Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 3 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் தொடர்ச்சி..

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 3 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் தொடர்ச்சி..

அன்வர்தீன், பெரம்பலூர்

ஸஹீஹான ஹதீஸ்தான் எனது மத்ஹப் என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

“இந்த மண்ணறையில் அடங்கப்பட்டுள்ள இறைத் தூதரின் வார்தையைத் தவிர, அனைவரின் வார்த்தைகளிலும் சரி, பிழை இரண்டும் உண்டு” என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.

ஹதீஸ்கலை அறிஞர்கள், ஸஹீஹான ஹதீஸ்களை தரம் பிரித்து நினைவாற்றல், நம்பகமானவர், சங்கிலித்தொடர் அறுபடாமல் இருத்தல், ஸாத் மற்றும் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம் இல்லாமல் இருத்தல் போன்ற முக்கியமான ஐந்து வரைவிலக்கணதை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். ஆனால் இந்த நவீன அறிஞர்கள் குர்ஆனோடு மோதவிட்டு பார்க்க வேண்டும் நம்முடைய அறிவு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று புதிய நிபந்தனைகளை விதித்து ஹதீஸ்களை மறுப்பார்கள்.

ஒரு உண்மையான் முஃமின், வஹீ செய்தியான ஹதீஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல் நிலையில் வைத்து பார்க்க வேண்டும். ஆனால் இயக்க வெறி பிடித்தவர்கள், இரண்டாம் நிலையில் வைத்து பார்க்க வேண்டிய பீஜேவின் கருத்துக்களை வஹீயாக முதல் நிலையில் வைத்து பார்த்ததன் விளவு தான், இவரின் ஹதீஸ் நிராகரிப்பு கொள்கைக்கு ஒரு முக்கிய காரணியாக பார்க்க முடிகிறது.

இந்த வழிகெட்ட தலைவர்கள், ஹதீஸ்களை எப்படி தங்களின் மனோ இச்சைபடி வளைத்து அதில் திருகுதாளம் செய்தார்கள் என்பதை பல சமகால அறிஞர்கள் விரிவாக விளக்கி உள்ளதை வலைதலைதலங்களில் காணக்கிடைப்பதால், விரிவஞ்சி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், “நமது இரட்சகன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இரவில் மூன்றாவது பகுதி இருக்கும்போது இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன், யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன், யாரேனும் பாவமன்னிப்பு தேடினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான்”. (அறிவிப்பாளர்: அபு ஹீரைரா, நூல்: புகாரி – 1145)

இந்த ஹதீஸில் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதற்கு நேரடியான பொருள் கொடுப்பதை தான் சஹாபாக்களும், ஹதீஸ்கலை அறிஞர்களும் அறிந்து வைத்திருந்தனர். ஆனால் பீஜேவும் அவர்களது கூட்டமும் அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அல்லாஹ்வின் அருள், ரஹமத் இறங்குகிறது அல்லது சிறப்பு கவனத்தை செலுத்துகிறான் என்று மனோ இச்சைக்கு அடிமையாகி மாற்று பொருள் கொடுத்து தங்கள் இருப்பை நிலை நாட்டிக்கொள்ள்ள பகீரதப் பிரயத்தனம் செய்தனர்.

கடைசி காலத்தில் வரக்கூடிய தஜ்ஜாலிடம் இருந்து எப்படி அனுதினமும் பாதுகாப்பு தேடவேண்டும் என்று அறிவுறுத்தினார்களோ, அதைவிட முக்கியமாக என்னுடைய உம்மத்தில் இருந்து நான் அதிக அச்சம் கொள்வது வழிகெடுக்க்கூடிய தலைவர்களை பற்றிதான் என்று நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்.

ஒருவர் மீது நேசம் கொள்வதும், அவரின் கருத்துக்கள் சிந்தனைகள் மீது ஈர்ப்பு உண்டாவதும், அவர் சார்ந்து இருக்கின்ற இயக்கங்கள் மீது பற்று உண்டாவதும் மனிதர்களின் இயற்கை சுபாவங்களே. ஆனால் மார்க்க ஆதாரங்களை புரம் தள்ளிவிட்டு மனோ இச்சைகளை மார்க்கம் என்று விதைக்கும்போது கொதித்து எழவேண்டிய பற்று, ஈர்ப்பு, நேசங்கள் எல்லாம், இயக்க வெறியாக மாறி அவரது ரசிகர்களை தக்லீது வரைக்கும் கொண்டு சென்றுவிட்டதுதான் NTF, TNTJ போன்ற இயக்கங்கள் செய்த சாதனை.

ஹதீஸ்கலை அறிஞர்களும் மனிதர்கள்தானே, எங்கேயாவது தவறு நடந்து இருக்கலாம் என்று தங்களின் பக்தர்களை தக்கவைத்துக்கொள்ள நூதன விளக்கம் கொடுப்பார்கள். இவர்களின் ஹவாரிஜிய சிந்தனைகளுக்கு ஹதீஸ்கலை அறிஞர்களை நோக்கி விரல் நீட்டுவதை இந்த முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது. இதன்மூலம் எங்கள் தலைவர் மட்டும் தவறு செய்யாத மனிதர் என்று சொல்ல வருகிறார்களா? தவறு செய்யாதவர்கள் என்றால் இறைவனால் நேரடியாக கண்காணிக்க படுகிறார்களா? ஆம்….. எங்கள் TNTJ ஜமாஅத் அல்லாஹ்வின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் சொல்லிவிட்டார்கள்.

அஜ்வா பேரீத்தம்பழ ஹதீஸை உங்களால் செயல்படுத்த முடியுமா என்று கிறிஸ்தவ சகோதரர்கள் கேட்க, அதற்கு ஆழகாக பதில் சொல்வதை விட்டுவிட்டு சர்வ சாதாரணமாக,  நாங்கள் அந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஜஹா வாங்குவார்கள். கிறிஸ்தவ சகோதரர்கள் உடனே இன்று ஒரு விக்கெட் விழுந்துவிட்டது  (நிராகரிக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டது) என்று கிண்டலடிப்பார்கள்.

வழிகெட்ட பித்அத்வாதிகளும், அல்லாஹ்வும் அவனது தூதரின் செய்தியை மறுப்பவர்களும் என்ன காரணங்கள் சொல்லி மறுத்தார்களோ, அதே காரணங்களை சொல்லி நவீன மார்க்க வியாபாரி பீஜேவும் அவர்களது கூட்டமும் மறுக்கும் மற்றொரு ஸஹீஹான ஹதீஸ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மலகுல் மௌத்தும் சம்பந்தமான (புஹாரி : 3407).

இறைவன் மலக்குல் மெளத்துக்கு நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள், இதுபோன்று நடக்கும், மறுபடி என்னிடம் வந்து திரும்பிச்சென்று மூஸாவுடைய உயிரை கைப்பற்றுவீர்கள் என்று மலக்குகளுக்கு என்ன கட்டளை இடப்பட்டுள்ளதோ அதை செய்தார்கள் என்பதை சாதாரண அறிவு படைத்த ஒருவன் விளங்கிக்கொள்வான். ஆனால் குதர்க்கம் செய்வதற்கென்றே உருவான கூட்டம் சிந்தனையை அடகு வைத்து விட்டு சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல், மூஸா நபி மரணத்தை வெறுக்கிறார்களா? மலக்குகள் தோல்வியுடன் திரும்புவார்களா? போன்ற பைசா பிரயோஜனம் இல்லாத கேள்வியை கேட்டு, அவரது பக்த கோடிகளை உசுப்பிவிட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்கள்.

சரி அவர்களிடம் மூஸா நபி சம்பந்தமான குர்ஆன் வசனத்திலிருந்து சில எதிர் கேள்விகளை கேட்கிறோம்.

மூஸா (அலை) அவர்கள் தவறுதலாக ஒரு கொலை செய்தார்கள். மூஸா(அலை) அவர்களைக் கொலை செய்ய முடிவு செய்ததாகத் தகவல் கிடைக்கின்றது. அவர் தனது உயிரைக்கு பயத்து எவரும் அறியாத வண்ணம் ஊரை விட்டு ஓடி விடுகிறார்கள். (குர்ஆன்:28:15-21)

திரும்பிப் பார்க்காமல் புறமுதுகிட்டு ஓடினார். அதன் பின் அல்லாஹ்வே, “மூஸாவே! முன்னோக்கி வாரும்! பயப்படாதீர்! நிச்சயமாக நீர் அச்சமற்றவர்களில் உள்ளவர்” என்று கூறிய பின்னர்தான் வருகிறார்.

(குர்ஆன்:28:31)

மேற்கண்ட வசனங்களில் இறைவன் மூஸாவைப் பார்த்து நீர் அச்சமற்றவர்களில் உள்ளவர் என்று சொல்லி இருக்க:

  • கொலை செய்துவிட்டு அதை சட்டப்படி சந்திக்காமல் பயந்து ஓடி இருக்கிறார்கள்.
  • கைத்தடி பாம்பைபோல் நெளிவதை கண்டு புறமுதுகிட்டு ஓடினார்கள்.

இறைவன் கட்டளை இடுகிறான், நம்மோடு இருக்கிறான் என்று தெரிந்தும் பயந்து ஓடுவது நபிமார்களின் பண்பல்லவே, குர்ஆனின் வசனங்களுக்கும், மூஸா நபியின் செயலுக்கும் முரண்பாடு இருக்கிறதே என்று ஒருவன் சொன்னால் அவனை எப்படி மறை கழண்டவர் என்று கூறுவோமோ, அதே போல்தான் மலக்குல் மெளத் ஹதீஸை நிராகரிக்கும் இவர்களையும் நம்ப வேண்டி இருக்கும்.

தங்களுக்கு தாங்களே முரண்பட்டுக்கொண்டு, ஹதீஸில் முரண்பாடு உள்ளது, குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கொக்கரிப்பது தான் இந்த வழிகெட்ட தலைவர்களின் விசித்திரமான போக்கு.

காசுக்காக ஹதீஸ்களில் திருகுதாளம் செய்தவர்கள், முன்னால் தலைவரின் ஒப்புதல்

தான் வளர்த்த இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு, ஹதீஸ்களில் எப்படி எல்லாம் தில்லு முல்லு செய்தார்கள் என்பதை பீஜே அவர்களே ஒரு வீடியோவில் சாட்சி . பகர்கிறார். TNTJ இயக்கத்தில் இருந்து ஏற்கனவே வெளியேறிய ஒரு சகோதரரை பற்றி குறிப்பிடும்போது, இவர் பணத்துக்காக எதையும் செய்வார். இந்த ஹதீஸை பலஹீனமாக ஆக்கி விடுவோமா என்று கேட்பாராம். இவர்கள் ஒன்றாக இருந்தபோது பணத்துக்காக ஹதீஸ்களில் தில்லு முல்லு செய்ததை அல்லாஹ் இந்த உம்மத்துக்கு அவர்கள் மூலகமாகவே வெளிக் கொணர்ந்து விட்டான்.

இஸ்லாத்தின் அடிப்படையை தகர்த்தெறியும் ஹதீஸ் மறுப்புக்கொள்கையை உடையவர்கள் இந்த உலகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சுற்றித்திரிகிறார்களா  என்று பார்த்தால், எங்கும் காணக்கிடைக்கவில்லை. (விதிவிலக்குகள் உதாரணங்களாகாது). அஹ்லுல் ஹவா என்று சொல்லக்கூடிய மனோ இச்சையை பின்பற்றக்கூடியவர்கள் தமிழகத்தை மட்டும் எப்படி குத்தகைக்கு எடுத்தார்கள் என்று புரியவில்லை? ஒருவேளை அறிவாளிகள் அதிகமா? அல்லது முட்டாள்கள் அதிகமா? அல்லது அறிவாளிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் முட்டாள்களா? மேலும் ஹதீஸ்களை மறுத்துக்கொண்டே, நாங்கள்தான் ஸஹீஹான ஹதீஸ்களை முழுமையாக பின்பற்றுகிறோம் என்று வாயால் வடை சுடுவது ஆச்சரியமாக உள்ளது.

கல்வி உயர்த்தப்பட்டு அறியாமை தலைவிரித்தாடுவது, தானும் வழிகெட்டுத் தன்னைப் பின்பற்றுவோரையும் வழிகெடுப்பது, மார்க்க அறிவு இல்லாதவர்கள் மக்களிடையே மார்க்கத்தீர்ப்பு வழங்குவது ஆகியவையும் மறுமை நாளின் அடையாளங்களே. ஓவ்வொரு கால கட்டத்திலும் இஸ்லாம் இது போன்ற துன்பங்களச் சந்தித்தது.

நபி (ஸல்) அவர்கள் வாழ்நாளிலேயே தன்னை நபி என சூழுரைத்த  முஸைலிமா விலிருந்து  காதியானிகள் வரை ஏகப்பட்டபொய்யர்களின்சூழ்ச்சி வலை இஸ்லாத்துக்கு எதிராகப் பின்னப்பட்டது. இஸ்லாத்தைக் குறை கூறும் அறைகுறைகளான ஸல்மான் ருஸ்தி, தஸ்லீமா, மற்றும் சங்கிகள் போன்ற புல்லுருவிகளும் புனித இஸ்லாத்தைக் களங்கப்படுத்த எடுக்காத முயற்சிகள் இல்லை. இப்படி எல்லா கால கட்டத்திலும் இஸ்லாம் மீது வீசப்பட்ட அவதூறுகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முறியடித்து சத்தியத்தை நிலைநாட்டியுள்ளனர் என்பதை வரலாறு நமக்குணர்த்துகின்றது.

இந்த வழிகெட்ட இயக்கங்களினால் சாதனைகளைவிட, சோதனைதான் அதிகம் என்று பட்டிமன்றம் வைக்காமலே முடிவு செய்து விடலாம். அந்த அளவுக்கு இவர்களின் மார்க்கத்தின் ஹதீஸ் நிராகரிப்பு கொள்கை போல், உலக வாழ்க்கையிலும் பாலியல், பொருளாதார மோசடி போன்ற சோதனை புயலில் சிக்கித்தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த போலி ஏகத்துவ தலைவர்கள், ஏகத்துவத்தை எடுத்துரைப்பதற்கு பதில், மோக(ம்)த்துவத்தை பரப்பினால் ஏதாவது பலன் கிட்டலாம். அல்லாஹ்வின் மிகப்பெரும் அருளால் நாம் வாழும் காலத்திலேயே அவர்களை அடையாளப்படுத்தி, களங்கப்படுத்தி, அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள், ஏகத்துவத்தை எடுத்துரைக்க கடுகளவும் தகுதி அற்றவர்கள், அவர்களின் கூற்றுக்கள் பின்பற்றுவதற்கு தகுதி அற்றவைகள் என்பதை நிரூபித்து விட்டான்.

மக்களிடையே ஏகத்துவத்தை போதிக்க வந்த யோக்கிய சிகாமணிகள், நீங்கள் எத்தனை கோடி ஊழல் செய்தீர்கள்? விபச்சாரம் செய்ததை நிரூபிக்க முடியமா? அனாதை சொத்துக்களில் மோசடி போன்ற உலக மகா போலி ஏகத்துவத்தை???? விவாத பொருளாக்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் வேஷம் கலைந்து,  தங்களிடையே தர்ம யுத்தம் நடத்தி கொண்டு இருப்பதால் அவர்களைப்பற்றி நாம் அதிகம் கவலை படத்தேவை இல்லை. அவர்களின் இந்த சந்தி சிரிக்கும் போக்கை கண்டு அவர்களை பின்பற்றியவர்களின் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து கொண்டு இருக்கிறது. கூடாரம் கலைந்து விட்டால், வழிகெடுக்கும் தலைவர்களின் வேடமும் கலைந்து விடும்.

எதை சொன்னாலும் ஏன் என்று கேட்காமல், வெறி  கொண்டு இயக்கத்தை பின்பற்றி சிந்திக்கத் தவறிவிட்டவர்களை இறைவன் கடுமையாக பிடிக்கும் மறுமை நாளில், “அவர்கள் எங்கள் தலைவர்களை பின்பற்றினோம், எங்களை வழிகெடுத்து விட்டார்கள், ஆகையால் அவர்களுக்கு இரட்டிப்பு தண்டனை வழங்குவாயாக” என்ற அல் குர்ஆன் (33: 67,68) வசனத்தை மேற்கோள் காட்டுவதை தவிர வேறு வழியை காணமாட்டார்கள்.

இந்த வழிகெட்ட ஹவாரிஜிய சிந்தனை கொண்ட தலைவர்கள், மற்றும் இவர்கள் வாக்கு கொடுத்து விட்டால் ஏன் என்று கேட்காமல், அதை குர்ஆன் ஹதீஸூக்கு மேல் எடுத்து வைத்துக்கொண்டு ஜானுக்கு ஜான் முழத்துக்கு முழம் பின்பற்றும் தக்லீது வாதிகளுக்காக இறைவனின் ஒரு எச்சரிக்கை கீழே….

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது……….” (2:219) 

மேற்கண்ட குர்ஆன் வசனம் இவர்களுக்கும் இவர்களின் இயக்கங்களுக்கும் கன கச்சிதமாக பொருந்தும். எப்படி மதுவினால் ஒருசில நன்மைகள் இருந்தாலும், தீமைகள் அதிகமாக இருப்பதால் அதை தவிர்ந்து கொள்ள அல்லாஹ் கட்டளை இடுகிறானோ, அதேபோல இவர்களின் தீமைகள் (ஹதீஸ்களை மறுத்து அகீதாவில் கோட்டைவிட்டதால்) நன்மைகளை மிகைத்துவிட்டபடியால், இவர்களையும் தவிர்ந்து கொண்டால் மறுமையில் இறைவனின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் இன்ஷாஅல்லாஹ்…

சத்தியத்தை, ஏகத்துவத்தை சரியாக எப்படி ஸஹாபாக்கள் மனோஇச்சை மற்றும் பகுத்தறிவை பின்னுக்குதள்ளி, இறைத்தூதரின் கட்டளைக்கு முன்னுரிமை கொடுத்து ஸஹீஹான ஹதீஸ்களை அனுகினார்களோ அதுபோல நம் அனைவரையும் ஆக்க வேண்டும் என்று துஆ செய்தவனாக…..

அடுத்ததாக, ஜகாத் திருடர்கள் இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஜகாத்தில் எப்படி தங்களின் மாயாஜால வித்தைகளை அறங்கேற்றினார்கள் என்று பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *