Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (1 – 10)

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (1 – 10)

1) சூரதுல் பாதிஹா – தோற்றுவாய்
அல்குர்ஆனின் முதல் அத்தியாயம் மனித சமுதாயத்ததிற்கு நேர்வழிகாட்டும் வேதத்தின் நுழைவாயில் என்று பொருள். சூரதுல் ஹம்து என்றும் இன்னும் பல பெயர்கள் இவ்வத்தியாயத்திற்கு உள்ளன. 7 வசனஙகளை கொண்ட இந்த அத்தியாயத்தின் சாரம்சம் எம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனிடமே நேர்வழி காட்டுமாறு பிரார்த்திப்பதேயாகும்.

2) அல் பகரா – பசு மாடு
அல்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் உலக வரலாற்றில் அல்லாஹ்வின் கட்டளைகளை அதிகம் கேளி செய்த இஸ்ரவேலர்களோடு தொடர்பான ஒரு செய்தியில் பாசு மாட்டை பற்றி குறிப்பிடுகின்றான். 67 வது வசனம் தொடக்கம் 73 வது வசனம் வரை… “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும்…”

3) ஆலு இம்ரான் -இம்ரானின் சந்ததியினர்
அல்குர்ஆனின் 3வது அத்தியாயம் மர்யம் (அலை) அவர்களின் தந்தையின் பெயர் இம்ரான் ஆகும். அவரது குடும்பம் உலகத்தாரைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பம் என்று அல்லாஹ் நற்சான்றிதழ் வழங்கும் அளவுக்கு நல்லரங்கள் செய்வதில் முந்திக் கொண்டார்கள். 33-60 வசனம் வரை அவர்களது வரலாற்றை எடுத்து இயம்புகின்றான்

4) சூரதுன் நிஸா – பெண்கள்
அல்குர்ஆனின் 4-வது அத்தியாயம் பெண்களை சந்தையில் போட்டு விற்று அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அந்த அறியாமைக் காலத்தில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக பேசக் கூடிய 176 வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயத்தை இறக்கி வைத்து பெண்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தினான்.

5) சூரதுல் மாயிதா – உணவு மரவை
அல்குர்ஆனின் 5-வது அத்தியாயம் நபி ஈஸா (அலை) அவர்களிடம் “மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா? என்று கேட்டதை இந்த அத்தியாயத்தின் 112-115 வசனம் வரை குறிப்பிடுகின்றான்.

6) சூரதுல் அன்ஆம் – கால் நடைகள்
அல்குர்ஆனின் 6-வது அத்தியாயம் இணைவைப்பவர்கள் தங்களது விளைச்சலில், கால்நடைகளில் அல்லாஹ்வுக்கு ஒரு பகுதியையும் அவர்களது கடவுள்களுக்கு ஒரு பகுதியையும் பிரித்து அல்லாஹ்வை தமது கடவுள்களோடு ஒப்பாக்கினர். அல்லாஹ் 136- 139 வசனங்களில் சொல்லிக் காட்டுகின்றான்.

7) சூரதுல் அஃராப் – சிகரங்கள்
அல்குர்ஆனின் 7-வது அத்தியாயம். சுவர்க்க வாசிகளுக்கும் நரகவாசிகளுக்கும் இடையில் நடக்கும் ஒரு உரையாடளை அல்லாஹ் இவ்வத்தியாயத்தின் 46-வது வசனம் தொடக்கம் 51 வரை குறிப்பிடுகின்றான். நரகத்தின் சிகரங்களில் இருந்து சுவர்க்க வாசிகளை அழைத்து உதவிகேட்பர் என்கிறான்.

8) சூரதுல் அன்ஃபால் – போரில் கிடைத்த வெற்றிப்பொருள்
அல்குர்ஆனின் 8-வது அத்தியாயத்தின் 1-வது வசனத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்….

போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்) களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.

9) சூரதுத் தவ்பா – பாவமன்னிப்பு
அல்குர்ஆனின் 9-வது அத்தியாயம் யுத்தகளத்திற்கு செல்லாமல் ஒதுங்கிக் கொண்டவர்கள் தொடர்பாக அல்லாஹ் 118 வசனத்தில் இப்படிக் குறிப்பிடுகன்றான்…’ அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும்..

10) சூரது யூனுஸ் – யூனுஸ் நபி
அல்குர்ஆனின் 10 வது அத்தியாயத்தின் 98 வது வசனத்தில் யூனுஸ் நபியின் சமுதாயம் கடைசி நேரத்தில் அல்லாஹ்வை ஈமான் கொண்டு அனைவருமாக சேர்ந்த அல்லாஹ்விடம் இறைஞ்சி மன்றாடிய காரணத்தால் அல்லாஹ் அந்த சமுதாயத்தை மன்னித்து அவர்களுக்கு அனுப்ப இருந்த வேதனையை உயர்த்திவிட்டதாக குறிப்பிடுகின்றான்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *