Featured Posts
Home » பொதுவானவை » டினோஸாரும் இஸ்லாமியத் தீவிரவாதமும்!

டினோஸாரும் இஸ்லாமியத் தீவிரவாதமும்!

கடந்த பத்து வருடங்களில் உலகின் பலபாகங்களிலும் கையாளப்பட்ட சொல்லாடல் ஒன்று உண்டென்றால் அது “தீவிரவாதம்” என்பதே ஆகும். தீவிரவாதம் என்றதும் உங்கள்முன் தாடி,தலைப்பாகையுடன் ஓர் உருவம் உங்கள் நினைவில் வந்து தொலைத்தால், தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம் (War Against Terrorism) என்ற பெயரில், இஸ்லாத்தைத் தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க பாசிச/யூத/அமெரிக்க/ பார்ப்பனீய ஊடகங்கள் பட்ட கூட்டுக் கஷ்டங்கள் வீணாகி விடவில்லை என்று அர்த்தம்.

உலகின் பல பகுதிகளிலும் ஏன் நம் நாட்டிலும்கூட தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பலர் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருக்கும்போது, ஊடகங்களும் யூத/கிறிஸ்தவ/பார்ப்பனீய மிஷனரிகள்தான் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கிறார்கள் என்பது நம்பக் கூடியதாக இல்லையே என்று முணுமுணுக்கலாம்! ஊடகங்களால் பெரும்பான்மையோரை அவ்வளவு எளிதில் முட்டாளாக்க முடியுமா? என்றும் கேட்கலாம்.

ஊடகங்கள் சொல்வதையெல்லாம் அலசி ஆராய்ந்துப் பார்த்துத்தான் நம்பவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் மக்கள் இல்லை. ஊடகச் செய்திகளை அப்படியே நம்பிவிடக்கூடிய அளவுக்கு மக்கள் ஒன்றும் முட்டாள்களல்ல ர்! ஆனால், ஒரு விசயத்தை எப்படிச் சொன்னால் மக்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்பதில் ஊடகவியலாளர்கள் அறிவாளிகள்.

ஒருகாலத்தில் அநாகரிகமாகக் கருத்தப்பட்டவையெல்லாம் இன்று நாகரிகம் என்ற பெயரில் நம்மிடையே புழக்கத்தில் இருப்பதற்கு ஊடகங்களின் பங்களிப்பும் காரணம்.அறுபது இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் டினொசார் என்றதும் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் ஜூராசிக் பார்க் படத்தில் கண்ட டினோசார்கள்தான் நினைவில் வரும்.உண்மையான டினோசார் நம்முன் நிறுத்தப்பட்டாலும் அது ‘ஜுராசிக் பார்க்’ டினோசார்போல் இல்லா விட்டால் நம் மனது நம்ப மறுக்கும். அந்த அளவுக்கு ஊடகங்களின் தாக்கம் இருக்கிறது.

நம்நாட்டைப் பொறுத்தவரை தீவிரவாதம் என்றதும் காலிஸ்தான், அஸ்ஸாமின் உல்ஃபா, நக்ஸல் மற்றும் தமிழ்ப்புலிகள் தான் தீவிரவாதிகள் என இதுவரை அறியப்பட்டிருந்தார்கள். இவர்களோடு இஸ்லாமியத் தீவிரவாதம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாம் சுமார் ஆயிரம் வருடங்களாக இருக்கும்போது இதுவரை அறியப்படாத இஸ்லாமியத் தீவிரவாதம் எங்கிருந்தய்யா திடீரென்று வந்து குதித்தது?

பாகல்பூர் முதல் சமீபத்திய நந்திகிராம்வரை அனைத்துக் கலவரங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே. குஜராத் இனப்படுகொலைகளையும், அமெரிக்காவின் ஆப்கன் – இராக் படுகொலைகளையும் எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள் நந்திகிராமில் நடத்திய கலவரத்தில் சற்றும் சம்பந்தப்படாத பல முஸ்லிம்கள் காணாமல் போனதையும், கற்பழிக்கப்பட்டதையும் எந்த ஊடகங்களும் மக்கள் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை. (பார்க்க: விடியல் வெள்ளி (8:12-டிஸம்பர் 2007) எந்த ஆணின் விந்தையும் தனது கருப்பையில் சுமக்கும் உரிமை பெண்களுக்கு வேண்டும் என்ற தஸ்லிமா மட்டுமே அவர்களின் கண்ணில் பட்டார்!

அமெரிக்க – இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்த கம்யூனிஸ்ட்டுகளின் வாயை அடைக்க ஆளும் காங்கிரசுக்கு நந்திகிராம் கலவரங்கள் உதவின. இப்பிரச்சினையால் கந்தாலகிப்போன கம்யூனிஸ்டுகளின் முகமூடியைச் சரி செய்து கொள்ள தஸ்லிமா நஸ்ரின் உதவினார். அமெரிக்க அணு ஒப்பந்தமும் நந்திகிராமும் கைகுலுக்கியதன் பலன் வழக்கம் போல் முஸ்லிம்கள் அனுபவிக்கிறார்கள்! பார்க்க குமுதம் கேள்வி பதில்)

இந்தியாவில் நடந்த கலவரங்களில் 70% சதவீதத்திற்கும்
மேல் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்தான் என்ற புள்ளிவிபரங்களைக் கண்டபிறகும் இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சோககீதம் வாசிப்பதில் நியாயமில்லை!

தங்கள் வாழ்விடங்களை ஆக்கிரமித்த யூதர்களை எதிர்க்கும் பாலஸ்தீனர்களும்,அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஈராக்கியர்களும், ஆப்கானியர்களும் தீவிரவாதிகளென்றால் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பை எதிர்த்த இந்திய சுதந்திரப் போராளிகளும்,இலங்கையில் இன உரிமைக்காகப் போராடும் தமிழர் களும்கூடத் தீவிரவாதிகள்தாம்!

உரிமைப் போராட்டங்களையும் சுதந்திரப் போராட்டங்களையும் தீவிரவாதத்துடன் குழப்பி,உண்மையான தீவிரவாதச் செயல்களை மறைத்தவர்கள் மேலே குறிப்பிட்ட ஊடகங்களே என்பதை மறுக்க முடியுமா?

12 comments

  1. //டினோஸாரும் இஸ்லாமிய தீவிரவாதமும்//

    அடப்பாவி,டைனொஸாருக்குக் கூட தாடி ஒட்ட வச்சுட்டீங்களேடா?சிக்கிரமே பொம்பளை டைனோஸாருக்கு பர்தா போட்டு விடுவீங்களோ?கடைசியில என்ன சொல்ல வர்றீங்க,கவலை வேண்டாம் இஸ்லாமிய தீவிரவாதம் டைனொஸாரைப் போல் அழிந்துவிடும்னா?அப்ப சரி தான்.

    பாலா

  2. அபு முஜாஹித்

    //நம்நாட்டைப் பொறுத்தவரை தீவிரவாதம் என்றதும் காலிஸ்தான், அஸ்ஸாமின் உல்ஃபா, நக்ஸல் மற்றும் தமிழ்ப்புலிகள் தான் தீவிரவாதிகள் என இதுவரை அறியப்பட்டிருந்தார்கள்//

    தேசத்தந்தை காந்திஜியைக் கொன்றவர்கள், பாபரி பள்ளியை இடித்தவர்கள், ராமனின் பெயரால் இனப் படுகொலைகள் நடத்தி தினம் தினம் நாட்டில் ரத்த ஆறு ஓட்டுபவர்கள், கன்னியாஸ்திரிகளை கற்பழித்து தேச பக்தி என்பவர்கள், பாதிரியார்களை உயிரோடு கொளுத்துபவர்கள், மூன்று முறை தடை செய்யப்பட இயக்கத்தை சார்ந்தவர்கள் இவர்களெல்லாம் நம் நாட்டில் தீவிரவாதிகள் என்று அறியப்படவில்லை பார்த்தீர்களா? அங்கே நிற்கிறது இந்த ஊடகங்களின் மாபெரும் வெற்றி. தெகல்கா போன்ற சிறு எறும்புகள் இந்த யானைகளின் முன்னால் என்ன செய்து விட முடியும்.

  3. சிவாஜி - The Boss!

    நல்ல முயற்சி, வரவேற்கிறேன்! நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், அல் காய்தா, லஷ்கர் இ தொய்பா, பின்லேடன் ஆகியவற்றை கண்டிக்க வேண்டியதுதான், செய்து விட்டீர்கள் என்றால், இந்த எதிரொலியை நம்பலாம்!

  4. தூண்டில்காரன்

    //சிவாஜி – The Boss! said…
    நல்ல முயற்சி, வரவேற்கிறேன்! நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், அல் காய்தா, லஷ்கர் இ தொய்பா, பின்லேடன் ஆகியவற்றை கண்டிக்க வேண்டியதுதான், செய்து விட்டீர்கள் என்றால், இந்த எதிரொலியை நம்பலாம்!
    //

    மாயவரத்தான் தான் இந்த அவதாரம் எடுத்து இருக்கார்

  5. அபு முஜாஹித்

    // அடப்பாவி,டைனொஸாருக்குக் கூட தாடி ஒட்ட வச்சுட்டீங்களேடா? //

    ஆமா தாடி வச்ச டைனொஸாரு நம்ம மோடி ஸாரு.

    // ———— தீவிரவாதம் டைனொஸாரைப் போல் அழிந்துவிடும்னா?அப்ப சரி தான் //

    பா(ழா)லா போன்றவர்கள் கோடிட்ட இடத்தை தப்பு தப்பாக நிரப்பி உள்ளார்கள். யாராவது கோடிட்ட இடத்தில் சரியாக என்ன வரும் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

  6. இது ஒரு நல்ல முயற்சி என்பதை விட முயற்சியின் ஆரம்பம் என்றுகூட சொல்லலாம். இஸ்லாமிய தீவிரவாதம் என்று வாய் கூசாமல் பேசும் மக்களின் மனம் மாறவேண்டும் என்றால் அவர்களுக்கு அதற்க்கான வாய்ப்புக்களை அதை வேண்டுவோர் ஏற்படுத்தி தரவேண்டும். ஏன் எனில் மனிதனின் சராசரி குணம் அடுத்தவர் செய்வது குற்றமாகப்படுவதை தான் செய்தாலோ, தனக்கு வேண்டியவர் செய்தாலோ அதை சட்டை செய்துகொள்வது இல்லை. ஆதலால்தான் அண்டை மாநிலங்களில், நேபாளத்தில், இலங்கையில் நடைபெறுகிற கொலைகள் அவர்களுக்கு பெரிதாகத் தெரிவது இல்லை. மற்ற இடங்களில் நடக்கும் சிறு பிரச்சனைகள்கூட பெரியதாகத் தெரிகின்றன. இதற்கு ஊடகங்கள் முழுக்க முழுக்க துணையாக நிற்கின்றன…. ஊடகங்களயும் நாம் குற்றம் சொல்வதற்கு இல்லை. மக்கள் உண்மையை படிப்பதை விட தனக்கு பிடித்தவற்றை, சுவாரச்யமானவற்றை படிப்பதையே விரும்புகின்றனர்.
    உதாரணமாகச் சொல்லவேண்டுமானால் நம் தமிழ்நாட்டில் இருக்கும் இரு சேனல்களையே சொல்லலாம்…. மக்களின் நலத்திட்டங்களை ஒன்றிலும் நடக்கும் அநீதிகளை ஒன்றிலும் நடக்கும் ஆட்சியைப் பொருத்து காணலாம். பிரச்சினைகள் சொல்லப்படும் விதம் தவறாக அமைந்து விடுவதும் இதற்க்கு முக்கிய காரணம். (எடு : விருமாண்டி திரைப்படம்)
    இனிவரும் மக்கள் நடக்கும் பிரட்சினைகளை மதம், ஜாதி, மொழி வேறுபாடு இன்றி பிரட்சினைகளின் உண்மை காரணங்களை அறிந்தபின்பு அதனை ஆராயவேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள்.
    வாழ்க பாரதம்…. வாழ்க மனிதநேயம்….

  7. //———— தீவிரவாதம் டைனொஸாரைப் போல் அழிந்துவிடும்னா?அப்ப சரி தான் //

    பா(ழா)லா போன்றவர்கள் கோடிட்ட இடத்தை தப்பு தப்பாக நிரப்பி உள்ளார்கள்.//

    அல்கெய்தா,லக்ஷர் யெ தொய்பா,எச் யு ஜி ஐ,இன்னும் பல பல

  8. இஸ்லாமும் தீவிரவாதமும் இணைபிரியா சகோதரர்கள்!

  9. முஸ்லிம்கள் தீவிரவாதிகள்,பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரம் குறித்து உங்களின் எதிர்வினை என்ன?

    பே.சாந்தி (“மேலப்பாளையம் முஸ்லிம்கள்” என்ற ஆய்வு நூல் எழுதிய நூலாசிரியர்)

    முஸ்லிம்கள் தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ அல்ல என்பதே என் வாதம். மேலப்பாளையத்தில் வசிக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு அந்த வார்த்தையின் அர்த்தம் புரியுமா என்பது கூட கேள்விக்குறிதான்.

    2 லட்சத்திற்க்கும் மேல் அங்கு வசிக்கிறார்கள். அவர்கள் இங்கு பல வருடகாலமாக வசித்து வருகிறார்கள். எந்த பிரச்சினைக்கும் போனதில்லை.ஏன் பாபர் மசூதி இடிப்பின் போது அவர்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை எனபது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். 1998-ம் ஆண்டில் தான் மேலப்பாளையம் என்ற பெயரே ஊடகங்களில் அடிப்பட தொடங்கியது. தீவிரவாதிகள் என்ற கற்பிதத்தை மேலப்பாளையத்தில் காவல் துறையும் ஊடகங்களும் தான் உருவாக்கின.

    இப்படி ஒரு சமூகத்தை முத்திரை குத்தி ஒதுக்கும் போது அவர்களுடைய மனம் எவ்வளவு புண்படும் என்பதைத் தெரிந்து கொண்டதனால் தான் இதைக் கூறுகிறேன். அவர்களும் நம்மினத்தவர்தானே.

    நன்றி. சமரசம் (samarasam.com)

  10. //இஸ்லாமிய தீவிரவாதம் டைனொஸாரைப் போல் அழிந்துவிடும்னா..//

    பாகிஸ்தானின் நம்பிக்கை ஒளியாகத் திகழ்ந்த பெனாசீரை தூக்கிச் சாப்பிட்ட தீவிரவாத டினோசர்களையும் அவர்களை அடக்கமுடியாத தொடைநடுங்கிக் குரங்கு முஷராப்பையும் அவனுக்கு சப்போட் பண்ணும் அமெரிக்க முதலைகளையும்
    அழிக்க இன்னொரு விண்கல்லால் நிச்சயமாய் முடியாது………!

  11. //இனிவரும் மக்கள் நடக்கும் பிரட்சினைகளை மதம், ஜாதி, மொழி வேறுபாடு இன்றி பிரட்சினைகளின் உண்மை காரணங்களை அறிந்தபின்பு அதனை ஆராயவேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள்.
    வாழ்க பாரதம்…. வாழ்க மனிதநேயம்//

    சையத் அய்யா,

    ஏற்க வேண்டிய கருத்து.வாழ்க பாரதம்,வாழ்க மனித நேயம்.

    பாலா

  12. நன்றி பாலா… பாலாவுக்கு புரிந்தது ஏனோ சீனுவுக்கு புரியவில்லை? தனக்குத் தெரியாத மதத்தைப் பற்றியோ, மனிதனின் நடத்தை பற்றியோ தவாராக விமர்சிப்பது அநாகரீகம். (இஸ்லாத்தின் சட்டப்படி மற்ற மதத்தின் குறைபாடுகளை எடுத்துச்சொல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மற்ற கடவுள்களையோ, பிற மதத்தினரையோ விமர்சனம் செய்யவோ, குறை கூறவோ அனுமதி இல்லை. வேதமே இதனைச் சொல்வது மனித நேயத்தை மையமாகக் கொண்டுதான்…..)
    இதனை அறிவாரா சீனு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *