Featured Posts
Home » நூல்கள் » RSS ஊழியன் » RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 8.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 8.

வேணுகோபாலன் நம்பியார் என்ற எங்களது BMS தலைவன் [இது ஆர்.எஸ்.எஸ்ஸின் தொழிலாளர் பிரிவு]என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார். CITU வைச் சார்ந்த தங்கப்பன் என்ற நபரை கொலை செய்யவேண்டும் என்பதுதான் அந்தப் பொறுப்பு.

பெரும்படம் என்ற இடத்தைச் சேர்ந்த பிரகாசன், சித்திரப்புழையில் உள்ள ப்ரதீப்குமார், தலைவர் வேணுகோபாலன் நம்பியார் இவர்கள் எல்லாம் சேர்ந்து [தங்கப்பனை கொல்வதற்கு] ஒரு இரவு இரகசியத் திட்டம் தீட்டினோம். அடுத்த நாள் காலையில் தங்கப்பனின் எல்லா அசைவுகளையும் நாங்கள் கண்காணித்தோம். இரவில் தங்கப்பனை கொலை செய்ய வேண்டும் என்றுதான் தலைவரது கட்டளை.

சூரியன் மறையும் நேரத்தில்தான் தங்கப்பன் வீட்டிற்குச் செல்வான். இரவு நேரத்தில் தங்கப்பன் ஸ்கூட்டரில் வருவதை பார்த்தோம். அம்பல மேட்டில் உள்ள ரிபனரி வழியாக HOC க்கு சமீபமுள்ள சித்திரப்புழை பாலத்தில் ஸ்கூட்டர் வந்து கொண்டிருந்தது. அருகில் வந்ததும் தங்கப்பனை உருட்டுக் கட்டை கொண்டு தலையில் அடித்தேன். பிரகாசன் கத்தியை உருவி ஒரு குத்து குத்திய அதே மாத்திரத்தில் திடீரென ஒரு பஸ் எங்களது முன்னில் வந்து நின்றது. உடனே அங்கிருந்து நாங்கள் ஓடினோம். திரும்பி BMS
ஆபீசுக்கு செல்ல முடியாமல் கலகலப்பானதும் சிறிது நாள் நாங்கள் தலை மறைவாக வாழ்தோம். சில நாட்கள் கழித்து திரும்பவும் BMS க்கும், CITU க்கும் சண்டைகள் உருவானது. நான் BMS, RSS தொழிற்சங்கத்திற்காக CITU பார்ட்டியோடு போராட வேண்டி வந்தது.

இரு பார்ட்டிகளுக்கும் சண்டைகள் தொடங்கிற்று. இந்தச் சண்டைகளுக்கும், துன்பங்களுக்கும் இரையானேன். இந்தப் போரில் எனது ஒரு கால் முறிந்து தொங்கியது. இரத்தம் மடமடவென கொட்டிக்கொண்டிருந்தது. போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்ததும் நாங்கள் ஓடி தலைமறைவாக முற்பட்டோம். ஆனால் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் முறிந்து தொங்கும் எனது ஒரு காலையும், வடிகின்ற இரத்ததையும் பொருட்படுத்தாமல் போலீஸ் என்னைக் கடுமையாகத் தாக்கியது.

இவ்வளவு துன்பங்களையும் அனுபவித்த பிறகு நான் தொங்குகின்ற காலோடு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன். சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தேன். இத்தனை துன்பங்களுக்குப் பிறகும் மருத்துவமனையில் நான் இருக்கும் பொழுது ஒரு ஆர்.எஸ்.எஸ். காரர்கூட என்னை வந்து சந்திக்கவே இல்லை.

ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டத்தின் கீழ் நடந்த சண்டையில் மீன் விற்று தனது வாழ்க்கையை ஓட்டுகின்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த உண்ணி கிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக தனது உயிரை இழந்தான். அவனது இறுதி சடங்குகளில் பங்கெடுப்பதற்குக் கூட எனக்கு முடியாமல் போயிற்று.

இறைவன் நாடினால் வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *