Featured Posts
Home » பொதுவானவை » நிர்வாணப்படுத்தப்பட்ட போர் தர்மங்கள் #கண்டனப் பதிவு#

நிர்வாணப்படுத்தப்பட்ட போர் தர்மங்கள் #கண்டனப் பதிவு#

இலங்கை ராணுவத்திற்குப் பாரிய சேதங்களை விளைவித்த விடுதலைப் புலிகளின் அனுராதபுரம் விமானத்தாக்குதலைத் தொடர்ந்து கடற்புலிகள் பிரிவு ஈழப் போராளிகளின் கொல்லப்பட்ட உடலை நிர்வானமாகக் காட்டிய இலங்கை ராணுவத்தின் வக்கிரத்தைகப் பலரும் கண்டித்துள்ளனர். எமது கண்டனத்தையும் பதிவு செய்கிறோம்.

“ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள் தீவிரவாதிகளல்லர்” என்று ஐக்கிய நாடுகள் சபையில் பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் மீறி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் ஆப்கான், இராக் மற்றும் பலஸ்தீனப் போராளிகளை “இஸ்லாமியத் தீவிரவாதிகள்” என்ற மத அடைமொழியுடனும்,இலங்கையில் போராடிவரும் விடுதலைப் புலிகளை ஈழப்போராளிகள் என்று எவ்வித அடைமொழியின்றியும் சொல்வர்.

இலங்கை ராணுவத்தின் இச்செயலைக் கண்டிக்கும் எவரும், புத்தர்களைக் கொண்ட இலங்கை ராணுவத்தினரின் மனிதாபிமானமற்ற இச்செயலை தப்பித் தவறியும் “புத்தமதத் தீவிரவாதம்” என்று குறிப்பிடாதது உலகமகா ஊடகக் கயமைத்தனம்!

“வரம்பு மீறுபவர்களுடன் அதே அளவு வரம்பு மீற அனுமதிக்கும் இஸ்லாம், போர்க்களத்தில் அப்பவிகள்,பெண்கள்,சிறார்கள் மதகுருமார்களைத் தாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறது. பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்யப்பட்டு கடைபிடிக்கப்பட்ட இப்போர்நெறிமுறையை நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபைக் கோமான்கள் கடந்த 20-30 வருடங்களுக்கு முன்னர்தான் இவற்றை நியாயம் என்று ஒப்புக் கொண்டனர்!முஸ்லிம்களிடமிருந்து இதுபோன்ற நெறிகளையும் நாகரிகத்தையும் காப்பி அடித்த இவர்கள்தான் இன்னொரு பக்கம் இஸ்லாத்தை பழமைவாதம் என்று கூக்குரலிடுகிறார்கள்!

போர்க்களத்தில் எதிர்த்துநிற்கும் போராளிகளிடம் மட்டுமின்றி அவர்களின் தேசத்தவர்களிடமும் “War against Terrorism” என்றபெயரில் வரம்பு மீறும் நாகரிக உலகின் நவீனபோர் அதர்மத்தை வகுத்ததோடு ஐக்கிய நாடுகள் சபையில் ஒப்புக் கொண்ட ஜெனீபா பிரகரணத்தையும் மீறிச் செயல்படுத்தி வருவதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கொஞ்சமும் குறைந்தவர்களல்லர் என்பதை ஈராக், ஆப்கன், பாலஸ்தீன நிகழ்கால அவலங்கள் உணர்த்துகின்றன.

அப்பாவிகளையும் கர்ப்பினிப் பெண்களையும், குழந்தைகள், பெரியவர்கள் என்று பாராமல் கொன்றொழித்த குஜராத் சங்பரிவார தீவிரவாதிகளையும் இத்தருணத்தில் கண்டிக்க வேண்டும். மேலும் எதிரி நாட்டு அமைச்சர்கள் தூதுவர்களையும் பிணைக்கைதிகளாகச் சிறைப்பிடித்து குவாண்டனாமோ, அபுகிரைப் கொடுஞ்சிறையிலடைத்து தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் உலகமகாத் தீவிரவாதம் செய்து வரும் அமெரிக்காவையும் கண்டிக்காமல் இலங்கை ராணுவத்தின் வக்கிரத்தை மட்டும் கண்டிப்பது பாரபட்சம்!

இன்னொரு பக்கம், விடுதலைப்புலிகளும் வரம்பு மீறாதவர்கள் அல்ல என்று சொல்வதற்கில்லை. இலங்கை ராணுவத்திற்கு உதவினார்கள் என்ற குற்றம் சுமத்தி காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக் கொன்ற அண்டைவீட்டு தமிழின (அ)நியாயவான்கள்தான் என்பதையும் இத்தருணத்தில் பதிவு செய்கிறோம்.

இருந்தாலும், மனிதன் அவன் எதிரியே ஆனாலும் அவன் உயிருடன் இருக்கும்போதோ அல்லது மரணித்துவிட்ட நிலையிலோ கேவலப் படுத்தப்படுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இலங்கை இராணுவத்தின் இச்செயலை மனிதம் விரும்பும் எவரும் கண்டிக்கவே செய்வர்; எமது கண்டனத்தை மீண்டுமொருமுறை பதிவு செய்கிறேன்.

11 comments

  1. i condemn you for condemning everyside.

  2. அது, இது என பல கதைகள் சொன்னாலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற சொல் பொருத்தமானதே!

    புள்ளிராஜா

  3. நல்லடியார்

    //அது, இது என பல கதைகள் சொன்னாலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற சொல் பொருத்தமானதே!//

    புள்ளிராஜா

    அது, இது என பல கதைகள் சொன்னாலும் இந்துத்துவா பயங்கரவாதிகள் என்ற சொல் பொருத்தமானதே!

  4. மு மாலிக்

    உங்கள் பதிவிற்கு நன்றி நல்லடியார். மனிதாபிமானிகள் அனைவரும் மோடி விஷயத்தில், மோடித்தனத்தினை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்துடையவர்கள். ஆனால் இலங்கை விஷயத்தில் அவர்களில் சிலர் இரு வேறு குழுவாக பிரிந்து நின்று ஒரு குழுவினர் இலங்கை அரசாங்கத்தின் வெறித்தனத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

    நிச்சயமாக விடுதலைப் புலிகளும் மதவெறியர்களே.

    புலிகளின் மதவெறித் தனம் கண்டிக்கப் படாமல் போவதற்கான காரணம், இலங்கை அரசின் அரசியல்சாசன வெறித்தனத்தை கண்டிக்க தகுந்த ஒரே கும்பல் அதுவாக மட்டும் இருப்பதால். புலிகள் எந்த வெறியாட்டத்தைக் கொண்டிருந்தாலும் இந்த காரணத்திற்காக அவர்கள் கண்டிக்கப்படாத வண்ணம், இலங்கை அரசைக் கண்டிக்கும் பல குழுக்களை தீர்த்து விட்டது. இதனால் சில நியாயவான்களே புலிகளைக் கண்டிக்காத சூழ்நிலை நிலவுகிறது.

    ஒரு கும்பல் ஒருவனைத் தனது அதிகார ஆணவத்தால் அடக்குமுறை செய்யும் செயலை ஒருவர் பார்க்கிறார் என வைத்துக் கொள்வோம். அந்த அடக்குமுறையை காணும் ஒருவர் அதனைக் கண்டிக்கக் கூடிய ஒருவரையும் அங்கே காண்கிறோம் என வைத்துக் கொள்வோம். அவர் இஸ்ரேல் பாலஸ்தீனம் விஷயத்தில் நிச்சயமாக பாலஸ்தீனர்களை ஆதரிப்பார். ஆனால் இலங்கை விஷயத்தில் தடுமாறுவார். இலங்கை அரசின் மொழி-மதவாத வெறிச் செயலைக் கண்டிக்கவேண்டிய அவசியத்தால் அவர் ஒடுக்கப் பட்ட சமுதாயத்தின் பிரதி நிதியை ஆதிரிக்க முயல்வார். ஆனால் ஒடுக்கப் பட்ட சமுதாயத்தின் பிரதிநிதி தாங்கள் தான் என புலிகள் தங்களை முன்நிறுத்துவதில் பல அடக்கு முறைகளைச் செய்து வெற்றி பெற்றுள்ளது. இதனால் புலிகளை ஆதரிப்பதா ? இவர்களை ஆதரிக்காவிட்டால் யாரை ஆதரிப்பது எனக் குழம்பி நிற்பார்.

    குழப்பத்தில் உள்ள அவர்கள் இவர்கள் அவர்களை ஆதரித்தாலும் நாம் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில் அவர்களது ஆதரவு மதத்தின் அடிப்படையில் இல்லை. மனித் உரிமையின் அடிப்படையில் உள்ளது. அவர்கள் இந்தியாவில் உள்ள மத வெறியர்களைக் கண்டிக்கக் கூடியவர்களாகவும் உள்ளனர். இலங்கைத் தமிழ் முஸ்லீம்களோ புலிகளை எதிர்ர்க்க வேண்டிய புலிகளால் விதிக்கப் பட்ட தேவையில் உள்ளனர்.

    இந்திய முஸ்லீம்களைப் பொறுத்தவகையில் கூட அவர்கள் குழம்பியிருக்கின்றனர். இலங்கை உண்மையில் குழப்பம்தான்

  5. மு மாலிக்

    எனது பின்னூட்டத்தில் வாக்கிய அமைப்பு பிழைகள் உள்ளன. அதனைத் திருத்தி நான் ஒரு பதிவாக இட்டுள்ளேன்.

    http://vilambi.blogspot.com/2007/10/blog-post_29.html

  6. கோவி.கண்ணன்

    நல்லடியார்,

    செய்திகளை தட்ஸ் தமிழில் படித்தேன். எவரும் அதிர்ச்சி அடையவில்லை. ஏனென்றால் இவர்கள் தான் செய்திருப்பார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதற்கு ஆதாரம் வந்திருக்கிறது அவ்வளவே. கை வாய் சுத்தம் ஆட்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார்கள். மாறாக பாட்சாவுக்கு தூக்கிதண்டனை கிடைத்திருக்க வேண்டும் கருணாநிதி அரசு தடுத்துவிட்டது என்று சொல்லுவார்கள்.

    :(

  7. அபூ ஸாலிஹா

    அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை…

    உலகில் மனிதன் இத்தனை கொடியவனா? இந்த வன்மமும், குரோதமும் எங்கிருந்து வருகிறது?

    :(

  8. அல்லா பேரை சொல்லி எத்தனை தலைகளை வெட்டினீர்கள் , எத்தனை குண்டுகள் வைத்தீர்கள் , அதைவிடவா இது கொடூரம் ?

  9. நல்லடியார்

    //செய்திகளை தட்ஸ் தமிழில் படித்தேன். எவரும் அதிர்ச்சி அடையவில்லை. ஏனென்றால் இவர்கள் தான் செய்திருப்பார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதற்கு ஆதாரம் வந்திருக்கிறது அவ்வளவே. //

    கோவியார்,

    மோடி மற்றும் சங்பரிவார ஆட்சியாளர்களின் காட்டு தர்பார் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. செய்திகளை முந்தித் தரும் நம்பர் #1,#2,#3 நாளிதழ்களில் வெறும் ஒருபத்திச்செய்தியாகத்தான் இத்தகையச் செய்திகள் வெளியிடப்பட்டு,மிக சாமர்த்திய்மாக மற்றொரு தலைப்புச் செய்தியை பிரதானப்படுத்தி வாசகர்களின் கவனம் ‘அவாள்’களுக்கு எதிராகத் திரும்பாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

    மோடியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய தெகல்கா செய்திகளை ஒளி/ஒலி பரப்ப விடாமல் குஜராத் ஊட்கங்கள் இருட்டடிபுச் செய்ததையும் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  10. இறை நேசன்

    //அது, இது என பல கதைகள் சொன்னாலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற சொல் பொருத்தமானதே!//

    முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறோம் – மனிதத்தை நசுக்கி, தெய்வத்தின் பெயரால் சக மனிதர்களை ஏய்த்து நாய்ப் பிழைப்புப் பிழைக்கும் வந்தேறிப் பன்னாடைகளின் மனுக்கொள்கைக்கு ஆப்பு வைக்கும் இஸ்லாத்தைப் பின் பற்றும் காரணத்திற்காக இஸ்லாமியத் தீவிரவாதி என்ற சொல் பொருத்தம் எனில், ஆயிரம் முறை அதுப் பொருத்தமானதே!

    பிழைப்புக்காக பஞ்சப்பரதேசிகளாக இந்தியா வந்தேறியப் பன்னாடைகள், தங்களின் நரிப்புத்தி மூலம் ஏமாந்தவர்களை வைத்து பச்சிளம் குழந்தைகளின் இரத்தம், சதையையும் குரூரத்துடன் ருசிப்பார்க்க தயாராக்கி வைத்துள்ள சங்க்பரிவாரம் எனும் இரத்தவெறிப்பிடித்தக் கூட்டத்தின் அநியாயங்களுக்கு எதிராகப் போராடத் தூண்டும் தன்மான மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக இஸ்லாமியத் தீவிரவாதி என்ற சொல் பொருத்தம் எனில் இன்னும் ஓராயிரம் முறை உரக்கச் சொல்வோம் – நாம் தீவிரவாதிகளே!

    அடப்போடா இரத்தக்காட்டேறி மோடிக்கூட்டத்தின் அடிவருடியே!

    இறை நேசன்.

  11. முஸ்லிம்

    இறந்து விட்ட பிரேதத்துக்கு என்ன தெரியும்?

    அரை குறை நிர்வாணமாக அனாதையாக கிடக்கும் பிரேதத்தின் ஆடையையும் சரி படுத்தி மறைப்பதே மனிதம்.

    ஒரு பிரேதத்தை நிர்வாணமாக்க இன்னொரு பிரேதப் புத்தியால் தான் முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *