Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » சபையில் அமரும் ஒழுக்கம்.

சபையில் அமரும் ஒழுக்கம்.

1405. ‘நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 66 அபூ வாக்கித் அல்லைஸீ (ரலி).

1406. ஒருவர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, பிறகு இவர் அந்த இடத்தில் அமர வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6269 இப்னு உமர் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *