Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » மறைவான இடத்தில் அமர்தல்!

மறைவான இடத்தில் அமர்தல்!

158- நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் சென்றேன். அப்போது முகீராவே! தண்ணீர் பாத்திரத்தை எடும், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் அதை எடுத்துக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் நடந்து சென்று என் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்தில் போய் அவர்களுடைய இயற்கைத் தேவையை நிறைவேற்றினார்கள். அவர்கள் ஷாம்நாட்டுக் குளிர் ஆடையை அணிந்திருந்தார்கள். உளூ செய்வதற்காக அதிலிருந்து தங்கள் கையை வெளியே எடுக்க முயன்றார்கள். அதன் கை இறுக்கமாக இருந்ததால் தமது கையை அந்த ஆடையின் கீழ்புறமாக வெளியே எடுத்தார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்குறிய உளூவைச் செய்தார்கள். தமது இரு கால் உறைகள் மீது (கழுவுவதற்குப் பதிலாக) ஈரக்கையால் மஸஹ் செய்து தொழுதார்கள்.

புகாரி-363: முகீரா பின் ஷூஃபா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *