Featured Posts
Home » வரலாறு » நபித்தோழர்கள் » நபித்தோழர்களை விமர்சிப்போர் இறை தண்டனையை அஞ்சட்டும்…

நபித்தோழர்களை விமர்சிப்போர் இறை தண்டனையை அஞ்சட்டும்…

நபித்தோழர்கள் விஷயத்தில் கண்ணியக்குறைவாக நடப்போர் கண்ணியம் இழப்பர்; இறைவனின் தண்டனைக்கு ஆளாவர்.

இறைமார்க்கத்தை நிலைநாட்டிடவும் நபிக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக,உதவியாக,இறை அருட்கொடைகளாக வந்தவர்களே இறைவனின் திருப்தியை பெற்ற நபித்தோழர்கள்‌‌.

மனிதர்கள் என்கிற அடிப்படையில் அவர்களிடமும் சிற்சில தவறுகள் காணப்படும்.

அப்படி அ‌வர்களிடம் காணப்பட்ட அவர்களின் சில தவறுகளை, “ஈமானில் குறையுள்ள, உள்ளத்தில் வஞ்சகத்தை மறைத்து வெளியில் நல்லவர்கள் போல காட்டிக் கொண்டு, விரும்பினால் வழிபாடு இல்லையேல் வழிகேடு என்கிற வழியில் பயணிக்கிற குறைமதியுள்ள நம்மைப் போன்றவர்கள் ஊதிப் பெரிதாக்குவதற்கோ, தரக்குறைவாக விமர்ச்சிப்பதற்கோ,பேசுவதற்கோ, எழுதுவதற்கோ எவ்வித தகுதியும் அருகதையும் அற்றவர்கள்.

அவர்களின் தனிப்பட்ட தவறுகளை துருவித் துருவி ஆராய்வோரின் அந்தரங்கத்தை அல்லாஹ் வெளிச்சம் போட்டுக் காட்டாமல் விடமாட்டான்.

சமுதாயத்தில் கண்ணியம் இழந்தோராக ஆக்கப்பட்டு, கேவலப்படுத்தப்படுவர்.

உதாரணத்திற்கு ஒரே ஒரு சம்பவம்…..

இதோ…….அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஒரு நபித்தோழரை வேண்டுமென்றே விமர்ச்சித்தவரின் நிலையை பாருங்கள்.

(புகாரி 755)
ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(கூஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) மீது கூபா வாசிகளில் சிலர் உமர்(ரலி) அவர்களிடம் புகார் கூறினார்கள்.

அவர் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது.

உடனே உமர்(ரலி) அவரை நீக்கிவிட்டு அம்மார்(ரலி)ஜ அதிகாரியாக நியமித்தார்கள்.

ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து ‘அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள்.

அதற்கு ஸஃது(ரலி) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப் படியே தொழுகை நடத்தினேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை.

இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுகை நடத்துகிறேன்’ என்று பதிலளித்தார்கள்.

‘உம்மைப் பற்றி நம்முடைய கருத்தும் அதுவே’ என்று உமர்(ரலி) கூறினார்.

அதன்பின்னர் ஒரு நபரை அல்லது சில நபர்களை ஸஃது(ரலி) அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பி, ஸஃதைப் பற்றிக் கூஃபா வாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள்.

விசாரிக்கச் சென்றவர் ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள்.

‘பனூஅபஸ்’ கூட்டத்தாரின் பள்ளி வாசலில் விசாரித்தபோது, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த “அபூ ஸஃதா” எனப்படும் “உஸாமா இப்னு கதாதா” என்பவர் எழுந்து, ‘நீங்கள் விசாரிப்பதால் நான் சொல்கிறேன்.

1.ஸஃது அவர்கள் தமது படையிலுள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை;

2.(பொருட்களை) சமமாகப் பங்கிடுவதில்லை;

3.தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை’ என்று புகார் கூறினார்.

இதைக் கேட்ட ஸஃது(ரலி) ‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக!

மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன்’ என்று கூறிவிட்டு,

1.’இறைவா! உன்னுடைய இந்த அடியார் (அவரின் புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுபவராகவும் இருந்தால் அவரின் ஆயுளை அதிகப் படுத்துவாயாக!

2.அவரின் வறுமையையும் அதிகப் படுத்துவாயாக!

3.அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

இதன் பிறகு அந்த மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால் ‘சோதனைக்காளான முதுபெரும் வயோதிகனாகி விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்தும்விட்டது’ எனக் கூறக் கூடியவராகிவிட்டார்.

ஜாபிர்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துல் மலிக் இப்னு உமைர்

‘அதன் பிறகு நானும் அவரைப் பார்த்திருக்கிறேன்;

முதுமையினால் அவரின் புருவங்கள் அவரின் கண்களை மறைத்திருந்தன.

பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்; இந்த நிலையில் அவரை பார்த்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

நபித்தோழர்களை அவர்களிடம் இல்லாத குறைகளைக் கொண்டோ, தெரிந்தோ தெரியாமலோ நிகழ்ந்து விட்ட தவறுகளை விமர்ச்சிப்பதோ ஒரு இறைவிசுவாசியின் அழகல்ல.

இப்போது அவர்கள் இல்லையானாலும் அவர்களையும் அவர்களின் நன்மைகளையும் அவர்களின் தீமைகளையும் பொருந்திக் கொண்ட இறைவன் அல்லாஹ் இருக்கிறான்.

அவன் தண்டிக்கலாம்…

அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்….

நபித்தோழர்களின் குறைகள் விஷயத்தில் நாம் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளவேண்டும்.!!!.

ஆக்கம்: Kaja Firdousi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *