Featured Posts
Home » Tag Archives: நல்லடியார் (page 2)

Tag Archives: நல்லடியார்

அமர்நாத் முதல் சேதுக் கால்வாய் வரை!

காஷ்மீரில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் மதஉணர்வுகளை மதித்து, அரசியல் இலாப நட்டங்களைப் பாராமல் நேர்மையாக நிலம் ஒதுக்க முன்வந்து,கூட்டணியினரின் எதிர்ப்பால் ஆட்சி கவிழும் நிலையில், ஷ்ரைன் போர்டுக்குக் கொடுத்த நிலத்தைத் திரும்பப் பெற்று, சுற்றுலாத் துறையே அமர்நாத் யாத்ரீகர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கும் என்று அறிவித்த பிறகும் பலத்தை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை துறந்துள்ள முதல்வர் குலாம்நபி ஆசாத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மஸ்ஜிதை வன்முறையாக …

Read More »

பொது சிவில் சட்டம்

சென்ற மாதம் டெல்லியில் நடந்த பாஜக செயற்குழுவில் பேசிய ராஜ்நாத் சிங், “பொது சிவில் சட்டம்” கொண்டுவரப்பட வலியுறுத்தப்படும் என்றார். இந்திய முஸ்லிம்களைப் பற்றிய மிரட்சித்தீயில் இந்துத்துவா குளிர்காய, ராமர் கோவிலுக்கு அடுத்ததாக சங்பரிவரங்களால் அடிக்கடி உதிர்க்கப் படுவது “பொது சிவில் சட்டம்” என்ற செல்லரித்த முழக்கம். சிவில் பிரச்சினைகளுக்கு அந்தந்த மதச்சட்டங்களின்படி தீர்வுகாணும் உரிமை அனைத்து மதத்தவருக்கும் இந்திய அரசியல் சாசணம் வழங்கி உள்ளது.அரசியலமைப்பையும் அரசியல் சாசனத்தையும் தூக்கி …

Read More »

பணவீக்கமும் அரசியல் கணக்கீடுகளும்

கடந்த பதிமூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு நம்நாட்டின் பணவீக்கம் 10-12% அளவுக்கு உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏறி, சகல தரப்பினரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மத்திய காங்கிரஸ் அரசு, பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறி கொண்டே, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. இவற்றை முன்வைத்து நடத்தப்படும் அரசியல் கணக்கீடுகளைக் அலசி தேசபக்தர்களை அடையாளம் காண்போம்! பணப்புழக்கம் அதிகமாகி,பணத்தின் கொள்வினை மதிப்புக் குறைந்து (Buying Capacity) விலைவாசி கூடுவதை பணவீக்கம் …

Read More »

உள்ளூர் கோயபல்ஸ்கள்!

முஸ்லிம்: ஐயா உங்க பேரென்ன? மலர் மன்னன்! முஸ்லிம்: நீங்க எந்த ஊரு? கும்பகோணம்! முஸ்லிம்: கும்பகோணத்துல எந்த இடம்? மேல அக்ரஹாரம்! முஸ்லிம்: உங்களை நான் காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன் என்றுதான் அழைப்பேன்! நான்தான் கும்பகோணம் மேல அக்ரஹாரம் மலர் மன்னன்னு தெளிவாச் சொல்லிட்டேனே! அதனால அப்படியே அழையுங்கள்! முஸ்லிம்: காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன்னு உங்களை அழைப்பதை யாரும் ஆட்சேபிக்கவில்லையே! தவிர உங்கள் …

Read More »

வாழ்க வெறும் தீவிரவாதம்!

* குர்ஆன் வன்முறையத் தூண்டுகிறது * சுவர்க்கத்தில் பெருமுலைக் கன்னியர்கள் கிடைப்பர் என்ற ஆசையில்தான் காஃபீர்கள்மீது முஸ்லிம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள் * இஸ்லாம் என்றால் அமைதி மார்க்கம் என்று சொல்கிறார்கள்;ஆனால் இஸ்லாமிய நாடுகளில்தான் (பாலஸ்தீன், ஈராக், ஆப்கானிஸ்தான்….) அமைதியின்மை நிலவுகிறது. * பாலஸ்தீன தீவிரவாதிகள் அப்பாவி இஸ்ரேலியர்கள் மீது அநியாயமாகத் தாக்குதல் நடத்துகிறார்கள். * காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்திற்கு எதிராகக் குண்டு வைக்கிறார்கள் * * …

Read More »

பிரச்னை குர்ஆனில் இல்லை; நம்மிடம்தான் – திரு.சுஜாதா ரங்கராஜன்

பத்திரிக்கையாளர், பன்னூலாசிரியர்,கணிஞர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்ட,தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறிந்த சுஜாதா என்று அறியப்பட்டு சமீபத்தில் மறைந்த திரு.ரங்கராஜன் அவர்கள் எழுதிய ஓரிரு நாவல்களைப் படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான எழுத்துநடை, வியக்கவைக்கும் தகவல், முடிவில் பிரமிப்பு ஆகியவற்றால் தன் எழுத்துப் பணிகளில் தனக்கென தனிஇடத்தையும் தவிர்க்க முடியாத வாசகர் வட்டத்தையும் பெற்று சிறந்து விளங்கினார். குர்ஆனைப் படித்தவர்களெல்லாம் சிந்தனையாளர்களல்ல; ஆனால் சிந்தனையாளர்கள் குர்ஆனைப் பற்றி அறியாமலிருக்க முடியாது. ஆகவே தான் குர்ஆனின் …

Read More »

துப்பட்டாவுக்கு வெளியேதான் பெண்ணியமா?

அண்மையில் சென்னை லயோலா கல்லூரியில் காட்சி ஊடகவியல் துறையினர்,”கனாக்களம்- 2007″ என்கிற கருத்தரங்கை நடத்தினர். கலந்துரையாடலில் “சினிமாவும் சமூகமும்” என்னும் தலைப்பில் பேச லீனா மணிமேகலையை அழைத்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அவர் உடை காரணமாக அவமானப்படுத்தப்பட்டதால், “துப்பட்டாவில் தான் இருக்கிறதா தமிழ்க்கலாசாரம்” என்ற தொனியில் தினமணியில் அவர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அவர் எழுத்துப்படி, “காலை பத்து மணியளவில் கல்லூரி வாசலை அடைந்த என்னை நிறுத்திய கல்லூரியின் காவலர்கள், அடையாள அட்டையைக் …

Read More »

எல்லோரும் கொண்டாடுவோம்…!

புத்தாண்டைக் கொண்டாட தயாராக இருப்பீர்கள்.ஆண்டு முழுவதும் மாடாய் உழைத்துவிட்டு நல்ல/கெட்டபடியாகக் கழிந்த 2007 ஐ வழியனுப்பும் விதமாக நள்ளிரவு 11:59 ஐ ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறீர்கள். இதோ இன்னும் சில நிமிடங்களில் நம்முடன் இருந்த 365 முழு நாட்களுக்கு விடைகொடுத்து அடுத்த _?_ நாட்களை எதிர் நோக்கி இருக்கிறோம். 2007 ஆம் ஆண்டின் பரவசத்துடன் திக்… திக்..இதயத்துடன் நிசப்தமான நிமிடங்களுக்காக காத்திருப்பவர்களின் சிந்தனைக்கு! இந்த வருடம் பதில் சொல்லா …

Read More »

விடைபெறும் நாளில்….

இணையத்தில் சினிமா மற்றும் பொழுது போக்கு என்று சராசரித் தமிழனாக வலம் வந்து கொண்டிருந்தபோது தமிழ்மணத்தின் அறிமுகம் கிடைத்தது. சங் பரிவாரத்தைச் சேர்ந்த சிலர் இஸ்லாத்தின் மீதும், நபிகளார் மீதும் அவதூறுகளை எழுதிக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு என் அறிவில் பட்டதை அவர்களின் பதிவுகளிலேயே பின்னூட்டமாக பதிலளித்துக் கொண்டிருந்தேன். பின்னூட்டங்கள் வெளியிடப்படாமை, வெளியிடுதலில் தாமதம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டே தனியாக வலைப்பூ ஒன்றைத் துவங்கினேன். அவர்களுக்குப் பதிலளிக்கத் தொடங்கிய போது இஸ்லாத்தைப் பற்றிய …

Read More »

காற்றைக் கைது செய்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ காட்டுமிராண்டி தாக்குதலில் உயிர் இழந்துள்ளார். இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன், இறந்த அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அரசியல் படுகொலைகள் இந்தியாவில் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே பாகிஸ்தானில் நடைமுறைக்கு வந்துவிட்டது. என்றாலும் இம்முறை சோகம் அதிகமாவே இருக்கிறது. கொல்லப்பட்டிருப்பவர் ஒரு பெண் என்பது மட்டுமே இதறக்குக் காரணம் அல்ல. ஏற்கனவே தனது தந்தையை அரசியல் படுகொலையில் பலிகொடுத்தவர்; முஸ்லிம் பெண்கள் அடக்கி …

Read More »