Featured Posts
Home » பொதுவானவை » அமானுடக் கேள்விகளும் அரைகுறை ஞானிகளும் – முடிவுரை

அமானுடக் கேள்விகளும் அரைகுறை ஞானிகளும் – முடிவுரை

வாசக நண்பர்களே,

இதுவரை வஹீ (வேத வெளிப்பாடு) மனநோயின் அறிகுறி என்ற காழ்ப்புணர்வு கலந்த இறக்குமதி செய்யப்பட்டக் குற்றச்சாட்டை குர்ஆன், ஹதீஸ் மூலமும், சமூக, வரலாற்று, அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த மருத்துவக்குறிப்புகளை சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களின் கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஆதாரங்களுடன் வைக்கப்பட்ட இம்மறுப்புத்தொடரைப் பார்த்தோம்.

பின்னூட்டங்கள் என்ற பெயரில் வெவ்வேறு புனைப்பெயரில் தேவையற்ற திசை திருப்பல்கள், தனி மனித துவேசம், ஏளனம் மற்றும் ஆதாரமற்ற அவதூறுகள் சொல்லப்பட்ட போதிலும், மிகுந்த பணிகளுக்கிடையிலும் என்னால் முடிந்தவரை அந்தந்த தொடரில் விளக்கியும் தேவைப்பட்டால் மறுத்தும் உள்ளேன்.

நான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவனல்ல. நானும் இவ்வகையானப் பின்னூட்ட எதிர்வினைகளில் சில இடங்களில் நிதானம் தவறியுள்ளேன் என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொள்ளும் அதேவேளையில், இத்தொடரின் அவசியம் ஏன் என்றும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
உலகின் பெரும்பாலான மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கையை அம்மதம் சாராத மற்றும் அதற்கு நேரெதிர் கொள்கை கொண்ட மதத்தின் பிரதிநியாகத் தன்னைக் கருதும் ஒருவரின் அறியாமையும் காழ்ப்பும் கலந்த அவதூற்றை தமிழ் வாசகர்களுக்கு தெளிவு படுத்துவதே இத்தொடரின் நோக்கம்.

நம் வாழ்க்கையில் சந்திக்கும் எத்தனையோ குற்றச்சாட்டுகளுடன் இதுவும் ஒன்று எனச்சென்றிருந்தால், நல்லடியார் என்ற நபரே அறியப்படாமல் எங்கோ ஒரு இணைய தளத்தில் அளவளாவிக் கொண்டிருக்கும் கோடி பேரில் நானும் ஒருவனாகவே இருந்திருப்பேன். எனினும், எத்தனையோ தமிழ் முஸ்லிம்கள், இதனைப் பொருட்படுத்தாமல் இதுபோன்ற வசவுகளாலும் அவதூறுகளாலும் இஸ்லாம் வீறு கொண்டு வளர்ந்து வரவே செய்யும் போது, ‘அரைகுறை ஞானிகளும் அமானுடக் கேள்விகளும்’ என்ற ஒன்பது வாரத் தொடர் அவசியமா? எனக் கேட்கலாம்.

முஹம்மது என்ற தனிமனிதரை அல்லாஹ் தன் அடியார்களுக்கு போதனை செய்யும் கடைசித்தூதுவராக தேர்ந்தெடுத்து, சோதனைகளிலும் துயரங்களிலும் பங்கெடுக்க வைத்து தனக்கு அறிவிக்கப்பட்டபடி ஓரிறையை நம்பிக்கை கொண்டு 1400 வருடங்களாக இன்று உலகின் 160 கோடிக்கும் அதிகமான நம்பிக்கையாளர்களைக் கொண்டும், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளிலும் வேகமாக வளர்ந்தும், இஸ்லாம் அல்லாத நடுநிலையானவர்களாலும், அறிஞர்களாலும் பெரிதும் மதமாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டு மதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் எடுத்தியம்பிய மார்க்கத்தை,பொருந்தாக் காரணம் கொண்டு குற்றம் சாட்டும் தனிநபரின் அல்லது சிறு குழுவின் நோக்கம் என்னவாக இருக்கும்?

இந்து மதத்தை தன் பிடியில் வைத்து, ஏறத்தாழ இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்த காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்குப் பின் இந்து மதச் சகோதரர்களிடம் அவர்களின் மதத்தின் மீதான பிடிப்பு நழுவுகிறதோ என்ற ஐயத்தில் உழலும் தீவிர(இந்துத்துவா)வாதிகளின் அவநம்பிக்கையின் வெளிப்பாடுதான் இது போன்ற, இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களைத் தேடிப்பிடித்து மொழி பெயர்த்துப் பகை வளர்ப்பது. சகோதரர்களாக, அண்டை வீட்டுக்காரர்களாக, சக ஊழியர்களாக, நண்பர்களாகப் பழகி வரும் நம்மிடையே தேவையற்ற கசப்புணர்வை வளர்ப்பதன் மூலம் இந்துத்துவம் நிலைநாட்டப்படும் என்று தவறாக நம்பும் பிறழ்-நம்பிக்கையாளர்களுள் ஒருவர்தான் ‘அமானுட’ நேசகுமார்.

நாகூர் ரூமி அவர்கள் இஸ்லாத்தை தமிழ் இணைய குழுமங்களில் அறிமுகப்படுத்தியதை சகிக்க முடியாமல், மதத் தீவிரவாதங்களை எதிர்க்கும் பொதுவான சமூக ஆர்வலராக அறிமுகப்படுத்திக் கொண்ட
ு, தன் எழுத்துத் திறமையால்(?) தன்னை முற்போக்கு இந்துத்துவவாதியாக பல்வேறு பதிவுகளிலும் நிரூபித்து நிலைதடுமாறிய பின்னூட்டங்களிலும் காண முடிந்தது.

உலகில் எத்தனையோ விசயங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படாமல் இருக்கும்போது, குர்ஆனை அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்த மக்களுக்கும், பிற்காலத்தில் அதனை தங்கள் வாழ்க்கைநெறியாக ஏற்றுக் கொண்டுள்ள மக்களுக்கும் இல்லாத அவநம்பிக்கையும் சந்தேகமும் ஒரு தனிநபருக்கு மட்டும் வந்தது ஏன்? சமூகப் பொறுப்பா? சமத்துவ ஈடேற்றமா? துவேஷமா? அல்லது தன் நம்பிக்கைக்கு சாவு மணி அடிக்கும் ஒரு கொள்கை என்ற தேவையற்ற காழ்ப்புணர்வா? ஆம்! காழ்ப்புணர்வு கலந்த அவநம்பிக்கைதான் இத்தகைய அமானுடக் கேள்விகளின் ஊற்றுக்கண்!!

இப்படி இன்னொருவரின் ஆன்மீக நம்பிக்கையை தனக்கு தோதான காரணங்களை தேடிப்பிடித்து ஒப்பிட்டு நோக்கும் அவநம்பிக்கையை ஒரு மனநலக் குறைபாடா என்றால் அதனை முழுவதுமாக மறுக்க இயலாது. அதே வேளை, இதனை மனநோய் என்றும் வரையறுக்க இயலாது.

இப்படிப்பட்ட மனநிலைக்கு உள்ளானவர், மற்றவரை எதிரியாகப் பார்ப்பது மட்டுமின்றி, விவாதக் களத்தில் இறங்கி விவாதத்தைத் திசைதிருப்பவும் செய்கிறார். இந்த அவநம்பிக்கை கேடு விளைவிக்கக்கூடியதா என்றால் அதற்குப் பதில் ஆம் என்பதாகவே இருப்பதால் அதனைப்பற்றிய ஒரு சிறு அலசலை இங்குப் பார்ப்போம்.

ஒருவருக்கு அவநம்பிக்கை தோன்றுவதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய சொந்த அனுபவங்களே. இவ்வாறு ஒருமுறை அவநம்பிக்கை என்னும் இந்நிலைக்கு ஆளானவர், தாம் அவநம்பிக்கை கொண்டுள்ள நபரின் அல்லது கொள்கையின் நல்ல விஷயங்கள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, எங்கே குறை காணலாம் என்கிற ஒரே நோக்கில் தான் செயல்படுவார்.

அதே வேளை இவர் அவநம்பிக்கை கொண்டுள்ளவர் செய்யும் நல்லெண்ண முயற்சிகள் கூட இவரின் அவநம்பிக்கையை அதிகரிக்குமே தவிர குறைப்பதில்லை.

எனவே அவநம்பிக்கை கொண்டுள்ளவர், தன் கருத்தைச் சரியென நிறுவ எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார்.

அவநம்பிக்கைக்கு அடிமையானவர் முதலில் தம் எதிராளியின் மீது கருத்து வேற்றுமையை வலிந்து உண்டாக்குவார். இதனால் சுமுக உறவு பாதிக்கப்படும். பின்னர் கருத்து வேற்றுமையைத் தகராறாக்க (conflict) முயல்வார். அதனால், இவரது அவநம்பிக்கைக்கு உள்ளானவர், ஒரு கட்டத்திற்கு மேல் எதிர் நடவடிக்கை (retaliation) எடுக்கும் அளவிற்குத் தள்ளப் படுவார்.

அவநம்பிக்கைகளைப் பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை:

(1) முன்னெச்சரிக்கை கலந்த அவநம்பிக்கை:

இதற்கு உதாரணமாக, சாலையைக் கடக்கும் ஒருவர் தூரத்தில் வரும் வாகனம் தன் மேல் மோதிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் விரைந்து சாலையைக் கடக்கும் மனநிலையை இதற்கு ஒப்பிடலாம்.
இது நம்மில் எல்லோருக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படும் பொதுவான மனப்பாங்கு. இதனால் தன் நலம் மேலோங்கி இருக்கும் அதே சமயம் பிறருக்கு தீங்கு செய்யும் நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.

(2) அதீத அவநம்பிக்கைகள்:

இந்த அவநம்பிக்கைகள் மிகச்சிறிய அளவிற்கே இருக்கும் போது நன்மை பயப்பனவாக உள்ளன. அதாவது இதன் மூலம் நாம் நமக்குச் சில எல்லைகளை வகுத்துக்கொண்டு பிறரைப் பாதிக்காவண்ணம் செயல்படுவது.

இதற்கு உதாரணமாக நெருப்புச்சுவர்களைக் (firewall) குறிப்பிடலாம். எப்போது இந்த எல்லைகளைக் கடந்து அவநம்பிக்கை செல்கிறதோ அதனால் தீமைகள் விளைய பெருமளவில் வாய்ப்புள்ளது. இது ஒரு நிலைக்கு மேல், பேரச்சமாக (paranoid) உருவெடுத்து அவநம்பிக்கை கொண்டுள்ளவருடைய மனநலனைப் பாதிக்கும்.

இந்நிலைக்கு ஆளானவர் தன் சக்தியை, தான் அவநம்பிக்கை கொண்ட

4 comments

  1. Very nice reply from Mr.Nalladiyar I wish to countinue the same for quit long time with the tamiloviam itself.

    Please send another article to same web and preach Islam and its misunderstanding to other people.

    May Allah will bless you here and hereafter.

  2. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்! இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

  3. travishunor84805170

    Make no mistake: Our mission at Tip Top Equities is to sift through the thousands of underperforming companies out there to find the golden needle in the haystack. A stock worthy of your investment. A stock with the potential for big returns. More often than not, the stocks we profile show a significant increase in stock price, sometimes in days, not months or years. We have come across what we feel is one of those rare deals that the public has not heard about yet. Read on to find out more.

    Nano Superlattice Technology Inc. (OTCBB Symbol: NSLT) is a nanotechnology company engaged in the coating of tools and components with nano structured PVD coatings for high-tech industries.

    Nano utilizes Arc Bond Sputtering and Superlattice technology to apply multi-layers of super-hard elemental coatings on an array of precision products to achieve a variety of physical properties. The application of the coating on industrial products is designed to change their physical properties, improving a product’s durability, resistance, chemical and physical characteristics as well as performance. Nano’s super-hard alloy coating materials were especially developed for printed circuit board drills in response to special market requirements

    The cutting of circuit boards causes severe wear on the cutting edge of drills and routers. With the increased miniaturization of personal electronics devices the dimensions of holes and cut aways are currently less than 0.2 mm. Nano coats tools with an ultra thin coating (only a few nanometers in thickness) of nitrides which can have a hardness of up to half that of diamond. This has proven to increase tool life by almost ten times. Nano plans to continue research and development into these techniques due to the vast application range for this type of nanotechnology

    We believe that Nano is a company on the move. With today�s steady move towards miniaturization we feel that Nano is a company with the right product at the right time. It is our opinion that an investment in Nano will produce great returns for our readers.

    Online Stock trading, in the New York Stock Exchange, and Toronto Stock Exchange, or any other stock market requires many hours of stock research. Always consult a stock broker for stock prices of penny stocks, and always seek proper free stock advice, as well as read a stock chart. This is not encouragement to buy stock, but merely a possible hot stock pick. Get a live stock market quote, before making a stock investment or participating in the stock market game or buying or selling a stock option.

  4. I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. My blog is just about my day to day life, as a park ranger. So please Click Here To Read My Blog

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *