Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » தொழுகைக்கு முன் உணவு தயாராக இருந்தால்..

தொழுகைக்கு முன் உணவு தயாராக இருந்தால்..

327– இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி: அனஸ் பின் மாலிக் (ரலி)


328– இரவு நேர உணவு தயாராகி விடுமானல் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை அருந்துங்கள். உங்கள் உணவை(த் தொழுகையை விட) முற்படுத்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-672: அனஸ் (ரலி)

329– இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-671: ஆயிஷா (ரலி)


330– உங்களில் ஒருவருடைய இரவு உணவு வைக்கப்பட்டு, (மஃரிபுத்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடுமானால் முதலில் உணவை அருந்துங்கள். உணவை உண்டு முடிவது வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-673: இப்னு உமர் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *