Featured Posts

மதமாற்றம் ஏன்? -1

இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் சிந்தனைகள் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாகவே இருந்திருக்கின்றது. பால்ய விவாகம், பலதாரமணம், மற்றும் போர்கள் பற்றியக் குற்றச்சாட்டுகள் என எல்லா விமர்சனங்களும் ஒரே சாயலே. வலைப் பூவில் கடந்த 2004 டிசம்பர் மாதம் தொடங்கிய இஸ்லாத்தைப் பற்றிய விமர்சன வாசிப்பில் இப்போது தருமி என்பவரும் இணைந்துள்ளார்.

”நான் ஏன் மதிய உணவு சாப்பிட்டேன்?” என்ற தலைப்பில் எவராவது பதிவிட்டால் ”இது என்ன பிரமாதம் அவருக்கு பசித்திருக்கும் அதனால் மதிய உணவு சாப்பிட்டார்” என்பதை யூகித்துக்கொள்வது பெரிய விஷயமல்ல. அதுபோல் ”நான் ஏன் மதம் மாறினேன்?” என்ற தருமியின் தலைப்பைப் பார்த்ததும் தாய் மதமோ, தழுவிய மதமோ அவருக்கு பிடித்திருக்காது என்றுதான் சொல்லத் தோன்றும். அதுதான் ஏதார்த்தமான உண்மையும் கூட.

ஆனால் பாருங்கள், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பால்ய விவாகம் செய்து கொண்டதால், என் தாய் மதமாகிய கிறிஸ்த்துவ மதத்திலிருந்து மாறினேன் என்று தருமி சொல்வது – இஸ்லாத்தில் குறைபாடுகள் இருப்பதாக விமர்சித்து, அதனால் கிறிஸ்துவத்திலிருந்து மதம் மாறினேன் என்பது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. (எதற்கு மாறினார் என்பது தனி விஷயம்)

பிற மதவாதிகள், தங்களின் மதம் சார்ந்த விமர்சனங்களை சாதாரணமாக எற்றுக்கொள்வது போல், இஸ்லாத்தை விமர்சித்தால் முஸ்லிம்கள் ஏன் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது? என்று தருமியே சொல்லிவிட்டு, அவருடைய இஸ்லாத்தின் விமர்சனங்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு – மறந்தும் விட்டது. இப்போது என் கேள்விக்கு பதிலே இல்லை என்று முஸ்லிம்களை சீண்டுகிறார். இங்கே அவர் ஏன் மதம் மாறினார் என்பதன் நோக்கம் மிகத் தெளிவாகவேப் புரிகிறது. மக்காவை – நோக்கித் தொழும் என்னையும் – உலக முஸ்லிம்கள் அனைவரையும் அவமானப்படுத்தி, சபையொழுக்கம் தெரியாத வின்ஸ்டன் என்பவரின் அநாகரிகப் பின்னூட்டத்தை தருமி அனுமதித்து ஆதரித்திருப்பது அவரது உள் நோக்கம் என்ன? என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. தருமி அவர்களே மிக்க நன்றி!

ஆயிஷா (ரலி) அவர்களின் பால்ய விவாகத்தையே முதலில் தருமி தொட்டிருப்பதால் அதிலிருந்தே தொடங்குவோம். இஸ்லாத்தின் மீது களங்கத்தை சுமத்துபவர்கள், 1420 ஆண்டுகளுக்கு முன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டும்தான் பால்ய விவாகம் செய்து கொண்டார் என்கிற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு, அதே கற்பனையிலேயே தங்களின் விமர்சனத்தையும் துவக்குகிறார்கள். பால்ய விவாகம் குற்றமான செயலாகயிருந்திருந்தால் அது அன்றைய சமூகத்தார்களால் எதிர்க்கப்பட்டிருக்கும். (அப்படி எதிர்க்கப்பட்டதாக தகவலிருந்தால் தருமி சமர்ப்பிக்கலாம்) இந்தியாவில் கடந்த நூற்றாண்டு ஆரம்பம் வரையிலும் பால்ய விவாகம் அங்கீகரிக்கப்பட்டதாகவே இருந்தது.

பால்ய விவாகம்.
குஜ்ஜார் எனும் உயர் ஜாதியைச் சேர்ந்த ராம்கரன் தனது ஒரு வயது மகளை திருமணம் செய்யத் திட்டமிட்ட போது இருகுழந்தைகளுக்கெதிரான கொடுமை என்று குடும்பத்தாரோடு வாதிட்டாள் பன்வாரிதேவி. குடும்பத்தார் கேட்க மறுத்ததும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறாள். காவல் துறை வருவதற்கு முன் கல்யாணம் முடிந்து ஒரு வயது குழந்தை புதுப் பெண்ணாகிறது.

தன் உயர் சமூகம் சார்ந்த உரிமை(?)க்கெதிராக பன்வாரிதேவி புகார் செய்ததால் ஐந்து வெறியர்களால் குதறியெடுக்கப்படுகிறாள் அவள். அந்தக் காமுகர்களுக்கு நீதி மன்றம் விடுதலையளிக்கிறது. பெண் விடுதலைப் பற்றி விவாதித்து சாதனை புரியும் இந்தியாவில் எழுச்சி நூற்றாண்டின் இறுதியில் சில வருடங்களுக்கு முன் நடந்த கொடுமை இது.

கல்வியாளர்களாக மதிக்கப்படும் பிரிட்டிஷார் ஆட்சியின் போது 1828ல் குற்ற நீதி சட்டம் சென்னை, பம்பாய், கல்கத்தாவில் அமுல்படுத்தப்பட்டது. அதில் 8வயதுக்கு குறைவான பெண்ணை கற்பழிப்பது தண்டனைக்குரியக் குற்றமென அறிவிக்கப்பட்டது.

8வயதுக்கு மேற்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய வழிவகுத்த அதே வேளையில் 1828ற்கு முன் சட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பதையும் இச்சட்டம் உறுதிப்படுத்துகிறது.

திருத்தப்பட்ட 1844ம் ஆண்டு தண்டணை சட்டத்தில் 8வயதிற்கு குறைவான மனைவியோடு உடலுறவு கொள்வது கற்பழிப்புக் குற்றம் எனக் கூறப்பட்டது. 8வயதைத் தொட்டவுடன் அவளை மனைவியாக்கி சிதைக்கலாம் என்பதுதான் இச்சட்டத்தின் அர்த்தம்.

இந்திய தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி திருமண வயது 10ஆக உயர்த்தப்பட்டது 1860ல் தான். ரக்மாபாய் என்ற சிறுவயது பெண்குழந்தையை எலும்புருக்கு நோயால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்யப்பட்டது. ஓரளவு கல்வி பெற்றிருந்த இந்த குழந்தை மணப்பெண் தன் கணவனோடு உடலுறவிற்கு சம்மதிக்க முடியாது என மறுத்தாள். ஆயிரக்கணக்கான மதவாதிகள் ரக்மாபாய்க்கு எதிராக களமிறங்கினர். அவள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

”மனைவியோடு உடலுறவு கொள்ளும் உரிமை கணவருக்கு உண்டு, இதை மறுக்கும் மனைவி தண்டிக்கப்படுவாள்” என்று 1877ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இதன் பிறகு நடத்தப்பட்ட ஆய்வுகளின் பலனாகத்தான் 1891ல் திருமண வயது 12ஆக உயர்த்தப்பட்டது இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், 1928ல் தான் திருமண வயது 16 என்ற நிலையை எட்டியது. (தினமணிக்கதிர் ஆய்வு கட்டுரை 9-97)

இந் நாட்டின் பெண்களுக்கெதிரான கொடுமைகளை முடிவுகட்ட எவ்வளவுதான் சட்டங்கள் போட்டாலும் அவை அனைத்தும் நீதிப் புத்தகங்களிலும், வீட்டுக்கு வெளியிலும்தான் காத்துக்கிடக்கின்றன. கசங்கி புதையும் குழந்தைகள் என்னவோ புதைந்து கொண்டுதானிருக்கிறார்கள். பிரபலமான பூலான் தேவிகூட வயதுக்கு வருமுன் 10வயதில் திருமணம் முடிக்கப்பட்டவர் என்பதை மறுக்க முடியுமா? கவிபாரதி 7வயது கண்ணம்மாவை கைப் பிடித்ததை மறைக்க முடியுமா?

இந்த நூற்றாண்டின் இறுதிவரை இதுதான் நிலைமையெனில் 1420 வருடங்களுக்கு முன்னால் நிலமை எப்படியிருந்திருக்கும் என்பதை ஆய்வாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆயிஷா(ரலி)யின் திருமணம்.
இருண்டு கிடந்த பிரதேசத்தில் இஸ்லாம் தம் ஒளிக்கதிர்களை வீசத் துவங்கிய கொஞ்ச காலத்தில் வியக்கத்தக்க சீர் திருத்தங்கள் உருவாகத் துவங்கின. கொடுமைகள் வேரறுக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் பால்ய விவாகம். இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தமது 53வது வயதில் தம் நெருங்கிய தோழரான அபூபக்கர் சித்தீக் அவர்களின் மகள் ஆயிஷாவைத் திருமணம் செய்கிறார்கள் அப்போது ஆயிஷாவிற்கு வயது ஆறு.

அன்றைய அரபுலகில் பால்ய விவாகம் நடைமுறையிலிருந்த வழக்கமாகும். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் 21வயதில் பாட்டியாகி விடுவார்கள் (புகாரி) என்கிறது வரலாறு. 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகப்பேறு, அந்த மகளுக்கு 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகளுக்கு மகப்பேறு இப்படி அந்தக்காலத்துப் பெண்கள் மகள் வழி பாட்டி என்ற உறவு அந்தஸ்தை 21வயதிலேயே பெற்றுவிடுவார்கள்.

அன்றைய நடைமுறை வழக்கில்தான் முஹம்மது (ஸல்) ஆயிஷா (ரலி) திருமணம் நடக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் செய்த பால்ய விவாகமாகட்டும் அல்லது நான்குக்கு மேற்பட்ட திருமணமாகட்டும் இது அவருக்கு மட்டுமே உள்ள தனி சலுகையாகும். திருக்குர்ஆன், 33வது அத்தியாயத்தின் 50வது வசனத்தில்..

”இது மற்ற இறைநம்பிக்கையாளர்களுக்கின்றி உமக்கு மட்டும் உரியது” என்று இறைவன் கூறுகிறான்.”

இஸ்லாத்தில் பால்ய விவாகம் உண்டு, இது கொடுமை என்று மீடியாக்களும், அறிவு ஜீவிகளும் கூறுவது போல், ஆம் உண்டுதான். இது இறைத்தூதருக்கு மட்டும் இறைவன் அனுமதித்த சட்டம். இஸ்லாத்தில் மற்றெவருக்கும் பால்ய விவாகம் அனுமதி இல்லை.

நபியை மணந்த ஆயிஷா (ரலி)யின் வாழ்க்கையில் சிறு கீறல்கூட இல்லாமல் மிக்க மகிழ்ச்சியாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்லியே வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. ஆனாலும் தருமி போன்றவர்கள் புகுந்து இது கொடுமையென்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பதுதான் மிகக் கொடுமை. 53வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஆயிஷா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்த பால்ய விவாகத்திற்கும் தருமி மதமாறியதற்கும் என்ன சம்பந்தம்?

(மற்றவை அடுத்த பகுதியில் வளரும் இன்ஷா அல்லாஹ்)

26 comments

  1. Even now the All India Muslim
    Personal Law Board (AIMPLB) which seeks exemption for Muslims on grounds of faith from the law that forbids child marriage.Why they
    seek this exemption.In 20th Century
    the issue of child marriage became
    a controversy and hindu reformers
    fought against it. But in 21st Century it is AIMPLB which seeks
    the exemption and as far as i know
    no hindu religious leader supports
    child marriage.Even the then kanchi Shankarachrya requested his disciples not to violate the law
    but to abide by it and wanted them
    to get their daughters married off
    once they attain the permissible
    age.In contrast today AIMPLB wants
    a total exemption from law in 21st century.In other words a staunch
    conservative of the last century was liberal when compared to the
    present AIMPLB which instead of
    fighting againt child marriage
    supports it by seeking exemption
    for Muslims.And child marriage is
    widely prevalent among Muslims.

  2. அபூ ஸாலிஹா

    //மக்காவை – நோக்கித் தொழும் என்னையும் – உலக முஸ்லிம்கள் அனைவரையும் அவமானப்படுத்தி, சபையொழுக்கம் தெரியாத வின்ஸ்டன் என்பவரின் அநாகரிகப் பின்னூட்டத்தை தருமி அனுமதித்து ஆதரித்திருப்பது அவரது உள் நோக்கம் என்ன?//

    இதற்கு உள்நோக்கம், வெளிநோக்கம் என்றெல்லாம் என்ன இருக்கப்போகிறது அபூ முஹை அவர்களே? காழ்ப்புணர்ச்சியை கொட்டி தங்கள் குரோதத்தை, அடிமன விகாரத்தைத் தீர்த்துக்கொள்கிறார் தருமி அவர்கள் என்பதைத் தவிர!

    மதத் தீவிரவாதத்தை பரப்பி, மனித நேயத்தை சிதைக்கும் இது போன்ற (பதிவு/பின்னூட்ட)விஷ(ம)ங்களை எப்படி தமிழ்மணம் இன்னும் அனுமதிக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது!

  3. பாரதியார் 7 வயது பெண்ணைத் திருமணம் செய்தார் என்பது (எனக்குப்) புதுச் செய்தி.

    பாரதியின் பாடல்களை மட்டும் படித்தவர்களுக்கு அவரையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டி விட்டீர்கள்; நன்றி!

    இந்தக் காலத்து பாரதி 7 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டது நியாயமாகவும் அந்தக் காலத்து முஹம்மது 6 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்தது அநியாயமாகவும் தெரிகிறதாமோ?

    இஃது எந்த வகை நீதியோ?

    கிருத்துவ மதத்திலிருந்து ஒருவர் வெளியேறுவதற்கு, இஸ்லாமியத் தலைவரின் திருமணம் எப்படிக் காரணமானது?

  4. ஹாபிழ்

    //as far as i know
    no hindu religious leader supports
    child marriage//

    Mr.Ravi Srinivash,

    However, Chief Minister Babulal Gaur would not be drawn on the link between the attack and child marriages.

    He said of the practice: “It is not possible to stop it. Have we been able to end alcoholism or untouchability? If Gandhi could not succeed in this, how can Babulal Gaur?”

    http://news.bbc.co.uk/2/hi/south_asia/4536579.stm

    I am surpirzed your noesis!!!

  5. அழகப்பன்

    “நான் ஏன் மதம் மாறினேன்” என்று தலைப்பிட்டு அவர் எழுதியவை அவருடைய தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல், அவரும் அப்பதிவில் பின்னூட்டமிட்டவர்களும் இஸ்லாமிய எதிர்ப்பு ஒன்றையே குறிக்கோளாக் கொண்டு எழுதி வந்தனர். என்னுடைய இந்த பின்னூட்டத்திற்குப் பிறகுதான் அவர் பின்னூட்டத்தை மூடினார் என்பதை அறியத் தருகிறேன்.
    http://dharumi.weblogs.us/2005/09/15/68#comment-570

    //இஸ்லாம் மட்டும்தான் ஓரளவு அறிவுபூர்மான மார்க்கமாக இருக்கிறது என்று நீங்கள் கருதினால், முஸ்லிம்களுடன் மட்டுமே விவாதம் செய்ய விரும்பினால், நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அப்படி ஒரு நிலை வரும்போது, விவாதத்தை திசை திருப்பும்படியாக வரும் மற்றவர்களின் பின்னூட்டங்களை நீக்கிவிடுங்கள். நீங்கள் கிருத்துவத்தை வெளியேறிவிட்டீர்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிடுங்கள். இப்படி செய்யும்போதுதான் விவாதம் சரியான கோனத்தில் செல்லும். கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களையும் அனுமதிக்கும்போது, அவர்கள் இந்த வாதத்திற்கு சம்பந்தமில்லாத விஷயங்களைக் கூறி விவாதம் திசை திரும்ப வாய்ப்பு அதிகம் உண்டு என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.//

    இப்போது முஸ்லிம்களிடமிருந்து மட்டும் பதிலை எதிர் நோக்கியிருப்பதால், இஸ்லாம் மட்டுமே அறிவுப்பூர்வமான மார்க்கம் என்றோ அல்லது முஸ்லிம்களால் மட்டுமே இம்மாதிரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும் என்று அவர் ஒத்துக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். பல்வேறு வேலைப்பளு காரணமாக என்னால் எழுத முடியவில்லை. தொடருங்கள்… இன்ஷா அல்லாஹ் தருமி மீண்டும் மதம் மாறுவார்.

  6. இந்தக் காலத்து பாரதியார் ஏழு வயதுப் பெண்ணைத் திருமணம் முடித்தது நியாயமாகவும்

    அந்தக் காலத்து முஹம்மது ஆறு வயதுப் பெண்ணைத் திருமணம் முடித்தது அநியாயமாகவும் தெரிவதற்கு

    இரு காரணங்கள் உள:
    1. பாரதி – இந்து
    2. முஹம்மது – முஸ்லிம்

    இந்துவுமல்லாத முஸ்லிமுமல்லாத கிருத்துவராய் இருந்த தருமி, தமக்குச் சம்பந்தமே இல்லாத ஒருவர் எப்போதோ செய்து கொண்ட திருமணத்துக்காக மதம் மாறினாரா?

    வேடிக்கைதான்.

  7. Mr.Gaur is a politician and is not a religious leader. He has expressed the state’s inability
    but i disagree with him. The state
    should take all possible steps to
    prevent child marriages. In any case can you cite any Hindu religious leader advocating
    child marriage today or now
    and seeking exemptions for Hindus
    on reasons of faith.

    And my question on AIMPLB’s stand remains unanswered. We live in 21st Century.Bharathi lived in 20th Century. In which century is
    AIMPLB.

  8. ஹாபிழ்

    Indian Constitution caters some provisions to every religion in certain circumstances. If AIMPLB demands exemption in child marriage amendment act of IPC does not mean that it demanding Child Marriage to Indian Muslims. Mr.Srinivas should know the marriage rules of Islam before commenting blindly. Islam prohibits child marriage or marrying a girl before her adulthood. Moreover the marriage will be quashed if the bride disagree the groom.

    Since the MPL is provision of Indian Constitution, AIMPLB has the right to demand exemption for any amendment without considering the facts. It is clear that childhood marriage in Indian Muslim community is lower than other community.

    If the childhood marriage of Bharathiyar is subject to century oriented, why the same justification not applicable to Prophet Mohammad. Sall….

  9. அபூ ஸாலிஹா

    அன்பு நண்பர் ரவி ஸ்ரினிவாஸ் அவர்களுக்கு,

    இப்பதிவிற்கான எனது பின்னூட்டத்தை காண வந்த நேரத்தில் உங்களைப்போன்ற மற்றவர்களின் கருத்தையும் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். எனவே எனக்கும் விளங்கும்படியாக நீங்கள் தமிழில் பதிலளித்தால் உபயோகமாக இருக்கும். தமிழில் எழுதப்பட்ட இப்பதிவைப் படித்து விளங்கிய உங்களுக்குத் தமிழில் தட்டச்சு செய்வதில் சிரமமேதும் இருக்காது என்ற நம்பிக்கையுடன்,

    -அபூ ஸாலிஹா

  10. அழகப்பன்

    //Even the then kanchi Shankarachrya requested his disciples not to violate the law
    but to abide by it and wanted them
    to get their daughters married off
    once they attain the permissible
    age.//

    உபநயனம் மாதிரிப் பெண்ணின் ஏழாவது வயசில் கல்யாணம் பண்ண வேண்டும்;அப்போதுதான் சரணாகதி புத்தி வரும் – என்று சொன்னால், ‘இது இந்த காலத்தில் ஸாத்தியமா?சட்ட விரோதமல்லவா?என்று கேட்பீர்கள்.

    ‘ராஜாங்கத்தின் சட்டத்தை மீறு’என்று சொல்லக் கூடாதுதான். அப்படிச் சொல்லவில்லை. சட்ட மறுப்பு (civil disobedience) என்று இப்போது ஆட்சி நடத்துகிறவர்களே ஒரு காலத்தில் பண்ணிக் காட்டித்தான் இருக்கிறார்கள். ‘சட்டம் என்று யாரோ எழுதினதற்காக எங்கள் ஸ்வாதந்தரியத்தை விட மாட்டோம்’என்று அப்போது சொன்னார்கள். அதே மாதிரி, “ஜெயிலில் போட்டாலும் பரவாயில்லை;பிராணன் போனாலும் பரவாயில்லை;ஆத்ம «க்ஷமத்துக்காக ஏற்பட்ட விவாஹ ஸம்ஸ்காரத்தை வெறும் லௌகிக விஷயமாக்கிச் சட்டம் பண்ணினால் ஏற்கமுடியாது”என்று கிளம்புகிற வேகம் நம் ஜனங்களுக்கு இல்லை.

    இவை சங்கராச்சாரியாரின் வார்த்தைகள்.

  11. அபூ முஹை அவர்களே!
    தருமி என்பவரின் பதிவில் நானும் கூட பின்னூட்டம் அளித்திருந்தேன். என்ன காரணத்தாலோ ஏற்கப்படவேயில்லை. அவர் தன் சமீப பின்னூட்டங்களின் வாயிலாக ஆட்டத்தை தனக்கும் நல்லடியார் ஒருவருக்குமாக மாற்றி அமைத்துள்ளார்.
    அதே சமயம், இஸ்லாத்தை Character Assasination செய்ய முனைவதில் குறியாக இருக்கும் சிலர் ‘சங்க’மாக வந்து பின்னூட்டியதை ஏற்று வெளிப்படுத்தியுள்ளார்.

    நேச குமார் போன்றவர்கள் மதம் பற்றிய விவாதத்துக்கு ஆர்வமாகவும் அவசரமாகவும் இங்கு-(தருமி பதிவுக்கு) ஓடி வந்து இஸ்லாம் பற்றிய தனது வெறுப்பையும் காழ்ப்பையும் கக்கி வருகையில் எதிர் தரப்பு பதிவர்களான அப்துல்லாஹ், அபூ முஹை போன்றோரின் எதிர்க்கேள்விகளுக்கு/சவால்களுக்கு ஏன் அவரால் இன்னமும் பதிலளிக்க இயலவில்லை என்று கேட்டிருந்தேன்.

    அங்கு எடுத்துக்காட்டப்பட்ட ஒரு பாஃசிச சிந்தனை தளத்தின் ஒரு நாயகரான ‘பி. என். ஓக்’ என்பவர் தலைக்கீழ் சிந்தனைகளுக்கு பெயர் பெற்றவர் என்பதை; ‘தாஜ் மஹால் ஒரு இந்துக் கோவில்’ என்று சொல்லி ‘வாங்கி’க்கட்டிக்கொண்டவர் என்பதை; குறிப்பிட்டிருந்தேன்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, இத்தகையவர்களின் உள்நோக்கங்களை விளங்கிக்கொண்டுவிட்டாலே அது உண்மையை வெளிச்சப்படுத்தும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

    //உங்களால் உங்கள் மதத்தைத் தவிர அடுத்த மதம் உண்மையானதாக இருக்கக்கூடும் என்று ஒத்துக்கொள்ள முடியுமா? // – தருமி

    எந்த மதம் உண்மையானது என்று ஒருவன் நம்புகிறானோ அது தான் அவனுடைய மதம் என்பதைக் கூட விளங்காமல் தருமி கேட்பது தான் விசித்திரமானது.

    //இஸ்லாம் பற்றி எழுதியதற்கு மட்டும் ஏன் இப்படி, இவ்வளவு எதிர்ப்பு என்று கொஞ்சம் தெளிவாக்க முடியுமா? // என்றும் தருமி கேட்கிறார்.

    அதாவது, இஸ்லாம் மீது மட்டும் ஏன் இத்தனை சிந்தனைப்பயங்கரவாதம், ஏன் இவ்வளவு காழ்ப்பு என்று கேட்கத்தெரியாமல் அல்லது கேட்கப்பிடிக்காமல்.

    கொஞ்சம் ‘படம்’ காட்டி ‘பெயர்’ எடுத்துவிட்டால் எதையும் (குறிப்பாக இஸ்லாமிய எதிர்ப்பை) எப்படியும் எழுதலாம் என்கிற அவர்களின் உள்நோக்கங்களை மதச்சார்பற்ற வாசகர்களுக்கும் உணர்த்துவதாக உங்களின் இப்பதிவு உள்ளது. நன்றி.

  12. இறை நேசன்

    //தமிழில் எழுதப்பட்ட இப்பதிவைப் படித்து விளங்கிய உங்களுக்குத் தமிழில் தட்டச்சு செய்வதில் சிரமமேதும் இருக்காது என்ற நம்பிக்கையுடன்,//

    ரவி சிறீனிவாஸின் உண்மையான முகத்தைப் பாருங்கள்.

    We all know how Sunnis and Shias
    treat each other.We also know how
    Ahemadiyas are treated in Pakistan.
    While the world is moving forward many of you cling to outdated ideas and practices. Some of you
    still argue that Darwin is wrong
    or evolutionary theory is false.
    But your knowledge about science is laughable. see pleasingpath.blogspot.com

    Yes there are problems like untouchability among Hindus. But in the last century or so there has been much progress.On the other hand most Muslims remain orthodox and conservative.For example look at the literacy data for Hindus and Muslims, particularly in female literacy.
    Despite the enoromus wealth generated by sale and export of oil
    Middle East is still backward and is nowhere near Europe in terms of
    social indicators.So before talking nonsense about other communities try to analyse the
    malaise within your communities.
    # posted by ravi srinivas : 11/15/2005 10:47 AM
    மேல் கண்ட பின்னூட்டத்திற்கு பதிலிடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் ஏற்கெனவே ரவி அவர்கள் இதற்கு மேலே இட்ட பின்னூட்டத்திற்கு பதிலே சொல்லாமல் எங்கெங்கோ தாவி குதிக்கிறார். மேலும் அவருக்கு முதலில் நான் இருந்தது போல் தமிழில் அடிக்க வராதோ என்று நினைத்து அவர் பதிவில் போய் பார்த்தால் மிக நன்றாக தமிழில் எழுதியிருக்கிறார்.

    எனவே இனி ரவியின் ஆங்கிலத்தில் வரும் பின்னூட்டத்திற்கு நான் பதிலளிக்கப் போவதில்லை.

    மேலும் முதலில் மேலே கேட்ட கேள்விக்கு பதிலளிக்கட்டும்.

    “ஒரு இடத்தில் பூக்கும் மலர்கள் அவ்விடத்திலுள்ள கடவுளுக்குத் தான் சொந்தம்” என்று எந்த ஆகமத்தில் கூறப் பட்டுள்ளது?

    அவ்வாறு இல்லையெனில் இல்லாததைக் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள் தானே?

    இல்லாததைக் கூறி மக்களை ஏமாற்றுவதை எடுத்துக் கூறுவது எப்படி மத நம்பிக்கைகளில் தலையிட்டதாக ஆகும்?

    இருக்கிறது எனில் எடுத்து காட்டட்டும்! வருத்தம் தெரிவித்து விட்டு இப்பதிவையே எடுத்து விடுகிறேன்.
    # posted by Erai Nesan : 11/15/2005 1:50 PM

    மேலே நீங்கள் கண்டது என்னுடைய பதிவில் ரவி சிறீனிவாஸ் அவர்கள் இட்ட பின்னூட்டமும் அதற்கு நான் அளித்த பதிலும். இப்படி ஒரு பதிலை நான் கொடுப்பது வரை தொடர்ந்து ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டுக் கொண்டிருந்தவர் இதற்குப் பிறகு அடுத்த பதிவில் சுந்தர தமிழில் அவர் இட்ட பின்னூட்டம் இதோ:

    முதலில் தாங்கள் கொடுத்த செய்திக்கான ஆதாரத்தினைத் தாருங்கள். உடைக்கட்டுப்பாடு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது ஆதாரமற்ற வாதம். பாகிஸ்தானிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஏராளமாக நடக்கின்றன, குடும்பங்களிலும் நடக்கின்றன. உடைக்கட்டுப்பாடு இல்லாத பிரான்சிலும், ஜெர்மனியிலும், ஸ்வீடனிலும், ஸ்விஸ்லும் பெண்களுக்கு எதிரான வன்முறை மிகவும் குறைவு. நார்வே, டென்மார்க்,ஸ்வீடன் போன்ற நாடுகளில் ஆண்-பெண் சமத்துவம் மிக நல்ல நிலையில் உள்ளது. பெண்கள் அரசியலிலும் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.
    முதலில் மானுட வளர்ச்சி அறிக்கை போன்றவற்றை படித்து புரிந்து கொள்ளுங்கள். எண்ணெய் வளம் மூலம் அபரிதமான செல்வம் இருந்தும் மத்திய கிழக்கு நாடுகள் மானுட வளர்ச்சியில் ஏன் பிந்தங்கியுள்ளன என்பதை அரபியப்பகுதிக்கான மானுட வளர்ச்சி அறிக்கை கூறுகிறது. கொஞ்சமாவது சிந்திக்க முயலுங்கள்.
    # posted by ravi srinivas : 11/22/2005 9:00 AM
    //முதலில் தாங்கள் கொடுத்த செய்திக்கான ஆதாரத்தினைத் தாருங்கள்.//

    நான் கொடுத்த செய்திக்கான ஆதாரம் தினகரன் நவம்பர் 21 நெல்லை பதிப்பில் பாருங்கள். அச்சம்பவத்தின் இன்றைய நிலையைக் குறித்து இங்கே கணலாம்.

    பெண்களுக்கு இஸ்லாம் தான் உண்மையான அன்பையும் பாதுகாப்பையும் வழங்குகிறது என்று அந்த எழுத்தாளர் கூறியதை இங்கே பாருங்கள்.

    //கொஞ்சமாவது சிந்திக்க முயலுங்கள்.//

    எல்லாம் நேரம் தான்.
    # posted by Erai Nesan : 11/22/2005 10:45 AM
    //அரபியப்பகுதிக்கான மானுட வளர்ச்சி அறிக்கை கூறுகிறது.//

    யப்ப சீனிவாசு அத்த ரெடி பண்ணியது அவுத்து போட்டு நாயி போல திரியீத பேசன் ஷோன்னு சொல்லி வாய பொளந்து நல்லா பாத்து தனக்க காமபசிய தீக்கிய கயவாளி பயலுவ தானே!
    # posted by Anonymous : 11/22/2005 5:38 PM

    மேலே கண்ட பின்னூட்டங்களில் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.

    1. ரவி சிறீனிவாஸ் அவசியம் எனில் நன்றாக தமிழில் பின்னூடுவார்.

    2. ஆதாரமற்ற காறிதுப்பல்களை அவர் எடுத்து வைப்பார். நாம் ஆதாரம் சரியாக கொடுத்தாலோ அல்லது அவரிடம் ஆதாரம் கேட்டாலோ ஓடி ஒழிந்து கொள்வார்.

    இவரின் நோக்கம் எதையாவது கூறி இஸ்லாத்தையும், இஸ்லாமியரையும் பழிப்பதே. இவருடைய துவேசமான சிந்தனையை ,ஆதாரமற்ற ஆங்கில அடிவருடிதனத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்களேன்.

    இவ்வளவு நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்!

  13. தமிழில் எழுதுவதும்,ஆங்கிலத்தில் எழுதுவதும் எனக்கு கிடைக்கும் நேரம்,கணினி ஆகியவற்றைப்
    பொருத்தது. இறைநேசன் பதிவில் அவர் கூற விரும்பும் கருத்தினை நான் விமர்சித்திருந்தேன்.
    ஆண் பெண் சேர்ந்து படிப்பதால்,பழகுவதால்தான் இப்படி நடக்கிறது என்ற கருத்தினை நான்
    ஏற்கவில்லை. அரபு மானுட வளர்ச்சி யாரால் வெளியிடப்பட்டது, அதை எழுதியவர்கள் யார்
    என்பதை தெரிந்துகொள்ளாமல் ஒருவர் ஏனோதானோ என்று பின்னூட்டம் இட்டால் அதற்கு நான்
    என்ன செய்ய முடியும். திருப்பதி கோயிலுக்கு மலர் அணிந்து செல்லக்கூடாது என்று ஒரு மரபு
    இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். இவ்விஷயத்தில் நான் தேவஸ்தானம் செய்தது சரி என்று
    எழுதவில்லை. எனக்குத் தெரிந்ததை எழுதினேன். இறை நேசன் போன்றவர்களுக்கு என்
    பின்னூட்டங்கள் எரிச்சலூட்டினால் என் பின்னூட்டங்களை எடுத்து விடலாம் அல்லது
    பதிவிறகு பின்னூட்டங்கள் தேவையில்லை என்று பின்னூட்ட வசதியை எடுத்துவிடலாம்.
    நான் ஆங்கிலத்தில் எழுதினாலும்,தமிழில் எழுதினாலும் என்ன எழுதுகிறேன் என்பதை
    கருத்தில் கொண்டு விவாதிக்க முடிந்தால் விவாதியுங்கள்.முடியாவிட்டால் விட்டுவிடுங்கள்.

  14. இறை நேசன் எழுதியது இது
    காலம் எவ்வளவு தான் முன்னேறினாலும் மனித குலம் எவ்வளவு தான் வளர்ச்சியடைந்திருந்தாலும் பெண்களைக் கொடுமைப் படுத்துவது மட்டும் இன்று வரை குறைந்த பாடில்லை. எதில் சமத்துவம் வேண்டுமோ அதைப் பற்றி பேசாமல் எதில் சமத்துவம் காண்பித்தால் பெண்ணினம் சீரழிக்கப் படுமோ அதைக் கூறி, ஆண் பெண் இருபாலரும் உடல் ரீதியாக ஒரே தன்மையினரல்ல என்பதை கண்டுகொள்ளாமல் எங்கெல்லாம் ஆணையும், பெண்ணையும் கலந்துறவாட சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளனரோ அங்கெல்லாம் பெண்கள் ஏதாவதொரு முறையில் கொடுமைப் படுத்தப் படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

    இதை நான் ஏற்கவில்லை என்பதைதான் விளக்கிப் பின்னூட்டமிட்டேன். இறை நேசன் போன்றவர்கள்
    இஸ்லாமிய நாடுகளில் மானத்தினைக் காக்க என்ற பெயரில் பெண்கள் கொல்லப்படுவது, கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல் என்ற ரீதியில் சவுதியில் தண்டனை தரப்படுவது குறித்து எதுவும் சொல்லமாட்டார்கள் போதும்.

  15. உடைக்கட்டுப்பாடு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது ஆதாரமற்ற வாதம். பாகிஸ்தானிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஏராளமாக நடக்கின்றன, குடும்பங்களிலும் நடக்கின்றன. உடைக்கட்டுப்பாடு இல்லாத பிரான்சிலும், ஜெர்மனியிலும், ஸ்வீடனிலும், ஸ்விஸ்லும் பெண்களுக்கு எதிரான வன்முறை மிகவும் குறைவு. நார்வே, டென்மார்க்,ஸ்வீடன் போன்ற நாடுகளில் ஆண்-பெண் சமத்துவம் மிக நல்ல நிலையில் உள்ளது. பெண்கள் அரசியலிலும் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

    இறைநேசன் இதை ஆதாரங்களுடன் மறுத்திருக்கிறாரா.

  16. அட்றா சக்கை

    யபா ரவி அண்ணாத்தே

    இறைநேசன் கேள்வி கேட்டா அவர் பதிவில போயி பதில் போடுப்பா.. இங்கெ அபூமுகைங்கறவர் என்ன சொல்லிகீறார்ன்னு படிச்சுட்டு அது சம்பந்தமா பின்னூட்டம் போடுங்கப்பா

  17. அபூ முஹை

    இறைநேசன், ரவி சிரீனிவாஸ் இருவருமே இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாததையே விவாதிக்கிறீர்கள். என்பதை மீண்டுமொருமுறை பதிவையும், உங்கள் பின்னூட்டங்களையும் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    அன்புடன்,
    அபூ முஹை

  18. இறை நேசன்

    அன்புள்ள அபூ முகை நான் இங்கு கூற வந்தது ரவி சிறீனிவாசின் ஆங்கில மோகத்தை எப்படி மாற்றுவது என்பதையும், அவரின் இஸ்லாமிய விரோத எண்ணத்தை சுட்டிக் காட்டவுமே! அல்லாமல் சம்பந்தமில்லாத என் பதிவில் நடக்க வேண்டிய விவாதத்தை இங்கு நடத்த அல்ல. அதனால் தான் அவரின் பின்னூட்டத்திற்கு நான் பதிலளிக்கவில்லை.

    இவரின் பின்னூட்டங்களை ஆழ்ந்து படித்தால் புரியும், எப்பொழுதுமே ஒரு தலைப்பில் எழுதும் விஷயத்தைப் பற்றி சர்ச்சையை கொண்டு போகாமல் சர்ச்சையை திசை மாற்றுவதை. இங்கும் அது தான் நடந்திருக்கிறாது.

    என் பதிவுகளில் நடந்த சர்ச்சையையும் அதில் நான் அவர் கேட்ட கேள்விக்கு பதிலை கொடுத்ததும் நான் கேட்ட கேட்ட கேள்விக்கு பதிலை தர முடியாமல் சர்ச்சையை தொடராமல் நிறுத்தியதும் அவர் தான் என்பதை என் பதிவை படித்தால் புரியும். அதனை சம்மதிக்க மனமில்லாமல் நான் அவருடைய பின்னூட்டத்தால் எரிச்சலடைந்ததாக அபாண்டமாக பழி சுமத்தி அதனால் தான் அவர் அங்கு சர்ச்சையை தொடரவில்லை என்பது போல் காட்டுகிறார்.

    இதிலிருந்து அவரின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளலாம்.

    எது எப்படியோ நான் இங்கு பின்னூட்டம் இட்டதன் நோக்கம் நிறைவேறி விட்டது. இனி அவர் தமிழ் பதிவில் தமிழிலேயே பின்னூடுவார். குறைந்த பட்சம் இப்பதிவிலாவது.

    மற்றபடி இச்சர்ச்சையை இங்கு தொடர நானும் விரும்பவில்லை. அவர் அங்கு வரட்டும் பதிலளித்து கொள்கிறேன்.

    உங்களுக்கு நான் தெரியப் படுத்திக் கொள்ள விரும்புவது ஒன்று தான். சும்மா அவருடைய ஆதாரமற்ற துவேசமான கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டு மட்டும் இருக்காமல், நீங்களும் எதிர் கேள்வி கேளுங்கள். அவர் ஆதாரத்தை வைத்தால் மட்டும் பதிலளியுங்கள்.

    இப்பதிவிற்கு தேவையில்லாத விஷயத்தில் கவனத்தை திருப்பியதற்கு மன்னியுங்கள்.

    நன்றி

    அன்புடன்

    இறை நேசன்.

  19. நல்லடியார்

    சகோ.பாபு சொல்வது போல் முஸ்லிம் வலைப்பதிவாளர்களைத் தவிர இஸ்லாத்தை விமர்சனம் செய்பவர்கள் தங்கள் உண்மையான மதத்தை வெளிப்படுத்துவதில்லை. தாங்கள் சார்ந்த மதம் சரியெனக் கருதும் பட்சத்தில் அதை பகிரங்கமாக வெளிப்படுத்துவதில் என்ன தயக்கம் எனத் தெரியவில்லை. ஒருவேளை இஸ்லாத்தை விமர்சிப்பதை விட தங்கள் மதத்தை பதில் விமர்சனம் செய்வது சுலபம் என்ற முன்னெச்சரிக்கையோ என்னவோ?

    தருமியைப் பொருத்தவரை வயது,படிப்பு,அனுபவம் என்ற பல்வேறு தகுதிகளுடன் களமிறங்கி இஸ்லாத்தைச் சாட தரிக்கப்பட்ட கூட்டு கதாபாத்திரம் என்றே எண்ணத் தோன்றுகிறது. நாகூர் ரூமி சொன்னால் குற்றமாகப்படும் விமர்சனங்கள் தருமி சொல்லும் போது குற்றமாகத் தெரிவதில்லை. இஸ்லாத்தை “பாஸிசம்” என்றெல்லாம் விமர்சிப்பாராம், அதற்கு பதில் கொடுத்தால் ஏன் இந்த மதத்தீவிரம் என்று “ஞானபீட” பின்னூட்டத்தை சுட்டி தன் கருத்து மட்டுமே பதிலின்றி நிற்க வேண்டும் என்ற பாஸிச சிந்தனையை நிலைநாட்டுவது.

    தனக்கு மதங்கள் பிடிக்காமல் போனதற்கு இந்து மதத்தில் சாதியும், கிறிஸ்தவ மதத்தில் இயேசுவை கடவுள் கைவிட்டதையும் காரணங்களாகச் சொல்லும் தருமிக்கு, இஸ்லாத்தில் முஹம்மது நபி பலதாரமணம் புரிந்ததும், இஸ்லாமியர்கள் சல்மான் ருஷ்டியை எதிர்ப்பதும் காரணமாம். என்னே ஒரு ஒப்பீடு!!!

    இர்ஷத் மஞ்ஜியும், சல்மான் ருஷ்டியும் இஸ்லாத்தை பற்றி எழுதுவதெல்லாம் சரியாம். அவற்றை குர்ஆன் ஹதீஸிலிருந்து தெளிவுபடுத்த முன்வந்தால் மதக் கிரந்தங்களில் நம்பிக்கையில்லாததால் அவற்றை ஏற்க முடியாதாம்.

    இர்ஷத் மஞ்சியை இந்தியாவில் ஏன் முஸ்லிம்கள் எதிர்க்க வேண்டும்? எனக்கேட்கும் தருமியிடம், இந்தி மொழியை ஏன் எதிர்த்தீர்கள் என்று கேட்டால் மதத்தை அரசியலாக்குவதுதான் நம்மிடையே உள்ள மிகப்பெரிய பிரச்சினை என்று நழுவுவது. தருமியின் இஸ்லாமிய எதிர்ப்புவாதங்களை வைத்துப் பார்க்கும் போது பெயருக்கேற்ப “மண்டபத்தில்” எழுதிக் கொடுப்பதை ஒப்புவிப்பதாகவே தெரிகிறது!

  20. இப்னு பஷீர்

    திசை திருப்பல்களை கண்டுகொள்ளாமல் உங்கள் விளக்கங்களை தொடருங்கள் அபூமுஹை. ‘முஸ்லிம்களிடமிருந்து ஏன் பதிலில்லை’ என்று சீண்டிய தருமி, இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் பின்னூட்டங்களை அப்படியே அனுமதித்து முஸ்லிம்களின் பின்னூட்டங்களை (நல்லடியாரைத் தவிர்த்து) மட்டுறுத்துவதும் நீக்குவதும் விசித்திரமாக தெரிகிறது.

  21. நல்லடியார்,

    நானும் உங்கள் இஸ்லாமை விமர்சனம் செய்து உள்ளேன்.எனது இரண்டாவது பதிவிலேயே நான் ஒரு இந்து என்று அறிவித்து விட்டேன்.

    ரவி ஒரு இந்து என்று தெரியும்.

    தருமியின் வழைபூவை பாத்தால் அவர் என்ன மதம் என்று புரிந்து கொள்ள இயலும்.

    யாரும் யாருக்கும் பயபடதேவையில்லை.

    பயபடுவதுமில்லை.

    அப்படி ஒன்றும் இங்கே எழுதிவிடவில்லை மத விமர்சனம் செய்வோர்.

    யார் போலி பெயர்களில் எழுதுவது என்று அபு முஹை,இறை நேசன் போன்றோரின் வலைபூக்ளை பார்த்தால் தெரியும்.(comments areaவில் பார்த்தால் தெரியும்)

    நான் கேட்ட கேள்விகளுக்கு தான் நிங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை.

    9/11 தாக்குதலில் உயிர் இழந்த யுதர்களின் பெயர்கள் வேண்டுமா வேண்டாமா?

    நீங்கள் தானே எழுதியது ? 9/11 தாக்குதலில் யுதர் யாரும் சாகவில்லை என்று ?

    ஆல்லது அதை மறுக்க உத்தேசமோ?

  22. பகுத்தறிவாளன்

    //தருமியின் வழைபூவை பாத்தால் அவர் என்ன மதம் என்று புரிந்து கொள்ள இயலும்.//

    எனக்கும் இந்த சந்தேகம் அவரின் “நிறம்” மாறுதலைக் குறித்து படித்தபோது எழுந்தது. அப்பாடா ஒரு வழியாக தருமி இந்து(சங்க் பரிவாரத்தினர் கூறிக் கொள்வது) தான் என்பதை மற்றொரு இந்துவின் மூலம் அறிந்து தெளிவு பெற்று விட்டேன். நன்றி சமுத்ராவிற்கு!

  23. தமிழ் செல்வன்

    //தருமியின் வழைபூவை பாத்தால் அவர் என்ன மதம் என்று புரிந்து கொள்ள இயலும்.//

    ஐயோ சமுத்ரா!

    இப்படியா உண்மையை போட்டு உடைப்பது! கவனமா இரு. ஆரோக்கியம் கோபித்துக் கொள்ள போகிறார்.

  24. நல்லடியார்

    //நீங்கள் தானே எழுதியது ? 9/11 தாக்குதலில் யுதர் யாரும் சாகவில்லை என்று ?//

    சமுத்ரா,

    திரு.பத்ரி அவர்களின் செப்-11 தாக்குதல் சந்தேகங்கள் என்ற பதிவில் நான் கருத்திட்டிருந்தேன். செப்-11 தாக்குதலை யூதர்களின் வசமுள்ள முன்னனி ஊடகங்கள் இத்தாக்குதலை முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்ப வாய்ப்பாக்கிக் கொண்டார்கள் என்றுதான் சொல்லி இருக்கிறேன்.

    பார்க்க: http://thoughtsintamil.blogspot.com/2005/08/911.html#comments

    மேலும் அபூமுஹை அவர்களின் இப்பதிவு தருமி மதம் மாறியதற்கு சொன்ன காரணங்களையும் அவற்றின் முரன்பாடுகளையும் விளக்குவதற்கே. இப்பதிவுக்கும் செப்-11 தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம் என்று விளக்குவீர்களா?

    அன்புடன்,

  25. இறை நேசன்

    அபூ முஹை அவர்கள் ஒரு முறை கூட மன்னிக்கவும். தலைப்பை திசை திருப்பும் நோக்கம் எனக்கில்லை.

    என் பெயரை வைத்து பின்னூட்டமிடும் போது நான் பதிலளிக்காமல் இருந்தால் கூகுள்(விளம்பரத்திற்கு இவர்கள் வாரி கொட்டுகிறார்கள் என்பதை அறிவீர்களா?) அபிமானிகள் சொல்வது உண்மையென்றாகி விடும்.

    அதனால்….

    சகோ. சமுத்ரா அவர்களே! உங்களுக்கு எதனால் இந்த இஸ்லாமிய துவேசம் என்று தான் எனக்கு இன்னும் விளங்கவில்லை. ஒரு வேளை புஷின் அருகில் இருப்பதால் இருக்குமோ?

    செப் 11 தாக்குதலில் உயிரிழந்தவர்களைப் பற்றி நான் விமர்சிக்க வரவில்லை.

    “அநியாயமாக ஓர் உயிரை கொன்றால் உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் கொல்வது போலாகும்” என்று தான் இஸ்லாம் எனக்கு படிப்பித்து தந்துள்ளது. எனவே அநியாயமாக கொல்லப்பட்டவர்களைக் குறித்த என் நிலைபாடும் இதுவே. என்ன விதத்திலாவது முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என சித்தரிப்பதற்கு அமெரிக்க அடிவருடிகளும், இந்தியாவில் கைபர், போலன் கணவாய் வழி வந்து குடியேறிய ஆரிய பார்ப்பனக் கூட்டமும் முயல்வதால் இதனைக் குறித்த என் கருத்தை முதலிலேயே சொல்லி வைக்கிறேன் – என்னையும் பயங்கரவாதி லிஸ்டில் சேர்க்காமல் இருப்பதற்காக!

    இங்கே விஷயம் அதுவல்ல. அதில் கொல்லப்பட்டவர்களில் யூதர் உண்டா என்பது. இதனைக் குறித்த தகவல் உங்களிடம் உள்ளதாக கூறுகிறீர்களே – உங்களுக்கு எங்கிருந்து அது கிடைத்தது. கூகுளிலிருந்து தானே! அல்லது அமெரிக்க சங்கூதி ஊடகங்களிலிருந்து!

    முதலில் அதனைக் குறித்த உங்களிடம் இருக்கும் தகவலை கூறுங்கள். அதன் பிறகு பார்க்கலாம் அதன் உண்மை நிலையை குறித்து.

    //தருமியின் வழைபூவை பாத்தால் அவர் என்ன மதம் என்று புரிந்து கொள்ள இயலும்.//

    இது விளங்கவில்லை. தருமியை யார் என்று நீங்கள் கூற விரும்புகிறீர்கள்?

    //யாரும் யாருக்கும் பயபடதேவையில்லை.//

    இதனை நீங்கள் முதலில் கூறவேண்டியது கொலை மிரட்டல் வருவதாக புழுத்த அரசியல்வாதியின் விளம்பர ஸ்டன்ட் வாசகத்தைக் கூறிய நேச குமாருக்கல்லவா?

    //அப்படி ஒன்றும் இங்கே எழுதிவிடவில்லை மத விமர்சனம் செய்வோர்.//

    உங்களின் அறியாமை இதில் தெளிவாக வெளிப்படுகிறது. முதலில் மதத்தைக் குறித்து நன்றாக படித்து விட்டு பின் கூறுங்கள்.

    //யார் போலி பெயர்களில் எழுதுவது என்று அபு முஹை,இறை நேசன் போன்றோரின் வலைபூக்ளை பார்த்தால் தெரியும்.(cஒம்மென்ட்ச் அரெஅவில் பார்த்தால் தெரியும்)//

    போலி பெயரில் எழுதுகிறார்கள் என்பதை மற்றவர்களால் கூற இயலும். போலி பெயர்களில் எழுதுபவர்கள் யார் யார் என்பதை எப்படி மற்றவரால் கூற இயலும். போலி பெயரில் எழுதுபவர்களுக்கு மட்டுமே அப்போலிபதிவுக்குரியவர் யார் என்பதை கூற இயலும். ஓ! இப்பொழுது நீங்கள் கூற வந்தது புரிகிறது. அப்ப என் பதிவுகளில் போலியாக பின்னூட்டமிட்டது……………….. இனி முயற்சிக்க வேண்டாம். பின்னூட்ட தணிக்கையை ஏற்கெனவே ஏற்படுத்தி விட்டேன்.

  26. கணவாய் வழி வந்து குடியேறிய ஆரிய பார்ப்பனக் கூட்டமும் முயல்வதால்…

    Pls. mind your words. Dodn’t hurts others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *