Featured Posts
Home » சட்டங்கள் » உம்ரா, ஹஜ், துல்ஹஜ் மாதம் » மஸ்ஜிதுந் நபவியை தரிசித்தல்

மஸ்ஜிதுந் நபவியை தரிசித்தல்

1) நபி (ஸல்) அவர்களின் பள்ளியில் தொழுவதற்காக எந்த நேரம் வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்வதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது.

‘எனது இந்தப் பள்ளியில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிரவுள்ள அனைத்து மஸ்ஜிதுகளிலும் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு சிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (புகாரீ, முஸ்லிம்). ஆனால் நபி (ஸல்) அவர்களின் கப்ரையோ மற்றவர்களின் கப்ருகளையோ தரிசிப்பதற்காக பயணம் மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் மூன்று பள்ளிகளைத் தவிர வேறு எங்கும் புனிதப் பயணம் மேற்கொள்ளக்கூடாது. அவை: மஸ்ஜிதுல் ஹராம், எனது இந்தப் பள்ளி, மஸ்ஜிதுல் அக்ஸா’ என்பது நபிமொழி (புகாரீ, முஸ்லிம்).

2) மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவதற்காகப் பயணம் மேற்கொள்வதற்கும் ஹஜ்ஜிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இந்தத் தரிசனம் ஹஜ்ஜுக்கு முன்போ பின்போ நிகழ வேண்டும் என்பது ஹஜ்ஜின் சுன்னத்களிலோ அதன் முழுமைப்படுத்தலிலோ இல்லை. இந்தத் தரிசனம் ஹஜ்ஜுக்கு முன்போ பின்போ நிகழ வேண்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்திகள் யாவும் ஆதாரமற்றவை. இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), அல்உகைலீ (ரஹ்), இப்னு தைமிய்யா (ரஹ்) ஆகியோர் இந்தக் கருத்தைத் தாங்கிய செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு முறையே அனைத்தும் பலவீனமானவை, ஆதாரப்பூர்வமானவையல்ல, இட்டுக்கட்டப்பட்டவை எனக் கூறியுள்ளனர்.

3) மஸ்ஜிதுந் நபவீயை அடைந்ததும் மற்ற மஸ்ஜிதுகளில் நுழையும்போது நடந்துக் கொள்வதைப் போல வலது காலை முன்வைத்து, ‘பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹி அல்லாஹும்மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மத்திக, அவூது பில்லாஹில் அளீம் வ பி வஜ்ஹிஹில் கரீம் வ சுல்தானிஹில் கதீம் மினஷ்ஷைத்தானிர்ரஜீம்’ என்று ஓதிக்கொண்டு நுழைய வேண்டும்.

4) பிறகு அங்கு தஹிய்யத்துல் மஸ்ஜித் இரு ரக்அத்கள் தொழ வேண்டும்.

5) பிறகு நபி (ஸல்), மற்றும் அன்னாரின் தோழர்களான அபூ பக்ர் (ரழி), உமர் (ரழி) ஆகியோரின் கப்ருகளுக்கு அருகே சென்று, அஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹ் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைக்க யா அபா பக்ர், அஸ்ஸலாமு அலைக்க யா உமர், என்று கூறி விட்டு அங்கு தாமதிக்காமல் சென்று விட வேண்டும்.

6) மஸ்ஜிது குபாவைத் தரிசித்து அங்கு இரு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கதாகும். ஏனெனில், யார் தமது வீட்டில் சுத்தமாகி – உழூ செய்து பிறகு மஸ்ஜிது குபா வந்து இரு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு உம்ராவின் கூலி கிடைக்கும் என்பது நபிமொழி (அஹ்மத், நஸயீ).

7) பொது மைய வாடியான பகீஃ, உஹதில் ஷஹீதானவர்களின் கப்ருகள் ஆகியவற்றை ஸியாரத் செய்வதும் விரும்பத்தக்கதே. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அக்கப்ருகளை ஸியாரத் செய்துள்ளதுடன் அவர்களுக்காக துஆவும் செய்துள்ளார்கள். இது பற்றி பொதுவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாவது: கப்ருகளைத் தரிசிப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். அறிந்துக்கொள்க! இனி அவற்றைத் தரிசியுங்கள்! (முஸ்லிம்). மேலும் நபி (ஸல்) அவர்கள், கப்ருகளைக் கண்டால், ‘அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன், வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன், நஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆஃபியா’|என்று கூற வேண்டுமென தமது தோழருக்குக் கூறியுள்ளார்கள் (முஸ்லிம்

மதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்
– எம். றிஸ்கான் முஸ்தீன் ஸலபி

1) நபியவர்களிடம் பிராத்தித்தல் அல்லது தனது கஷ்டத்தை போக்குமாறு, தனது தோவையை நிறைவு செய்து தருமாறு உதவி தேடி வேண்டுதல் வைத்தல் ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்கப்பட வேண்டியவைகளாகும். காரணம் பிரார்தனை எமது மார்கத்தில் ஒரு வணக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நபியவர்களே பின்வருமாறு கூறினார்கள் ‘ துஆ (பிரார்த்தனை) அது ஒரு வணக்கமாகும்.’ அபூதாவூத், திர்மிதி.

எமவே வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்யப்படவேண்டியதாகும். இது அல்லாஹ்வுக்குக் கொடுக்கக் கூடிய உரிமை இதனை யாராவது மற்றவர்களுக்கு கொடுத்து விடுவாரேயானால் அவர் அல்லாஹ்வின் உரிமையில் கைவைத்தவர் ஆகிவிடுவார். அதே வேலை இவ்வாறு அல்லாஹ் அல்லாதவரை அழைத்து பிராத்திக்கும் போது (அது நபியாக இருந்தாலும்) அல்லாஹ் வோடு நபியை இணையாக்கிவிட்டோம் என்ற அல்லாஹ் மன்னிக்காத ஷிர்க் என்ற பாவத்தை செய்தவர்களாக கணிக்கப்பட்டுவிடுவோம்.

நபியவர்கள் கூட எங்களைப் போன்று சாதாரனமாக தனது தோவைகளை அல்லாஹ்விடம் கோட்டிருக்கின்றார்கள். பொதுவாக கப்ரிலே அடங்கப்பட்டிருக்கின்ற யாரிடமும் எமது தேவையை முன்வைக்க முடியாது. நபியவர்கள் கப்ரிலே ‘பர்ஸஹ்’ (திரையிடப்பட்ட வாழ்கையில்) இருக்கின்றார்கள். இவ்வாழ்கை எவ்வாரு இருக்கும் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும். இந்த ‘பர்ஸஹ்’ உலக வாழ்க்கைகும் நாம் அனைவரும் எழுப்படும் மருமை வாழ்க்கைக்கும் இடைப்பட்ட ஒரு வித்தியாசமான வாழ்க்கையாகும்.

எனவே உயிரோடு நபியவர்கள் இருக்கும் போது ஸஹாபாக்கள் நபியவர்களிடம் சென்று யா ரஸுலல்லாஹ் எனக்காக அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள் என்று கேட்டதை ஆதாரமாக கொண்டு நாமும் எமது தேவையை நபியவர்களிடம் சென்று கேட்டக்க முடியாது. காரணம் இப்பொழுது நபியவர்கள் இருக்கும் வாழ்க்கையை நாம் யாருமே அறியமாட்டோம். அதே வேலை பிராத்தனை என்ற வணக்கத்தை அல்லாஹ் அல்லாதவரிடம் செய்ய முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதே வேலை மதீனாவில் இருக்கூடிய சில இடங்களை மக்கள் தாமாகவோ அல்லது தமது உலமாக்கள் மூலமாகவோ இது பாத்திமா (ரழி) யின் கபுரு, இது அலி (ரழி) யின் கபுரு, இது இன்ன ஸஹாபியின் கபுரு என்று நினைத்துக் கொண்டு அந்த இடங்களுக்குச் சென்று அவர்களிடம் தமது தேவைகளை கடிதங்களில் எழுதி கட்டிவைப்பதும் அல்லது துனிகளில் வைத்து கட்டிவைப்பதையும் காண்கின்றோம்.

(மொழிபெயர்பாளனின் அனுபவம்: 2009ம் ஆண்டு ஹஜ்ஜின் போது ‘ஹன்தக்’ பிரதேசத்தில் ஹாஜிகளுக்கு மொழிபெயர்பாலனாக கடமையாற்றிய போது அல்லாஹ்வை மறந்து ஸஹாபாக்களிடம் தமது தேவைகளான நோய், காதல் பிழவு போன்ற வற்றை முறையிட்டு எழுதியிருந்த கடிதங்களை கண்கூடாக பார்க்கக்கிடைத்தது.) எனவே இது மிகப் பெரும் ஷிர்க் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

2) நபியவர்களின் கபுரு இருக்கும் இடத்திற்கு செல்லும் போது இரண்டு கைகளையும் நெஞ்சிலே வைத்து தொழுகையில் நிற்பது போன்று நிற்பது கூடாது. அல்லாஹ்வின் முன்னிலையில் மாத்திரம் தான் இவ்வாரு சிறுமையாக பணிவை வெளிக்காட்டி தொழுகையில் நிற்க்க வேண்டும். நபியவர்களுடை தோழர்கள் நபியவர்களுடைய கபுரை தரிசிக்க வரும் போது இவ்வாறு இரு கைகளையும் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு வரவில்லை. இச்செயலின் மூலம் நன்மை கிடைக்கும் என்றால் ஸஹாபாக்கள் நிச்சயமாக செய்திருப்பர். எனவே நாமும் இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

3) நபியவர்களது கபுரை சூழவுள்ள சிவரை அல்லது யன்னல்களை தடவுதல் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு செயவாகும். இவ்வாரான ஒரு வழிகட்டளை நபியவர்கள் எமக்கு போதிக்கவில்லை. அதே வேலை எமக்கு முன்னிருந்தவர்கள் கூட இவ்வாறு தொட்டு முகர்ந்து கொள்ளவில்லை. மாறாக இது எம்மை ஷிர்க் எனும் இணைவைத்தளுக்கு அழைத்துச் சென்று விடும். இவ்வாறு செய்யக் கூடியவர்கள் நபியவர்கள் மீதுள்ள அன்பினால் நான் இவ்வாறு செய்கின்றேன் எனலாம். ஆனால் நபியவர்கள் மீதுள்ள அன்பு ஒவ்வொரு முஸ்லிமினதும் உள்ளத்தில் இருக்க வேண்டும். தனது பிள்ளைகள், பெற்றோரை விடவும் நபியவர்கள் அன்பு வைக்க வேண்டும். ஆனால் அந்த அன்பை இவ்வாறு சுவரை, யன்னலை தொட்டு முகர்ந்து வெளிப்படுத்த முடியாது. அன்பை ஒரு முஸ்லிம் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்றால் நபியவர்களை முழுமையாக பின்பற்றுவதன் மூலம் தான் அல்லாஹ்வின் அன்பைக் கூட பெறமுடிகின்றது.

அல்லாஹ் இதனை பின்வருமாறு கூறுகின்றான்.

(நபியே!) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்ல்லாஹ் மன்னிப் பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (ஆல இம்ரான் 31)

நபியவர்களை நல்ல முறையில் பின்பற்றுவதன் மூலமாகத்தான் அவர்களது அன்பையும் அல்லாஹ்வின் அன்பையும் பெறமுடிகின்றது என்பதை மேற்படி வசனத்தின் மூலம் விளங்கலாம். நபியவர்களின் மீது அன்புவைத்தலைப் பற்றி பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.

‘யார் ஒருவர் தனது தந்தை, பெற்றோர், பிள்ளைகள் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விடவும் என்னை நேசிக்காத வரை முஃமினாகமாட்டார்.’ புகாரி, முஸ்லிம்.

இதை விட ஒருபடி மேலேரி உமர் (ரழி) அவர்களுக்கு தனது உயிரை விட என்னை நேசிக்க வேண்டும் என்று நபியவர்கள் வழிகாட்டினார்கள்.  புகாரி.

காரணம் நாம் இன்று முஸ்லிமாக இருக்கின்றோம் என்றால் அதற்கு நபியவர்களைக் கொண்டுதான் அந்த பாக்கியத்தை அல்லாஹ் எமக்கு வழங்கியுள்ளான். உலகில் இருக்கக்கூடிய மார்க்கங்களில் உண்மையான மார்க்கத்தை பின்பற்றுவது மிகப் பெறும் அறுட்கொடையாகும். எனவே இந்த அறுட்கொடையை நபியவர்களின் மூலமாக பெற்ற நாம் அவர்கள் காட்டித்தந்த மார்க்கத்தை தூயவடிவில் பின்பற்ற வேண்டும். எமது இபாதத்துக்களை அவர் சொல்லித்தந்த அமைப்பிலே மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நபியை நேசிப்பவராக முடியும். ஒருவரை நேசிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு அவருக்கு மாறு செய்யும் போது அது அவர் மீது வைத்துள்ள உண்மையான நேசமாக முடியாது. அவரை ஏமாற்றவதாகத் தான் இருக்க முடியும்.

இஸ்லாத்திலே எந்த ஒரு செயலும் நல்ல அமல் என்ற அந்தஸ்தை அடைய வேண்டும் என்றால் மேலும் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றால் அதற்கு இரு நிபந்தனைகள் இருக்கின்றன.

1) செய்யக் கூடிய செயல் அல்லாஹ்வுக்காக மட்டும் என்ற தூய எண்ணம் (இஹ்லாஸ்)
2) குறித்த செயல் நபியவர்கள் கட்டித்தந்த அடிப்படையில் எந்த கூட்டல் குறைத்தலும் இல்லாமல் செய்தல் (முதாபஆ)

இவை இரண்டில் ஏதாவது ஒன்றில் குறை ஏற்படும் போது குறித்த செயலை எவ்வளவு பிரயத்தனங்களுக்கு மத்தியில் செய்திருந்தாலும் அதற்கு அல்லாஹ்விடத்திலே எந்த பெருமதியும் இல்லாது போய்விடும்.
ஆல இம்ரான் அத்தியாயத்தின் 31ம் வசனமாகிய

(நபியே!) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.

இவ்வசனத்தை சில அறிஞர்கள் சோதனையான வசனம் என்கிறார்கள். இமாம் ஹஸனுல் பஸரி அவர்கள் குறிப்பிடும் போது ‘ சிலர் தான் அல்லாஹ்வை விரும்புவதாக சொல்லிக் கொண்டு இருக்கின்றனர் ஆனால் அல்லாஹ் அவர்களை இவ்வசனத்தின் மூலம் சோதிக்கின்றான்.’

இமாம் இப்னு கஸீர் அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது ‘நபியவர்களின் வழியை பின்பற்றாது அல்லாஹ்வை விரும்புகின்றோம் என வாதிடுவோருக்கு இந்த கண்ணியமான வசனம் தீர்ப்பளிக்கன்றது. நபியவர்கள் கொண்டு வந்த அந்த உண்மையான மார்க்கத்தை தனது எல்லா சொல், செயலும் பின்பற்றாத வரை இவ்வாதம் பொய்பிக்கப் படுகின்றது. புகாரியிலே பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸிலே நபியவர்கள் கூறும் போது (யார் எமது விடயத்திலே (மார்க்கத்தில்) எமது அனுமதி இல்லாமல் ஒரு செயலை செய்கின்றாரோ அது நிராகரிக்கப்படும்.)

எனவே தான் மேற்படி வசனத்திற்கு விளக்கம் கூறும் சிலர் ‘நாம் ஒன்றை விரும்புவதை விட நம்மை (எவர் விரும்புகின்றாரோ அவரை)விரும்புவது முக்கியமாகும்’ எனவே அல்லாஹ்வை நாம் விரும்புகின்றோம் என வாதிடுவதை விட்டு விட்டு அல்லாஹ் எம்மை விரும்புவதற்கு காரணமாக இருக்கும் நபியவர்களை பின்பற்றுதல் எம்மில் வந்தாக வேண்டும்’ என்றார்.

நபியவர்களது கபுரைச் சூலவுள்ள சுவர்களை தொட்டு முகர்வதைப் பற்றி இமாம் நவவி அவர்கள் கூறும் போது ‘ இது மார்க்கத்திற்கு முறனான கண்டிக்கத்தக்க செயலாகும்’ என தனது புத்தகமாகிய (அல்மஜ்மூஃ) இல் குறிப்பிடுகின்றார்.

நபியவர்கள் கூறினார்கள் ‘ யார் எமது மார்க்கத்தில் புதிதாக ஒரு கருமத்தை ஏற்படுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்படும்.’ புகாரி.

அதே வேலை அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் மற்றும் ஒரு அறிவிப்பில் ‘ எனது கபுரை பெருநாள் (கொண்டாடும் இடம்) போன்று ஆக்கிவிடாதீர்கள். என் மீது ஸலவாத்து சொல்லுங்கள் உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் என்னை வந்தடையும்.’ அபூதாவூத்.

இமாம் அல் புலைல் இப்னு இயால் (ரஹ்) இவ்ஹதீஸுக்கு விளக்கம் கூறும் போது ‘நேர் வழியை சொற்ப்ப எண்ணிக்கையினர் பின்பற்றினாலும் அது உனக்கு தீங்கு தராது நீ நேர் வழியை பின்பற்று. அழிவின் பக்கம் (வழிகேட்டில்) பெரும் பான்மையினரான மக்கள் இருந்த போதிலும் வழிகோட்டை பின்பற்றுவதை விட்டும் உன்னை எச்சரிக்கின்றேன்’ என்றார்.

அறியாமையுடன் கபுரைத் தொடுவது, முத்தமிடுவது என்பன பரக்கத்தை தந்துவிடாது. இச்செயல் வன்மையாக கண்டிக்த்தக்கவையாகும். மேலும் பரகத்து என்பது மார்க்கத்திற்கு உடன்பாடான விடயங்களில் தான் இருக்க முடியும். சத்தியத்திற்கு மாற்றமாக செயற்பட்டு விட்டு பரக்கத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதனை எந்த ஒரு பகுத்தறிவாளனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

4) நபியவர்களின் கபுரைச் சுற்றி வலம்வருதல் மிகவும் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. காரணம் அல்லாஹ் அவனது முதலாவது ஆலயமாகிய கஃபாவை மாத்திரம் தான் வலம் வருவதை (தவாப்) மார்க்கமாக்கியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்,
பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி நகம் வெட்டி குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை ‘தவாஃபும்’ செய்ய வேண்டும். அல் ஹஜ் 29

இஸ்லாத்தில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற அமல்களை உலகின் எப்பகுதியில் இருந்தாலும் நிறைவேற்றக் கொள்ளலாம். ஆனால் இந்த தவாப் எனும் வணக்கத்தை மாக்கா நகருக்கு செல்லாமல் நிறைவேற்ற முடியாது.

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது ‘அல்லாஹ்வின் ஆலயமாகிய (கஃபாத்) தவிர பைத்துல் முகத்தஸிற்கு அருகில் உள்ள குப்பதுஸ் ஸஹ்ராவையோ அல்லது நபியவர்களது கப்ரையோ, அரபா மலையில் இருக்கும் அந்த அடையாளத்தையோ தவாப் செய்யமுடியாது என்பதில் முஸ்லிம் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தில் உள்ளனர்.’ என்கிறார்.

5) நபியவர்களது கபுருக்கு அருகில் சத்ததை உயர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

நபியவர்கள் உயிரோடு இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுக்கத்தை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள், மேலும் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல் அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள். (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இருதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் – அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு. (ஹுஜ்ராத் 2,3)

இதுலிருந்து நபியவர்கள் உயிரோடு இருக்கும் போதும், மரணித்த பின்னரும் கண்ணியத்துக்குறியவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

6) பள்ளிக்கு வெளியவோ, பள்ளிக்கு உள்ளேயோ தூரத்தில் இருந்த போதிலும் நபியவர்களது கப்ரை முன்னோக்கித்தான் அவர்கள் மீது ஸலாம் சொல்லியாக வேண்டும் என எண்ணுவது

இது தொடர்பாக நூலாசிரியரின் ஆசான் ஆகிய அஷ்ஷெய்க் பின் பாஸ் (ரஹ்) கூறும் போது இச்செயல் ஒரு தூய்மையான நிலையில் இருந்து மிதமிஞ்சிய நிலைக்கு இட்டுச்செல்லும் என்கின்றார்.

அதே வேலை சில மக்கள் மதீனாவுக்குவரும் போது அதினமான மக்களின் ஸலாத்தை எத்திவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்றார்கள். இச்செயலை அங்கிகரிக்கூடிய வகையில் எந்த ஒரு ஆதாரத்தையும் நபிவழியில் காணமுடியாது. இவ்வாறு யாரிடமாவது மக்கள் வந்து எனது ஸலாத்தை நபியவர்களுக்கு எத்திவையுங்கள் என்று கூறினால் அதற்கு இவ்வாறு பதில் கூறலாம். ‘ நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகம் ஸலவாத்தும், ஸலாமும் கூறுங்கள். உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் அது மலக்குகளின் மூலமாக நபியவர்களுக்கு எத்திவைக்கப்படும் என்று கூறி அவ்வாறு சொல்லுபவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ‘நிச்சயமாக மலக்குகள் பறந்து கொண்டிருக்கின்றனர் எனது உம்மத்தினரின் ஸலாத்தை அவர்கள் எனக்கு எத்திவைப்பர்.’ நஸாயீலே பதியப்பட்ட நம்பகமான ஹதீஸாகும்.

மற்றும் ஒரு அறிவிப்பிலே ‘உங்கள் வீடுகளை கபுருகளாக ஆக்கிவிடாதீர்கள். எனது கபுரை பெருனால் கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது நீங்கள் ஸலவாத்து சொல்லுங்கள் நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத்து எனக்கு எத்திவைக்கப்படும்.’ அபூதாவூத்

அதே வேலை ஹஜ், உம்ராவுக்கும் மதீனா ஸியாரவுக்கும் சம்மந்தம் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மதீனாவுக்கு வராமலே ஹஜ்ஜை முடித்துவிட்டு அல்லது உம்ராவை முடித்து விட்டு தனது ஊருக்கு திரும்பினால் கூட எந்தப் பிழையும் கிடையாது. அதே வேலை மதீனாவை சியாரத் செய்ய நேரடியாக இங்கு வந்து ஹஜ், உம்ரா செய்யாமல் திரும்பினால் கூட அதற்குறிய நன்மை கிடைத்து விடும்.

ஆனால் ஹஜ், உம்ரா செய்பவர் நபியவர்களின் கப்ரை ஸியாரத் செய்துதான் ஆக வேண்டும் என்பதற்கு சில ஹதீஸ்களை ஆதாரமாக கூறுவார்கள் ‘ யார் ஹஜ் செய்து விட்டு என்னை ஸியாரத் செய்யவில்லையோ அவர் என்னை நோவினை செய்துவிட்டார்.’ மேலும் ‘நான் மரணித்த பின் யார் என்னை ஸியாரத் செய்கின்றாரோ அவர் நான் உயிரோடு இருக்கும் போது ஸியாரத் செய்ததற்கு சமனாகும்.’ மற்றும் ஒரு செய்தியில் ‘ யார் என்னையும் எனது தந்தை இப்ராஹீமையும் ஒரே வருடத்தில் தரிசிக்கின்றாரோ அல்லாஹ்விடம் அருக்கு சுவர்க்கத்தை பெற்றுக் கொடுக்க உத்தரவாதம் அளிக்கின்றேன்.’ மேலும் ‘யார் எனது கபுரை தரிசிக்கின்றாரோ அவருக்கு எனது பரிந்துரை கடமையாகிவிட்டது.’

மேற்குறிப்பிட்ட எல்லா செய்திகளும் ஆதாரபூர்மற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகும் என்பதனை மிகப்பெரும் அறிஞர்களான தாரகுத்னி, உகைலி, பைஹக்கி, இப்னு தைமிய்யா, இப்னு ஹஜர் (ரஹ்) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

அதே வேலை சூரா நிஸாவின் 64ம் வசனமாகிய பின்வரும் வசனத்தை ஆதாரமாக காட்டுகின்றனர்.

‘அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக் கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வ்pன்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக்
கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.’

இந்த வசனம் அனியாயம் செய்த ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து பவமன்னிப்பு தேடுவதை குறிக்கவில்லை மாறாக நபியவர்கள் உயிரோடு இருக்கும் போது முனாபிகீன்கள் அவர்களிடம் வருவதை குறித்துநிற்கின்றது. காரணம் நபித்தோழர்கள் யாருமே நபியவர்களது கபுருக்கு பாவமன்னிப்பு தேடி வந்தது கிடையாது.

உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் வரட்சி ஏற்பட்ட போது நபியவர்களின் கபுருக்குச் செல்லாமல் அப்பாஸ் (ரழி) அவர்களை முன்னிருத்தி துஆச்செய்தார்கள். ‘யா அல்லாஹ் நாம் முன்னர் வரட்சி ஏற்பட்ட போது நபியர்களைக் கொண்டு பிராத்தித்தோம் அப்போது நீ எமக்கு நீர்புகட்டினாய். இப்போது நமது நபியின் சிறிய தந்தையைக் கொண்டு உன்னிடம் பிராத்திக்கின்றோம். நீ எமக்கு நீர்புகட்டுவாயாக’ இந்த துஆவை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் அம்மக்களக்கு மழையை இறக்கினான். ஆதாரம்: புகாரி.

உண்மையிலேயே நபியவர்களின் மரணத்திற்கு பின் அவர்களிடம் சென்று பிராத்திக்க முடியுமாக இருந்தால் உமர் (ரழி) அவர்கள் அதை செய்திருப்பார்கள். அதே போன்று புகாரியிலே பதிவு செய்யப்பட்ட மற்றுமொறு அறிவிப்பிலே ஆயிஷா (ரழி) ஒரு முறை தலைவழி ஏற்பட்ட போது நபியவர்களிடம் முறையிட ‘ நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் நான் உனக்காக பாலமன்னிப்பு தேடுவேன், மேலும் உனக்காக பிரார்திப்பேன்.’ ஆயிஷா (ரழி) இதைக் கேட்ட பின் நபியவர்களுக்கு முன் நானும் மரணிக்க வேண்டாமா? என்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்) புகாரி

நபியவர்களது துஆ அவர்களது மரணத்திற்கு பின்னரும் கிடைக்கும் என்றிருந்தால் நபியவர்கள் ‘ நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்’ என செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

உதவி தேடும் நோக்கம் இல்லாமல் பொது மையவாடிகளை தரிசிப்பதை பற்றி ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. ‘ கபுருகளை தரிசியுங்கள், நிச்சியமாக அது மறுமையை நினைவுபடுத்தும்.’ என்றார்கள். முஸ்லிம்.

என்றாலும் மையவடியிலே நீண்ட நேரம் நின்றுகொண்டிருக்கக் கூடாது. அடிக்கடி சியாரத் செய்யவும் கூடாது. காரணம் இச்செயல் அளவு கடந்த செயற்பாடுகளுக்கு இட்டுச்செல்லும்.

அவ்வாரே நபியவர்கள் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லுவதன் சிறப்பு நிறையவே கூறப்பட்டுள்ளன. இது நபியவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது. உம்மத்தினரின் கபுருகளுக்கு அடிக்கடி செல்லுவதற்கு இதனை ஆதாரமாக கொள்ளக் கூடாது. நபியவர்களுக்கு ஸலவாத்து சொல்லும் போது அது மலக்குகள் வயிலாக எத்திவைக்கப்படும் என்கின்ற ஹதீஸ்களை நாம் ஆறம்பத்திலே அறிந்து கொண்டோம்.

அதே வேலை பகீஃ மற்றும் உஹத் ஷுஹதாக்களை சியாரத்து செய்வது மார்க்க வரம்புக்குல் இருத்தல் வேண்டும். மார்க்க வரம்பு மீறப்படுகின்ற போது அது பித்அத்தான செயலாகிவிடும்.

கபுருகளை தரிசிப்பது எந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதன் பிரயோசனங்கள் என்ன (உயிரோடு இருப்போருக்கும், மரணித்தவருக்கும்) என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் எமக்கு கட்டிக்காட்டிள்ளார்கள்.

உயிரோடு இருக்கும் மனிதர் (தரிசிக்கப் போகின்றவர்) மூன்று பிரயோசனங்கள் அடைந்து கொள்வார்.

1) மரணத்தை ஞாபகப்படுத்திகின்றார். நல்ல செயல்களைச் செய்து மரணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளமுடிகின்றது. இதனை நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ‘கபுருகளை தரிசியுங்கள் அது உங்களுக்கு மருமையை ஞாபகப்படுத்தும்’ முஸ்லிம்.

2) இச்செயல் நபியவர்களின் ஸுன்னாவாக இருப்பதால் இதற்கு நன்மை பதியப்படும்.

3) மரணித்த முஸ்லிம்களுக்காக தூஆச் செய்வதன் மூலம் அவர்களுக்கு நன்மை செய்ததாகிவிடும்.

அதே வேலை மரணித்தவர் கபுருகள் தரிசிக்கப்படுகின்ற போது உயிரோடு இருப்பவரின் பிரார்தனையை பெற்றுக் கொள்கின்றார். இது மரணித்தவர் பெரும் பிரயோசனமாகும். ஏனெனின் மரணித்தோர் உயிரோடு இருப்போரின் துஆவின் மூலம் நன்மை அடைகின்றார்.

நபியவர்கள் காட்டித்தந்த அமைப்பிலே கபுருகளில் இருப்போருக்காக நாம் பிராத்திக்க வேண்டும். புரைதத் இப்னு ஹுஸைப் (ரழி) அறிவிக்கும் ஹதிஸில் நபியவர்கள் கபுருகளுக்குச் சென்றால் பின்வரும் துஆவை ஒதக்கூடியவாக இருந்தார்கள் ‘முஃமின்களிலும், முஸ்லிம்களிலும் கபுருகளில் இருக்க கூடியவர்களே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். மேலும் நிச்சியமாக நாங்களும் உங்களை சந்திக்க இருக்கின்றோம். எங்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடத்திலே மன்னிப்பை வேண்டுகின்றோம்.’ முஸ்லிம்.

கபுருகளை தரிசிப்பது ஆண்களைப் பொருத்தவரையில் விரும்பத்தக்க ஒரு செயலாகும் ஆனால் பெண்களைப் பொருத்தவரை அறிஞர்களுக்கு மத்தியிலே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. ஒருபிரிவினர் இதனை தடைசெய்கின்றனர். மற்றும் சிலர் இச்செயலை அனுமதிக்கின்றனர். என்றாலும் இவ்விரண்டு கருத்துக்களிலும் பெண்களுக்கு கபுருகளை தரிசிப்பதை தடைசெய்யக்கூடிய கருத்து மிகவும் வழுவானது. காரணம் நபியவர்கள் கூறினார்கள் ‘கபுருகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிக்கட்டும்.’ திர்மிதியிலே பதியப்பட்ட ஆதாரபூர்வமான ஹதீஸாகும்.

பெண்களுக்கு ஸியாரத்தை அனுமதிப்பவர்கள் கூறுவது போன்று அடிக்கடி சியாரத் செய்யக் கூடிய பெண்னுக்குத்தான் அல்லாஹ்வின் சாபம் என செல்ல முடியாது. கீழ் வரும் அல்குர்ஆனிய வசனத்திலும் அதிகமான அனியாயம் செய்பவன் என்று பெருள் கொள்ள முடியாது.

உமது இறைவன் அடியார்கள் மீது அனியாயம் செய்பவனாக இல்லை. (சூரா புஸ்ஸிலத் 46)

எனவே பொதுவாகவே சியாரத் செய்யும் பெண்னுக்குத் தான் அல்லாஹ்வின் சாபம் இருக்கின்றது என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் பலகீனமானவர்கள் என்பதாலும் அவ்வாரே அழுவது, ஒப்பாரி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதனாலும் கபுருகளை சியாரம் செய்வது தடைசெய்யப்ட்டுள்ளது எனலாம்.

அவ்வாரே பெண்கள் இதனை விட்டுவிட்டாலும் ஒரு விரும்பத்தக்க விடயத்தை விட்டாதாகவே கருதப்படுமே தவிர கடமையான செயலை விட்டதாகிவிடாது. ஆனால் கபுருகளை தரிசிக்கின்ற போது அல்லாஹ்வின் சாபத்திற்கு சொந்தக்காரியாகின்றால்.

பித்அத்தான தரிசிப்பை பொருத்த வரையில் இஸ்லாம் ஆகுமாக்காத செயல்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். கபுருகளில் அடங்கப்பட்டிருப்பவரிடம் பிரார்தனை செய்வது, அவர்களிடம் உதவி தேடுவது, தமது தேவைதளை நிறைவேற்றுமாறு வேண்டுவது போன்ற பல இஸ்லாத்திற்கு முறனான விடயங்களை உதாரணத்திற்கு கூறலாம். பித்அத்தான தரிசிப்பின் மூலம் கபுருகளிலே உள்ளவர்கள் பிரயோசனப் படப்போவதில்லை. அதே வேலை தரிசிக்கச் சென்றவரும் எந்த வித பிரயோசனங்களும் இல்லாமல் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டு குறித்த இடத்தை விட்டு திரும்பிவர நேரிடும்.

இது தொடர்பாக அஷ்ஷெக் பின் பாஸ் (ரஹ்) அவர்கள் கூறும் போது ‘ மேற்படி அடங்கப்பட்டவர்களிடம் உதவி தேடி தரிசிக்கச் செல்வது பித்அத்தான காரியமாகும். அதே வேலை இஸ்லாம் இதனை தடை செய்துள்ளது. எமக்கு முன்னிருந்தவர்கள் யாருமே இவ்வாறு செய்தது கிடையாது. மாறாக நபியவர்கள் கூறியது போன்று ‘கபுருகளை சியாரத்து செய்யுங்கள் மேலும் கெட்ட வார்த்தைகளை சொல்லாதீர்கள்’ முஸ்னத் அஹமத், முஅத்தா மாலிக் எனவே இச்செயல் பித்அத்தாக இருந்த போதிலும் சில செயல்கள் பித்அத் என்ற அந்தஸ்திலும் மற்றும் சில செயல்கள் ஷிர்க் என்ற நிலையிலும் உள்ளன. அதே வேலை கபுருகளிடம் சென்று அல்லாஹ்விடம் பிரார்திப்பது பித்அத்தான செயலகுவதுடன், கபுருகளில் உள்ளோரிடம் எமது தேவைகளைக் கேட்டுப் பிரார்திப்பது, உதவி தேடுவது இணைவைப்பாகும்.

எல்லம் வல்ல அல்லாஹ் எங்களையும், இந்த மதீனாவிலே வாழக்கூடியவர்களையும், இங்கு தரிசிக்க வருபவர்களையும் பெருந்திக் கொண்டு புகழப்படக்கூடிய நல்ல முடிவை இவ்வுலகிலும், மறுமையிலும் தந்தருள்வானாக! இந்த கண்ணியமான பூமியிலே வசிக்கக்கூடிய பாக்கியத்தையும், நல்ல பண்பாடுகளையும் தந்தருள்வானாக! நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

நன்றி: ‘பல்லுல் மதீனா’ அஷ்ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல்-அப்பாத்

One comment

  1. Allah Nam Anaivarukkum Nervazhi Kaatuvaanaga!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *