Featured Posts
Home » Tag Archives: இஸ்லாம் (page 24)

Tag Archives: இஸ்லாம்

திருடுதல்

அல்லாஹ் கூறுகிறான்: “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்” (5:38) திருட்டுக் குற்றங்களில் மிகப்பெரும் குற்றம் பழமையான அல்லாஹ்வின் ஆலயத்தை ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்களிடம் திருடுவதாகும். இத்தகைய திருடர்கள் இப்புவியின் மிகச்சிறந்த இடமான மஸ்ஜிதுல் ஹராமிலும் அதைச் சுற்றிய இடங்களிலும் கூட அல்லாஹ்வின் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (16)

அன்னிய ஆட்யின் கீழ் சிறுவரும் சிறுமியரும் பெற்ற புதுமுறைக் கல்வியினால் விளைந்த ஒழுக்கக் கேட்டை மிகைப்படுத்திக் கூறுவது கடினமாகும். அவர்கள் தம் சொந்த கலாச்சாரத்திற்குப் பதில் இழிந்த, பகட்டு மிக்க மேனாட்டுப் போலிக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். மேனாட்டு அறிவு தான் மிக்க உண்மையானது, நம்பத்தக்கது என்றும் மேனாட்டு ஒழுக்க முறை தான் தூய்மை மிக்கதென்றும் மேனாட்டு நாகரிகமே மனித மூளை தோற்றுவித்த மிகச் சிறந்த நாகரிகம் என்றும் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (15)

மூன்றாவது கட்டம்: அன்னியர் ஆட்சியும் அதன் விளைவுகளும். எமது வரலாற்றின் மூன்றாவது கட்டத்தை விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை. அதிலிருந்து நாம் மீட்சி பெற்று சில ஆண்டுகளே ஆகின்றன. அக்கட்டம் எப்படியிருந்தது என்பதை மறந்து விடாது நினைவில் வைத்திருக்கும் பலர் எம்மிடையே இருக்கின்றனர். இருப்பினும் மக்களின் சுதந்திரத்தின் மீது அந்நியர் ஆட்சி விதித்த கட்டுப்பாடுகள் பற்றி மங்கலான நினைவுள்ள ஒரு புது சந்ததியினர் வளர்ந்துள்ளனர். அவர்களின் பயன் கருதி இங்கு …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (14)

இதுவரை, இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கட்டத்தில் முஸ்லிம் உலகில் பல்கிப் பெருகிய தீமைகளை அளவிட்டுக் காண்பிக்க ஒரு முயற்சி செய்துள்ளேன். இரண்டாம் கட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட தீய சக்திகள் இஸ்லாமிய வரலாற்றின் மூன்றாம் கட்டம் தோன்றுவதற்கு ஒத்துழைத்தன. இம்மூன்றாம் கட்டத்தில் முஸ்லிம் உலகின் ஒரு பெரும் பகுதியில் ஐரோப்பியக் குடியேற்ற நாட்டு ஆட்சி தாபிக்கப் படுவதைக் காண்கிறோம். பிலிப்பைன் முதல் மொரோக்கோ வரையுள்ள பூகோளப் பகுதியில் எல்லா இஸ்லாமிய நாடுகளும் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (13)

முடியரசு முஸ்லிம்களிடையே இன உணர்ச்சியை பிறப்பித்து வளர்த்தது. தம் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மன்னர்கள் இனவேறுபாடுகளை, பழி பாவத்திற்கு அஞ்சாமல் பயன்படுத்தினர். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உமையாக்களுக்கும் அப்பாசியருக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தில் அப்பாசியர் பாரசீகர்களின் ஆதரவைப் பெற நாடினர். இதற்காக அரேபிய உமையாக்களுக்கு எதிராகப் புரட்சி செய்யுமாறு அவர்கள் பாரசீகர்களைத் தூண்டினர். பல்வேறு முஸ்லிம் குழுக்களுக்கு இடையே நிலவிய பகைமையைப் பயன்படுத்தும் கொள்கையைப் பல நூற்றாண்டுகளாக மன்னர்கள் கடைபிடித்து …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (12)

இன, பிரதேச வேறுபாடுணர்ச்சிகள் இக்காலப்பிரிவில் மற்றொரு தீமை தலைதூக்கியது. இது இஸ்லாமிய உலகின் ஐக்கியத்தையே சிதறடிக்கக் கூடிய ஆபத்தாக மாறியது. அது முஸ்லிம் நாடுகளில் வளர்ந்த பிரதேசவாதமும் இனவாதமுமாகும். இஸ்லாமியக் கொள்கையில் மனிதத் தன்மைக்கு ஒரு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. மனித இனம் இறைவனின் குடும்பம் என்றும், அதன் ஒவ்வோர் உறுப்பினரும் மற்றவர்கள் அனைவரதும் நல்வாழ்வுக்குப் பொறுப்பாளராவார் என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள். முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஒருமைப் பாட்டினை …

Read More »

யூத கிருஸ்தவர்கள் – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

வழங்குபவர்: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ வெளியீடு: அல்ஜுபைல் அழைப்பு மையம் (சவுதி அரேபியா) நாள்: 03.03.2006

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (11)

கல்வியை வளர்ப்பதற்கு அரைகுறையாக எடுக்கப்பட்ட முயற்சிகள் முஸ்லிம் சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்ய இயலவில்லை. பெரும்பான்மையான மக்கள் அறியாமையிலேயே உழன்றனர். ஆதலால் அரச அலுவல்களில் விவேகத்துடன் கூடிய அக்கறை கொள்ளும் தகைமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை. அவர்கள் எளிதில் மன்னர்களுக்கு வசப்படக்கூடிய பிரசைகளாகவே இருந்தனர். இஸ்லாத்தின் சனநாயக இலட்சியம் அவர்களைக் கவரவில்லை. அதிகாரத்திற்கு கண்மூடித்தனமாக அடிபணிதல் முடியாட்சியில் ஒரு நல்ல பணியாகக் கருதப்பட்டது. தன்மான உணர்ச்சிக்கு அங்கு இடமே இருக்கவில்லை. இஸ்லாம் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (10)

கல்விக்கு ஏற்பாடின்மை.மேலே நாம் கூறியது போல முடியரசின் கீழ் இஸ்லாமிய ஒழியைப் பரப்பும் பெரும்பணி தனி மனிதர்களின் பொறுப்பாக மாறிற்று. உலமா, சூபிப் பெருமக்கள், ஏன் வர்த்தகர்களும் கூடக் காட்டிய பேரார்வத்தின் காரணமாகத் தொடர்ந்து இஸ்லாத்தின் பால் பலர் கவரப்பட்டு வந்தனர். ஒரு காலத்தில் பேரருவியாக ஓடிக் கொண்டிருந்த புது முஸ்லிம்களின் பெருக்கம் நாளடைவில் சிற்றோடையாகச் சுருங்கிற்று. ஆனால் அது ஒரு போதும் வற்றி வரண்டு விடவில்லை. அரசர்களின் ஆதரவு …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (9)

பிளவுபட்ட தலைமை முடியாட்சி தாபிக்கப்பட்டதினால் விளைந்த முதல் கேடு தலைமை இருகூறாகப் பிளவுபட்டமையாகும். அண்ணலாரதும் தொடக்க காலக் கலீபாக்களதும் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரே தலைமையின் கீழ் இருந்தது. மத்திய அதிகாரபீடமே யாவற்றுக்கும் மேலானதாகத் திகழ்ந்தது. ஒழுக்கம், அறிவு, சமூகம், அரசியல் முதலிய அத்தனை வாழ்க்கைத் துறைகளும் அம்மத்திய அதிகார பீடத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இருந்தன. மக்களால் தெரிவு செய்யப்பட்டவரான கலீபாவே மதத் தலைவராகவும், ஆட்சியாளராகவும் விளங்கினார். அவர் …

Read More »