Featured Posts
Home » நூல்கள் » வழிகெட்ட பிரிவுகள் » [தொடர் 18] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

[தொடர் 18] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

Articleகப்று வணக்கத்தை நியாயப் படுத்துகின்றவர்களின் வாதங்களும் அவற்றிற்கான மறுப்பும்:

வாதம் 6: உத்தம நபியின் மண்ணறையில் மன்றாடிய ‘உத்பி’ என்ற கிராம வாசிக்கு மன்னிப்புக் கிடைத்ததாக ‘இப்னு கஸீர்’ என்ற தப்ஸீருடைய இமாம் கூறி இருக்கிறார்களே! அவரை விட நீங்கள் பெரிய அறிஞரா?

பதில்: மண்ணறையில் அடங்கப்பட்டவர்களிடம் மன்றாடுவது கூடும் என நியாயப்படுத்துவோர் இந்த உத்பி என்ற விலாசமற்ற கிராமப்புற ஒரு மனிதன் பேரில் புனையப்பட்ட சம்வத்தையும் ஆதாரமாகக் கொள்வது மிகப் பெரும் தவறாகும். கற்பனையான ஒன்றை ஆதாரமாக சித்தரித்துக் கூறுவது எந்த வகையிலும் ஏற்க முடியாதாகும். கப்று வணங்கிகளுக்கு வேண்டுமானால் அது ஒரு பெரிய ஆதாரமாகத் தோன்றலாம். ஆனால் இஸ்லாத்தில் இது போன்ற பொய்களை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

‘உத்பி’ என்ற கிராமவாசி யார் என்று அறியப்படாதவர். விலாசமற்ற ஒருவர் மூலம் அறிவிக்கப்படும் செய்தியை ஆதாரத்திற்கு கொள்ள முடியாது என ஹதீஸ்கலை இமாம்கள் முடிவு செய்வார்கள். அந்த விதியின்படி அப்படையில் இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களது தப்ஸீரில் ஆதாரத்திற்கு கொள்ள முடியாத பல செய்திகள் இடம் பெற்றுள்ளன என்பதை நீங்கள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் கூறுவது அனைத்தும் சரியானது என அவர்கள் உத்தரவாதம் தரவில்லை. அரபு நூலில் வந்துவிட்டது என்பதற்காக அது ஆதாரமாகிவிடாது.

இரண்டாவதாக: குறித்த அந்தச் செய்தியில் ‘அறிவிக்கப்படுகின்றது’ என்ற உறுதியற்ற வாசகத்தொடரே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதியற்ற வாசக அமைப்பு எனப் பொருள் கொள்வார்கள்.

மூன்றாவதாக: கவிதையால் மார்க்கத்தை நிலை நிறுத்த முடியாது என்று குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுவதைப் பார்க்கின்றோம்.

وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ

கவிஞர்களை வீணர்கள்தாம் பின்பற்றுவார்கள். (அஷ்ஷுஅரா.வச:224)
என்ற வசனத்தையும்,

وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنْبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُبِينٌ

நாம் அவருக்கு கவிதையைக் கற்றுக்கொடுக்கவுமில்லை, அது அவருக்கு அவசியமும் இல்லை. அது இறை நினைவும், தெளிவான அல்குர்ஆனுமே அன்றி வேறில்லை. (யாசீன்: 69)

என்ற வசனத்தை சிந்தித்தால் கவிதையால் மார்க்கத்தை நிலைப்படுத்த அல்லாஹ்வே விரும்பவில்லை என்பதை அறியலாம்.

நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னால் அவரது மண்ணறையில் கவிதை பாடி பாவமன்னிப்பு வேண்டியவருக்கு மன்னிப்புக்கிடைத்ததாக நம்புவது எவ்வாளவு பெரும் முட்டாள்தனம் என்பதை பார்க்க வேண்டும்.

இது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஸஹாபி ஒருவரால் பாடல் பாடப்பட்டு நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்படட ஒரு கனவு போல் கிடையாது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

நான்காவதாக: கனவின் வெளிப்பாடு மார்க்கமாகுமா?

பெரியார்கள் பேரில் கட்டப்பட்டுள்ள தர்ஹாக்கள் தீய கனவின் வெளிப்பாடாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்த இது ஒரு சாத்வீக வழியிலான அணுமுறை என்றே கூற வேண்டும். இது திவாலாகிப் போன பணவைப்பு முறை போன்றதாகும். இதில் இடப்படும் பணத்திற்கு தர்ஹாக் காவலர்களே நிர்வாகிகளாகும்.

மரணித்த எங்கள் தந்தை கப்று, தர்ஹாக் கட்டச் சொன்னார், சந்தனக் கூடு எடுக்கச் சொன்னார், விழா கொண்டாடச் சொன்னார் என்றால் உடனே அதை நிறைவேற்றி தயாராகிவிடும் இவர்கள் இது தீய கனவு என முடிவு செய்வதில்லை. எனது அத்தா (தந்தை) என்னைக் கிணற்றில் விழச் சொன்னார் என்றால் அவர்கள் அதை நிறைவேற்றத் தயாராக இல்லை. ஏன் இது கெட்ட கனவு என்று முடிவு செய்யும் திறண் இருக்கின்றது.

நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னால் கனவில் கண்டோம் என்பதற்காக அதன் மூலம் மார்க்கத்தை உறுதி செய்ய முடியுமா என்றால் முடியாது என ஷாஃபி மத்ஹபின் அறிஞரான இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு தீர்ப்புக் கூறியுள்ளார்கள்.

قال النووي رحمه الله: …… لَا يَجُوز إِثْبَات حُكْم شَرْعِيّ بِهِ لِأَنَّ حَالَة النَّوْم لَيْسَتْ حَالَةَ ضَبْطٍ وَتَحْقِيقٍ لِمَا يَسْمَعُهُ الرَّائِي ، وَقَدْ اِتَّفَقُوا عَلَى أَنَّ مِنْ شَرْطِ مَنْ تُقْبَلُ رِوَايَتُهُ وَشَهَادَتُهُ أَنْ يَكُون مُتَيَقِّظًا لَا مُغَفَّلًا وَلَا سَيِّئَ الْحِفْظِ وَلَا كَثِيرَ الْخَطَأِ وَلَا مُخْتَلَّ الضَّبْطِ ، وَالنَّائِم لَيْسَ بِهَذِهِ الصِّفَة فَلَمْ تُقْبَلْ رِوَايَتُهُ لِاخْتِلَالِ ضَبْطِهِ
مقدمة شرح النووي على مسلم
50/1

உறக்கத்தின் நிலையில் கனவு காண்பவர் அதனை உறுதி செய்து, சரியான ஒழுங்கமைப்பில் இல்லாததால் கனவால் மார்க்க சட்டத்தை நிலைப்படுத்த முடியாது. ஒருவரின் சாட்சியம் ஏற்க்கப்பட அவர், விழிப்புணர்வுள்ளவராகவும், அபாரமறதிக்கு உட்படாதவராகவும், மனனத்தில் குறைவில்லாதவராகவும், அதிமதிகம் தவறிழைக்காதவராகவும், ஞாபகம் குன்றிடாதவராகவும் இருக்க வேண்டும். (இவரதுசாட்சியமே ஏற்றுக் கொள்ளப்படும்) இதில் அறிஞர்கள் ஒருமுத்தி கருத்தில் உள்ளனர். உறக்கத்தில் இருப்பவன் இந்த நிலையில் கிடையாது. அவனது ஞாகபத்தன்மையில் குறைவு இருக்கும். ஆகவே அவனது அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: ஷரஹ்முஸ்லிம்).

அப்படியானால் உத்பி என்ற விலாசமற்ற கிராமவாசி நபி (ஸல்) அவர்களின் மண்ணறையில் மன்றாடியதற்காக தனது பாவம் மன்னிக்கப்பட்டதாக் குறிப்பிடும் கனவை இந்த அடிப்படையிலாவது ஏற்றுக் கொள்ள முடியுமா என நீங்களே சிந்தியுங்கள்.

2 comments

  1. yean entha thodar paathileye nindru vittathu?

  2. நீங்கள் தொடரில் அடுத்து தப்லீகை பற்றி பதிவிடுவதாக பதிவின் நடுப்பபகுதியில் கூறியிருந்தீர்கள் ஆனால் இதுவரை அடுத்த தொடர் வரவில்லை இதற்கு பின்னால் தொடர் வருமா? வராதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *