Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் » இஸ்லாமிய ஒளியில் எஸ்.பி.பட்டிணம் பள்ளி

இஸ்லாமிய ஒளியில் எஸ்.பி.பட்டிணம் பள்ளி

Articleஅல்லாஹ்வின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எஸ்.பி.பட்டிணம் மெயின் ரோட்டிலுள்ள பள்ளி வாசலை யார் நிர்வகிப்பது என்பதில், ஊர் ஜமாத்தினருக்கும் த.த.ஜவினருக்கும் சச்சரவு நடந்து கொண்டிருப்பது நாமெல்லாம் அறிந்தததே! இந்தப் பிரச்சனையை இஸ்லாமிய ஒளியில் நீதியின் வழி நின்று தீர்வை தேடுவோமாக!

த.த.ஜ. தரப்பு கூறுவது என்ன?
இடத்தின் உரிமையாளர் எங்கள் இயக்கத்துக்கு எழுதிக் கொடுத்துவிட்டதால் எங்களுக்கு உரியதே என்கிறார்கள்!

அவர்கள் வாதம் சரியே! அவர்கள் இயக்கத்திடம் பள்ளிவாசலை ஒப்படைப்பதே நீதீ! (இதற்கு தடையாக வேறு காரணம் இருந்தால் தவிர)

இந்த நீதிப்படி மேலாப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலை த.த.ஜ.காரர்கள் ஜாக் இயக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஏனென்றால் அந்த பள்ளிவாசல் இடம் ஜாக் இயக்கத்தின் பெயரில்தான் வாங்கப்பட்டு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

ஜாக் கிற்கும் த.த..ஜ ஐயும் அந்தப்பள்ளிவாசலுக்காக மோதிக்கொண்டபோது, அல்ஜன்னத் மாத இதழின் செப்டம்பர் 2006 வெளியீட்டில், அந்தப் பள்ளியின் பத்திர நகல் வெளியிடப்பட்டது. அதில் அந்தப் பள்ளி ஜாக் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததை மக்கள் படித்தார்கள்.

மேலும் ஜாக் இயக்கத்துக்காக அந்த இடத்தை வாங்கிய அந்த அமைப்பின் நிர்வாகிகள் சாட்சிகளாக இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இத்தகைய தெளிவான ஆதாரங்களுக்குப் பின்பும் கூட உரியவர்களிடம் பள்ளியை ஒப்படைக்காமல், பலவந்தத்தின் மூலம் தங்களிடமே வைத்திருக்கிறார்கள் த.த.ஜ.காரர்கள்.

ஆகவே எஸ்.பி. பட்டிணத்தில் தாங்கள் பேசும் நீதீயை மேலாப்பாளையத்தில் முதலில் செயல்படுத்த வேண்டும் என்பதே குர்ஆன், ஹதீஸ் வழி நடக்கும் முஸ்லிம்கள் த.த.ஜ வுக்கு வைக்கும் வேண்டுகோள்! அப்படிச் செய்யாவிட்டால் ‘வேதம் ஓதும் சாத்தான்கள்‘ என்பதற்கு பொருத்தமான உதாரணமாக நீடிப்பீர்கள் என்பதை சொல்லி வைக்கிறோம்.

அதே போல் ஜாக் பெயரில் பதிவு செய்யப்பட்டு, ஜாக் இயக்கத்தால் கட்டப்பட்ட கடையநல்லுர் மஸ்ஜிதுல் முபாரக் தவ்ஹீத் பள்ளிவாசலையும் திருச்சி சிங்காரத் தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலையும் திரும்ப அந்த இயக்கத்தினிரிடமும் த.த.ஜ காரர்கள் ஒப்படைக்க வேண்டும். முறையற்ற வழியில் அந்தப் பள்ளிவாசலையும் அபகரித்ததற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் எஸ்.பி. பட்டிணத்தில் நீங்கள் உரிமை கேட்க கொஞ்சமாவது நியாயம் இருக்கும்.

மேற்கண்ட பள்ளிவாசலையும் பற்றிய விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள, அவற்றுடன் நேரடியாக தொடர்புள்ளவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.

மேலாப்பாளையும் – சிபகத்துல்லாஹ் செல் – 9790307894
கடையநல்லுர் – சாகுல் ஹமீது செல் – 9842186892
திருச்சிசிங்காரத்தோப்பு முஹம்மது 9047783649

நோக்கம் என்ன?

பள்ளிவாசல்களை கைப்பற்றுவதற்கும் புதிது புதிதாக ஆரம்பிப்பதற்கும் தவ்ஹீத் நோக்கமா? அல்லது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதா? என்று பார்த்தால் தங்களின் த.த.ஜ இயக்க ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கமும் பிரிவினை போக்குமே தென்படுகிறது.

அதனால்தான், தவ்ஹீது பள்ளிகள் இருக்கும்போது அவற்றுக்கு அருகிலேயே சில ஊர்களிள் வீம்பாக வாடகைக்கு எடுத்த இடத்தில் பள்ளிவாசல் நடத்துகிறார்கள் இந்த த.த.ஜ வினர்.
இப்படி நாம் அறிந்த ஊர்களில் சில: நாகூர், கோட்டுர், கீழக்கரை

இதுபற்றி உறுதிப்படுத்திக் கொள்ள
நாகூர்- காதர். செல்- 9443572374
கோட்டுர்-ஹாக்கிம் செல்-9445381837
கீழக்கரை சேக் அலி செல்-9994296263

சயீது ஹாஜியாரும் துணைவியாரும்

சர்ச்சையாக்கப்பட்டுள்ள எஸ்.பி. பட்டிணம் பள்ளிவாசல் இடத்தின் உரிமையாளர் ஹாஜியானி திருமதி. சயீது ஹாஜியார் அவர்கள் 11.8.2009 இரவு இமயம் டி.வி. பேட்டியில் எதிர் தரப்பினரை கடுமையாக விமர்சித்து பேசினார்கள். தனது தவறை மறைத்து விட்டு பிறர் மீது கோபத்தை கொட்டினார்கள்.

1994-ம் வருடம் அந்தப் பள்ளிவாசல் திறப்பு விழாவில் பலநூறு மக்கள் சாட்சியாக பள்ளிவாசலை வக்ஃப் செய்வதாக அறிவித்தும் ஊர் ஜமாத்திடம் ஒப்படைத்ததும் சயீது ஹாஜியார்தான்.

இந்த வருடம் (2009) ஜனவரி மாத்தில், பள்ளியின் பொருளாதாரத்திற்கும் நான் பொறுப்பு அதன் மற்ற காரியத்துக்கு ஊர் ஜமாஅத் பொறுப்பு என்று எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்ததும் சயீது ஹாஜியார்தான்.

அவர் வக்ஃப் செய்தபோதும், எழுதிக் கொடுத்த போதும் பதினான்கு வருடமாக மௌன சாட்சியாக இருந்து விட்டு இப்போது திடீரென நான் தான் இடத்தின் உரிமையாளர் என் இஷ்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன் என்று கிளம்புவது உங்கள் தவறு.

இது ஊரையும் சமுதாயத்தையம் ஏமாற்றுகிற செயல் அனைவரையும் மடையர்களாக்குகிற பாதகச் செயல் உங்களின் இந்தத் தவறுக்கு நிதானத்தோடு பரிகாரம் காணுங்கள். பின்பு உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள் என்பதே உங்கள் மீது பாசமும் மரியாதையும் வைத்துள்ள எங்களின் வேண்டுகோள்!

உண்மைத் தவ்ஹீத்வாதியின் நோக்கம் பள்ளிவாசலில் நபி வழிக்குமாற்றமான செயல்கள் நடக்கக்கூடாது என்பது தான். தங்களின் உரிமையைப் பயன்படுத்தி அனாச்சாரங்கள் நடைபெறக் கூடாதென வலியுறுத்தியிருந்தால் அது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும். மக்களின் ஒற்றுமையுடன் நபிவழி பள்ளியாக அது செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கும. பள்ளி பூட்டப்பட்டிருக்காது. இந்த நல்ல நிலையை ஏற்படுத்த இப்போதும் காலம் கடந்து விடவில்லை .

த.த.ஜவினருக்கு

சில தனிநபர்களின் தவறான வழிகாட்டலுக்கு கட்டுப்பட்டு உங்களின் மறுமை வாழ்கைக்கு நஷ்டத்தை தேடிக் கொள்ள வேண்டாம்

கடந்த 31.7.2009 அன்று எஸ்.பி பட்டிணத்தில் ஏற்பட்ட மோதலுக்குப் பின் வந்த உணர்வுப் பத்திரிக்கையில் வெளியான புரட்டல் செய்தியை படித்த அந்த ஊரைச் சேர்ந்த த.த.ஜ தீவிர தொண்டர்கள் சிலர் மனம் நொந்து இயக்கத்தை விட்டே வெளியேறி விட்டார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்! இது பற்றியும் இப்பள்ளியின் பதினான்கு வருட சரித்திரமும் அறிய தொடர்பு கொள்ளுங்கள். யாகூப் ஆலிம். செல்: 9442750475

அனைத்து தரப்பினரிடமும் செவிகொடுத்து கேளுங்கள்! சிந்தித்து நிதானத்துடன் செயல்படுங்கள் இல்லாவிட்டால் கீழ்வரும் அல்லாஹ்வின் பழிப்புரைக்கு ஆளாவீர்கள் என்று எச்சரிக்கிறோம் .

அல்லாஹ் கூறுகிறான்

அல்லாஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினம் (உண்மையை)விளங்காத செவிடர்களும் ஊமைகளுமாவர் (திருக்குர்ஆன் 8:22)

சமுதாயத்தின் நலன் விரும்பி இதனை தெரிவிக்கிறோம்.

-அப்துர் ரஹ்மான் மன்பஈ
அஹ்லுஸ்ஸீன்னா இஸ்லாமிய ஆயவு மையம்
தொண்டி. செல் : 98408 28225

11 comments

  1. I have question pls anyone answer , this site belongs to which organization. I saw many saudi tamil bayan’s are updating.

  2. நிர்வாகி

    This site is not belong to any organization.

    Also read அறிமுகம்

  3. this site belongs to anti tntj group of company.there main job is to find how to attack pj and tntj.for that purpose this site will do what ever.there will shack hand with syaitan also if to attack pj &tntj.if there can compromi with syaitan what about others that is nothing for them.good job tq

  4. நிர்வாகி

    பீஜேவினை (தக்லீத்) கண்மூடி பின்பற்றுகின்றவர்களுக்கும் “அவரை அல்லாஹ்விற்காக வெறுப்பது” என்ற காரணமில்லாமல் எதிர்ப்பவர்களுக்கும் இறைவன் நேர்வழி கொடுக்கட்டும்.

  5. Dear Admin
    Hope you will put my Comments – Jazakallah
    I am Regular Reader of this Web site. And it is very useful But it is very sad and still I couldn’t realize why you Criticize or attack ONLY PJ and TNTJ. If there are any problem you have rights to point out and correct the people but not in the public.. You preach Islam and you do not practice it… you have to be an example for us beside fighting … and also no one follow PJ as he is not a messenger of Allah but we cant forget that we ware put into the right path by (The Quran and Sunnah) TNTJ. Those days we ware in Jemathe e islami and Thableq Jemath..we ware blinders and we believed their incorrect Leaders. After that only we do every things which Quran and Hadees says… this changes Because of PJ and TNTJ and some other thawheed Brothers. May Allah forgive them and grant them Gennathul Perdouse.
    PJ or TNTJ is not getting “Wahee” (Massage from Allah) when they Preach, even Islam Kalvi Scholars too. So human do mistake and we are ordinary human not a Prophet. Hope you understand.
    And for your information there are many people who are doing innovation in Islam such as Jemath e Islami and Ihwanul Muslim. So why you are not looking into them. They are telling sunnah is Petty Issues and innovating and Accept “harams” (Prohibited things) such as Interest, Zina, Music, alcohol and (Prophet) birthday and Etc etc… and say we have to go with the world otherwise Islam will be out dated… and if I question to those people (believers) they says that is not for us that Fatwa’s for Europe and western???? (Allah Promise) and they are very close to Siya’s philosophy
    A Muslim should follow one God one Prophet, One Quran, one Qibla… Everything single…in the world wherever it is Islam is one….it is fully completed and no need any innovations and it is never out dated..and we have to worry about our young generation because they are misguided by those groups. And unity is important but we need Islamic unity those who believe and practice Quran and Sunnah….
    We have to respect the Scholars but when it’s come to Prophet or Scholar we have to give weight to our beloved Muhammad SA (PBUH). Now we are going away from Sunnah and say Dr Zakir Naik say like this Dr Deedat says like this and PJ says like this and Islam Kalvi Say like this……. it is not wrong but we have to see whether those massages conflict from Authentic Sunnah.. if it so through away and hold the authentic Hadeed..
    Always we have to LOVE our Last Messenger Muhammad (PBUH)
    Therefore Please forget about PJ and TNTJ and look into our young generation those who misguided by the above fellows.
    Wassalam
    Nawshad

  6. Brother Nawshad,

    Nobody hates PJ and TNTJ. The way they preach |Islam is commendable.

    PJ’s known mentality is that whenever he says something, even if we find the mistakes, he always justifies that his opinion is absolutely correct with his eloquent speech and unwanted arguments. It is very deplorable.

    He thinks that he is the master of Scholars and he wants to show that his opinion should be acceptable by Muslims.

    This mentality definitely belongs to Shaitan.

    When he corrects himself and discuss with other Tawheed Ulamas amicably with Taqwa, Al-hamdulillah there won’t be any quarrel from any Ulamas or Muslims.

  7. குறிப்பு:
    இக்கட்டுரைக்கு கீழே, பீஜே ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக கோபப்பட்டு வெளியிட நாகரீகமற்ற கமெண்ட்களை பதிந்திருந்தார்கள். அதனால் கீழ்கண்ட மறுமொழியினை எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே பார்வையாளர்கள் கீழ்கண்ட மறுமொழியினை படித்துக்கொண்டு நேரத்தினை வீணடிக்காமல், பயனுள்ள வழியில் இத்தளத்தில் நேரத்தை செலவிடவும்.

    சகோ. நவ்சாத், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    மவ்லவி ஜைனுல் ஆபீதின், அவரின் சொந்த விஷயங்களில் தவறு செய்தால் தனியாக உட்கார்ந்து பேசலாம். ஆனால் அவரின் தவறுகள் மார்க்க விஷயத்தில் உள்ளவை. அவருடைய விஷக்கருத்துகள் பல மக்களை சென்றடைந்துள்ளன. உதா. ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுத்தால் போதுமானது என்கின்ற விஷயம்.

    தவறு செய்கின்றவர்கள் பிறராக இருந்தால் மட்டும் சுட்டிக்காட்டுவது நபிவழி அல்ல. தனது சொந்த சகோதரன் மற்றும் நாம் பாசவைத்துள்ளவர் தவறு செய்யும்போதுதான் நாம் அதிகமதிகம் கோபப்படவேண்டும். அதனை சுட்டிக்காட்ட வேண்டும்.

    மவ்லவி ஜைனுல்ஆபிதீனினால் பொதுவில் பேசப்பட்ட தவறான விஷயங்கள், பொதுவில் பதில் கொடுக்கப்படுகின்றன.

    இதே தளத்தில் தப்லீக் ஜமாத்தினருக்கு எதிராகவும், கப்ர் வணக்கத்தை ஆதரிக்கக்கூடியவர்களுக்கு எதிராகவும் கட்டுரைகள் புத்தகங்கள் வந்துள்ளன. ஆனால் ஜைனுல்ஆபிதீன் மற்றும் ததஜ எதிரான விஷயங்கள் மட்டும் வருகின்றன என்கின்ற உங்களது தவறான வெளிப்பாடு, நீங்கள் ஜைனுல்ஆபிதீனின் மேல் அளவுக்கதிகமான பாசம் இருப்பதால் இருக்கலாம். “பாசம் அளவுக்கு மீறினால் பாசம் வைத்தவர்கள் செய்கின்ற தவறுகள் பெரிய தவறாக கண்ணுக்கு புலப்படாது” என்பது சான்றோர் மொழி. எனவே உங்களின் நிலையை மறுபரிசீலனை செய்யுங்கள். பீஜே மற்றும் ததஜ தாக்கப்படும்போது மட்டும் அவ்வப்போது வெகுண்டெழும் நீங்கள் பழத்த சிந்தனைவாதிபோல் காட்டிக்கொள்வதை விட்டுவிட்டு, பல்வேறு மார்க்க அறிஞர்கள் பங்குபெறும் சபைகளிலும் பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களின் புத்தகங்களிலும் நேரங்களை செலவிடுங்கள். உங்களின் எழுத்து வெளிப்பாட்டினை வைத்து பீஜே மற்றும் ததஜவினை சுற்றியே உங்களின் அதிக கவனம் இருப்பதாக நான் புரிந்துக்கொள்கிறேன். இறைவனே மிக்க அறிந்தவன்.

    எனக்கு ஜைனுல்ஆபிதீன் மேல் எந்த பகையும் இல்லை. ஒரு காலத்தில் குர்ஆன் சுன்னாவை சொன்னவர் என்ற வகையில் பாசம் இருந்தது. நிகழ்காலங்களில் குர்ஆன் சுன்னாவை உடைக்கும் நபர் என்பதால் எனக்கு வெறுப்பு உள்ளது.

    இதனை அல்லாஹ்வுக்காக நேசிப்பதும் அல்லாஹ்விற்காக வெறுப்பதும் மூஃமின்களின் பண்பாகும்.

    ஜைனுல்ஆபிதீன் தவறு செய்யக்கூடியவரே என்று நீங்கள் நம்பினாலும் அவரை கண்மூடி பின்பற்றுகின்றவர்கள் நம்புவதில்லை. இதனை அவர்கள் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்றால், “ஜைனுல்ஆபிதீன் தவறு செய்யும் மனிதர்தான். ஆனால் தற்போது சரியாகத்தான சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்று நினைப்பில் அவர்களின் வெளிப்பாடுகள் இருக்கின்றன.

    அவரின் தவறுகளை அவராக ஒத்துக்கொண்டால் தவிர அவரைப் பின்பற்றுகின்றவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. மத்ஹபுகளை பின்பற்றுகின்றவர்கள் எவ்வாறு சரிகாண்பார்களோ அவ்வகையிலேயே பீஜே மத்ஹபினை பின்பற்றுகின்றவர்களும் சரிகாண்கிறார்கள். மத்ஹபுவாதிகள் கோபப்படுவது போன்று அவரது ரசிகர்களும் கோபப்படுகிறார்கள்.

    உதாரணத்திற்கு, ஒருவர் தனது கமெண்டில்,
    இத்தளத்தை யாரும் பார்க்கக்கூடாது என்று அவர் தனது அனைத்து தொழுகையிலும் பிரார்த்தனை செய்யப்போகிறாராம். நான் சரியான முஸ்லிமாக இருந்தால், இத்தளத்தின் வெப்மாஸ்டர் வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலையினை தேடிக்கொள்ள வேண்டுமாம்.

    (கூலிக்கு வேலை செய்கின்றவன் என்று என்னை நினைத்துக்கொண்டார் போலும்).

    ஏன் இந்த கோபம்? தூய சஹாபாக்களின் கண்ணியம் ஜைனுல்ஆபிதீன் வார்த்தைகளால் களங்கப்பட்டபோது வராத கோபம், ஜைனுல்ஆபீதீனுக்கு எதிராக எழுதப்பட்டபோது பேசப்பட்டபோது வந்ததென்றால் இதற்கு என்ன அர்த்தம்?

    சகோ. நவ்சாத்
    முன்பு ஒரு முறை உங்களின் கருத்தை எனக்கு அனுப்பிவிட்டு ததஜ தளநிர்வாகிக்கு மின்னஞ்சலில் காப்பி அனுப்பியிருந்தீர்கள். எனவே எனக்கு பதில் எழுதிக்கொண்டிருக்காமல், ஜைனுல்ஆபீதீன் தள நிர்வாகிக்கு மட்டும் எழுதி அனுப்புங்கள். இனி இத்தளத்தில் உங்களின் கருத்துகளை அனுமதித்துவிட்டு, அதன் வெளிப்பாடாக ததஜ கொள்கை குன்றுகள் என்னைப் பார்த்து எழுத்தால் குதறுவதற்கு வாய்ப்பளிக்க எனக்கு விருப்பமி்ல்லை.

    இறைவன் எனக்கும் உங்களுக்கும் நேர்வழி காட்டுவானாக!.

    உங்களுக்கு நேரம் கிடைத்தால் இதனையும் பாருங்கள்:

    1) இவரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

    2) கண்ணியமிக்க நபித்தோழர்கள் பற்றி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் தரக்குறைவான விமர்சனங்கள்

    3) தவ்ஹீத் உலமாக்கள், ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரை (TNTJ)’ விமர்சிப்பது ஏன்?

    4) கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் (பள்ளியின்) உண்மைச் சம்பவங்கள்

    5) தமிழக அழைப்பாளர்கள் ஆற்ற வேண்டிய பணிகள்

  8. Assalaamu alaikkum.

    சிலர் அஹ்மத் பின் ஹன்பல் (rahihamullah) அவர்களிடம் , (வழிகேடர்களை ) வெழிப்படையாக அடையாளம் காட்டுவதற்கு தயக்கமாக உள்ளதாக கூறினார்கள். அதற்கவர் ,” நாம் மௌனமாக இருந்தால், சாதாரண மக்கள் எப்படி, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை அடையாளம் காண்பார்கள் ?” என பதில் அளித்தார் . ஒருவர் ,தொழுது கொண்டு, நோன்பை நோர்து, அல்லாஹ்வை வணங்குவதற்காகவே பள்ளியில் ஒதிங்கி இருக்கிறார். இன்னுமொருவர், வழிகேட்டின் அழைப்பாளர்களுக்கு எதிராக பேசுகிறார். யார் அவருக்கு அதிகம் விருப்பமுடையவர் என்று ,அஹ்மத் பின் ஹன்பல் (rahimahullah) அவர்களிடம் கேட்கப்பட்டது.
    அதற்கவர், ” ஒருவர் தொழுது கொண்டும், நோன்பை நோர்து கொண்டும், பள்ளியில் தனித்திருந்து இபாதத் செய்வதும், அது அவரின் சொந்த நன்மைக்கு மாத்திரமேயாகும். ஆனால் அவர் வழிக்கேடர்களுக்கு எதிராக பேசுவது ,முஸ்லிம்களின் பொது நன்மைக்கேயாகும் .அதனால் இதுவே சிறந்த செயலாகும். ” என்று பதில் அளித்தார்.

    Source : http://www.troid.org/index.php?option=com_content&task=view&id=271&Itemid=324

    The Position of Salafiyyah Concerning Refutation and Criticism http://www.troid.org/media/pdf/refutationandcriticism.pdf

  9. s.p.pattinam pallivasalai kandipaga s.p.pattinam jamatharidam oppadikka vendum. intha palli mudrilum s.p.pattinam jamatharke uriyathu . ithai yarum marukka mudiyathu .

  10. Assalaamu alaikkum moulana………!

    “இஸ்லாமிய ஒளியில் எஸ்.பி.பட்டிணம் பள்ளி”

    Masha Allah ketpadarku mikka santhosam, anaal intha pallivasal Hajiyar palliyum illai,TNTJ palliyum illai………..!!!!!!

    Allahudaiya pallivasal., intha palliyil anaithu muslimgalum thozha anumathi vendum, intha palli sethusalai (EC ROAD) yil iruppathu neduthooram sellum payanalikalukku Allahvin kirubaiyal vasadhiyaha irukkum.,

    “Ulagathil ulla anaivarum oruvaruku oruvar nanbargal thaan,

    anaal thangalin suya devaihalai munnittu matravarkalukku

    edhirihalaga kanbar”

    intha pallivasal mutrilum s.p.pattinam jamatharke uriyathu . ithai yarum marukka mudiyathu enendral nirvaham panna jamathil oppadaithal thaan mudiyum. ullooril entha nirvahamum irunthal thaan sariseyya mudiyum.

    Anaithu pugalum Ahilattai padaitha Allah virke…..

    By

    M Abul Hasan
    03jun 10

  11. Respected Muslim brothers!
    assalamu alaikum. Zazakkallahu khairan for your service to islam. As for as I am concerned., Your comments are on the basis of proofs. Then why the tntj brothers show such an anger and indecent comments.
    Islam is the only religion which taught the decency to the thorought world. Please tntj brothers if you are not show the decency to your muslim brothers then how can reach to others?
    Brother Abdur Rahaman posed some details on the basis of proofs. please try to answer him with proofs.
    Please remember Respected Imam Malik (rahamathullahi alaihi) showing the “khabar” of our Beloved Prophet Mohammed (salalahu alahi wassalam) says ” there are opinions of all human beings which can accept and reject. Only the opinions of “sahibul khabar”(Prophet salalahu alaihi wassalam) should be accepted completely.
    whether it is shiek pj or any one ,definitely there opinions should be strictly compare in the light of Quran and sunnah” remember once again what great imam malik (rah) said.
    massalamah.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *