Featured Posts
Home » Tag Archives: ரியாளுஸ் ஸாலிஹீன்

Tag Archives: ரியாளுஸ் ஸாலிஹீன்

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-5-60)

60. மனித வடிவில் வந்த ஜிப்ரீல்! ஒரு நாள் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது திடீரென ஒருவர் எங்கள் முன் வந்தார். அவருடைய ஆடை அதிக வெண்மையாகவும் தலைமுடி அதிகக் கருமையாகவும் இருந்தது அவரைப் பார்த்தால் பயணத்திலிருந்து வந்தவர் போன்றும் தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்னர் எங்களில் எவரும் அவரை அறிந்திருக்கவுமில்லை. அவர் நபியவர்களுக்கு எதிரில் உட்கார்ந்தார். தன்னுடைய முழங்கால்களை அவர்களின் முழங்கால்களுடன் இணைத்து வைத்தார். பிறகு தன் …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-5)

பாடம்-5 இறைக் கண்காணிப்பு அல்லாஹ் கூறுகிறான்: – ‘அவன் எத்தகையவன் எனில் (நபியே) நீர் எழுகிறபோதும் அவன் உம்மைப் பார்க்கிறான். மேலும் சிரம் பணிந்து வணங்குவோரிடையே உமது அசைவையும் பார்க்கிறான்’ (26 :218-219) மற்றோர் இடத்தில், ‘நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடன் இருக்கிறான்’ (57:4) இன்னோர் இடத்தில், ‘நிச்சயமாக பூமியிலும் வானத்திலும் உள்ள எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று’ (3 :5) பிறிதோர் இடத்தில், ‘திண்ணமாக உம் இறைவன் குறிவைத்துக் காத்துக் …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-56)

56. அந்த நபி உண்மை பேசுமாறு ஏவுகிறார்! அபூ ஸுப்யான் (ரலி) அவர்கள் ஹிர்கல் மன்னனின் கதை தொடர்பான தமது நீண்ட செய்தியில் அறிவிக்கிறார்கள்: ‘உங்களுக்கு அவர் அதாவது நபிகளார் (ஸல்) அவர்கள் எதனை ஏவுகிறார்? என்று ஹிர்கல் மன்னர் கேட்டார். நான் சொன்னேன்: அவர் கூறுவது இதுதான்: அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள். வேறெந்தப் பொருளையும் அவனுக்கு இணையாக்காதீர்கள். மேலும் உங்கள் மூதாதையர் சொல்வதை விட்டுவிடுங்கள். மேலும் தொழுகை, உண்மை, …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-55)

55. உண்மையே உள்ளத்தின் அமைதி! ஹஸன் பின் அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் மனப்பாடம் செய்துள்ளேன்: ‘உன்னைச் சந்தேகத்தில் ஆழ்த்தக் கூடியதை விட்டுவிட்டு சந்தேகமில்லாததைச் செய்திடு! ஏனெனில் உண்மையே உள்ளத்தின் அமைதியாகும். பொய்தான் சஞ்சலத்தை ஏற்படுத்தக்கூடியது!’ ( திர்மிதி) உன்னைச் சஞ்சலத்தில் ஆழ்த்தக்கூடியது என்பதன் பொருள் : இது ஹலால் (ஆகுமானது)தானா என்று நீ சந்தேகப்படுவதை விட்டுவிட்டு அப்படிச் சந்தேமில்லாததன் பக்கம் சென்றிடு! தெளிவுரை …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-54)

54. உண்மையாளரின் உயர் அந்தஸ்து! இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் உண்மையே பேசிக் கொண்டிருகிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்! மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக் …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4)

உண்மை அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் இணைந்திருங்கள்!’ (9:119) வேறோரிடத்தில், ‘…உண்மை பேசக்கூடிய ஆண்களும் பெண்களும்…‘(33:35) இன்னோர் இடத்தில், ‘அல்லாஹ்விடம் அவர்கள் அளித்த வாக்குறுதியில் உண்மையாளர்களாய் அவர்கள் நடந்திருந்தால் அது அவர்களுக்கு நல்லதாய் இருந்திருக்கும்!’ (47:21) தெளிவுரை அகராதியில் உண்மை (ஸித்க்) எனும் சொல்லின் பொருள், ஒருசெய்தி யதார்த்தத்திற்கு ஒத்திருத்ததல் என்பதாகும். நீங்கள் அறிவிக்கும் செய்தி யதார்த்தத்தில் நடைபெற்றிருந்தால் அது உண்மைச் செய்தியே! எடுத்துக்காட்டாக, இன்று …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-53)

53. எதிரிகளைக் களத்தில் சந்திக்க ஆசைப்படாதீர்கள் ஹதீஸ் 53. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதிரிகளைச் சந்தித்த (யுத்த) நாட்களில் ஒருநாளன்று சூரியன் மேற்கில் சாயும் வரையில் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிறகு எழுந்து கூறினார்கள்: ‘ஓ, மனிதர்களே! எதிரிகளை(க் களத்தில்) சந்திப்பதற்கு ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் சுக வாழ்வைக் கேளுங்கள். ஆனால் எதிரிகளைச் சந்திக்கும்படியானால் பொறுமையை மேற்கொள்ளுங்கள். மேலும் நிச்சயமாக வாட்களின் நிழலின் கீழ்தான் சுவனம் …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-51-52)

51, 52. நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க வேண்டுமெனில்…! ஹதீஸ் 51. இப்னு மஸ்ஊத்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘நிச்சயமாக என(து வாழ்நாளு)க்குப் பிறகு (உங்களுக்கு உரிமைப் பறிப்பு ஏற்படும் வகையிலான) சுயநலப் போக்கும் நீங்கள் வெறுக்கக்கூடிய வேறு சில காரியங்களும் நடைபெறும்!’ தோழர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென எங்களுக்குக் கட்டளையிடுகிறீர்கள்? நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்கள் மீதுள்ள கடமையை நீங்கள் நிறைவேற்ற …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-50)

50. உமர்(ரலி) அவர்களின் உயர் பண்பு! ஹதீஸ் 50. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘உயைனா இப்னு ஹிஸ்ன் என்பார் (மதீனா) வந்து தன்னுடைய சகோதரர் மகனாகிய ஹுர்ரு பின் கைஸ் என்பாரிடம் தங்கியிருந்தார். உமர்(ரலி) அவர்கள் யார் யாரையெல்லாம் தங்களது அவையில் நெருக்கமான அந்தஸ்தில் வைத்திருந்தார்களோ அத்தகைய நபர்களுள் ஹுர்ரும் ஒருவர். குர்ஆனை கற்றறிந்த அறிஞர்கள்தான் உமர்(ரலி) அவர்களது அவைத் தோழர்களாகவும் ஆலோசகர்களாவும் இருந்தனர். அவர்கள் பெரிய வயதுடையவர்களாயினும் …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-47-48-49)

47, 48, 49. கோபமும் துயரமும் ஹதீஸ் 47. முஆத் பின் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஒருமனிதன் சினத்தைச் செல்லுபடியாக்க ஆற்றல் பெற்றிருக்கும் நிலையிலும் அதனை மென்று விழுங்கினால் அவனை மறுமை நாளில் எல்லாப் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைப்பான். ஹூருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்களில் அவன் விரும்புகிறவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவனுக்கு அனுமதி அளிப்பான். (நூல்: அபூ தாவூத், திர்மிதி) ஹதீஸ் …

Read More »