Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » சந்தைக்கு வரும் பொருளை இடைமறித்து வாங்காதே.

சந்தைக்கு வரும் பொருளை இடைமறித்து வாங்காதே.

973. ”(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2158 இப்னு அப்பாஸ் (ரலி).

கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!” என்பதன் பொருள் என்ன?’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள் ‘இடைத் தரகராக ஆகக்கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)’ என பதிலளித்தார்கள்” என்று தாவூஸ் (ரஹ்) கூறினார்.

974. ”கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர் வாசி விற்றுக் கொடுக்கக் கூடாது!” என்று எங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது!”

புஹாரி :2161 அனஸ் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *