Featured Posts
Home » பொதுவானவை » குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 12

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 12

சங்பரிவாரின் இந்த கொடிய செயலை ரீனு கன்னா என்ற சமுதாய ஆர்வலர் இப்படி கூறுகிறார். கலவரத்தில் பங்கெடுத்து கொண்ட சங்பரிவாரத்தினர் குறிப்பாக VHPவினர் முஸ்லிம் பெண்களை கொடூரமாக கற்பழிப்பதையே தங்களின் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் மனோரீதியான ஆழமான காயத்தை ஏற்படுத்துகின்றார்கள்.

குஜராத்தை சேர்ந்த ஆறு பெண்களை கொண்ட ஒரு குழு கலவரத்தை பற்றிய ஓர் ஆய்வறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையின் தலைப்பு ‘குஜராத் இனபடுகொலை எப்படி சிறுபான்மையினரை பாதித்துள்ளது: எஞ்சியவர்கள் பேசுகிறார்கள்’ என்பதாகும்.

இந்த அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. மதவெறியர்களின் மிருகத்தனமான பாலியல் பலாத்காரத்தில் முஸ்லிம் பெண்கள் அடைந்த வேதனையும், பாதிப்பையும் எடுத்துரைக்கபட்டுள்ளது.

பெரும்பாலான பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் உயிருடன் எரித்து கொள்ளப்பட்டார்கள் என்று மாலினி கோஷ் என்ற அறுவர் குழுவின் உறுப்பினர் ஏப்ரல் 18, 2002 அன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியிருக்கிறார். மேலும் சில சம்பவங்களையும் தொகுத்து உலகுக்கு அறிவிக்கிறார்கள்.
சாய்ரா பானு என்ற ஒரு பெண். அஹமதாபாத் அகதிகள் முகாமில் இருக்கிறார். இவர் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர். இவர் இப்படி கூறுவதாக அறிக்கை தெரிவிக்கிறது. மதவெறி கும்பல் ஒன்று சாய்ராவின் உறவு பெண்ணான நிறைமாத கர்பிணி பெண்ணின் வயிற்றை தான் கொண்டு வந்த ஆயுதங்களினால் பிளந்தது. இன்னும் சிறிது காலத்தில் ரத்தகரை படிந்த இந்த உலகை பார்க்க வர இருக்கும் அந்த குழந்தை அமைதியான உறக்கத்தில் இருந்தது. கல் நெஞ்சம் கொண்ட கயவர்கள் அந்த சிசுவை கூரிய கத்தியால் குத்தி வயிற்றிலிருந்து வெளியே எடுத்தனர். பின்னர் எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்தனர். ஆரவாரம் இல்லாமல் அந்த சிசு எரிந்து மறைந்து போனது.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

One comment

  1. gujarath kalavara padikumbothe en kangalil kannneer ippadiyuma arakkargal ulagahil irupargal enru!evargalai allah orupothum mannika mattan !avar avar seyda vinaiku avargal nichyam kooli peruvargal!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *