Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

வணக்க, வழிபாடு செய்வதற்காக

அதிகமாக பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும்

 ( مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ أَوْ رَاحَ أَعَدَّ اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ نُزُلًا كُلَّمَا غَدَا أَوْ رَاحَ )

காலையிலோ, மாலையிலோ பள்ளிவாயிலுக்குச் செல்பவருக்காக அவர் காலையிலும், மாலையிலும் செல்லும் போதெல்லாம் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு தங்குமிடத்தை அல்லாஹ் ஏற்பாடு செய்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 1073)

( ثلاثة كلهم ضامن على الله إن عاش رزق وكفي وإن مات أدخله الله الجنة، وذكم منهم: ومن خرج إلى المسجد فهو ضامن على الله )

மூன்று நபர்கள், அவர்கள் வாழ்ந்தால் போதுமான வாழ்வாதாரம் அளிக்கப்படும் என்றும் அவர்கள் மரணித்துவிட்டால் அவர்களை சொர்க்கத்தில் நுழைவிப்பதாகவும் அல்லாஹ் முழுப்பொறுப்பேற்றுக் கொண்டான். அம்மூவரில் பள்ளிவாயிலுக்குச் செல்வதற்காக வெளியேறுபவரும் ஒருவர். அவரும் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மூன்று நபர்களுக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டான். அவர்கள் வாழ்ந்தால் அவர்களுக்கு போதுமான வாழ்வாதாரம் அளிப்பான். மரணித்துவிட்டால் அவர்களை சொர்க்கத்தில் நுழைவிப்பான். அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்ட அம்மூவரில் பள்ளிவாயிலுக்குச் செல்வதற்காக வெளியேறுபவரும் ஒருவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : அபூதாவூத், இப்னுஹிப்பான்)

பள்ளிவாயில் கட்டிக் கொடுக்க வேண்டும்