பதனுடைய உண்மையான அர்த்தம் அவரது சந்ததிகளில் இறுதித் தூதர் வருவார், அவரது சந்ததி ஆட்சி அதிகாரத்தைப் பெறும் என்பவற்றின் மூலமே நிறைவு பெறும். இங்கு 12 பிரபுக்கள் பற்றி கூறப்படுகின்றது. நபியவர்களும் 12 பிரபுக்கள் பற்றிய ஒரு செய்தியைக் கூறியுள்ளார்கள்.

ஜாபிர் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்: ‘(ஒரு முறை) நபி(ச) அவர்கள், ‘பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்’ என்று சொல்ல கேட்டேன். அப்போது நபி(ச) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்த போது) என் தந்தை (சமுரா(வ) அவர்கள், ‘அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்’ என்று (நபி(ச) அவர்கள்) சொன்னார்கள் எனக் கூறினார்கள்.’
(புஹாரி: 7222)

எனது உம்மத்தில் 12 ஆட்சியாளர்கள் இருக்கும் வரை இந்த மார்க்கம் உயர்வு பெற்றிருக்கும் என்று நபியவர்கள் கூறினார்கள். இஸ்லாத்தை உலகெல்லாம் மேலோங்கச் செய்த அந்த முக்கிய ஆட்சியாளர்கள் பட்டியல் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி, முஆவியா(வ) என்று 12 பேர் இடம்பெறுவர். இவர்கள் அத்தனை பேரும் இஸ்மவேல் தூதரின் பரம்பரையின் முக்கிய பிரிவான குறைஷிக் குலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கவர்களாவர்.

ஆகமொத்தத்தில் இஸ்மவேல் தூதர் ஆசிர்வதிக்கப்பட்டவர். அவருக்கான ஆசீர்வாதம் என்பது அவரது சந்ததியில் ஒரு தூதர் வருவார், அவர் அரசாள்வார். எல்லா சமூகங்களும் அவருக்கு கீழ்ப்படியும். எகிப்து தேசம் இப்றாஹீம் நபியின் சந்ததியின் ஆட்சிக்குள் வரும் என்பன போன்ற அறிவித்தல்களுக்கு உலக வரலாற்றில் முஹம்மத் நபியைத் தவிர வேறு யாரும் உரிமை கொண்டாடவே முடியாது!

இந்த அடிப்படையில் இஸ்மவேல் சமூகத்தில் தோன்றிய அந்த இறுதித் தூதரை ஏற்பதுதான் ஈருலக வெற்றிக்கான வழியாகும். கிறிஸ்தவ உலகு இந்த அடிப்படை உண்மையை ஏற்று அந்த இறுதித் தூதரை நம்பி நடக்க முன்வருமா?…
தொடரும்…
இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *