Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-28)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-28)

– M.T.M.ஹிஷாம் மதனீ
3:

وقوله سبحانه : (هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم) الحديد

விளக்கம்:
2. அல்லாஹ்வின் உயர்விஸ்தானம், அவனின் நெருக்கம், அவனது நிரந்தரத்தன்மை ஆகியவற்றிக்கிடையிலான கூட்டுச் சேர்வு

மேற்குறித்த வசனத்தில் அல்லாஹுத்தஆலாவுக்குரிய பிரதானமான நான்கு பண்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நான்கு பண்புகளும் எவ்வித முரண்பாடுகளுமின்றி ஒரே வசனத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன என்பதை அவதானிப்பீர்கள். அவ்வசனத்தின் தமிழ்வடிவமானது.. ..

“முதலாமவனும், இறுதியானவனும், மேலானவனும், அந்தரங்கமானவனும் அவனே! அவன் யாவற்றையும் நன்கறிந்தவன்.” (அல்ஹதீத்: 3)

இவ்வசனத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய பண்புகள் தொடர்பாக நபியவர்கள் செய்த ஒரு துஆ வியாக்கியானமாக அமைந்துள்ளது.

“இறைவா! நீ ஆரம்பமானவன் உனக்கு முன் எதுவும் கிடையாது, மேலும், நீ இறுதியானவன் உனக்குப் பிறகு எதுவும் கிடையாது, இன்னும் நீ மேலானவன் உனக்கு மேலால் எதுவும் கிடையாது, மற்றும் நீ அந்தரங்கமானவன் உனக்குக் கீழால் எதுவும் கிடையாது.” (முஸ்லிம்)

இத்தகைய பண்புகளானது, அல்லாஹ்விடத்தில் இருக்கக்கூடிய யாவற்றையும் சூழ்ந்த தன்மையைப்பற்றிப் பேசுகின்றன. அந்தவிதத்தில் இந்நான்கு பண்புகளையும் பிரதானமாக இரு பிரிவுக்குள் உள்ளடக்கலாம்.

1. காலத்துடன் தொடர்புடைய பண்புகள்
இப்பிரிவுக்குள் மேற்குறித்த பண்புகளில் முதலாமவன், இறுதியானவன் ஆகியன உள்ளடங்குகின்றன.

2. இடத்துடன் தொடர்புடைய பண்புகள்
இப்பிரிவுக்குள் மீதமாக இருக்கக்கூடிய பண்புகளான மேலானவன், அந்தரங்கமானவன் ஆகியன உள்ளடங்குகின்றன.

இப்பண்புகளின் எதார்த்த தன்மை குறித்து இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறும்போது: “இந்நான்கு பண்புகளும் ஒன்றுக்கொன்று நிகரானது, அவற்றுள் இரு பண்புகள் அல்லாஹுத்தஆலாவின் ஆதி மற்றும் நிலைத்திருக்கக்கூடிய தன்மைகளைப் பிரதிபலிக்கின்றன. ஏனைய இரு பண்புகளும் அவனது உயர் இஸ்தானத்தையும், சமீபமாக இருக்கும் தன்மையையும் பிரதிபளிக்கின்றன. மேலும், அவனது முதன்மைத் தன்மையானது அவனுக்கு முன் எதுவும் முதன்மைவகிக்க முடியாது என்பதையும், அவனது இறுதித் தன்மையானது அவனுக்குப் பிறகு எதுவும் இடம்பெற முடியாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, அவனது முதன்மைத்தன்மையானது மற்றெல்லாவற்றையும் விட முந்தியவன் என்பதையும், அவனது இறுதித்தன்மையானது அனைத்துக்குப் பிறகும் அவன் நிலைத்திருப்பான் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. இன்னும், மேலானவன் என்ற அவனது பண்பு எல்லாவற்றையும் விட அவன் உயர இருக்கின்றான் என்பதையும், அந்தரங்கமானவன் என்ற பண்பு ஆத்மாவைவிட அவன் மிக சமீபமாக இருக்கும் விதத்தில் எல்லா விடயங்கள் பற்றிய அவனது அறிவு சூழ்ந்திருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.”

மேலும், மேற்குறித்த வசனத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய “அவன் யாவற்றையும் நன்கறிந்தவன்” என்ற வாசகமானது, மேலுலகம், கீழுலகம், வெளிப்படையானவை, மறைமுகமானவை தொடர்பான முக்காலத்துடனும் சம்பந்தப்பட்ட அறிவு அல்லாஹ்விடத்தில் இருக்கின்றது என்பதைப் பிரஸ்தாபிக்கின்றது.

எனவே, காலம், இடம், நுண்ணிய கண்காணிப்பு, வரையறுத்தல், நிர்வகித்தல், மேன்மையாக விளங்குதல், பரிசுத்தமானவன் போன்றவற்றுடன் தொடர்புடைய இப்பண்புகளை நாமும் உறுதிப்படுத்துவோமாக!

3 comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,
    இப்புத்தகத்தை தொடர் 01 முதல் 28 வரை PDF வடிவில் பெற்றுக்கொள்ள dawahsalaffiyyah@yahoo.com முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.

    01-28 PDF – Please contact dawahsalaffiyyah@yahoo.com

  2. i was searching for a spiritual reference over nature and quality of Allah AND Creation and what is called in modern spirituality “consciousness” . these pages cleared of me some of my doubts.Wonderful work in the path of Allah.

  3. may ALLAH poured HIS blessings on you! Hisham! amazing work! different experience in tamil!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *