Featured Posts
Home » பொதுவானவை » ஹதீஸ் – ஒரு சிறு விளக்கம்!

ஹதீஸ் – ஒரு சிறு விளக்கம்!

‘திண்ணை’ 20-01-05ல் வெளியான கட்டுரையின் மறுபதிவு..

நபிகள் நாயகம் அவர்கள் அன்னை ஜைனப் அவர்களை மணந்து கொண்டபோது நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி குறிப்பிட்ட போது அபு அப்துல்லாஹ் இப்னு சாஅத் பதிவு செய்துள்ள நிகழ்வை ஆதாரமாக நேசகுமார் காட்டி இருந்தது உண்மைதான். அவர் ஆதாரம் தரவில்லை என்று சொன்னது என் தவறு.

.

பொதுவாக தான் காட்டும் ஆதாரங்களுக்கு உரிய இணைய சுட்டியையோ, குர்ஆன் வசனங்கள் / ஹதீஸ் அறிவிப்புகளின் எண்களையோ, ஆசிரியர், நூல், பக்க எண், பதிப்பாளர் போன்ற விபரங்களையோ தரும் நேசகுமார், இந்த விஷயத்தில் அபு அப்துல்லாஹ் இப்னு சாஅத் என்ற ஒரு பெயரை மட்டும்

குறிப்பிட்டிருந்தார். இந்த விபரங்களுடன் சில மார்க்க அறிஞர்களை அணுகி

விளக்கம் கேட்டபோது, அவர்கள் இந்த நூலாசிரியரை அறிந்திருந்தார்கள்.

இவர் ‘தபகாத்’ என்ற பெயரில் நூல் ஒன்று தொகுத்திருப்பதாகவும்

அறிந்திருந்தார்கள். ஆனால் இந்த நூல் மார்க்க அறிஞர்களிடையே

உபயோகப்படுத்தப்படுவதில்லை என்பதால் இந்த நூல் யாரிடமும் கைவசம் இல்லை. அதன் மூலத்தை பார்க்காமல் அவர்களால் கருத்து எதுவும் தெரிவிக்க இயலவில்லை. நேசகுமாருக்கு எப்படியோ கிடைத்திருக்கிறதே என்ற எண்ணத்தில் மனம் தளராமல் இணையத்தில் தேடியபோது… கிடைத்தே

விட்டது!. இரண்டு அல்லது மூன்று இணையத்தளங்களில் (அனைத்தும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார இணையத்தளங்கள்!) இந்த நூலை குறிப்பிட்டு, அதில் முஹம்மது இப்னு யஹ்யா இப்னு ஹய்யான் என்பவர் அறிவித்ததாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகின்றார்கள். அதன் ஆங்கில மூலத்தை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். நேசகுமார் இந்த சம்பவத்தை சித்தரித்த விதம்

கிட்டத்தட்ட இந்த ஆங்கில மூலத்துடன் ஒத்துப்போவதால், அவர் இந்த

இணையத்தளங்களில் கூறப்படும் கருத்துக்களையே தனது ஆதாரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.

.

இச்சம்பவம் பலவிதமாய் புத்தகங்களில் காணப்படுகிறது என்று குறிப்பிடும்

நேசகுமார், இதன் நுணுக்கமான விளக்கங்களுக்கு செல்லாமல் அதன்

சாராம்சத்தையே பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

நேசகுமாரின் பார்வையில் இதன் சாராம்சம்: “ஜைனப்பை அவரது கணவன்

வெளியே சென்றிருக்கும்போது சரியானபடி ஆடை அணியாத நிலையில் பார்த்த நபிகள் நாயகத்தின் இதயம் சஞ்சலமுற்றது. இதையறிந்த அவரது (வளர்ப்பு) மகன், தாமே முன்வந்து மனைவியை விட்டுக்கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார். ஹதீஸ்கள் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே இச்சம்பவம் காணக்கிடைக்கிறது” என்பதே.

நேசகுமார் குறிப்பிடும் அந்த நிகழ்வு அல்லது பதிவு ஒரு கட்டுக்கதையே என்பது அதை கொஞ்சம் கவனித்து படித்தாலே புரியும். அதற்கு முன் ‘ஹதீஸ்கள் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே இச்சம்பவம் காணக்கிடைக்கிறது ‘ என்று நேசகுமார் சொல்வதால் ‘ஹதீஸ் என்றால் என்ன?’ என்பதைப்பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வது இங்கு பயனளிக்கும்.

.

1) வேறு எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு சிறப்பாக, நபிகள் நாயகம்

அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் அனைத்தும், (அவர்களின் அந்தரங்க

வாழ்க்கை உட்பட) ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள்.

.

2) எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக்கூடாது? என்ற

அடிப்படையில் ஹதீஸ்கள் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது.

a. ஸஹீஹ் (ஆதாரபூர்வமானவை)

b. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)

c. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)

d. ளயீப் (பலவீனமானது)

இவற்றில் ஸஹீஹ் மட்டுமே ஆதாரப்பூர்வமான, ஏற்றுக்கொள்ளத்தக்க,

நடைமுறைப்படுத்த வேண்டிய ஹதீஸ்களாகும்.

.

3) ஒரு ஹதீஸ் ‘ஸஹீஹ்’ (ஆதாரபூர்வமானது) என்று ஒப்புக்கொள்ளப்படுவதற்கு சில தகுதிகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது, அறிவிப்பளரின் வரிசை. ஹிஜ்ரி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் ஹதீஸ்களை நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது, நபிகள் நாயகம் தொடர்பான ஒரு செய்தியை ஒருவர் அறிவித்தால், தனக்கு அந்தச் செய்தியை கூறியது யார்? அவர் யாரிடம் கேட்டார்? அவர் இச்செய்தியை யாரிடம் கேட்டார்? என்று சங்கிலித்தொடராக கூறிக்கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். அதோடு,

.

a. இந்த சங்கிலித்தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும்

நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.

b. அனைவரும் உறுதியான நினைவாற்றல் உடைவயர்களாக இருக்க வேண்டும்.

c. அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

d. அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ

அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வேண்டும்.

இந்தத்தன்மைகள் ஒருங்கே அமையப்பெற்றிருந்தால் மட்டுமே அதை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று ஒப்புக்கொள்ளப்படும். அவ்வாறல்லாமல் அரபியில் எழுதப்பட்ட ஒரு நூலில் இடம் பெற்றிருப்பதால் மட்டுமே ஒரு சம்பவம் ஆதாரப்பூர்வமான ஹதீஸாக ஆக முடியாது.

ஹதீஸ் தொகுப்புகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, கீழ்க்கண்ட

இணையத்தளங்களை பார்வையிடலாம்.

http://www.tamililquran.com/hadeeth.asp?file=hadith_art_1.html

இஸ்லாமிய எதிர்ப்புப்பிரச்சார இணையத்தளங்களிலும், நேசகுமாராலும்

சுட்டிக்காட்டப்படும் அந்த ‘நிகழ்விற்கு’ மேலே கூறப்பட்ட ஒரு ஸஹீஹான

ஹதீஸிற்குறிய எந்த தகுதியும் இல்லை என்பது தௌ¤வாக தெரிகிறது.

.

1. இது ஒரு சம்பவத்தை பற்றி விவரிப்பதற்கு மாறாக, ஒரு கதையையே

உள்ளடக்கி இருக்கிறது. ஜைதை தேடி நபிகளார் அவர் வீட்டிற்கு செல்வதில்

தொடங்கி, ஜைது தன் மனைவியை விவாகரத்து செய்தல், ஜைனப் இத்தா

இருத்தல், நபிகளாருடன் அவரது திருமணம் தொடர்பாக இறைக்கட்டளை வருதல், நபிகளாரின் அடிமைப்பெண் இச்செய்தியை ஜைனப்பிடம் தெரிவித்து பரிசு பெறுதல் என பல சம்பவங்களை உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு இருக்கிறது.

.

2. முஹம்மது இப்னு யஹ்யா இப்னு ஹய்யான் என்பவர் அறிவித்ததாக இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாளர், சங்கிலித்தொடரில் முதல் அறிவிப்பாளரா அல்லது கடைசி அறிவிப்பாளரா என்ற விபரம் தெரியவில்லை. இவர் கடைசி அறிவிப்பாளர் என்றால், முதல்

அறிவிப்பாளர் யார்? இவர்தான் முதல் அறிவிப்பாளர் என்றாலும் அது

சாத்தியமில்லை. ஏனெனில் இந்த அறிவிப்பில் பல சம்பவங்கள் கலந்து

இருப்பதால், ஒருவரே இந்த சம்பவங்கள் அனைத்திலும் நேரடியாக பங்கு

பெற்றிருக்க முடியாது.

.

3. நபிகளாரை வீட்டுடையில் இருந்த ஜைனப் அவர்கள் வரவேற்றதாக

சொல்லப்படும் சம்பவத்தில் பங்கு பெற்றவர்கள், நபிகளாரும், ஜைனப் அவர்கள் மட்டுமே. இது ஒரு ஹதீஸாக அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த இருவரில் ஒருவர்தான் முதல் அறிவிப்பாளராக (றாவீ என்று அரபியில் சொல்வார்கள்) இருந்திருக்க வேண்டும்.

.

4. ஜைனப் அவர்கள் அவசரமாக திரைச்சீலையை விலக்கி நபிகளாரை

வரவேற்றபோது, நபிகளார் அதை விரும்பினார்கள் என்று இங்கு கூறப்படுகிறது. (..so she leapt in a hurry, and the Messenger of God

liked her when she did that) இது நபிகளாரின் மனதிற்குள் தோன்றிய எண்ணமாக இருப்பதால், நபிகளார் மட்டுமே இதை அறிவித்திருக்க முடியும். மேலே கூறப்பட்ட அறிவிப்பாளரான இப்னு ஹய்யான் இதை அறிய வேறு

வழியே இல்லை.

.

இந்த நிகழ்வு கட்டுக்கதையைத்தவிர வேறில்லை என்பதற்கு, மேலும் பல

ஆதாரங்களை கூறிக்கொண்டேபோகலாம். சகோதரர் அபூமுஹையின்

வலைப்பதிவிலும் இத்தகைய ஆதாரங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

மௌலானா மௌதூதி அவர்களின் குர்ஆன் தஃப்ஸீரிலும், ‘ரஹீக்’ என்னும்

நபிகளாரின் வாழ்க்கை வரலாற்று நூலிலும் இந்தச் சம்பவம் ஒரு கட்டுக்கதை என்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு மேலும், இந்த நிகழ்வு ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸ் என்பதற்கு நண்பர் நேசகுமார் வசம் ஆதாரங்கள் ஏதுமிருப்பின் தாரளமாக அவற்றை அவர் முன் வைக்கலாம். இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார இணையத் தளங்களிலிருந்து அல்லாமல், அவர் நேரடியாக ‘தபகாத்’ என்னும் நூலிலிருந்தோ அதன் மொழிபெயர்ப்புகளிலிருந்தோ இந்த சம்பவத்தை எடுத்திருந்தாரென்றால், அந்த குறிப்பிட்ட பக்கங்களை தயவு செய்து scan செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். அல்லது வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூற்களிலோ, தஃப்ஸீர்களிலோ (குர்ஆன் விளக்கஉரை) இச்சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த ஆதாரங்களை தரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

========================

இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார இணையத் தளங்களில் காணப்படும் text

அப்படியே:

Muhammad Ibn Yahya Ibn Hayyan narrated, “The Messenger

of God came to Zaid Ibn Haritha’s house seeking him.

Perhaps the Messenger of God missed him at that time,

that is why he said, ‘Where is Zaid?’ He went to his

house seeking him and, when he did not find him,

Zainab Bint Jahsh stood up to [meet] him in a house

dress, but the Messenger of God turned away from her.

She said, ‘He is not here, Messenger of God, so please

come in; my father and mother are your ransom.’ The

Messenger of God refused to come in. Zainab had

hurried to dress herself when she heard that the

Messenger of God was at her door, so she leapt in a

hurry, and the Messenger of God liked her when she did

that. He went away muttering something that was hardly

understandable but for this sentence: ‘Praise be to

God who disposes the hearts.’ When Zaid came back

home, she told him that the Messenger of God came.

Zaid asked, ‘You asked him to come in, didn’t you?’

She replied, ‘I bade him to, but he refused.’ He said,

‘Have you heard [him say] anything?’ She answered,

‘When he had turned away, I heard him say something

that I could hardly understand. I heard him say,

“Praise be to God who disposes the hearts.” ‘ Zaid

went out to the Messenger of God and said, ‘O

Messenger of God, I learned that you came to my house.

Did you come in? O Messenger of God, my father and

mother are your ransom. Perhaps you liked Zainab. I

can leave her.’ The Messenger of God said, ‘Hold on to

your wife.’ Zaid said, ‘O Messenger of God, I will

leave her.’ The Messenger of God said, ‘Keep your

wife.’ So when Zaid left her, she finished her legal

period after she had isolated herself from Zaid. While

the Messenger of God was sitting and talking with

`Aஒisha, he was taken in a trance, and when it lifted,

he smiled and said, ‘Who will go to Zainab to tell her

that God wedded her to me from heaven?’ The Messenger

of God recited, ‘Thus you told someone whom God had

favoured and whom you yourself have favoured: “Hold on

to your wife.” ‘ `Aஒisha said, ‘I heard much about her

beauty and, moreover, about how God wedded her from

heaven, and I said, “For sure she will boast over this

with us.” ‘ Salama, the slave of the Messenger of God,

hurried to tell her about that. She gave her some

silver jewellery that she was wearing.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *