Featured Posts
Home » பொதுவானவை » குண்டு வெடிப்புகள்: பொறுப்பேற்றவர்களும் பொறுப்பற்றவர்களும்!

குண்டு வெடிப்புகள்: பொறுப்பேற்றவர்களும் பொறுப்பற்றவர்களும்!

கோழைகள், காட்டுமிராண்டிகள்,………..இன்னும் என்னென்ன கடுஞ்சொற்கள் உள்ளனவோ அவையும், இறைவனின் சாபமும் குண்டுவைத்தவர்கள் மீது உண்டாகட்டும்! ஒவ்வொருமுறை குண்டு வெடித்ததாகக் கேள்விப்பட்டதும் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இஸ்லாத்தைப் பலிகடாவாக்கி அக்கிரமம் செய்வார்களோ தெரியவில்லை. மாபாதகர்கள்!

குண்டு வைத்தவர்கள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியானவர்களா? உள் நாட்டுக் கைக்கூலிகளா? முஸ்லிம்களின் பெயரைச்சொல்லி அரசியல் குளிர் காயும் சண்டாளர்களா? யாராக இருந்தாலும் வழக்கமாக ஏதேனுமொரு அமைப்பு பொறுப்பேற்கும் அல்லது பொறுப்பேற்றதாகச் சொல்லப்படும். இதுபோன்ற கோழைத்தனமானத் தாக்குதல்களைச் செய்துவிட்டு எதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரியவில்லை? தாக்குதல் நடத்தியவர்கள் பொறுப்பேற்காவிட்டாலும் முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக பொறுப்பேற்க வைக்கப்படுவர்.

ஒவ்வொருமுறையும் குண்டு வெடிப்புகளின்போதும் பொடா/தடா போன்ற கடுமையானச் சட்டங்களின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. சட்டத்திற்குக் கட்டுப்படாத தீவிரவாதிகள், இத்தகைய சட்டங்களுக்குக் கட்டுப்படுவரென்று எதன் அடிப்படையில் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. பொடாவும் தடாவும் இருந்த காலங்களில்தான் மும்பை, குஜராத் கலவரங்களும் அதில் ஒருதரப்பார் மீதுமட்டுமே அத்தகையச் சட்டங்கள் துர்ப்பிரயோகம் செய்யப் பட்டன என்பதையும் மறந்துவிட்டு பேசுகிறார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் உளவுத்துறைக்காக அதிகம் செலவளிக்கப்படுகிறது. உளவுத்துறையின் அவசியம், இத்தகைய அசம்பாவிதங்கள் குறித்து உளவு அறிந்து அரசை உஷார் படுத்தவேண்டியது. ஆனால், நடப்பதென்னவோ குண்டு வைத்தவர்கள் இவர்கள்தான், இந்த அமைப்பு பொறுப்பேற்றது என்று நிகழ்வுக்குப் பின்னரே துப்பறிந்து!!! சொல்கிறார்கள். சொன்னதையே சொல்ல உளவுத் துறை எதற்கு? கிளிப்பிள்ளையே போதும்!

குடியரசு தினம், சுதந்திரதினம் போன்ற தேசிய நாட்களில் அநாவசியமாக ஒருசாராரை (ஒருசாரார் என்று வரும் இடங்களிளெல்லாம் முஸ்லிம்கள் என்று வாசித்தாலும் பொருந்தும்) முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்து தேவையற்றப் பீதியைக் கிளப்புகிறார்கள்.

இனிவருங்காலங்களில் தகுந்தபடி உளவு சொல்லாத அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும். முன்கூட்டிய உளவுத் தகவல்களின் துல்லியத்தை, நிகழ்வுகளுக்குப் பின்னர் ஒப்பீடு செய்து, நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.தவறான உளவு தகவல்களுக்காக தேவைப்படின் சட்டப்படி தண்டிக்கவும் வகை செய்ய வேண்டும்.

குண்டு வெடிப்புகள் நடந்த சில மணிநேரங்களிலேயே அவசர அவசரமாக அறிக்கைவிடும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தீர விசாரிக்க வேண்டும். யார் செய்திருப்பார்கள் என்று அரசுக்கு மட்டுமே அறிக்கை கொடுத்தால் போதும். பத்திரிக்கைகளுக்குக் கொடுப்பதால் பரபரப்புச் செய்தி மட்டுமே மிஞ்சும். ஊடகவியலாளர்களின் பொறுப்பற்ற, தன்னிச்சையானச் செய்திகளால் விசாரணையின் போக்கு மாறுவதோடு, குற்றவாளிகள் உஷாராகித் தப்பிக்கவும் காரணமாகின்றன.

9 comments

  1. ulagam azhiyap povathu andha oru saaraar’aal thaan.

  2. Raveendran Chinnasamy

    //இனிவருங்காலங்களில் தகுந்தபடி உளவு சொல்லாத அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும். முன்கூட்டிய உளவுத் தகவல்களின் துல்லியத்தை, நிகழ்வுகளுக்குப் பின்னர் ஒப்பீடு செய்து, நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.தவறான உளவு தகவல்களுக்காக தேவைப்படின் சட்டப்படி தண்டிக்கவும் வகை செய்ய வேண்டும் //

    How we can follow if we cant able to introgate as caste/religion based politics come into picture .Even you may write against the officiers if they do.otherwise like most of the srilankan tamils justify killings of Rajiv .

    so bombing is part of our lifes and just follow the govt to write ” we are deeply share sorrows of victims”

  3. சுவனப்பிரியன்

    Nalladiyar!

    தீவிரவாதி என்பவன் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்லன்; மனித மிருகம் என்கிற உணர்வு எல்லோருக்கும் ஏற்படும் வரை இந்த அவலம் தொடரத் தான் செய்யும்.

  4. இறை நேசன்

    //இனிவருங்காலங்களில் தகுந்தபடி உளவு சொல்லாத அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும். முன்கூட்டிய உளவுத் தகவல்களின் துல்லியத்தை, நிகழ்வுகளுக்குப் பின்னர் ஒப்பீடு செய்து, நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.தவறான உளவு தகவல்களுக்காக தேவைப்படின் சட்டப்படி தண்டிக்கவும் வகை செய்ய வேண்டும்.

    குண்டு வெடிப்புகள் நடந்த சில மணிநேரங்களிலேயே அவசர அவசரமாக அறிக்கைவிடும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தீர விசாரிக்க வேண்டும்.//

    அருமையான ஆலோசனைகள்!

    ஆனால் செயல்படுத்துவது யாராம்?. இவற்றில் ஏதாவது ஒன்றைச் செயல்படுத்த ஆரம்பித்து விட்டாலே முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பித்து விடும். ஆனால் அது அவர்கள் தேவை அல்லவே!

  5. ╬அதி. அழகு╬

    உள்ளூரு உளவுத்துறைக்குத் தெரியாத குண்டு வெடிக்கும் தகவல்கள் குஜராத்திலிருக்கும் மோடிக்கு ‘மட்டும்’ எப்படி முன்கூட்டியே தெரிகிறது?

  6. புதுச்சுவடி

    //இனிவருங்காலங்களில் தகுந்தபடி உளவு சொல்லாத அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும். முன்கூட்டிய உளவுத் தகவல்களின் துல்லியத்தை, நிகழ்வுகளுக்குப் பின்னர் ஒப்பீடு செய்து, நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.தவறான உளவு தகவல்களுக்காக தேவைப்படின் சட்டப்படி தண்டிக்கவும் வகை செய்ய வேண்டும்.//

    சரியான யோசனை. முன்பு கோயம்புத்தூரில் உளவுத்துறை உதவி ஆணையாளராயிருந்த ரத்தின சபாபதி இப்படித் தவறான தகவல் கொடுத்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிரான சதியில் ஈடுபட்டது அம்பலமானதுடன் அவர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

  7. Hi

    Let’s come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

    Let’s also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

  8. ”கோழைகள், காட்டுமிராண்டிகள்,………..இன்னும் என்னென்ன கடுஞ்சொற்கள் உள்ளனவோ அவையும், இறைவனின் சாபமும் குண்டுவைத்தவர்கள் மீது உண்டாகட்டும்! ஒவ்வொருமுறை குண்டு வெடித்ததாகக் கேள்விப்பட்டதும் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இஸ்லாத்தைப் பலிகடாவாக்கி அக்கிரமம் செய்வார்களோ தெரியவில்லை. மாபாதகர்கள்!”

    ஜிகாதிகள்தான் செய்கிறார்கள்.
    9/11 தாக்குதல் நடத்திய
    அல்-கொய்தா,தலிபான்,
    LeT உட்பட உலகின்
    பல பகுதிகளிலும் உள்ள
    இஸ்லாமிய தீவிரவாதிகள்தான்
    இதை செய்கிறார்கள்.இங்கிலாந்தில்
    விமான நிலையத்தை தகர்க்க
    திட்டமிட்டு காரோடு சென்று தாக்கிய
    தீவிரவாதிகள் யார்?. பாகிஸ்தானில்
    தற்கொலை தாக்குதல் செய்வது
    யார்.லால் மசூதி தாக்குதல் செய்தது
    யார். முதலில் ஜிகாதிகளை.
    அல்-கொய்தாவை,தலிபானை,
    இந்திய முஸ்லீம் தீவிரவாதிகளை
    கண்டித்து எழுதுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *