Featured Posts
Home » பொதுவானவை » குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 8

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 8

பம்பாய் கலவரத்தின் போது ஹிட்லரின் பாணியை கையாண்டது போல இங்கும் கையாளப்பட்டுள்ளது. ஹிட்லரின் நாஜி படை யூதர்களை கொலை செய்தது போல, இவர்கள் முஸ்லிம்களை கொலை செய்து குன்றுகளாக குவித்தனர் என்று ஜரோப்பிய யூனியன், தான் தயாரித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அளவுக்கு இவர்கள் தன் கைவரிசையை காட்டியிருக்கிறார்கள். இந்த அறிக்கையில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உட்பட 15 நாடுகள் கையெழுத்திட்டுள்ளது.

இந்த கலவரத்தில் அதிகமான பாதிப்புக்கு உள்ளானது பெண்களே. எங்கு நோக்கினாலும் முஸ்லிம் பெண்களை பாசிஸ வெறியர்கள் கும்பல் கும்பலாக கற்பழித்துள்ளனர். கற்பழித்ததோடு மட்டும் இல்லாமல், அவர்களின் மர்ம ஸ்தானத்தை சிதைத்து, தீயிட்டு கொளுத்தி வேடிக்கை பார்த்து ரசித்தனர்.

பங்ச்மகால், பரோடா, ஆனந்த் மற்றும் அகமதாபாத் ஆகிய மாவட்டங்கள் இந்த கலவரத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வார்த்தைகளை கொண்டு, பெண்களே அதிக பாதிப்புக்குள்ளானார்கள் என்றும் பெண்களே கலவரத்தின் முக்கிய இலக்கானார்கள் என்றும் நம்மால் முடிவுக்கு வரமுடிகிறது.

முஸ்லிம் பெண்களிடம் இவர்கள் காட்டுமிராண்டிகளை போல நடந்து கொண்டார்கள். போஸ்னியாவிலும், கோசோவோவிலும் கொலை வெறி பிடித்து அலைந்த செர்பியர்களையே வெட்கப்பட வைக்கும் விதமாக இவர்கள் நடந்து கொண்டார்கள்.

எங்கெல்லாம் இந்த முஸ்லிம் பெண்கள் கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்யப்படுகிறார்களோ, அவர்களின் அங்கங்கள் துண்டாடப்பட்டு, சிதைக்கப்பட்டு கொல்லப்படுகிறார்களோ, தீயில் கருகி, வெந்து சாகடிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் இந்த முஸ்லிம் பெண்கள் கற்புடன் கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமுமில்லை. கொல்லப்பட்ட அனைத்து பெண்களும் கற்பழிக்கப்பட்ட பிறகே கொலை செய்யப்பட்டார்கள்.

இதில் இந்த மதவெறிபிடித்த மிருகங்களுக்கு வயது என்பது ஒரு பொருட்டே அல்ல. 9 வயதிலிருந்து 50 வயது வரை உள்ள பெண்களை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் கற்பழித்தார்கள். கொன்றார்கள். அந்த அளவுக்கு மதம் பிடித்து திரிந்தார்கள் இந்த மதவெறியர்கள். இவையனைத்தை அந்த பெண்களின் தந்தைமார்களையும், சகோதரர்களையும், கணவன்மார்களையும் சாட்சியாக வைத்தே அரங்கேற்றினார்கள். யார் வாழ்விலும் நடக்க கூடாத சம்பவம் தன் வாழ்வில் நடந்ததை எண்ணி உள்ளம் குமுறினார்கள் இந்த பலகீனமான ஆண்கள்.

இதை விட கொடுமை என்னவென்றால், கற்பழிப்பதையும், எரித்து கொல்வதையும் பாவிகள் பள்ளிவாசலில் வைத்தே செய்தார்கள். அப்பாவி முஸ்லிம்கள் எதுவும் செய்ய வழி தெரியாது, குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல, இந்த காம வெறியர்களின் கையில் தம் பெண்கள் சிக்கி சின்னாபின்னப்படுவதை கண்டு விக்கி விக்கி அழுதார்கள்.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *