Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » கப்றுடைய வேதனைக்கு இதுவும் காரணம்

கப்றுடைய வேதனைக்கு இதுவும் காரணம்

167- நபி (ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, தங்கள் கப்ரில் வேதனைச் செய்யப்படும் இரு மனிதர்களுடைய சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, இவர்கள் இருவரும் வேதனைச் செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனைச் செய்யப்படவில்லை, என்று சொல்லி விட்டு, ஆம்! (அது பெரிய விஷயம் தான்) அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை, மற்றொருவர் கோள் சொல்லித் திரிபவராக இருந்தார் எனக் கூறிவிட்டு, ஒரு பேரீச்ச மட்டையை கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்கப்பட்ட போது அந்த இரு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-216: இப்னு அப்பாஸ் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *