Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ஜமாஅத் தொழுகைக்காக காத்திருப்பதின் சிறப்பு..

ஜமாஅத் தொழுகைக்காக காத்திருப்பதின் சிறப்பு..

387– ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும் கடை வீதியில் தொழுவதை விடவும் ஜமாத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூ செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்குப் படித்தரத்தை அல்லாஹ் உயர்த்திகின்றான்: ஒரு பாவத்தை அவரைவிட்டு நீக்குகிறான். தொழுகையை எதிர் பார்த்து அவர் பள்ளிவாசலில் அமருந்திருக்கும் போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவாகளுக்குத் தொல்லை அளிக்காத வரையில், இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா இவருக்கு அருள் புரி! என்று வானவர்கள் பிரார்த்திக்கின்றனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-477:அபூஹுரைரா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *