Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » கண் திருஷ்டிக்கு ஒட்டகக் கழுத்தில் எதையும் கட்டாதே.

கண் திருஷ்டிக்கு ஒட்டகக் கழுத்தில் எதையும் கட்டாதே.

1371. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, ‘எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகிற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்” என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ர் (ரஹ்), ‘அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள்’ என்று அபூ பஷீர் (ரலி) கூறினார் என எண்ணுகிறேன்” என்று கூறுகிறார்கள்.

புஹாரி : 3005 அபூபஷீர் அல் அன்ஸாரி (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *