Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் » நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும்

நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும்

இஸ்லாத்தின் தோலை உரித்துக் காட்டுகிறேன் என்று தொடங்கிய நேசகுமார் அவர்கள் தனது விமர்சனங்களும் விளக்கங்களும் என்ற பதிவில் அவருடைய தன்னிலை விளக்கத்தை படிக்க நேர்ந்தது. தனி ஒரு மனிதனாக போராட வேண்டியிருக்கிறது, நானும் குடும்பஸ்தன், பன்முகங்கள் பல கொண்டவன், சமுதாய வாழ்க்கையில் பங்கு கொள்ளல் என்றெல்லாம் தனது இயலாமையை, இயல்பை எழுதியிருந்தார்.

அவரின் இந்த விஷப்போராட்டத்தில் தனது உண்மையான முகம் வெளிப்படப் போகிறது என்பதை அவர் புரிந்துக் கொள்ளும் நேரம் துவங்கிவிட்டதென்பதே அவரின் இத்தன்னிலை விளக்கத்தின் காரணம்.

சத்தியத்தை எடுத்தியம்புவது, அதை எப்பாடு பட்டாகிலும் மற்றவர்களுக்கு புரிய வைத்துவிடுவது என்று முடிவெடுத்து சத்தியத்திற்க்காக போராடும் ஒரு மனிதன் தனது இயலாமையை இப்படியெல்லாம் பறைசாற்ற மாட்டான். காரணம் தான் எடுத்துக் கொண்ட முயற்சியை எப்படியாயினும் நிலை நிறுத்திக் காட்டவேண்டும் என்ற உறுதியும் அதற்கான உதவியும் தன்னிடத்திலிருந்தே அவன் தேடிக் கொள்ளவேண்டுமே தவிர்த்து, தன்னால் இயலவில்லையே என்று புலம்புவது சரியல்ல.

நேசகுமார் உள்வாங்குதலும் காலம் தாழ்த்துதலும் என்று ஒரு நல்ல விளக்கம் அளித்திருந்தார். இப்படி காலம் தாழ்த்துதலும், உள் வாங்குதலும் ஒரு கருத்தை சொன்ன மனிதன் தனது கருத்தை பிரிதொரு நேரத்தில் அலசிப் பார்க்கவும் அது சரியா தவறா என்று அந்த மனிதனே புரிந்துக் கொள்ளவும் அவகாசம் இருக்கும் என்றெல்லாம் நல்ல விளக்கம் கொடுத்தார். பிரச்சினை என்னவென்றால், இப்படி விளக்கம் கொடுததவர் எப்போதாவது தான் எழுதியதை திரும்பிப் பார்த்திருப்பாரா? தான் எழுதியதில் ஏதேனும் தவறு இருக்குமா என்று உள்வாங்குதல் செய்திருப்பாரா?

இல்லை. செய்வதில்லை என்பது அவரது இத்தனை கால இடைவெளி இருந்தும் எதையாவது எழுதி வைப்போம் என்பதிலிருந்து நன்றாக காட்டுகிறது. காரணம் மிகச் சாதாரணமானது. அதாவது, உள்நோக்கு நிறைந்த அவதூறு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் எழுதி வருகிறார்.

அப்படி அவர் எழுதியதிலிருந்து தற்போது எனது இரண்டாவது கேள்வியாக இங்கே முன் வைக்கிறேன். இதுவரை எனது முதல் கேள்விக்கு பதில் இல்லை. பகரமாக ஹமீது ஜாபருக்கு பதில் சொல்கிறேன் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். அதிலிருந்தும் அவர் எவ்வாறு தனக்குத்தானே முரண்படுகிறார் என்பதை நான் பிறகு எழுதுகிறேன். காரணம் இன்று அவர் எழுதியதிலிருந்து ஒருவேளை தனது உள்வாங்குதல் என்ற பயிற்சியை தொடங்கலாம் அல்லவா? அதற்கு இன்னுமோர் அவகாசம் கொடுப்போம்.

இரண்டாவது கேள்விக்கு வருகிறேன்.

நேசகுமாரின் இஸ்லாத்திற்க்கு எதிரான விஷப் பிரச்சாரத்திற்கு இன்னுமொரு ஆதாரம். நேசகுமார் தனது கட்டுரைக்கு ஆதாரத்தை தருகிறேன் என்று அவ்வப்போது எவ்வாறு மறைத்தும் திரித்தும் எழுதுகிறார் என்பதற்கு மற்றொரு உதாரணம். இவரின் கீழ் கண்ட கட்டுரையில்

சமுதாயத்தில் நிகழும் வன்முறைகள்:

கற்பழிப்புகள் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமலில் உள்ள நாடுகளில் பெரும்பாலும் போலீஸாருக்குத் தெரியப் படுத்தப்படுவதில்லை. காரணம், தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை. நிரூபிக்க முடியாமல் போனால், அந்தப் பெண்ணை முறைகேடான உறவு வைத்ததற்காக கல்லால் அடித்துக் கொல்ல இஸ்லாமிய ஷரியத் வழிவகை செய்கிறது. இதனாலேயே, இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்பு பற்றிய புகார்கள் மிகவும் குறைவாகவும், அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகிறது.

பொதுவாக இதுபோன்ற கற்பழிப்பு சம்பந்தப்பட்ட குற்றங்கள் அமெரிக்காவில் அதிகமாகவும், சவுதி அரேபியா பொன்ற நாடுகளில் குறைவாகவும் நடப்பதை அவ்வப்போது கோடிட்டு காட்டுவது முஸ்லீம்களுக்கு வழக்கம், ஆனால் அதற்கு புதிதாக ஒரு ஷரீஅத் சட்டத்தை காரணமாக கற்பிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.

நேசகுமாரின் மேல் சொன்ன கட்டுரையில், இரண்டு விஷயங்களை ஒன்றாக குழப்பி இஸ்லாத்தை, முஸ்லீம் அல்லாதவர்களுக்கு விஷமத்தனாமாக அறிமுகப் படுத்தியிருப்பதை பார்க்க முடிகிறது. இஸ்லாம் சொல்லும் அவதூறு செய்பவர்களுக்கான குற்றவியல் சட்டத்தை, கற்பழிப்புக்கான தண்டனை என்று இரண்டையும் குழப்பி தன் விஷ வாதத்திற்கு ஆதாரம் தேடியிருப்பதை காணலாம்.

ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசினால் சமூகத்தில் அவளுக்கு ஏறபடக்கூடிய விபரீதமும், ஒரு ஆணைப் பற்றி தவறாக பேசினால் அவனுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆகவே ஒரு பெண்ணைப் பற்றி அவ்வாறு ஏனோ தானோவென்று அவதூறுகள் கூடாது என்பதற்காக அவதூறு தொடர்பான ஷரீஅத் குற்றவியல் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

ஒரு பெண்ணைப் பற்றி யாரேனும் அவதூறு சொன்னால், தான் சொன்ன குற்றத்தை அவதூறு சொன்னவர் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். அப்படி அவரால் தனது குற்றச்சாட்டை நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க இயலாத பட்சத்தில் அவதூறு சொன்னவருக்கு பொது இடத்தில் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும் வகையில் 80 கசையடிகளை கொடுக்க வேண்டும், மேலும் அந்த மனிதனது சாட்சிகளை இனி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடது என்று இஸ்லாம் சொல்கிறது. இது அவதூறு தொடர்பான ஷரீஅத் சொல்லும் குற்றவியல் சட்டம். இதனைத்தான் கற்பழிப்பு சட்டத்துடன் முடிச்சுப்போட்டு, கற்பழிக்கப்பட்ட பெண் நான்கு சாட்சியத்துடன் வரவேண்டும் என்று சொல்கிறார்.

அவர் சொல்வது எப்படி இருக்கிறதென்றால் கற்பழிக்கப் பட்ட பெண் அங்கும் இங்கும் அலைந்து தானெ ஒரு புலன் விசாரனை செய்து, நான்கு சாட்சிகளை தேடி அவர்களுடன் கூட்டமாக சேர்ந்து போலீஸ் ஸ்டேஷன் சென்று தனது குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும், இல்லையென்றால் அந்தப் பெண்ணையே கல்லால் அடித்து கொல்லப்படுவாள் என்று கதை நீட்டி இருக்கிறார் நேசகுமார். அதானால்தான் இஸ்லாமிய நாடுகளில் புகார்கள் குறைவாக இருப்பதாகவும் காரணம் கண்டுபிடித்துள்ளார்.

நேசகுமார் தனக்குத்தானே எவ்வாறு முரண்படுகிறார் என்பதைப் பார்க்கலாம். அவரே வேறொரு கட்டுரையில் கீழ்க் கண்டவாறு அவதூறு தொடர்பான குற்றவியல் சட்டத்தை அவருடைய வார்த்தைகளிலேயே விவரிப்பதை பார்க்கலாம்.

இவரின் “இஸ்லாத்தில் பர்தா – வரலாறும் நிகழ்வுகளும்” (x) என்ற கட்டுரையில், முகம்மது நபி போர்களத்திலிருந்து திரும்பி வரும்வழியில் தங்கியிருக்கும்போது. மல ஜலம் கழிப்பதற்காக கூடாரத்திற்க்கு வெளியே பாலைவனத்தில் சென்றிருந்த முகம்மது நபியவர்களின் மனைவியான ஆயிஷா, தமது கழுத்தில் அணிந்திருந்த ஆபரணம் இருளில் விழுந்து விடவே அதைத் தேடிக் கொண்டிருந்தார். அவசர அவசரமாக முகமது நபியவர்களின் கூட்டம் கிளம்பவே, ஆயிஷா பல்லக்கினுள்ளே இல்லை என்பதைக் கவனிக்காமல் பணியாட்கள் அந்தப் பல்லக்கை ஒட்டகத்தின் மீது தூக்கி வைத்து புறப்பட்டு விட்டனர். திரும்பி வந்த ஆயிஷா, தமது கூட்டத்தார் தம்மை மட்டும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போய்விட்டதைக் கண்ணுற்று அழுது கொண்டே, அவ்விடத்திலேயே படுத்து தூங்கிவிட்டார் என்றும் சஃவான் என்ற முஸ்லீம் ஆயிஷாவை அடையாளம் கண்டு முகம்மது நபியவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு பத்திரமாக அழைத்துக் கொண்டுவந்து விட்டார். ஆனால் இந்த நிகழ்வின் தொடர்பாக ஆயிஷா அவர்கள் மீது பழி சுமத்தப்பட்டது என்றும்

இந்நிலையிலேயே, தகுந்த ஆதாரமில்லாமல் பழி சொல்வது தவறு என்றும், அதற்கு நான்கு சாட்சிகள் வேண்டுமெனவும், அப்படி பொய்யாக குற்றம் சுமத்துபவர்களுக்கு, மற்றவர்கள் பார்க்கும் படியாக என்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் இறைவசனங்கள் அருளப் பட்டன:

24:4 “எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.”

என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இங்கு கூறப்படுவது கற்புள்ள பெண்களின் மீது அவதூறு சொல்வது சம்பந்தமான குற்றவியல் சட்டம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். ஆனால் இதனை கற்பழிப்புக்கான சட்டம் என்று தனக்குத் தொன்றியதை வைத்து விஷம் கக்குவது ஏன்?

இஸ்லாத்தை பற்றி ஆதாரத்துடன் விமர்சனம் செய்கிறேன் என்று சொல்லும் நேசகுமார் எடுத்துவைக்கும் ஆதாரமெல்லாம் இத்தகையதுதான்.

கற்பழிப்புக்கும், கற்புள்ள பெண்களைப் பற்றி அவதூறு சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாமல் எழுதுவதுதான் நேர்மையான விமர்சனமா?

இவர் சொன்ன

“தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை”.

என்ற வாதத்திற்கு ஆதாரம் தரவேண்டும்.

எந்த ஷரீஅத் சட்டம் அல்லது எந்த திருக் குர்ஆன் வசனம் அல்லது எந்த நபிமொழியில் இப்படி பதியப்பட்டுள்ளது என்ற ஆதாரமும் விளக்கமும் வேண்டும்.

அது மட்டுமல்லாமல். இவரின் இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து வரவேண்டுமென்பதே எனது விருப்பம். காரணம் அவர் ஆங்கில மொழிகளில் இஸ்லாத்தை எதிர்க்கும் யூத, கிருஸ்தவர்களால் எழுதிவைக்கப்பட்ட இஸ்லாத்திற்கெதிரான இத்தகைய நுணுக்கமான அவதூறு விஷயங்களை தமிழில் எழுதுவதன் மூலம் இவைகளுக்கு பதில் அளிக்க என்னைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் வழியாக குறைந்த பட்சம் ஓரளவாவது மாற்று மத அன்பர்கள் இஸ்லாத்தின் மேல் உள்ள அவதூறுகளை புரிந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

நேசகுமாரின ஆதாரத்திற்கு காத்திருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன், உங்களின் பதில்களும் ஆதாரங்களும் தாங்கள் தெரிவித்த மேலே சொன்ன கேள்வியை ஒட்டியே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

_____________________
x] http://www.thinnai.com/pl11110410.html

21 comments

  1. Betaa,
    The logic is very simple. If a man lodges a complaint that one woman was raped by somebody, he has to bring four male witnesses to prove the charge. Similarly, if a woman complains that she was raped by smoebody, she has also to prove it by showing four male witnesses. That is why your so called prophet is silent about this. It’s common sense that the woman, who is the victim of the crime would normally lodge a complaint is such cases. So the same yard stick is being applied that she should bring in four male witnesses because female witness is only half the value of a male’s value according to your jurispudence and especially in cases of rape, woman witnesses are NOt taken into account by your Jamath. And if a woman charges against the male who had raped her fails to bring four males to give witness, for having accepted the rape by self confession, the woman would be stoned to death on charges of adultery. That is why no affected woman is dare to lodge a complaint on rape. And you try to hide this like trying to hide a pumpkin in a bowl of rice!

  2. Bhaiya,

    Aap phir Ek phar mera article ko padliye, phir smaj bhi ayeega.

    We are not talking logic here. We cannot use the same logic everywhere. We are talking of Islamic jurisprudence. My article based on the Quran and other Prophet traditions.

    What is taken or not taken in Jamath is not issue here. The issue is what Islam says.

    Please read once again the article to clear your doubts.

    It is easy for ordinary people like you to interpret the Quranic verses and use your own logic. But that is not the case here.

    ‘I know everything’ attitude is the first sign of ingnorance and dangerous to you.

    Avoid ill conceived comments and offer conclusive explanations if you are not agreeing.

  3. நல்லடியார்

    //if a woman complains that she was raped by smoebody, she has also to prove it by showing four male witnesses.//

    அன்பரே,

    கற்பழிக்கப் பட்ட பெண் நான்கு சாட்சிகளைக் காட்ட வேண்டியதில்லை. அவள் ஒருத்தியின் குற்றச்சாட்டே போதும். இதை கீழுள்ள ஹதீஸ் மூலம் அறியலாம்.

    “நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்மணி தொழுவதற்காகப் புறப்பட்டார். அவரை ஒரு ஆண் கண்டு போர்வையால் போர்த்தி அவரைக் கற்பழித்து விட்டார். அவள் சப்தமிட்டதும் அவன் ஓடி விட்டான். வேறொரு ஆடவர் அவளருகே வந்தார் இந்த மனிதன் என்னைக் கெடுத்துவிட்டான் என்று அப்பெண் கூறினாள். முஹாஜிர்களில் ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்ற அப்பெண் ”இந்த மனிதன் என்னைக் கெடுத்து விட்டான்” என்ற கூறினார். யார் அவளைக் கெடுத்ததாக அப்பெண் அடையாளம் காட்டினாளோ அவரைப் பிடித்து வந்தனர். ”அவன்தான்” என்று அப்பெண் அடையாளம் காட்டினாள். நபி (ஸல்) அவர்களிடம் அவர் கொண்டு வரப்பட்டு கல்லெறியுமாறு உத்தரவிடப்பட்டதும் அப்பெண்ணை உண்மையிலேயே கெடுத்தவர் எழுந்து ”அல்லாஹ்வின் தூதரே நான்தான் அவளைக் கெடுத்தவன்” என்று கூறினார்.

    அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் நீ செல்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்” என்று கூறினார்கள். (தவறாகப் பிடித்து வரப்பட்ட) மனிதரிடம் அழகிய வார்த்தைகளைக் கூறினார்கள். அப்பெண்ணைக் கெடுத்தவரைக் கல்லெறியுமாறு ஆணையிட்டார்கள். ”மதீனாவாசிகள் அனைவரும் எந்த அளவு தவ்பா – பாவமன்னிப்புக் கேட்டால் ஏற்கப்படுமோ அந்த அளவு இவர் தவ்பா – பாவமன்னிப்புக் கேட்டு விட்டார்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர், வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) திர்மிதீ, அபூ தாவூத் )

    //*எனக்கு தெரிந்து கற்பழிப்பு குற்றங்களை செய்த எந்த ஆணும் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டதாக தெரியவில்லை. வறலாற்றில் கூட நான் கேள்விபடவில்லை.*//
    ரோஸா வசந்த் அவர்களுக்கு மேற்கண்ட செய்தியில் விளக்கம் கிடைக்குமென்று நம்புகிறேன்.
    1. கற்பழிக்கப்பட்டப் பெண், கற்பழித்தவனை அடையாளம் காட்ட வேண்டும்.
    2. பலவந்தமாகக் கற்பழிக்கப்பட்டப் பெண் குற்றவாளி இல்லை – அதனால் அவளுக்கு தண்டனை கிடையாது.

    3. கற்பழித்தவனுக்கே மரண தண்டனை.

    4. கற்பழிக்கப்பட்டப் பெண், கற்பழித்தவனை ”இவன்தான் என்னைக் கெடுத்தான்” என்று அடையாளம் காட்டினால் போதும் வேறு சாட்சிகள் தேவையில்லை என்பதை நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். (இது, கற்பழிப்பை நிரூபிக்க நான்கு சாட்சிகள் வேண்டும் என்று சொல்பவர்கள் கவனத்திற்கு)

    5. ”அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளைக் கெடுத்தவன்” என்று உண்மையை ஓப்புப் கொண்டு முன் வந்தவருக்கே கற்பழிக்கப்பட்டப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கவில்லை! (என்பது ந.ராகவன் அவர்களின் கவனத்திற்கு)

    நன்றி: அபுமுஹை

    //because female witness is only half the value of a male’s value according to your jurispudence and especially in cases of rape, woman witnesses are NOt taken into account by your Jamath.//

    It is true that the Quran has instructed the believers dealing in financial transactions to get two male witnesses or one male and two females (2:282). However, it is also true that the Quran in other situations accepts the testimony of a woman as equal to that of a man. In fact the woman’s testimony can even invalidate the man’s. If a man accuses his wife of unchastity, he is required by the Quran to solemnly swear five times as evidence of the wife’s guilt. If the wife denies and swears similarly five times, she isn’t considered guilty and in either case the marriage is dissolved (24:6-11).

    பணம், கொடுக்கல்-வாங்கல் போன்ற வர்த்தக நடவடிக்கைகலிள் மட்டும்தான் 1:2 சாட்சி. கற்பழிப்பு போன்ற குற்றவியல் வழக்குகளில் அல்ல. பார்க்க:

  4. //If you are really sincere to your prophet and jurispudence, you should ask for the implementation of shariya not partly but wholly involving both civil and criminal, as far as your community is concerned.//

    Muslims must be think about this.

    Islam is not partly obedient religion. If one belive ISLAM he must follow Full SHARIAH not only ACCEPT (WHEREEVER HE WILL).
    So ALL MUSLIMS IN INDIA Must be think about this.
    THANK YOU “DARAJI-BHAIYAJI” for your broad mind to serve only muslim girls by blocking their study and future.
    WHAT A GREAT HUMAN(WOMAN)RIGHT ACTIVITY!
    KEEP IT UP!
    May GOD will support CHILDRENS like YOU!

  5. Ji,

    Ithna lamba comments? Kisliye bhaiya… kuyn aap ithna khuzza hogaiya bhaiya..

    Let me put the things as clear as possible.

    a) You have started comments with different subject and now you are jumping from one to another.

    b) One cannot blame the system because it is mis-used rather one should blame the people who practice wrong.

    c) You made wrong understanding of the article and that is being corrected, however, instead of correcting your observation you move on to other subject – again a blaming game.

    c) It seems you are personally hurt and that is the reason you are giving ureasonable reply with your human rights activities and patroning of Muslim girls.

    I hope my following reply would be in context of your comments.

    1) Prohpet pardoned the woman – Yes, he said.. ‘Allah pardoned you’ from the sin because she is the victim and ordered punishment to the man who raped her. What do you expect? You want Prophet to order him to marry the victim?

    2) Prophet also pardoned him – it is a wrong understanding by you. He is not pardoned. He is being stoned to death.

    3) Jamath – I did not write ‘not to consider the Jamath’. I wrote Jamath is not an issue here. The question and answer is in the context your ‘women and men witness parameters’ mentioned by you, not about Jamath.

    4) //If you are very particular about your jurispudence, then why don’t you insist on having the penal clauses of your shariya to try the crimes committed by you people? Why should you stick to civil code only// Shariah is not in Indian civil law and so forth of criminal law.

    5) //why don’t all of you seek citizenship in countries like Sudi Arabia// Why do we need? I have more right than you to live in India. Your divisive advises is exhibiting your inferior thinking and hatred towards Muslims.

    6) //all religions have understood this and had given up the unsuitable aspects// I will be grateful to you, if you can give a proof from those understood religions, that they have decpacitated their holy books or removed those unsuitable aspects. Is there any religious edict passed by any of those religions to support your observation?

    7) //Join the main stream, keeping your religion within your homes and places of worship.// We are in the mainstream of India. Don’t spit the advises like seek citizenship of other countries that says you are not ready for mainstream life, not us. Further, in this tamilmanam, none of our Muslim bloggers propagating Islam. We are simply answering to the questions posed by people like you and correcting the misconceptions. Your comments in my blog is itself an excellent example.

    8) Your human rights service and charity works – I appreciate and pray for your further services towards human beings and charity works. I have contact with atleast 10 different human right groups in South India and I do often help them by monitory services. It is not the Muslim women are the only victims of ‘acid throws, burnings, severe beatings and thrown out of home. Hundreds of women irrespective of their religions is being subjugated and abused everyday in our country. So, please don’t try to sell your charity and human right services in public. You are not alone doing such work. Since you brought this matter, I wish to mention few things to you (may God forgive me for disclosing those noble works) a) I do contribute heavy amount with my friends as education scholarship through a reputable weekly Tamil magazine, Tamil Nadu. We even don’t want to know the name of those students and let the magazine to manage our scholarship works. (2) Established a small business for my non-Muslim friend (I don’t want to him work for me rather I prefer him to start his own life by my financial help). (3) Water tanks and toilets for various villages in association with self financial scheme executed by TN State government (predomininatly non-Muslims).

    This list can continue, but prefer to stop now. Because, instead of correcting you, it may look alike boasting of my charity works.

    Gentlemen, don’t try to interpret the things with pre-conceived mind.

    Good luck and Good bye.

  6. நெல்லையன்

    தமிழ்மணம் என்ற தமிழர்கள் புழங்கும் தளத்தில் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் விவாதிப்பது வருத்தமாக இருக்கிறது.

    தாராஜி, பியாஜி என்ற புணைப்பெயரில் திசை திருப்பல் வேலை செய்வது நீங்கள் குறிப்பிடும் மேற்படி நபர்தான்.

    வாதத்திற்கு மருந்து உண்டு. விதண்டாவாதத்திற்கு மருந்தில்லை.

  7. அட்றா சக்கை

    அட என்னாங்கபா

    அதான் யாருமே தமிழ்மணத்திலே கண்டுக்காம இருக்கிறதுனால இப்படி எதாவது விதண்டாவாதம் பேசி முன்ன வரலாம்ன்னு பாத்தா உடமாட்டீங்க போல இருக்கு..

  8. ஜும்பலக்கா

    Piyaji…(Nesakumar!!!)

    Thanx for disclosing you as prevaricator!!!

    This subject talking about Nesakumar’s fabrication. Most of our Tamilmanam readers known very well Nesakumar not able to debate in his original name.

    So, no more Daraji & Piyaji identities pls. (Also Inomeno). You can arque with Muslims if you agree to come in your name.

    :-)

  9. /So, no more Daraji & Piyaji identities pls. (Also Inomeno)(. You can arque with Muslims if you agree to come in your name.

    :-)
    /

    :-)

  10. ஜும்பலக்கா

    I should appreciate Inomino’s acceptance with smile.thankx Inomino disclosing you as Byaji & Daraji & Nesakumarji
    :-)))

  11. /I should appreciate Inomino’s acceptance with smile.thankx Inomino disclosing you as Byaji & Daraji & Nesakumarji
    :-)))
    /

    :-))

  12. /I should appreciate Inomino’s acceptance with smile.thankx Inomino disclosing you as Byaji & Daraji & Nesakumarji
    :-)))
    /

    :-))

  13. ஜும்பலக்கா

    Thanks Inomino for your double smiles. (Hey…I think you morsel bowl over after we uncover your selfsameness. That’s why you twice posted same comment!)

    :-)))

  14. //You may find Mohmeddanism is the best faith for you but you cannot snatch the right of the people of other faiths to have faith in their religion.//

    பையா, இந்த mohameddanism என்ற வார்த்தையே இஸ்லாத்தை குறிப்பதற்காக மாற்றாரால் வலிந்து திணிக்கப்பட்டது. கிருஸ்து தோற்றுவித்த மதம் christianity என்பது போல, முஹம்மது தோற்றுவித்த மதம் mohamedanism என்று முத்திரை குத்துவதற்காக செய்யப்பட்ட ஒரு பரிதாப முயற்சி அது. ஆங்கிலேயர்கள் எப்போது இந்தியாவிலிருந்து வெளியேறினார்களோ அப்போதே இந்த வார்த்தை வழக்கொழிந்து விட்டது. இந்த மார்க்கத்தின் பெயர் இஸ்லாம், இதை பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள். எங்கே ஒருமுறை சத்தமாக திரும்பச் சொல்லுங்கள், இஸ்லாம், ISLAM, முஸ்லிம் MUSLIM… போய் பாடத்தை முதலில் ஒழுங்காக படித்து விட்டு வாருங்கள்..

    அப்புறம்.. இது ஒரு தமிழ் வலைப்பதிவு.. உமக்கு நன்றாக தமிழ் தெரிவதால்தான் இந்த பதிவுகளை உம்மால் படிக்க முடிகிறது. இந்த இங்கிலிபீஸுல பெனாத்துற வேலயெல்லாம் உட்டுட்டு தமிழ்-ல தட்டச்சு செய்ய கத்துக்கிட்டு வாரும்..

  15. /(Hey…I think you morsel bowl over after we uncover your selfsameness. That’s why you twice posted same comment!)
    /

    We ?!!

  16. ஜும்பலக்கா

    /We ?!!/

    So?

  17. /So? /

    Ok .

  18. {In fact, they should be happy to be called by the name of their one only last prophet}

    THANKS FOR YOUR UNDERSTANDING ON OUR BELOVED GREAT PROPHET MOHAMMED (PBUH).

  19. //..which is not a religion compared to other faiths.//

    உண்மை. இது ஒரு மதம் மட்டுமல்ல. மார்க்கம். வழி. அதாவது வாழும் வழி.

    //Islam and Muslim have decent meanings//

    உண்மை.

    //Mohmeddans have not moved forward sociologically since the days of Mohmed and why should they feel offended to be referred to Mohmeddans?//

    இதில் முஸ்லிம்கள் வருத்தப்பட ஒன்றுமில்லை. இது உமது காழ்ப்புணர்ச்சியையும், ஆங்கிலேயர்கள் காலத்து சிந்தனைகளிலிருந்து உம்போன்றோர் இன்னும் நகரவேயில்லை என்பதையும்தான் காட்டுகிறது.

    நீர் ஏன் தமிழில் தட்டச்சுவதில்லை என்பது புரிஞ்சு போச்சு. நீச மொழியில் எழுதிவிட்டு எத்தனை முறைதான் ‘ஸ்நானம்’ செய்வீர்.. பாவம்!!

  20. //Leaving those kids aside, I wish some reasonable persons come forward to address these issues://

    பையா, உம்மை மாதிரி குதர்க்க வாதம் பேசுறவங்களுக்கு பதில் சொல்ல இந்த ‘kid’டே போதும்.

    //1) Whether you want to observe Shariya in full or according to your convenience only. Straight answer is necessary. //

    உம்மை மாதிரி ஆளுங்களோட இதுதானய்யா பிரச்னை. ஷரியா சட்டத்தை முழுசா பின்பற்றனுமா வேணாமான்னு கவலைப்பட வேண்டியது முஸ்லிம்கள் தான். இதில் உமக்கு என்ன அக்கறை? உம்மை மாதிரி ‘சமூக வியாதி’கள் தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள்ல மூக்கை நுழைக்காம இருந்தாலே நாட்டில பாதிக்கு மேல பிரச்னைகள் தீர்ந்துடும். இஸ்லாத்தின் கொள்கைகளால் நீரும் உம்மைப் போன்றவர்களும் எப்படி பாதிக்கப் படுகிறீர்கள் என்பதை வேணும்னா எடுத்துச் சொல்லும். அப்படி இல்லன்னா போயி வேற வேல வெட்டிய பாரும்.

  21. புலிப்பாண்டி

    எலே நேசகுமாரு…இங்கேதான் இருக்கியா. படுவாவி நானு ஒன்னைத்தேடி கோயில் குளமெல்லாம் சுத்தி வர்ரேன்லே.

    எப்பலே தரவேண்டிய பாக்கியைத் தரப்போறே? நீயியெல்லாம் சமதர்மம் பேசலமா? (கடங்கார கம்….ட்டி.)

    அப்துல்லா அண்ணே, நேசகுமாரு பத்தி எதுனாச்சும் இன்பர்மேசன் இருந்தா pulippandi1@gmail.com க்கு ஒரு மெயிலிடுங்க. கடங்காரப்பாவி என்னாமா டேக்கா கொடுக்கிரான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *