Featured Posts

எழுதுவோம்.

//*காஃபாவைப் புனித ஆலயமாக இஸ்லாம் அறிவித்திருப்பதால் அங்கே கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய சிலக் கட்டுபாடுகள் உண்டு, இஸ்லாத்தைச் சார்ந்தவர்களாலேயே அதைப்பேண முடியும் மற்றவர்களுக்குத் தெரியாது என்பதால் இயலாது. இது பற்றி விரிவாக என்பதிவில் எழுதவுள்ளேன்.—சிவா & ஈரோடு பிலிம்ஸ்,இது குறித்து எழுதுகிறேன். தற்போது நிறைய வேலைகள் இருப்பதால் உடனடியாக எழுத இயலாது என்றே நினைக்கிறேன். அதற்குள் அபூ முஹை அவர்கள் மேலே கண்டிருப்பது போன்று இது குறித்து விளக்கி எழுதுவார் …

Read More »

இறை நேசர்கள் (2)

வாழ்க்கையில் எப்படித்தான் சிக்கல்கள், துன்பங்கள், துயரங்கள் நேர்ந்தாலும் அவற்றிலிருந்து விடுதலை பெற அல்லாஹ் ஒருவனை மட்டும் நாட வேண்டும். எவரிடத்திலும் முஸ்லிம் தன் துயரங்களை முறையிடுதல் ஆகாது என்று குர்ஆன் விளக்கிக் காட்டுகிறது: “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றித் திருப்தியடைந்து ‘அல்லாஹ் நமக்குப் போதுமானவன், அல்லாஹ் தன் கிருபையைக் கொண்டு மேலும் அருள் புரிவான், அவனுடைய தூதரும் (அருள் புரியலாம்) நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்’ என …

Read More »

அவசரப் பதிவு.

//*இந்நிலையில் என்னை வசைபாடுவதை விடுத்து (குறிப்பாக அபூ முஹை அவரது ஒரு பதிவில் என்னையும் எனது பிறப்பையும் பற்றி வசைபாடியிருந்தார்),*// மனித குலம் அனைத்தும் தொடக்கத்தில் ஒரே தாய், தந்தையிடமிருந்தே பல்கிப் பெருகியவர்கள் என்பதை ஆழமாக நம்புபவன் நான். நேசகுமாரின் கர்வத்தையே நான் சாடியிருக்கிறேன், அவரது பிறப்பைப் பற்றி எங்கும் வசைபாடியதில்லை. என் மீது சுமத்தும் இந்தக் குற்றச்சாட்டு தவறான புரிதல், அல்லது அவதூறாகவே இருக்க வேண்டும். எடுத்துக் காட்டினால் …

Read More »

51] ஹிட்லரின் விஷவாயு கொலைக்கூடங்கள்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 51 முதன்முதலில் ஹிட்லரை சந்தோஷப்படுத்துவதற்காகத்தான் நாஜிகள், யூதர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். பிறகு, யூத ஒழிப்பு என்பது ஜெர்மானிய அரசின் தலையாய செயல்திட்டங்களுள் ஒன்றானபோது, பார்க்கும் இடங்களில் தென்படும் அத்தனை யூதர்களையும் கொன்றார்கள். ஒரு கட்டத்தில், ஹிட்லரின் சந்தோஷம், தேசிய செயல்திட்டம் என்பதையெல்லாம் தாண்டி, யூதர்களைக் கொல்வதென்பது, ஜெர்மானிய நாஜிகளுக்கு ஒரு நோய் போலவே ஆகிவிட்டது. ரத்தத்தில் கலந்துவிட்ட தொற்றுநோய். பொழுது விடிந்து பொழுதுபோனால், …

Read More »

தலாக் புகழ் நந்தலாலாவிற்கு

நந்தலாலாவின் தலாக்.. தலாக்.. தலாக் பதிவிற்காக அன்பின் நந்தலாலா,வித்தியாசமாக எழுதும் பழக்கம் உள்ளவரான நீங்கள், தவறான விபரங்களை உங்களின் கட்டுரையில் இடம்பெறச் செய்துள்ளீர்கள். விவாகரத்து சட்டத்தை அரசாங்க சட்டத்திலிருந்து எடுக்கவேண்டும் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள். ஆனால் தலாக்கிற்கு தலாக் விடவேண்டும் என்று சொல்வதற்கு காரணம், அதனை புரிந்துக்கொண்ட விதமும் முஸ்லிம்கள் அதனை தவறாக பயன்படுத்திய விதமும்தான். தலாக் என்பது உங்களுக்கு வெறுப்பாக இருந்தால் விவாகரத்து என்று சொல்லலாம். தவறொன்றும் …

Read More »

ஆரோக்கியமான விவாதம்

நண்பர் ஆரோக்கியம் எனது வலைப்பதிவில் பின்னூட்டத்தின் மூலமாக ‘நான் விவாதத்திற்கு தயார்’ என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு இஸ்லாமிய மதத்தை விட்டு வெளியேற உரிமையில்லை, அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனையே என்றும் அது தொடர்பாக தனது பதிவிலே ஒரு சில விளக்கங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். அவரது இந்த குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கு முன்னர் ஒரு சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். ‘முஸ்லீம்கள் எல்லோரும் தீவிரவாதிகள்’ …

Read More »

50] ஹிட்லரால் அழிக்கப்பட்ட யூதர்கள்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 50 ஹிட்லரின் யூத வெறுப்பு அல்லது யூத இன ஒழிப்புத் திட்டம் எத்தகையது என்பதை எத்தனை பக்கங்கள் வருணித்தாலும், அதன் முழு வீரியத்துடன் புரிந்துகொள்வது கஷ்டம். ஹிட்லரின் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே அது புரியும். அதுகூட ஓரளவுக்குத்தான். ஹிட்லர் காலத்து ஜெர்மானிய யூதர்களுக்கு மட்டுமே தெரிந்த பேயாட்டம் அது. ஒரு யூதரை முதல் முறையாகப் பார்க்கும்போதே, அவர் பிணமாக இருந்தால் …

Read More »

இறை நேசர்கள்.(1)

மெய்யான இறை நேசச்செல்வர்கள் இறை நம்பிக்கையிலும், பக்தியிலும் தீர்க்கமானவர்களாக இருப்பார்கள். அல்லாஹ்வின் பயம் என்றும் அவர்களின் இதயங்களில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும். அல்லாஹ் அல்லாத எவரையும் (அவர் நபியாகட்டும், வலியாகட்டும், ஜின்னாகட்டும்) அவர்கள் அஞ்ச மாட்டார்கள். அல்லாஹ்வின் பக்கம் மாத்திரமே இவர்கள் பக்தி செலுத்துவார்கள். உண்மைக்கு மாறாக ஷிர்க்வாத கருத்துகளுக்கு ஒருபோதும் இவர்கள் இசைய மாட்டார்கள். திருக்குர்ஆனையும், ஹதீஸையும் வைத்து துருவி ஆராய்ந்து இஸ்லாத்தில் உள்ளவற்றை மட்டும் எடுத்துச் செயல்படுவார்கள். …

Read More »

தலாக் ஓர் விளக்கம் -1

தவறாகப் புரியப்பட்ட சட்டங்களில் ”தலாக்” – விவாகரத்துச் சட்டமும் அடங்கும். தங்களை அறிவு ஜீவி(?) என்று சொல்லிக் கொள்பவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ”தலாக்” சட்டத்தினால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள், இஸ்லாத்தில் பெண்ணியத்திற்கு பாதுபாப்பு இல்லை’ என்று அறிவு ஜீவித்தனத்திற்கு – இஸ்லாத்தை விமர்சிப்பதே அளவு கோலாகி விட்டது. இந்த அறிவு ஜீவிகளிடம் மறு பக்க சிந்தனையை ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் கட்டாயம் தலாக் – …

Read More »

கஃபா மனிதனைத் தாவஃப் செய்கிறதா?

புனித மக்கமாநகரில் இருக்கின்ற ஆதி இறையில்லமான கஃபத்துல்லாஹ் அப்படியே எழுந்து வந்து தன்னை (தவாஃப்) சுற்றுவது போல சில காட்சிகள், மாபெரும் அர்ஷும், அதன் மீது பெரியதொரு உருவமும் இருப்பது போலக் காணும் இன்னொரு காட்சி, யார் யாரோ வானத்தில் பறந்து செல்கிறார்கள், சிலர் அணிவகுத்து வானத்திலிருந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர், இத்தகைய இன்னுமொரு காட்சி இத்தகைய காட்சிகளைச் சிலர் காணுகின்றனர்.

Read More »