Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » குதிரைகளின் நெற்றியில்….

குதிரைகளின் நெற்றியில்….

1226. (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரைக்கும் நன்மை உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2849 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).


1227. (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த நன்மை யாதெனில் அந்தக் குதிரையில் ஏறி அறப்போரிடுதலில் கிடைக்கும் நன்மையும், போரில் கிடைக்கும் செல்வமும் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2852 உர்வா அல் பாரிகீ (ரலி)


1228. (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2851 அனஸ் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *