Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » நல்லறங்களுக்கு தானம் செய்தால்..

நல்லறங்களுக்கு தானம் செய்தால்..

580.வலிவும் உயர்வும் கொண்ட அல்லாஹ், ‘நீ (என் திருப்தியை அடைந்திட) செலவுசெய். உனக்காக நான் செலவு செய்வேன்” என்று சொன்னான். மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. செலவிடுவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் செலவிட்டது எதுவும் அவனுடைய கைவசமுள்ள (செல்வத்)தைக் குறைத்து விடவில்லை பார்த்தீர்களா! (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) நீரின் மேலிருந்தது. அவனுடைய கரத்திலேயே தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.

புஹாரி :4684 அபூஹுரைரா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *