Featured Posts
Home » நூல்கள் » [தொடர் 2] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

[தொடர் 2] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

Articleவழிகெட்ட பிரிவுகள் பற்றி

இஸ்லாத்தின் பெயரால் பல நூறு பிரிவுகள் தோன்றி இஸ்லாமிய மார்க்கத்தைச் சீரழித்திருக்கின்றன என்பதை அவற்றின் வரலாறுகளைப் பற்றிப்படிக்கின்ற போது அறிய முடிகின்றது.

அவற்றில் சில மார்க்கத்தில் புதிய, புதிய திக்ர்கள், தொழுகைகள், அவ்ராதுகள், வாளாயிப்கள் எனப்படும் மார்க்க அம்சங்களை தோற்றுவித்து மக்களை வழிகெடுத்திருக்கின்றன.

திஜானிய்யா, சூபிய்யா, கப்றுவணங்கிகள், ஷீஆ, பஹாயிய்யா, போரா, பாபிய்யா போன்ற பிரிவுகள் இதில் குறிப்பிட முடியும். இவற்றில் மற்றும் சில பிரிவுகள் சிந்தனை ரீதியாக மக்களைத் தூண்டி வழி கெடுத்திருக்கின்றன. ஹவாரிஜ், முஃதஸிலா, கத்ரிய்யா, ஜப்ரிய்யா, ஜஹ்மிய்யா போன்ற பிரிவுகளை இதில் குறிப்பிட்டுக்காட்ட முடியும்.

இந்தப் பிரிவுகளில் சிலது பலவீனமான, ஆதாரமற்ற, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டு தமது வழியை தேர்வு செய்திருக்கின்றன. மற்றும் சிலது குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மாற்றமான விளக்கங்களைக் கூறி மக்களை வழி கெடுத்திருக்கின்றன.

இவை பற்றிய தகவல்களை அந்தந்த காலத்து அறிஞர்கள் எதிர்த்துப் போர்க் கொடி தொடுத்துள்ளனர். இந்தப்பிரிவுகளின் வழிகேட்டின் வகைகள் பற்றிய விபரங்களை தமது நூல்களிலும் பதிவு செய்துள்ளனர். ஒரு சில அறிஞர் பெருமக்கள் தனித்தொகுப்பாக நூல்கள் எழுதியுள்ளனர்.

ஹதீஸ் கலை அறிஞர்களின் கூற்றுக்கள் அறிவிப்பாளர் பற்றிய தகவல்களைத் தரும் நூல்களிலும், ஹதீஸ்களுக்கு விளக்கமளிக்கின்ற அறிஞர்களின் நூல்களிலும் மடைதிறந்த வெள்ளம் போல் காணப்படுகின்றன.

இமாம்களான இப்னு கஸீர் அவர்களின் அல்பிதாயா வந்நிஹாயா, இமாம் ஸஹபி அவர்களின் ஸியர் அஃலாமின்னுபலா, இப்னு ஹஜர் அல்அஸ்கலானி அவர்களின் பத்ஹுல்பாரி, இமாம் நவவி அவர்களின் ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம் போன்ற நூல்களை இதற்கு ஆதாரமாகக் கூற முடியும். தவறான கொள்கைகளை இனம் காட்டிய நூற்றுக்கணக்கான நூல்களில் முக்கிய சில நூல்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் பார்த்துப் பயன் பெறலாம்.

இமாம் அப்துல் காதிர் அல்பக்தாதி (ரஹ்) அவர்கள் ‘அல்பிரக் பைனல் பிரக் என்ற நூலையும், ஷஹ்ருஸ்தானி என்பவர் ‘அல்மிலல் வன்னிஹல்’ என்ற தனியான நூலையும் ஆரம் காலத்தில் எழுதி இவ்வாறான பிரிவுகள் பற்றித் தெளிவாக அடையாளம் காட்டி இருக்கின்றனர்.

அதே போன்று மற்றும் இப்னு தைமிய்யா அவர்கள் ‘மின்ஹாஜுஸ்ஸுன்னா’ ‘ஷரஹ்அகீதத்தில் அஸ்ஃபஹானிய்யா’ ‘ரிஸாலா அத்ததம்முரிய்யா’ போன்ற பல தொகுப்புக்களை எழுதி இருக்கின்றார்கள். ‘இஜ்திமாவுல் ஜுயூஷில் இஸ்லாமிய்யா’ என்ற தலைப்பில் அவரது மாணவரான இப்னுல் கைய்யூம் அவர்கள் பெறுமதிமிக்கதோர் தொகுப்பை வெளியிட்டிருக்கின்றார்கள்.

இதுபோன்ற அறிஞர்களின் நூற்களையும், மற்றும் பல அறிஞர்களின் ஆய்வுகளில் இருந்து வழி தவறிய பிரிவுகளில் மிக முக்கியமானது என நாம் தெரிவு செய்தவற்றின் பெயர்களை மாத்திரம் இங்கு தரப்படுகின்றோம்.

அவற்றில் சில அழிந்து விட்டன, மற்றும் சில வேறு பிரிவுகளுடன் இணைந்து கொண்டன. மற்றும் சிலவற்றின் சிந்தனைப் பரிணாமம் தற்போதும் முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவிக்காணப்படுகின்றன. அவற்றையும் நாம் அடையாளம் காட்டி விபரித்துள்ளோம்.

வழி கெட்ட பிரிவுகள் தோன்றிய போதெல்லாம் நபித்தோழர்களினதும், தாபியீன்களினது நிலைப்பாடு பற்றியும், இமாம்களின் பங்களிப்புக்கள் பற்றியும், அவர்களின் நூல்கள் பற்றியும் நாம் பின் வரும் தொடர்களில் சுருக்கமாகவும், தெளிவாகவும் சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

2 comments

  1. a.alikum islaththin peyaral thonriyulla iyakkangalukku rommba saathttu
    alhamdulillah
    jazakalla hairan for rizwan madani and islamkalvi team

  2. unkal pani todarttum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *