Featured Posts
Home » நூல்கள் » [தொடர் 7] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

[தொடர் 7] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

Articleதனது அறிவுக்கு முக்கியத்துவம் வழங்குதல்
ஆதம் (அலை) அவர்களுக்கு சுஜுத் செய்யுமாறு அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட சைத்தான் சுஜுத் செய்ய மறுத்ததான். அவனிடம் அதன் காரணம் பற்றி கேட்கப்பட்டது, நீ என்னை நெருப்பினால் படைத்துள்ளாய், ஆதமை களிமண்ணால் படைத்துள்ளாய். களிமண்ணால் படைக்கப்பட்ட ஒருவனுக்கு நான் சுஜுத் செய்வதா என்ன! என அல்லாஹ்விடம் சைத்தான் கூறியதைக் கவனித்தால் தனதறிவிற்கு முக்கியத்துவம் அளித்து, நரகத்திற்கு இடத்தை அவனே தேடிக்கொண்டதைப் பார்க்கின்றோம்

பிடிவாதமும், பரம்பரை வாதமும்
பிடிவாதம் ஒரு பயங்கரவாதம் போன்ற நோயாகும். பிர்அவ்ன் மூஸா (அலை) அவர்களை நம்ப மறுத்தற்கும், காரூன் இஸ்லாத்தின் இணைய மறுத்ததற்கும், அபூஜஹ்ல் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதிருக்கவும், யூதர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதிருக்கவும், மக்காவாழ் காபிர்கள் இஸ்லாத்தில் இணைய மறுத்ததற்கும் இவைதானம் காரணமான இருந்தன என்பதை அல்குர்ஆனை படிக்கின்ற போது அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒருவரை கண்மூடித்தனமாக பின்பற்றல்
இது காஃபிர்களிடம் அடிப்படையில் காணப்பட்டதால்தான் நபிமார்களை அவர்கள் எதிர்த்தார்கள். இஸ்லாத்தில் இணைய மறுத்தார்கள். அல்லாஹ்வின் அழிவை சந்தித்தார்கள்.

இந்தப்பண்பு அவர்களிடம் காணப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல. ஆனால் இஸ்லாமியப் பெயரை வைத்துக் கொண்டு ஊர்வழமை, பரம்பரைப் பழக்கம், சாக்குப் போக்கு, மதிப்பை இழக்க நேரிடும் போன்ற அற்ப காணங்களைக் கூறிக் கொண்டு நேர்வழியை விட்டும் விலகி வாழும் ஒரு சாராரைப் பார்க்கின்றோம். குர்ஆன், ஹதீஸ் பேசும் ஒரு கூட்டத்திடம் கூட இந்த நிலை காணப்படுவதுதான் ஆச்சரியத்திலும், ஆச்சரியம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *