Featured Posts
Home » Tag Archives: நல்லடியார் (page 3)

Tag Archives: நல்லடியார்

இறைவன் கொடியவனா?

புதியபறவை படம் என்று நினைக்கிறேன். அதில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடும் “எங்கே நிம்மதி?” எனத்தொடங்கும் பாடலில் “பெண்ணைப் படைத்து கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!” என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் எவரையும் முணுமுணுக்க வைக்கும். “அர்த்தமுள்ள இந்து மதம் ” என்று புத்தகம் எழுதிய கவிஞர் கண்ணதாசன் மிகுந்த இறைநம்பிக்கை உள்ளவர் என்றே நினைக்கிறேன்.(இவரின் சிந்திக்க வைக்கும் பல கவிதைகளை மதுபோதையுடனேயே எழுதுவார் என்று குற்றம் சாட்டப் …

Read More »

டினோஸாரும் இஸ்லாமியத் தீவிரவாதமும்!

கடந்த பத்து வருடங்களில் உலகின் பலபாகங்களிலும் கையாளப்பட்ட சொல்லாடல் ஒன்று உண்டென்றால் அது “தீவிரவாதம்” என்பதே ஆகும். தீவிரவாதம் என்றதும் உங்கள்முன் தாடி,தலைப்பாகையுடன் ஓர் உருவம் உங்கள் நினைவில் வந்து தொலைத்தால், தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம் (War Against Terrorism) என்ற பெயரில், இஸ்லாத்தைத் தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க பாசிச/யூத/அமெரிக்க/ பார்ப்பனீய ஊடகங்கள் பட்ட கூட்டுக் கஷ்டங்கள் வீணாகி விடவில்லை என்று அர்த்தம். உலகின் பல …

Read More »

தனித்தமிழ்நாடு

வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது என்று சொல்லி 1960களில் திராவிட இயக்கத் தலைவர்கள் தனித்தமிழ்நாடு கோரிக்கை எழுப்பியதால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். சுதந்திரக் குடியரசு இந்தியாவில் தனிமாநிலக் கோரிக்கை வைப்பது கிட்டத்தட்ட தேசத்துரோகமாகவே கருதப்பட்டது. பின்னர் காங்கிரஸும் – திமுகவும் அரசியல் உடன்பாடு கண்டதால், கூட்டனிக் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்ற கூட்டனி தர்மப்படி தனித்தமிழ்நாடு கோரிக்கை கைவிடப்பட்டது.அதன்பிறகு அவ்வப்போது மாநில பிரிவினை கோரிக்கை எழும்போது எல்லாம் மத்திய …

Read More »

இறப்பதற்கா இவ்வுலகில் பிறந்தோம்?

பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் சூரியனும் ஒரு நட்சத்திரம். சூரியனைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக ஒன்பது கோள்கள். (சென்ற வருடம் புளூட்டோவை சூரியக் குடும்பத்திலிருந்து ஊர்விலக்கம் செய்து விட்டார்கள்!) இந்த எட்டு அல்லது ஒன்பது கோள்களில் பூமியும் ஒரு கோள் . இந்த பூமியில் சுமார் 72% கடல்களால் சூழப்பட்டு , மீதமுள்ள 28% நிலப்பரப்பை நாடுகளாகப் பங்கிட்டுக் கொண்டுள்ளோம் . இவ்வாறு பிரிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான நமது …

Read More »

வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!!

வணக்கம்!- சன் டிவியின் காமெடி நிகழ்ச்சியில் சிட்டிபாபு, அர்ச்சனா சொல்லும் வணக்கம் ஒருவகை. எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து, கம்பீரமாகக் கமலாஹாசன் சொல்லும் வணக்கம் இன்னொரு வகை.தலைக்கு மேல் கைகளைக் கூப்பியும் நெஞ்சில் கைகைகளைக் குவித்தும் சொல்லப்படும் வணக்கம் மற்றொரு வகை. அனேகமாக இலவசமாகக் கிடைப்பனவற்றில் ‘வணக்கம் ‘ என்ற வாழ்த்தும் ஒன்று. தமிழில் வணக்கம் என்ற பதம் பிறரை வாழ்த்தப் பயன்படுத்தப் படுகிறது. சாதாரணமாக மதிப்புக்குரியவர்களை ‘வணக்கம்’ என்று …

Read More »

நல்லடியார் புராணம் (அறிமுகம்)

கடந்த மூன்று வருடங்களாகத் தமிழ்மணத்தின் வாசகனாகவும் பதிவனாகவும் இருந்த என்னை, இந்த வாரம் நட்சத்திரப் பதிவராகத் தமிழ்மணத்தில் எழுதப் பணித்துள்ளார்கள். தமிழ் இணைய தளங்களில் அள்ளித் தெளிக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய அவதூறுகளுக்கு எனக்குத் தெரிந்த, நான் மெய்யென நம்பியவைகளை ஆதாரங்களுடன் பதிலாக எழுதிய திருப்தியைவிட அவதூறு பரப்பியவர்களால் இஸ்லாத்தை மேலும் ஆய்வு செய்வதற்கும் இன்னும் நன்கு அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பைப் பெற்றதில் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது!. தமிழ்மணம் மூலம் ஓரளவு …

Read More »

கவலைப்படாத மலர்மன்னன்

சென்ற வருடம் தமிழ் சிஃபியில் “கலைகள் தந்த தஞ்சை கவலைதருகிறது” என்று ரொம்ப ரொம்பக் கவலைப்பட்டு எழுதி இருந்தார். பிராமணர்களின் சொர்க்க பூமியான தஞ்சை மாவட்டத்தில் அக்ரஹாரங்களை மசூதிகளும், முஸ்லிம் தெருக்களும் உட்கொண்டு விட்டதே அவரின் கவலைக்கான காரணம் என்பதையும், தஞ்சை பிராமணர்கள் அக்ரஹாரங்களை அடகு வைத்து அமெரிக்காவில் செட்டிலாகியதற்கு முஸ்லிம்கள் காரணமல்ல என்று சத்தியமார்க்கம்.காமில் மறுத்திருந்திருந்தேன். 64 வகையான ஆயகலைகள் வளர்த்தத் தஞ்சைத் தரணியில் பாயும் காவிரி ஆற்றில் …

Read More »

பள்ளிகளில் பாலியல் கல்வி – ஒரு கண்ணோட்டம்!

பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருங்கே கிளம்பியுள்ளது. இதை எதிர்க்கும் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாரஷ்டிரம், கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், “பாலியல் கல்விக்கான பாடத்திட்டம் இந்திய குழந்தைகளுக்கு ஏற்றவகையில் இல்லை” என்றன. கேரளா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதோடு பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கமிட்டியையும் அமைத்துள்ளது. மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் செளஹான், மத்தியக் கல்வி அமைச்சகத்திற்கு எழுதியக் கடிதத்தில், …

Read More »

நிர்வாணப்படுத்தப்பட்ட போர் தர்மங்கள் #கண்டனப் பதிவு#

இலங்கை ராணுவத்திற்குப் பாரிய சேதங்களை விளைவித்த விடுதலைப் புலிகளின் அனுராதபுரம் விமானத்தாக்குதலைத் தொடர்ந்து கடற்புலிகள் பிரிவு ஈழப் போராளிகளின் கொல்லப்பட்ட உடலை நிர்வானமாகக் காட்டிய இலங்கை ராணுவத்தின் வக்கிரத்தைகப் பலரும் கண்டித்துள்ளனர். எமது கண்டனத்தையும் பதிவு செய்கிறோம். “ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள் தீவிரவாதிகளல்லர்” என்று ஐக்கிய நாடுகள் சபையில் பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் மீறி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் ஆப்கான், இராக் மற்றும் பலஸ்தீனப் போராளிகளை …

Read More »

ராமர் பெயரால் ஒரு தேசத்துரோகம்…

சங் பரிவாரங்களின் அகராதியில் சில வார்த்தைகளுக்கு என்றைக்குமே நேரதிர் அர்த்தம் தான் போலும்! சேதுக்கால்வாய் திட்டத்தை முடக்க, ராமர் பாலம் என்ற இல்லாத ஒன்றை கையிலெடுத்துக் கொண்டு சாமியாடும் பா. ஜ.கவினரின் முரண்பட்ட நிலையையும், முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் அடிக்கடி உபதேசிக்கும் ‘தேசபக்தி ‘ மற்றும் ‘கருத்துச் சுதந்திரம்’ போன்ற தத்துவங்களுக்கும் சங் பரிவாரங்களுக்கும் துளியும் சம்பந்தமே இல்லை என்பதை மீண்டும் அறிந்து கொள்ள இப்பதிவு உதவலாம். 1) தேசபக்தி …

Read More »