Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » மரணித்தவர் பற்றி….

மரணித்தவர் பற்றி….

மரணித்தவர் பற்றி புகழ்ந்தும் இகழ்ந்தும் கூறப்படுதல்.


553.ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது” என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது?’ எனக் கூறினார்கள். உமர் (ரலி) ‘எது உறுதியாகிவிட்டது?’ எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், ‘இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்” எனக் கூறினார்கள்.

புஹாரி : 1367 அனஸ் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *