Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 08)

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 08)

Articleசூனியம் – தொகுப்புரை
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பதற்காகச் சகோதரர் பீஜே முன்வைக்கும் வாதங்களுக்கான மறுப்பை இது வரை பார்த்தோம். இந்தத் தொடரின் இறுதி அங்கமாக அவரது ஆக்கத்தின் முடிவு குறித்தும், நமது கட்டுரையின் தொகுப்புக் குறித்தும் இத்தொடரில் நோக்குவோம்.

ஹாரூத், மாரூத் என்பவர்களிடம் மக்கள் வந்து ஸிஹ்ரைக் கற்றுக் கொண்டதாக குறிப்பிடும் இறைவன், அதன் அதிகபட்ச விளைவு என்ன என்பதை நமக்கு அடையாளம் காட்டுகின்றான்.

ஸிஹ்ர் எனும் கலை மூலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றிருந்தால் அந்த மிகப்பெரிய பாதிப்பை இறைவன் இங்கே கூறியிருப்பான். அந்த மக்களும் அதனையே கற்றிருப்பார்கள்.

கை, கால்களை முடக்க முடியும் என்றோ, ஒரு ஆளைக் கொல்ல முடியும் என்றோ இருந்திருந்தால் அதைத் தான் அம்மக்கள் கற்றிருப்பார்கள். அல்லாஹ்வும் அதைத் தான் சொல்லியிருப்பான்.
ஸிஹ்ருடைய அதிகபட்ச விளைவு என்னவென்றால் கணவன் மனைவியரிடையே பிளவையும், பிரிவையும் ஏற்படுத்துவது தான் என்பது இதிலிருந்து புலனாகிறது.

ஆனால், மேற்படி பந்தியில் “ஸிஹ்ர்” இருக்கிறது, அதனால் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாது. அதற்குப் பாதிப்பு உண்டு. அதன் அதிகபட்ச பாதிப்பு கணவன்-மனைவியரிடையே பிளவை ஏற்படுத்துவது என்பதுதான் என்று ஏற்றுக்கொள்கின்றார்.

நாமும் சூனியத்தால் நினைத்ததையெல்லாம் செய்ய முடியும் என்று கூறவில்லை. சூனியத்தில் தீங்கு இருக்கின்றது. அதில் அதிகபட்சம்-குறைந்தபட்சம் எது என்று தெரியாது. சூனியத்தின் தாக்கத்தில் கணவன்-மனைவிக்கிடையில் பிளவை உண்டுபண்ணுவதும் ஒன்று. அது கூட அல்லாஹ் நாடினால்தான் நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இருக்கின்றோம்.

மேற்படி அவரது பந்தியை வாசித்த வாசகர்கள் இதோ அவரது சூனியம் என்ற நூலிலும், தர்ஜமா 357 ஆம் குறிப்பிலும் ஆரம்பத்தில் கூறுவதைப் பாருங்கள்.

‘ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும்’ என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

மேற்படி பந்தியில் சாதனங்கள் இன்றி உள்ளத்திலோ, உடலிலோ பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர் அறியாத மக்கள் என்கின்றார். ஆனால் மேலே குறிப்பிட்ட பந்தியில் ‘ஸிஹ்ர்’ இருக்கிறது, அதிகபட்ச பாதிப்பு கணவன்-மனைவிக்கிடையில் பிளவை உண்டுபண்ணுவது என்கிறார். ஏன் இந்த முரண்பாடு?

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பது பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றும் தந்திர வித்தை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

இங்கே ‘ஸிஹ்ர்’ என்றால் பித்தலாட்டம் என்று கூறியவர், ஏற்கனவே குறிப்பிட்ட பந்தியில் ‘ஸிஹ்ர்’ ஒரு கலை என்கின்றார். ‘ஸிஹ்ர் என்ற கலையைப் போதிப்பது இறை மறுப்பாகும்…’ (தர்ஜமா பக்கம்:1338)

கணவன்-மனைவிக்கிடையே மூட்டி விடுவது கலையாகுமா? இதைக் கற்பிக்க வேண்டுமா? கணவன்-மனைவிக்கிடையே சந்தேகத் தீயை மூட்டி விடுவது குஃப்ராகுமா? என்றெல்லாம் நிதானமாகச் சிந்தித்தால் அவர் தனக்குத் தானே முரண்பட்டுப் பேசுவதை உணரலாம்.

‘உனக்கு இந்த நபர் இந்த மாதிரியான ஸிஹ்ர் செய்துள்ளார்’ என்று தெரிவித்து விட்டால் அதுவே ஒருவனைப் படுக்கையில் தள்ளிவிடப் போதுமானதாகும். இல்லாததை எல்லாம் இருப்பதாக எண்ண ஆரம்பித்து விடுவான்.

‘உனக்கு ஒருவர் சூனியம் செய்துள்ளார்’ என்று கூறுவதுதான் சூனியமா? இது ஒரு கலையா? இதை ஒருவரிடம் சென்று கற்க வேண்டுமா? அவரே சூனியத்தைக் கஷ்டமான கலை என்கின்றார். இப்படிக் கூறுவதும், கணவன்-மனைவிக்கிடையே மூட்டி விடுவதும் கஷ்டமான கலையா? என்று சிந்திக்கும் போது அவரது முரண்பாடு இன்னும் தெளிவாகப் புலப்படும்.

இந்தப் பந்தியை முடிவு செய்யும் போது சூனியம் என்பது உண்மையில் நிகழ்த்தப்படும் அதிசயமே என்று வாதிடுவது தவறு (பக்கம்:1313) என்று குறிப்பிடுகின்றார்.

சூனியம் என்பது உண்மையில் நிகழும் அதிசயமல்ல. கயிறும் தடியும் பாம்பாகாது பாம்பு போல் போலித் தோற்றத்தை உண்டுபண்ணுவதே ‘ஸிஹ்ர்’ என்கின்றோம். அவரின் இறுதிப் பகுதி ‘எமது கூற்றை’ ஏற்பதாக அமைந்துள்ளது. சுய சிந்தனையுடன் படித்தால் சூனியம் விடயத்தில் அவர் முரண்பட்ட தகவல்களைத் தருவதை அறியலாம்.

எனவே, ‘சூனியம்’ என்ற ஒன்று இருக்கிறது. அல்லாஹ் நாடினால் அதன் மூலம் சில பாதிப்புக்கள் கூட ஏற்படலாம். சூனியத்தைக் கற்பது, கற்பிப்பது, செய்வது, செய்ய வேண்டுவது, சூனியம் வெட்டுவதற்காக சூனியக்காரர்களிடம் செல்வது அனைத்துமே மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சங்களாகும். நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் ஆதாரபூர்வமானது. அதை மறுக்க முடியாது, மறுக்கக் கூடாது. குர்ஆன்-ஸுன்னாவை ஏற்றுக்கொள்பவர்கள் அதை நம்புவது கட்டாயமாகும். அந்த நிகழ்ச்சிக்கும், குர்ஆனுக்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பது உறுதியாகும்.

முடிவுரை:
எமது தொடரில் இது வரை பல விடயங்களைச் சுட்டியுள்ளோம். வாசகர் நலன் நாடி அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்து வழங்குவது நல்லதெனக் கருதுகின்றேன்.

(1) ‘குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும்’ என்ற அவரது கருத்து, அவரது அண்மைக்கால தடம்புரழ்வாகும். அவர் ஆரம்பத்தில் இதற்கு மாற்றமான கருத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்.

(2) சூனியத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதை ஏற்க முடியாது என்பதும் அவரது அண்மைக்கால தடம்புரழ்வாகும். அவர் ஆரம்பத்தில் இதற்கு மாற்றமாக எழுதியும், பேசியும் வந்துள்ளார்.

(3) அவர், ‘இஸ்லாத்தில் பில்லி-சூனியம்’ என்ற தலைப்பில் இரு நூற்களை எழுதியுள்ளார். ஒன்று, ‘சூனியம் இருக்கிறது. அதனால் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும், சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும்’ என்கின்றது. அடுத்த நூல் அதற்கு முரணாக அமைந்துள்ளது. ஒரே ஆசிரியர், ஒரே தலைப்பில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு நூற்களை வெளியிடுகின்றார். ஆனால், இரண்டாவது நூலில் நான் ஏற்கனவே மாற்றுக் கருத்தில் இருந்தேன். ஏற்கனவே நான் எழுதிய நூலின் கருத்திலிருந்து நான் மாறி விட்டேன் என்பதை குறிப்பிடாமல் விட்டது தவறாகும்.

(கருத்து மாறுவதை நாம் கண்டிக்கவில்லை. அவர் மாறி விட்டு, ‘நான் 20 வருடங்களாக இந்தக் கருத்தில் இருக்கின்றேன். எம்முடன் ஆரம்பத்தில் இருந்தவர்கள் கொள்கையில் தடம் புரண்டு விட்டனர்’ எனப் பொய்ப் பிரச்சாரம் செய்வதையே கண்டிக்கின்றோம்.)

(4) சூனியம் என்பது ‘மெஜிக்’ மட்டுமே என்ற கருத்துத் தவறானது. 2:102 ஆம் வசனம் சூனியத்தால் அல்லாஹ் நாடினால் பாதிப்பு உண்டு என்கின்றது. மெஜிக்கில் பாதிப்பு இல்லை. கணவன்-மனைவி பிரிவினையும் ஏற்படாது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.

(5) சூனியம் என்றால் ‘கோள் மூட்டுதல்’ என்ற கருத்தும், அப்படி இருந்தால் கோள் மூட்டுவோர் தவறானதாகும். கணவன்-மனைவிக்கிடையே சந்தேகத் தீயை மூட்டுவோர் அனைவரும் காஃபிர்கள் என்று கூற நேரிடும். அடுத்து, கோள் மூட்ட யாரும் ‘வகுப்பு’ எடுக்க மாட்டார்கள். அதைப் போய்ப் படிக்கவும் மாட்டார்கள்.

(6) 2:102 வசனத்தில் “பிஹி” என்பதற்கு அர்த்தம் செய்யாமல் விட்டது தவறு.

அவரின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பில் 17:14, 24:24 ஆம் வசனங்களில் ‘அல் யவ்ம்’ என்ற பதம் விடுபட்டது போன்றோ,

18:55 இல் “அந்நாஸ்” என்ற சொல் விடுபட்டது போன்றோ,

19:5 இல் “மில்லதுன்க” என்ற சொல் விடுபட்டது போன்றோ,

20:62 ஆம் வசனத்தில் “அம்ரஹும்” என்பதற்கு அர்த்தம் விடுபட்டது போன்றோ,

20:117 இல் “குல்னா” என்ற பதமும், 20:123 இல் “கால” என்ற பதமும் விடுபட்டது போன்றோ,

26:74 இல் “பல்” என்ற பதமும், 26:75 இல் “கால” என்ற பதமும் விடுபட்டதைப் போன்றோ,

39:23 இல் “கிதாபன்” என்ற பதத்திற்கு அர்த்தம் விடுபட்டதைப் போன்றோ,

22:84 ஆம் வசனத்தில் “மின் இந்தினா” என்ற சொல் விடுபட்டதைப் போன்றோ, இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

தர்ஜமா பக்கம் 1313-இல் ஒரு பக்கத்தில் ‘பிஹி’ க்கு அர்த்தம் இல்லை. அடுத்த பகுதியில் அவருக்குத் தேவைப்படும் இடத்தில் ‘பிஹி’க்கு அர்த்தம் இருக்கின்றது. இப்படிப் பார்க்கும் போது, “திட்டமிட்டே ‘பிஹி’ க்கு அர்த்தம் விடப்பட்டுள்ளதோ” என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. (இந்த சந்தேகத்தின் பின்னர்தான் இது குறித்து எழுதுவதும், பேசுவதும் நம் மீது கடமை என்று உணர்ந்தோம்.)

(7) 20:66 ஆம் வசனத்தில் “சூனியக்காரர்கள் கயிறுகளையும், தடிகளையும் போட்டனர்” எனக் கூறப்படும் போது (தமது வித்தைகளைப் போட்டனர்) என அடைப்புக் குறி போட்டிருப்பது மக்களைத் திசை திருப்பும் தந்திரம் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.

(8) ‘அல்லாஹ் உம்மை மனிதர்களிலிருந்து பாதுகாப்பான்’ (5:67) என்ற வசனத்தை நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்ய முடியாது என்பதற்கு ஆதாரமாக முன்வைப்பதன் மூலம் அவர் தனக்குத்தானே முரண்படுகின்றார். அவர் தனது தர்ஜமாவின் 357 ஆம் குறிப்பில், ‘இந்த வசனம் நபியை யாரும் கொல்ல முடியாது என்றுதான் கூறுகின்றது’ எனத் தெளிவாக விபரிக்கின்றார்.

(9) நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதனால் குர்ஆனில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுள்ளான். நபியவர்களின் உள்ளத்தில் அதைப் பதியச் செய்யும் பொறுப்பையும் அவனே ஏற்றுள்ளான். இதை அவரே, “நபிகள் நாயகத்தின் உள்ளத்தில்…” என்ற தலைப்பில் தெளிவாக விபரித்துள்ளார். இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலமும் அவர் தனக்குத்தானே முரண்பட்டுள்ளார்.

(10) சூனிய ஹதீஸை மக்கள் மறுக்க வேண்டும் என்பதற்காக நபி முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது போன்றும், செய்ததைச் செய்யவில்லையென்றும், செய்யாததைச் செய்ததாகவும் கூறியது போன்று சித்தரிப்பது பாரிய மோசடியாகும் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.

(11) “திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரிக்க வேண்டும்” கூறி விட்டு, “ஷைத்தானின் தூண்டுதலால் மலக்குகள் அல்லாஹ்விடம் ஆட்சேபனை செய்தார்கள்” என அவர் கூறுவது முழுக் குர்ஆன் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தி விடும் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம். மலக்குகள் பற்றிய அவரது இந்தக் கூற்று ஈமானுக்கு முரண்பட்டதாகும்.

(12) “நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டிருந்தால் எதிரிகள் விமர்சனம் செய்திருப்பார்கள்” என்ற வாதம் தவறானது. நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது அவர்களுக்கே இறுதியில்தான் தெரிந்திருக்கும் போது மக்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. சூனியத்தால் ஏற்பட்ட பாதிப்புக் கூட குடும்ப வாழ்வுடன் சம்பந்தப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம். இதே வேளை, இஸ்லாமிய அறிஞர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்காததே இது உண்மையான ஹதீஸ் என்பதற்கான சான்றாகும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

(13) “சூனியம் செய்யப்பட்டவர்” என்று காஃபிர்கள் கூறியதைக் குர்ஆன் கண்டிப்பதை இந்த ஹதீஸை மறுப்பதற்கான ஆதாரமாக எடுக்க முடியாது. அவர்கள் நபி(ஸல்) அவர்களின் நபித்துவத்தையே “சூனியத்தின் உளரல்” என்ற கருத்தில் தான் கூறினார் என்று அவரே கூறி விட்டு, தனக்கு முரண்பட்டு அதை ஆதாரமாக முன்வைக்க முடியாது! அடுத்து, ‘சூனியமே இல்லை. அதற்குப் பாதிப்பும் இல்லை’ என்று கூறி விட்டு, நபி(ஸல்) அவர்களை “சூனியம் செய்யப்பட்டவர்” எனக் காஃபிர்கள் கூறியுள்ளனர். “இந்த ஹதீஸை ஏற்றால் காஃபிர்களை உண்மைப்படுத்தியதாகி விடும்” என அவர் கூறுவது அவருக்கே முரணானது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

(13) “மஸ்ஹூர்” (சூனியம் செய்யப்பட்டவர்) என ஃபிர்அவ்னால் விமர்சிக்கப்பட்ட மூஸா நபி சூனியத்திற்குள்ளாகியுள்ளார். கயிறும், தடியும் அவருக்கு பாம்புகளாகத் தென்பட்டன. இப்போது ‘ஃபிர்அவ்ன் கூறியது உண்மையாகி விடும்’ எனக் கூறி, குர்ஆனை நிராகரிக்க முடியுமா? என்பதை விபரித்ததுடன், “மஸ்ஹூர்” (சூனியம் செய்யப்பட்டவர்) என்பதற்கான மூன்று அர்த்தம் உள்ளது. எந்த அர்த்தத்தில் எடுத்தாலும் அதற்கும், ஹதீஸுக்குமிடையில் முரண்பாடு இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

(14) அடுத்து, சூனியம் குறித்த ஹதீஸில் எந்த முரண்பாடும் இல்லை. முரண்பாட்டைத் தோற்றுவிக்க ஹதீஸில் இல்லாத கிணற்றிலிருந்து என்ற வாசகத்தை ஹதீஸுக்குள் இடைச் செருகல் செய்து, அவர் செய்த திருகுத் தாளத்தைச் சுட்டிக் காட்டியுள்ளோம். அத்துடன் பலவீனமான ஹதீஸை எடுத்து, அது பலவீனம் என்று தெரிந்து கொண்டே ஹதீஸில் முரண்பாடு இருப்பதாகச் சித்தரித்த அவரது மோசடியையும் சுட்டிக் காட்டியுள்ளோம்.

(15) இறுதியாகச் சூனியத்தை ஒரு கலை என்றும், அதனால் பாதிப்பு உண்டு என்றும், அதிகபட்ச விளைவு கணவன்-மனைவிக்கிடையில் பிரிவினை ஏற்படுத்துவதுதான் என்றும் அவரே ஒப்புக் கொண்டதையும் சுட்டிக் காட்டியுள்ளோம்.

எனவே, அன்பான வாசகர்களே! அவர் மீதுள்ள பற்றை ஒரு பக்கம் வைத்து விட்டு, நாம் குறிப்பிட்ட அம்சங்களை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்து, அவரது இந்த வழிகேட்டிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முயற்சியுங்கள். அவர் செய்த சேவைகள், தியாகங்களால் அவர் சொல்லும் அசத்தியம் சத்தியமாகி விடாது! அவர், தனது கருத்தை நிலைநிறுத்தக் கடைப்பிடிக்கும் மோசமான வழிமுறையும் சரியாகி விடாது! தியாகம், சேவை வேறு, சரி-பிழை வேறு. சரி-பிழையைக் குர்ஆன்-ஸுன்னாவே தீர்மானிக்கும். எனவே அவரது இந்த வழிகேட்டிலிருந்து மீண்டு வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

முற்றும்

9 comments

  1. assalamu alikum dear salafy i thank you very much for clearing about sihr. but i don’t no why some bodies will not understand? because they thinks quran and sunnah are after pj.
    allahumma ihdeehim ajmaeen

  2. இப்னு ஷேக் ஹமீத்

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    அன்பின் மௌலவி இஸ்மாயில் ஸலபி அவர்கள் தாங்கள் கட்டுரையில் மிக தெளிவாகவும் அணித்தரமாகவும் அல்-குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் சூனியத்தைப்பற்றி விளக்கியதோடு மட்டுமல்லாது 20 வருடமாக ஒரே கொள்கையில் இருப்பதாக மார்தட்டும் தனிநபர்-ரின் கடந்தகால கொள்கைகளை அவருடைய படைப்பிலிருந்தே எடுக்காட்டி மக்களுக்கு இவருடைய கொள்கையில் தடம் புரண்டதையும், தனது கருத்துக் தேவையானமாதிரி குர்ஆனைவசனத்தின் மொழிபெயப்பை இருட்டடிப்பு செய்ததையும், தன்க்கு தானே முரண்படுவதையும் மிக அருமையான நடையில் வெளிப்படுத்தினீர்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள்செய்வானாக.

    இவருடைய முரண்பாடுகளையும் மார்க்க விரோத போக்கையும் காணும் போது இவருடைய கூற்றுதான் ஞாபகம் வருகின்றது. அதாவது மார்க்கதில் விளையாடுபவர்களை அல்லாஹ் அவர் வாழும் காலத்தில் அவருடைய எழுத்து பேச்சுகளில் அவரை ஒன்னா நம்பர் அயோக்கியன், பிராடு என்று அவரைக்கொண்டே வெளிப்படுத்திவிடுவான் என்று முன்னோர் காலத்தில் பேசியுள்ளார் அதன் கிளிப்பை திரித்துக்கூறப்பபடும் திருக்குர்ஆன் வரலாறு என்ற விமர்சன சிடியில் காணலாம் (இஸ்லாம் கல்வி அதனை மீள்பதிவு செய்தால் நன்றாக இருக்கும்)

    அத்தோடு தாங்களுக்கு பதில் அளிப்பதாக தனிநபர் தளத்தில் வாசகர் கருத்து பகுதில் பதிந்துள்ளார் (அதனை காப்பி செய்ய இயலாத அளவு மட்டுப்படுத்தபட்டுள்ளது) பதில் தெளிவாக குர்ஆன் ஸுன்னாவை மட்டுமே மேற்கொள்காட்டி தனது சொந்த புத்திக்கு மனோ இச்சைப்படி பகுத்தறிவு வாதம் பண்ணாமல் வெளியிட்டால் சரி.

    இந்த கட்டுரையை பொறுமையுடன் இருதய சுத்தியுடன் வாசிப்பார்களானால் சத்தியம் விளங்கும் அதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவனாக!

    இப்னு ஷேக் ஹமீத்
    நெல்லை

  3. assalamu alaikkum,

    i appreciate to u.

  4. இஸ்மாயில் சலபிக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
    அண்ணன் பிஜே அவர்கள் தங்களுக்கு மறுப்பு எழுதப்போய் தேவையற்றவற்றை ஆரம்பிக்கும்போதே உளறித் தள்ளியுள்ளார். அன்சாருஸ் சுன்னத்துல் முகம்மதிய்யாவுக்கு தொடர்பே இல்லாத ஒரு கவிதைப் புத்தகத்தை மேற்கோள் காட்டி ஏதோ உங்களின் மேற்பார்வையில்தான் அது எழுதப்பட்டதுபோன்று விமர்சித்துள்ளார். இப்படி சம்பந்தமேயில்லாதவைகளையெல்லாம் எழுதி மக்களை வழமைபோன்று திசை திருப்ப அழகாக நாடகமாடியுள்ளார். தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அடக்கத்துடன் ஏற்றுக்கொள்வதுதானே முறை. தரங்கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது தவறை நியாயப்படுத்த அண்ணன் அவர்கள் முனைந்திருப்பது தெளிவாக விளங்குகின்றது. ஒரு சகோதரனை நேர்வழிப்படுத்தும் முறை இதுதானா? என அண்ணன் அவர்களை இதனூடாக நான் கேட்க விரும்புகின்றேன். உங்கள் தவறைச் சுட்டிக்காட்டினால் அவ்விணைய தளத்துக்கு பலவேஷம் எனப் பெயர்சூட்டி தவறை மறைக்கிறீர்கள். இஸ’மாயில் சலபி தங்களின் தவறை எவ்வளவு அழகாகவும் மரியாதைகவும் அறிவார்ந்த முறையில் ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டியிருந்தார். அதற்கு மறுப்பெழுத முற்பட்ட அண்ணன் அவர்கள் எவனோ இக்பால் அலி என்ற ஒரு கிருக்கன் எழுதிய கவிதையைப் போட்டுக்காட்டி இஸ்மாயில் சலபி கும்பல் எழுதியதுதான் இது எனக்கூறி மக்களைத்திசைதிருப்பி அநாகரிகமான முறையில் வார்த்தைகளைக் கையாண்டு வழமையான மாயாஜாலத்தை காட்டியுள்ளாரே இதனை என்ன என்று சொல்வது? வழியில் செல்பவனை சில ரவ்டிகள் மறித்து வைத்து அடாவடித்தனம்பண்ணுவது போல முஜீபை மறித்து வைத்து அவரைப் பேசவிடாமல் அண்ணன் செட்பண்ணிய அவருடைய ஆட்களே மாறிமாறிக் கத்திக்கொண்டிருக்கிற ஒரு கிளிப்பும் அண்ணன் பிஜேயிண்ட வெப்ல போட்டிருக்காரு. ரொம்ப அசிங்கமாயிருக்கு. நாளுக்கு நாளட் அண்ணன் நிலை மாறிக்கொண்டே போகுது. எங்கு போய் நிற்குமோ தெரியாது. அண்ணனுடைய மறுப்பை இஸ்மாயில் ஸலபி தொடர்ச்சியாகப் பார்த்துவிட்டு நறுக்கெண்டு நல்லா ஒரு பதில் எழுதனும் சரியோ? அண்ணணுடைய வெப்லதான் இதை எழுதனும் எண்டு நினைச்ச நான். அண்ணன் இதைப்போடுமொ என்ற அச்சத்திலேதான் இதிலே எழுதியுள்ளேன். அண்ணன் எப்படியும் இதைப் பார்ப்பார் என்று எண்ணுகின்றேன். வெளிநாட்டுப் பணம் வெளிநாட்டுப் பணம் என்று அதிகம் எழுதியுள்ள அண்ணன் அவர்களுக்கு இலங்கைப் பணம் மட்டும்உள்நாட்டுப் பணமோ? இப்படி அதிகமான கேள்விகள் இருக்கு கேட்பதற்கு. எனவே, வெப்களை நாசமாக்காம நல்ல ஆரோக்கியமான விசயங்களை மட்டும் அண்ணன் எழுத வேண்டும் என்ற நான் விரும்புகின்றேன். அண்ணனை நேசிக்கின்ற ஒருவன் நான். எனவே, கொஞ்சம் யோசித்து நடக்கப்பாருங்கோ. அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக! நிர்வாகி இதனை முன்பக்கத்திலே போட முடியும் என்றால் போட முயற்சியுங்கள். தேவைப்படின் இன்ஷh அல்லாஹ் தொடரலாம். இலங்கையிலிருந்து
    இஸ்லாமியச் சகோதரன்
    இறை அன்பன்

  5. assalamu alaikkum,

    good information,

  6. ismoil salafi avarkalukku assalamu alaikum idan thodaril 2009 SAMARASAM November 16-30 page 30&31 akkankalukkum answer solla vandukiran

  7. masha allah, a full satisfied answer all the doubts in SIHR. please explain about the other ahatheeth which P.J mentioning in his refusal 1 . about the hatheeth narrated by Ayisha ( rali ) which says only if ten times fed by a mother only there will be mother baby relatonship and later it was changed as five times ( sahih muslim 2638 , 2639 ). and other hatheeth . Jazakallah allah may accept our deeds.

  8. jazakallahu khair! I thank ALLAH almighty to tear the shiek pj’s false mask under the name of tawheed thorough ismail salafi! thank you ismail salafi for the hard work to clear the doubts regarding sihar. May ALLAH blessed you with HIS rahamah! TNTJ brothers please come out from the “sihr” of shiek PJ! blindly follow anybody is prohibited in Islam! indeed ALLAH is all knowing!

  9. Muhammad Azarudeen

    Assalamu alaikkum varahmathullahi vabarakathuhu

    Alhamthulillah intha vilakkame padithaal purinthu kollum vithail arumaiyaha thella thelivaha ullathu allah avarhaluku (tntj) nervali kaattuvanaha

    Maimoona (rali) avarhalin thirumanam patriya vilakkam kodukkavum saho ismail salafi avarhalidan kettukolhiren

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *