Index | Subscribe mailing list | Help | E-mail us

பாவமன்னிப்புத் தேடவேண்டும்

 

{ إلا من تاب وآمن وعمل صالحا فألئك يدخلون الجنة ولا يظلمون شيئا}

தவ்பாச் செய்து, ஈமான் கொண்டு, நல்லறங்கள் புரிந்தவர்களே சொர்க்கத்தில் நுழைவார்கள், இவர்கள் சிறிதும் அநீதி இழைக்கப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் : 19:60)

{ يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار }

முஃமின்களே! -பாவத்திலிருந்து விலகி- தூய மனதுடன் நீங்கள் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்யுங்கள்! அவ்வாறு செய்தால் உங்கள் இரட்சகன் உங்கள் பாவங்களை உங்களை விட்டும் போக்கி, உங்களை சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்யலாம். அதன் கீழே சதா நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். . . . (அல்குர்ஆன் : 66:8)

செய்யதுல் இஸ்திஃபார்

( سَيِّدُ الِاسْتِغْفَارِ أَنْ تَقُولَ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ قَالَ وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهُوَ مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ )

செய்யதுல் இஸ்திஃபார் -பாவமன்னிப்புத் தேடும் வாசகங்களில் தலையாய வாசகம்- யாதெனில் :

அல்லாஹும்ம அன்த்த ரப்பீ, லாயிலாஹ இல்லா அன்த்த, கலக்த்தனீ வஅன அப்துக, வஅன அலா அஹ்திக வவஃதிக மஸ்த்ததஃத்து, அவூது பி(க்)க மின் ஷர்ரி மா ஸனஃத்து, அபூஉ ல(க்)க பிநிஃமத்தி(க்)க அலய்ய, வஅபூஉ ல(க்)க பிதன்பீ ஃபஃபிர்லீ, ஃபஇன்னஹு லா யஃபிருத் துனூப இல்லா அன்த்

இதனை உறுதியான நம்பிக்கையுடன் பகலில் கூறிய ஒருவர், மாலைப் பொழுதை அடைவதற்கு முன் அன்றைய தினமே மரணித்து விட்டால் அவர் சொர்க்கவாதிகளில் ஒருவராவார். இதனை உறுதியான நம்பிக்கையுடன் இரவில் கூறியவர் காலைப் பொழுதை அடைவதற்கு முன் மரணித்து விட்டால் அவர் சொர்க்கவாதிகளில் ஒருவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஷதாத் இப்னு அவ்ஸ் -ரலி, நூல் : புகாரீ 5831)

8. அல்லாஹ்வின் பொறுத்தத்தைப் பெரும் நோக்கத்தில் கல்வி கற்க வேண்டும்