Featured Posts
Home » நூல்கள் » வழிகெட்ட பிரிவுகள் » [தொடர் 14] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

[தொடர் 14] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

Articleகப்று வணங்கிகளின் வாதங்களும் அவற்றிற்கான மறுப்பும்

வாதம்: 1) ‘எமது இரட்சகன் எங்களுக்கு வாக்களித்ததை நிதர்சனமாகவே நாம் பெற்றுக் கொண்டோம், உங்கள் இரட்சகன் உங்களுக்கு வாக்களித்ததை நீங்கள் உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா? என ‘பத்ர்’ போரில் கொல்லப்பட்டுக் கிடந்த குரைஷிக் காஃபிர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் பேசியுள்ளார்களே! இது மரணித்தவர்கள் செவிமடுப்பார்கள் என்பதைத்தானே காட்டுகின்றது.

மறுப்பு: இது புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள ஆதாரபூர்வமான நிகழ்வு என்பதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. எனினும் இது மரணித்தவர்களிடம் தேவைகளை வேண்டலாம் என்பதற்கு எந்தவகையிலும் பொருத்தமற்ற ஆதாரமாகும்.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் பத்ரில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த கொடிய காஃபிர்களை நோக்கி தமது தேவைகளைக் கேட்கவில்லை, மாற்றமாக இவர்கள் கொலை செய்யப்பட்டுக் கேவலப்படுத்தப்பட்டதன் பின்னணியைக் கருத்தில் கொண்டு அதை உணர்த்தவே இவ்வாறு கூறினார்கள். இது நபி (ஸல்) அவர்களுக்கும் பத்ரில் கொல்லப்பட்ட காஃபிர்களுடக்கும் தொடர்பான விஷேடமான நிகழ்வாகும்.

அது மாத்திரமின்றி, மரணித்தவர்கள் செவியேற்கமாட்டார்கள் என்பதே நபி (ஸல்) அவர்களின் நிலைப்பாடும், ஸஹாபாக்களின் உறுதியான நம்பிக்கையுமாகும். அதனால்தான் ‘அல்லாஹ்வின் தூதரே! உயிர்கள் அற்ற வெறும்பிணங்களாகி விட்ட, முண்டங்களுடனா நீங்கள் பேசுகின்றீர்கள்? என உமர் (ரழி) அவர்கள் கேட்டார்கள் ‘ நான் போதித்தது உண்மைதான் என்பதை அவர்கள் இப்போது அறிகிறார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் விளக்கமளித்தார்கள். (புகாரி)

காஃபிரானவர்களுடன் தொடர்புடைய நிகழ்ச்சியை மகான்கள் எனப்படுவோருடன் பொருத்திப் பார்க்கலாமா? சிந்தியுங்கள்.

2 comments

  1. Allhamdullillah

    great article

  2. assalamu alikum dear rizwan madani your article is very use full to our Muslims please do not use hard words to criticize opposition jazakallahu haira

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *